செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே!-நியூஸி. உச்ச நீதிமன்றம் அதிரடி!

விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பே!-நியூஸி. உச்ச நீதிமன்றம் [^] அதிரடி!
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010, 12:17[IST]
Save This Page
Print This Page
Mail To Friend
Comment on This Article
A A A
Follow us on Thatskannada Twitter
LTTE Flag
Free Newsletter Sign up
Vote this article
Up (802)
Down (2)
Ads by Google
Free Advertising For 1500 www.Google.com/AdWords
Start Running Your Own Ads Here. Fill Out the Form & We'll Help You!
ஆக்லாந்து: இறைமை உள்ள ஒரு இனத்துக்காகப் போராடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் [^] அமைப்பு ஒரு அரசியல் அமைப்பே. அதன் உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது என நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1992-ல் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படை இடைமறித்து சென்னை நோக்கி செலுத்தி வந்தது. இதில்தான் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு இருந்தார்.

சென்னைக்கு அருகில் இந்தக் கப்பல் கொண்டுவரப்பட்டதும் கப்பல், அதிலிருந்த ஆயுதங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் தலைவர்களை சிறைப்படுத்த இந்திய கப்பல் படையினர் முயன்றபோது, கப்பலை வெடி வைத்துத் தகர்த்தனர் புலிகள். இதில் கிட்டு உள்ளிட்டோர் இறந்தனர். மூவர் மட்டும் கடலில் குதித்துத் தப்பினர்.

அவர்களை இந்தியா கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2001-ல் தண்டனை முடிந்ததும், அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பியது இந்தியா. பின்னர் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா விசாவில் சென்றனர். 2002-ல் அகதி உரிமை கோரி அங்கு விண்ணப்பித்தனர்.

ஆனால் இதனை நிராகரித்த நியூஸிலாந்து அரசு அவர்களில் இருவரை நாடு கடத்தியது. மூன்றாமவர் மட்டும் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நியூஸிலாந்து நீதிமன்றம் மேற்கண்ட முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், தனது செயலை அதை ஒப்புக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு இந்திய அரசு வழங்கிய தண்டனை மற்றும் இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அகதி உரிமையை மறுத்தது நியூஸிலாந்து அரசு.

இதனை விசாரித்த நீதிபதி, இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் [^] தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை படைத்தவர்களே என்று குறிப்பிட்டார். மேலும் இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவர் இந்த விசாரணையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்றது உண்மையாகவே இருந்தாலும், புலிகள் தங்கள் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு அத்தியாவசியமான பொருள்களைத்தானே அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது? இதில் தவறு காண வேண்டியதில்லை. அந்தக் கப்பல் புலிகளுக்குப் போய்ச் சோராத நிலையில் அவர்களாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசியல் குற்றமோ, பொதுமக்களுக்கு ஊறு விளைவித்த குற்றமோ இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அரசியல் அமைப்பு:

மேலும் தமது தீர்ப்பில், "இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினர். புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கி வருகிறது" என்றும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக ஆஸ்திரேலியா [^] பட்டியலிட்டபோது, நியூசிலாந்தும் அதற்கான முயற்சியில் இறங்கியது.

அப்போது நியூசிலாந்து தமிழர்கள் மேற்கொண்ட பெரும் போராட்டங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. இன்று புலிகளுக்கு தடை விதிக்காத முக்கிய நாடுகளுள் நியூஸிலாந்தும் ஒன்று.

உலகில் தமிழர்கள் பெருமளவில் வாழும் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் புலிகள் மீது தடைகள் உள்ளன. உலகத் தமிழர்களின் தாயகமான இந்தியாவில் தடை நீடிக்கிறது.

தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்கிட முயற்சிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கருதுகின்றன.

இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்பு தவறானது என்பதை கிட்டத்தட்ட வெளிப்படையாகவே உரைத்திருக்கிறது நியூஸிலாந்து உச்ச நீதிமன்றம். எனவே இதை மேற்கோள் காட்டி, புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து இந்தியாவிலும் வாதாட தமிழ் அமைப்புகள் முயலலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் புலிகள் தங்கள் ஆயுதக் கப்பலை மூழ்கடித்தது, அரசியல் குற்றமோ, பொது நலனுக்கு எதிரான குற்றமோ அல்ல என தெள்ளத் தெளிவாக நியூஸிலாந்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் வல்வெட்டித் துறைக்கு கொண்டு சென்ற கப்பலை இடைமறித்தது இந்திய கப்பல் படைதான். தங்களுக்குச் சொந்தமான பொருளை புலிகள் மூழ்கடித்ததில் என்ன குற்றம் காண முடியும்? அந்த ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை அவர்கள் தாக்க முயலவில்லையே என்றும் நீதிபதிகள் கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!
nandri thatstamil.com

திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர் - புலவர் கி.த.பச்சையப்பன்

பாகவதர் நூற்றாண்டு

நினைப்புக்கு எட்டாக் காலந்தொட்டே இசை, மக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு வருகிறது. நுண்கலைகளாக எண்ணப்படும் ஆடல், நாடகம் போன்றவற்றில் பெரும் பங்காற்றிய இசை பின்னாளில் திரைப்படங்களில் தனக்கெனத் தனியிடத்தை நிலைநிறுத்திக் கொண்டது. தென்னிந்தியக் கலை, பண்பாடுகளின் மரபு வளப்பமிக்கது. “சோழநாடு சோறுடைத்து” என்று சொல்லிப் புகழப் பெற்ற தஞ்சை வளநாடு நெல் விளைச்சலில் மட்டும் அல்லாது ஆடல், பாடல் கலை களிலும் தலைசிறந்தது, மயிலாடுதுறையும் (மாயூரம்) தஞ்சாவூரும் தலைசிறந்த இசைப் பேரறிஞர்களை உருவாக்கியதுடன் அமையாது, இசைப்பாடல்களை உருவாக்கிய இசை அறிவாளர் குழாத்தின் பிறப்பிடங் களாகவும் அமைந்தன.

thyagaraja_bhagavathar_300முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, சீர்காழி அருணாசலக்கவிராயர் ஆகியோர் தமிழிசை மூவர் - மூலவர் எனப் போற்றப்பெற்றனர், பிறமொழி இசைப்பாடல் ஆசிரியர்கள் தியாகையர், முத்துச்சாமி தீக்கிதர், சாமாசாத்திரி இன்னும் பலரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஆவர். சுருங்கச் சொன் னால் தஞ்சைமாவட்டம் “கலைகளின் தாயகம்” ஆகும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாபநாசம் சிவன் தமிழுக்கு ஆற்றிய பெரும்பங்களிப்பைக் கண்டவர்கள் தமிழ்த் தியாகையர் எனப் புகழ்ந்து போற்றினர். இவருடைய இசைத் தொண்டை நினைவு கூரும் வண்ணம் சென்னை மயிலைச் சேந்தோம் பகுதியில் உள்ள ஒரு தெருவிற்குப் “பாபநாசம் சிவன் தெரு” எனப் பெயர் சூட்டி உள்ளது நினைவு கொள்ளத்தக்கது.

இன்றைய மயிலாடுதுறையில் (அன்றைய மயூரம் மாயவரம்) 1910 மார்ச்சுத் திங்கள் முதல் நாளில் பிறந்தார் தியாகராசர் (பாகவதர்). தந்தையார் கிருட்டினமூர்த்தி பொற்கொல்லர் தொழில் செய்தாலும் வளமாக வாழவில்லை. வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே வகை செய்தது, தாயார் மாணிக்கத்தம்மாள் தஞ்சையைச் சேர்ந்தவர். தந்தையார் தம் குடும்பத்தைத் திருச்சிக்கு மாற்றி அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார். ம.கி. தியாகராசனுக்குப் படிப்பில் நாட்டமில்லை. மாறாக பாடல்கள் கேட்பதிலும் பாடுவதிலுமே கவனத்தைச் செலுத்தினான். குழந்தைப் பருவத்தில் தேவார, திருவாசகப் பாடல்களும் புகழ்பெற்ற எஸ்.ஜி. கிட்டப்பா பாடிய நாடகப் பாடல்களும் கவர்ந்து இழுத்தன. இசையின் ஈடுபாட்டால் வீட்டில் உள்ளவர் எவரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

தந்தை கிருட்டினமூர்த்தி தியாகராசனை அங்குமிங்கும் அலைந்து தேடிக் கொண்டிருந்த போது அவருடைய நண்பர் வழியாகத் தியாகராசன் கடப்பாவில் இருப்பதாகவும், அவன் எங்கே, எப்போது கடவுள் பாடல்களைப் பாடினாலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் கண்டு வியந்து மகிழ்ந்ததாகவும் கேட்டறிந்தார், திருச்சிக்குத் தியாகராசனைத் தந்தையார் அழைத்து வந்தார். கோவில்கள், அவைகள் (சபா) ஏற்பாடு செய்த அனைத்து வழிபாட்டு பாடல்களிலும் (பஜன்ஸ்) பங்கேற்றுப் பாடினார்.

இவருடைய இசைத் திறனைச் செவிநுகர் கனியெனச் சுவைத்து வியந் தோர் விளைத்த புகழ் நாடெங்கும் விரைந்து பரவியது. தொடர்வண்டித்துறை (ரெயில்வே) தொழி லாளர் திருவாளர் எஃப்.ஜி. நடேசஐயர் இரசிக ரஞ்சனி சபா எனப் பெயர் கொண்ட நாடகக் குழுவை நிகழ்த்தி வந்தார், அவர் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடிப்பதற்கு ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். சிறுவன் தியாகராசனது இசைத் திறனை அறிந்த திரு. நடேசர் தம் நாடகக் குழுவில் தியாராசனைச் சேர்த்துக் கொண்டார். தியாகராசனுக்கு அரிச்சந்திரா முதல் நாடகம். (அந்தக் கால நாடகங்கள் என்றாலே பாடல்களே முதன்மையாகப் பாடப்பட்டன. உரையாடல்களே பாடல் களாக அமைந்திருக்கும். பாடல்கள் எண்ணிக்கை மிகுதியே நாடகத்தைச் சிறப்புக்குரிய தாக்கும். அக் கால நடிகர்கள் அனைவரும் பாடுந் திறன் பெற்றவர்.)

முதல் நாடகமே தியாகராசனுக்குப் பெரு வெற்றியாய் அமைந்ததுடன் ஓர் இரவிலேயே விண்மீனாகப் (நட்சத்திரமாக) புகழ்பெற்று ஒளிர்ந்தார். புகழ்பெற்ற நரப்பிசைக் (வயலின்) கலைஞர் மதுரைப்பொன்னு ஐயங்கார் தானே முன்வந்து மரபுவழித் தமிழ் கருநாடக இசையைக் கற்றுக் கொடுத்தார். கிருட்டினமூர்த்தியது ஏழைமை நிலையைக் கருத்திற் கொண்டு அவர் ஊதியம் எதையும் பெறவில்லை, தியாகராசன் இசையை மிக நேர்மையுணர்வுடன் கற்றுக் கொண்டான். இசையைக் கற்கும் நேரம் தவிர மற்றைய நேரத்தில் நடராச ஆசிரியர் (வாத்தியார்) இடத்தில் நாடகப் பயிற்சி பெற்றான். இசைப்பேரறிஞர் கிட்டப்பாவினால் பாடப் பெற்றுப் புகழடைந்த பாடலான “காயாத கானகத்தே” என்ற பாடலை இயற்றியவர்தாம் இந்த நடராச ஆசிரியர், ஆறு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பின்னர்ப் பெரிய காளியம்மான் கோவிலில் தியாக ராசனது முதல் செவ்விய இசையரங்கு நிகழ்ச்சி ஏற்படுத்த விரும்பினார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை தோற்கருவி (கஞ்சிரா) மதுரைப் பொன்னுஐயங்கார் நரப்பிசை (வயலின்) தட்சிணாமூர்த்தி ஆச்சாரி மதங்கம் (மிருதங்கம்) இசைத்தனர். இசைநிகழ்வு மூன்று மணிநேரம் தொடர்ந்தது, மக்கள் அசைவற்றுத் தன்னிலை மறந்து, இசையில் மூழ்கி இருந்தனர், இசைநிகழ்ச்சி முடிந்ததும், “என்வாழ்நாளில் இத்தகு இனிய குரல்வளத்தையும் பண்களை (இராகம்) எடுத்தாண்ட மிகுதிறமையும் தியாகராசனது அகவை ஒத்த மற்ற பிள்ளைகளிடம் கண்டதில்லை” என “அபிநவ நந்திகேசுவரர்” எனப் புகழ்பெற்ற தட்சிணாமூர்த்திப் பிள்ளை உளந்திறந்து பாராட்டினார்”. “முருகக் கடவுளே தமிழிசை உலகுக்கு ஈந்த மிகப்பெரிய கொடை தியாகராசன், “பாகவதர்” எனும் சிறப்புப் பட்டத்தை அளிக்கிறேன்” என்று தியாராசனைச் சிறப்பித்தார் திருவாளர் தட்சிணாமூர்த்திப் பிள்ளை. அன்றுமுதல் திருச்சித் தியாகராசன், “தியாகராச பாகவதர்” என்றழைக்கப் பெற்றார்.

தியாகராச பாகவதர் 1926இல் “பவளக் கொடி” நாடகத்தில் கதைத்தலைவனாக முதன்முதலில் நடித்தார். இவருக்கு இணையாக எஸ்.டி. சுப்புலட்சுமி நடித்தார். இந்த இணை மிக விரைவிலேயே நாடக உலகில் ஒரு வரலாற்றை உருவாக்கியது. இவர் தம் நாடக உரையாடலில் சொற்களை மின்சாரப் பரிமாற்றம் போல் பேசியது இருவரையும் மிக்க புகழ் அடையச் செய்தது, இவ்விருவரையும் எஸ்.ஜி. கிட்டப்பா சுந்தராம்பாள் இணைக்கு நிகராக எண்ணினர், தியாகராச பாகவதர், அவர் காலத்து இசைஞர்களைவிடக் கூடுதலாக ஊதியம் பெற்றார். அவருடைய இனிய இசை தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சங்களில் அரசோச்சியது என்பதுடன் இலங்கை, மியன்மார் (பருமா) மலேயா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுத் தமிழர் நெஞ்சங்களிலும் அரசாண்டது.

பாகவதரது தனித்திறமையை அறிந்த இசைப் பேரறிஞர் எஸ்.ஜி. கிட்டப்பா. செங்கோட்டையில் நிகழ்ந்த வள்ளிதிருமணம் நாடகத்தைப் பார்த்தார். மேடைக்கு வந்த, திரு.கிட்டப்பா பவழம் பதித்த தங்கத் தொடரியைப் (சங்கிலி) பரிசாகத் தந்து கூடியிருந்த மக்களிடையே இந்தப் பெரிய பாடக ருக்குப் பாகவதர் என்று அளிக்கப்பெற்ற பட்டம் குறையிலாப் பொருத்தமுடையதாகும் என்று பாராட்டினார். “திரு. கிட்டப்பாவினது பாராட்டும் பரிசும்அளப்பரிய செல்வாக்கைத் தந்தன” என்று பின்னாளில் பாகதவர் சொன்னார். புகழ்தரு வாழ்வியப் பணியான நாடகமேடை வளமுடையதாக்கியது. சென்னை மாகாணத்துள்ள எல்லா நகரங்களிலிருந்தும் நாடகங்கள் நிகழ்த்துமாறு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

திரையுலக நுழைவு

பாகவதர், திரையுலகில் தன் இனிய குரலாலும் தோற்றப்பொலிவினாலும், செவ்விய தமிழிசையை இயன்றளவு தெளிவாகவும் எளிமையாகவும் பாடிய தாலும் மக்களிடையே தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றதாலும், திரையுலகில் நிலைத்து நிற்கமுடிந்தது.

1934இல் “பவளக்கொடி நாடகம்” திரைப் படமாக உருவாக்கப்பெற்றது. தொடர்ந்து பத்தாண்டு கள், பேரிலும் புகழிலும் அவருக்கு நிகராகத் திரையுலகில் வேறு ஒருவர் இல்லையென்னும் அளவில் திரைவானில் விண்மீனாகத் திகழ்ந்தார். ஒன்பது படங்களில் நடித்த அளவிலேயே மிகப்பெரும் புகழ்பெற்றவர், தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ அனைத்து நாட்டு மொழிப் படங்களிலோ தியாகராச பாகவதரைப்போல் வேறொருவரைக் காண இயலாது. பாகவதர் அவர் காலத்து நடிகர்களைப்போல் மிகச்சிறந்த நடிப்புத் திறனைப் பெற்றிருக்கவில்லை, மாறாக இசைக்கலையில் மேலோங்கி இருந்தார். அக்கால நடிகர்கள் முதலில் பாடகர்கள். பிறகுதான் நடிகர்கள். எப்படியாயினும் தியாகராச பாகவதர் ஆர்வமிக்க கடவுள் அடியாராகச் சிறப்பாக நடித்தார்.

பாகவதரின் இறவாநிலை இன்னிசைப் பாடல்கள்

பாகவதர் , நவீன சாரங்கதாரா திரைப் படத்தில் நடித்துப் பாடிய “சிவபெருமான் கிருபை வேண்டும்” என்னும் பாடலே இசைத்தட்டில் பதிந்து வெளிவந்த முதல் பாடலாகும், தமிழ் (கருநாடக) இசையில் மிக அரிய பண்ணாக மதிக்கப்பெற்ற சாருகேசிப் பண்ணைப் (இராகத்தைப்) பொதுமக்களிடையே பரப்பிய தகுதிக்கு உரியவர் தியாகராசபாகவதர். இச்செய லுக்குக் கருநாடக இசையுலகு பாகவதர்க்கு கடமைப் பட்டிருக்கிறது. சாருமேசிப் பண்ணில் அமைந்த மன்மதலீலை என்னும் பாடலைப் பாகவதர் பாடிய பிறகுதான் அந்தப் பண் பலருக்குத்தெரிந்தது.

தெலுங்கு இசைப்பாடல் ஆசிரியர் தியாகையர் ஒரே ஒரு பாடலைத்தான் சாருகேசிப் பண்ணில் இயற்றி யுள்ளார் என்பது பலருக்குத் தெரியாத செய்தியாகும். பாகவதர் சாருகேசிப் பண்ணைப் பாடிய பின்னரே திரைப்பாடல்கள் சாருகேசிப் பண்ணில் எழுதப் பெற்றன. அப்பண்ணில் எழுதப்பெற்றுப் புகழுற்ற பாடல்களில், டி.எம். சௌந்தரராசன் பாடிய “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே” என்ற பாடலும் எம்.எல். வசந்தகுமாரி பாடிய “ஆடல் காaரோ” என்ற பாடலும் குறிப்பிடத்தக்கன. பாகவதர் தம் இசைத்தேர்ச்சியைப் பாடல் வழியாக மிக நன்றாக மெய்ப்பித்தார்.

ஒரே பண்ணை (இராகம்) பல்வேறு உணர்வு களில் வெளிப்படுத்திப் பாடியவர் பாகவதர். சான்றாகச் சிந்துபைரவியை “வதனமே சந்திர பிம்பமோ” என்னும் பாடலில் துறுதுறுப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தினார். அதே பண்ணில் அமைந்த “வன்பசிப்பிணி” என்னும் பாடலையும் “பூமியில் மானிட சென்மம் அடைந்துமோர்,” என்னும் பாடலையும் மிக மெல்லிய தாழ்ந்த குரலிலும் பாடித் தம் இசைத்திறனை வெளிப்படுத்தினார்,

செஞ்சுருட்டியில் அமைந்த தெய்வத்தன்மை சேர் பாடலான “வள்ளலைப் பாடும் வாயால்” என்பதை நெஞ்சுருகப் பாடிய பாகவதர், அதே பண்ணில் எழுதப்பெற்ற “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” என்ற பாடலைக் காதல் சுவை மிகவே தோன்றப்பாடி மகிழ்வித்தார். சிந்துபைரவியும் செஞ்சுருட்டியும் பாகவதர்க்கு நெஞ்சங் கவர்ந்த பண்களாகும், “ஒருநாள் ஒரு பொழுதாகிலும்”, “மானிடம் சென்மம்” என்னும் இவ்விரு பாடல்களிலும் இரு வேறு வகைப்பட்ட நடைப்போக்குகளைக் கமாசு பண்ணில் கையாண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பாகவதரது காளைப் பருவத்தில் வாழ்வின் வளப்பமான காலத்தில் தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தார். அவரை நேரிற் கண்டவர்கள் தேவதையைக் கண்டதைப்போல் களித்தனர். மெருகேற்றிய பொன்போன்ற அவரது உடல் வண்ணம் அவர் அணியும் பட்டுடைக்குப் பொருத்தமாக இருக்கும். தோளைத் தொட்டுத் தொங்கும் அலைநெளிவான முடித்திருத்தமும் பெரிய வயிரக்கல் கடுக்மீμம், மோதிரமும் அணிந்த பாகவதரது தோற்றப் பொலிவே மாந்தர்களைக் கவர்ந்தன. அதனால் அனைத்து மாந்தரும் பாகவதர் போலவே தலைமுடியைத் திருத்திக்கொண்டனர். பாகவதர் முடிஅழகு (பாகவதர் கிராப்) என்றே பேசப்பட்டது. பாகவதரைப்போல் அழகிய கவரும் பார்வை போலவும் அவருடைய குரலிசை போலவும் கண்டதும் கேட்டதும் இல்லை என்றே பலர் சொல்லினர்.

ம.கி. தியாகராச பாகவதர் பெற்றிருந்த சீர்த்தியின் அருகில் கூட எவராலும் வரமுடிய வில்லை. “புரட்சிப்பாவலர் பாவேந்தர்” என்றாலே பாரதிதாசன் அவர்களையே குறிப்பதுபோல், பாவாணர் என்று பலர் இருந்தாலும் பாவாணர் என்றால் மொழிஞாயிறு பாவணாரைக் குறிப்பது போல்) அவர் காலத்தில் பாகவதர் எனும் பட்டப் பெயரைப் பலர் பெற்றிருந்தாலும் பாகவதர் என்றால் தியாகராச பாகவதரையே எப்போதும் குறிப்பதாயிற்று,

பாகவதர் குடும்பம்

திரையுலக நுழைவுக்கு முன்னரே இல்லற வாழ்வில் நுழைந்துவிட்டார். ஆம். மணமுடித்துக் கொண்டார். நாடகங்களில் பாகவதருடன் இணை யாக நடித்த எஸ்.டி. சுப்புலட்சுமி பாகவதர் தம் திருமண வரவேற்பில் அரிகதை இசைச் சொற் பொழிவு (அரிகதா காலட்சேபம்) நிகழ்த்தினார். அந்நிகழ்வில் இரு கிண்ணரப் பெட்டிகளை (இரண்டு ஆர்மோனியம்) இயக்கியவர் இசைவல்லார் ஜி. இராமநாதன் ஆவார்.

இலக்குமிகாந்தன் கொலை வழக்கு

தியாகராச பாகவதர் நாடகம், திரைப்படம். இசையரங்கங்கள் இவற்றின் வழிப் புகழ்வானில் உயரே பறந்து கொண்டிருந்த வேளையில் இலக்குமிகாந்தன் கொலை என்னும் சூறாவளி உயரே பறந்த பாகவதரைக் கீழே தள்ளியது, 1944 நவம்பர் 8ஆம் நாள் சென்னைப் புரசைப் பாக்கத்தில் சிலர் சேர்ந்து தூவல் (பேனா) கத்தியால் இலக்குமிகாந்தனைத் தாக்கினர். புறநோயராகச் சென்னைப் பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்றார், புண் அவ்வளவு கடுமையானதாக இல்லை.

இலக்குமிகாந்தன் காவலரிடம் அளித்த வாய்மொழி முறையீட்டில் சிலர் தாக்கியதாகக் குறிப்பிட்டாரே தவிர, குறிப்பிட்டு எவர் பெயரையும் கூறவில்லை. சென்னைக்கும் தனுக்கோடிக்கும் இடையே ஓடிய போட்மெயில் எனப் பெயர்கொண்ட விரைவுத் தொடர்வண்டியில் நிகழ்ந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் எவர் எவர் என்பதை வெளிப்படுத்தவே மருத்துவமனையில் இருந்த இலக்குமி காந்தன் விரும்பினார், என்று தெரிவித்தனர்.

கொலையாளிகள் வழக்குமன்றத்தில் வழக்கு உசாவலுக்கு (விசாரணைக்கு) வரவிடாமல் பார்த்துக் கொண்டனர். எனவே உண்மைக் கொலையாளிகள் பற்றிய மெய்ம்மை பெரும்போர்வையால், மூடி மறைக்கப்பெற்றது. இலக்குமிகாந்தன் தாக்கப்பெற்ற மறுநாள் 9.11.1944இல் திடீரென இறந்தார். காவல்துறை எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாமல் கொலைக்குற்றம் சாற்றி எட்டுப் பேரைச் சிறைப் பிடித்தது. அந்த எண்மரில், தியாகராச பாகவதரும் என்.எஸ். கிருட்டிணனும் உட்படுவர். இச்செய்தி அவ் விருவர் தம் ஆர்வலர்க்கும் திரைத்துறையினர்க்கும் பேரதிர்ச்சிச் செய்தியாக வந்து சேர்ந்தது.

மாகாண நடுவர் முன்னர்ச் சிறையிலடைக்கத் தக்க ஒறுத்தலுக்கான (தண்டனைக்கான) நடவடிக்கைகள் முடிந்த பின்னர் உயர்வழக்கு மன்ற நடுவர் மொக்கெத்து என்பவர் முன் வழக்கு வந்தது. திருவாளர்கள் வி.ட்டி. அரங்கசாமி ஐயங்கார், இராசகோபாலச்சாரியார். பிராடெல். பிட்டி சுந்தரராசன், கோவிந்த சுவாமிநாதன், சீனிவாச கோபால், கே. எம். முன்ழ்சி. உள்ளிட்ட மிதத் திறனுடைய வழக்குரைஞன்மார் குற்றஞ்சாற்றப் பெற்றோர் சார்பாக வழக்காடினர். பன்னெடுநாள் நீண்ட வழக்காடலின் முடிவில் பலருடைய எதிர்பார்ப்புக்கு மாறாகப் பலரும் கலங்குமாறு நடுவர், ம.கி. தியாகராச பாகவதர். என்.எஸ். கிருட்டினன் இவருடன் இன்னும் நால்வரையும் சேர்த்துக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

thyagaraja_bhagavatharதில்லியில் உள்ள மீயுயர் வழக்குமன்றம் (சுப்ரீம் கோர்ட்) போல் ஆங்கிலர் காலத்தில் இலண்டனில் உள்ள மீயுயர் வழக்கு மன்றில் (பிரிவி கவுன்சில்) பாகவதரும் கலைவாணரும் மேல்முறையீடு இட்டனர், உலகப் புகழ்பெற்ற வழக்குரைஞர் டி.என். பிரிட்டு என்பவர் அவர்கட்காக மன்றாடினார். இலண்டன் மீயுயர் வழக்குமன்றம் இருவர்மீதும் தொடுக்கப் பெற்றுள்ள வழக்கை மறுஆய்வுக்காக இந்தியாவுக்கு அனுப்பியது, நடுவர் இருவர் கொண்ட ஆயத்தின் முன்னர் மேல்முறையீட்டு வழக்கு வந்தது. குற்றவியல் வழக்குரைஞர் எனப் புகழ்பெற்ற திரு. வி.எல். எத்திராசு (சென்னை எதிராசு கல்லூரி இவர் பெயரால்தான் இயங்கப்படுகிறது) பாகவதர், கலைவாணர் இவ்விருவர்க்கும் வழக்காடினார்.

உயர்நடுவர்கள் சான்றாயர் (ஜூரி) களைச் சரியாக நெறிப்படுத்தவில்லை. ஐயத்திற்கிடமான சான்றுரைஞர் (சாட்சிகள்) களையும், சான்றுகளையும் நேரிய முறையில் உசாவவும், மதிப்பிடவும் இல்லை. பாகவதருக்கும் கலைவாணருக்கும் எதிராகக் கொண்டுவரப் பெற்ற சான்றுரைஞர் அனைவரும் சொல்லிப் பயிற்சியளிக்கப் பெற்றவர். அவர்கட்கு எதிராக அளிக்கப்பெற்ற சான்றுகளும் அறிக்கை களும் நிரம்ப முரண்பாடுகள் உள்ளவையாக இருக் கின்றன. வழக்கில் பல்வேறு சந்து பொந்து களுக்கும் உள்ளன என்று வழக்குரைஞர் எத்திராசு தன் எடுத்துரை (வாதம்)யால் உயர்வழக்குமன்ற இருவர் ஆய நடுவர்கள்தம் உள்ளம் நிறைவடையுமாறு செய்தார்

. வழக்குரைஞர் எத்திராசு எடுத்துரைகளை ஏற்று நடுவர்கள் பாகவதரையும் கலைவாணரையும் குற்றமற்றவர் என விடுவித்தனர், மேல்முறையீட்டின் போது வழக்குரைகளைக் கேட்டறிந்த நடுவர்களில் ஒருவர். சான்றாக அளிக்கப்பெற்ற தூவல் (பேனா) கத்தி ஓர் எலியைக் கூடக் கொல்லாது என்றார். ஆங்கில அரசிடம் இருந்து நாடு விடுதலை பெறச் சில மாதங்கள் இருந்தபோதுதான் தீர்ப்பளித்தனர்,

பாகவதர் சிறையிலிருந்தபோது அவர் நடித்த அரிதாசு படம் மூன்று தீபாவளிகள் வரை பிராட்வே திரையரங்கில் ஓடித்திரையுலகில் வரலாற்றைப் படைத்தது. “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற பாடலும் பிற பாடல்களும் எங்கெங்கும் காற்றலை களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. புகழ்பெற்ற பாடகரும் நடிகரும் மக்கள் உரிமைப் போராளரு மான ஹேரிபெலாஃபோன்த்து “பாடகரைக் கூண்டில் அடைக்கமுடியும் ஆனால், பாடலை அடைக்க முடியுமா?” என்று கேட்டார். நடுவர்கள் தீர்ப்பு வழங்கலில் ஏற்பட்ட மிகப் பெரிய சீர்குலைவு என்று இந்தியச் சட்டஞ்சார் வரலாற்றில் இவ்வழக்கு ஆவணப்படுத்தப்படும். இந்தத் தீர்ப்பு இசைக்கலையில் வியத்தகு திறன் பெற்றிருந்த இசைஞரின் வாழ்வையும் முன்னேற் றத்தையும் பாழாக்கிவிட்டது. பாகவதர் இழந்த புகழை மீண்டும் பெறவில்லை,

பாகவதர் விடுதலையான போது இந்திய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததுடன் தமிழ்நாட்டுத் திரைப்பட உலகமும் வரலாறு, ஆன்மீகப் படங்கள் உருவாக்குவதி லிருந்து குமுகத் திரைப்படங்கள் உருவாக்கு வதற்கு விரைந்து மாறிக் கொண்டிருந்தது. சிறைக் கோட்டத்தில் இருண்ட முப்பது திங்களைக் கழித்து வெளிவந்த பின்னர் முற்றிலும் மாறுபட்ட மாந்தராக மாறி இருந்தார் பாகவதர். அவர்தம் சிறைவாழ்க்கை, மகிழ்வையும், தன்னம்பிக்கையையும் களவாடி விட்டது. முன்னைவிட இன்னும் கூடுதலாக ஆன்மீகப் பக்கம் சார்ந்தார்.

விடுதலைக்குப் பின்னர் எத்தனை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியுமோ அத்தனை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க விரும்பினார். தமிழிசைச் சங்கம் மட்டுந்தான் அவர்க்கு ஊக்கத் தந்து இசைநிகழ்ச்சிகட்கு ஏற்பாடு செய்தது, பிற அவைகள் (சபாக்கள்) மேலாதிக்கச் சாதியினால் இயக்கப் பெற்றன என்பது மட்டும் அல்லாமல் பாகவதர் அடைந் துள்ள கற்பனைக்கு எட்டாத புகழும் செல்வாக்கும் அவர்களைப் பொறாமை கொள்ள வைத்தன, பாகவதர் கொண்ட எண்ணத்திற்கு மாறாகப் பாகவதர் திரைப்படம் உருவாக்கக் கட்டாயப் படுத்தப் பெற்றார். இராசமுத்தி, புதுவாழ்வு போன்ற படங்களைத் தாமே உருவாக்கினார் அமரன் போன்ற படங்களில் அமரவதி, சியாமளா போன்ற படங்களில் (சிவகாமியில் சில காட்சிகள்) நடித்தார். இப் படங்களில் பாடல்கள் மக்களைக் கவர்ந்திழுத்தாலும் திரையரங்குகளில் படங்கள் ஓடி வெற்றிபெறவில்லை. அதனால் பொருள் இழப்பு மிகுந்தது. இவற்றிற்குரிய கரணியம் தமிழ்த்திரையுலகத்துப் போக்கு மிகப் பெரிதாக மாறிவிட்டதே ஆகும்.

கொள்கையில் கோடாதவர்

இலக்குமிகாந்தன் கொலைவழக்காலும், திரைப்படங்களின் தோல்வியாலும் பெருஞ் செல்வத்தை இழந்தபோதும், இறைமறுப்புக் (நாத்திகம்) கதைக்கருக் கொண்ட சொர்க்கவாசல் என்னும் படத்தில் நடிக்க ஓர் இலக்கம் (அக்காலத்தில் பெருந்தொகை) உருபாய் தந்தபோதும் நடிக்க மறுத்துவிட்டார். நாடறிந்த அரசியல்வாணர்களான இராசாசி, காமராசர், அண்ணாத்துரை, சின்ன அண்ணாமலை போன்றோ ருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் தன் தனிப்பட்ட ஆக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட தில்லை. பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் பேராயக் (காங்கிரசு) கட்சிச் சார்பில் போட்டியிடுமாறு கேட்ட காலையும் ஏற்றுப் போட்டியிட உறுதியாக மறுத்தார்.

1957இல் சிவாசிகணேசன் அம்பிகாபதியாக நடித்த படத்தில் கம்பராக நடிக்கப் பாகவதருக்குச் சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியத்தை விடப் பத்தாயிரம் (10000) கூடுதலாக தருவதாகச் சொன்ன தொகையை நயத்தகு பண்புடன் மறுத்து விட்டார். அம்பிகாபதியாக நடித்துத் தன் நயவர் (இரசிகர்) உள்ளங்களில் ஒருதனி இடம்பிடித்தவர் அதே கதையில் மாறுபட்ட ஒரு கதைமாந்தராக நடிக்க அவர் விரும்பவில்லை, சிவாஜிகணேசன் நடித்த அம்பிகாபதி படம் தோல்வி கண்டதற்கு நேர் மாறாகப் பாகவதர் படம்பெரு வெற்றி பெற்றது. பாகவதர் சுரதாவுக்கு அமரகவியில் பாட்டு எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது பாவலர் தன் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள வழிஅமைத்தது.

இராயப்பேட்டையில் சுகுமார்பவனம் என்னும் தன் வீட்டில் ட்டி.ஆர். மகாலிங்கம் தன்மகன் சுகுமாருக்காக “வாழ்நாள் வேள்வி” நிகழ்ச்சி கொண்டாடினார், பாகவதர் இசைநிகழ்ச்சி முடிந்ததும் வெள்ளித்தட்டும் ஆயிரம் உருபாயும் ட்டி.ஆர். மகாலிங்கம் தந்தார். பாகவதர் உடனே மகாலிங்கன் மகன் சுகுமாரை அழைத்து, ஆயிரத்தோர் உருபாயும் வெள்ளித் தட்டும் சேர்த்துப் பாகவதர் வாழ்த்தியளிப்பதாகக் கொடுத்தார். வந்திருந்தார் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். மயிலாப்பூரில் சுகுமார் மகன் ஒளிப் படக் கடை வைத்துள்ளார்.

பாகவதர் “தன் அப்பாவுக்கு (சுகுமாருக்கு) அளித்த பரிசை அடிக்கடி நினைவு கூர்வதுடன் தங்கத்தூவல் (பேனா) தந்து நன்றாகப் படிக்குமாறு வாழ்த்தியதையும் கூறுவார்”, என்று சொல்கிறார். மயிலைப் புதுத்தெருவில் வாழ்ந்த சம்பந்த முதலியார்க்கு உரிமையான கபாலி திரையரங்கை 1939இல் திறந்தார். அப்போது நினைவுப் பரிசாக வெள்ளிச் சுத்தியல் ஒன்றை அரங்க உரிமையாளர் அளித்தார்.

சொக்கலால் பீடி உரிமையாளர் அரிராம் சேட்டு பாகவதர்பால் அளவுகடந்த ஆர்வமிக்கவர். பாகவதர் தம் இறுதிக்காலம் வரை எந்தக் குறைவுமின்றி வாழ்வதற்கான வழி வகைகளைச் செய்தார்.

ஏழிசை மன்னரின் இறுதிக்காலம்

“என்னைப்போல் வாழ்ந்தவரும் இல்லை, தாழ்ந்த வரும் இல்லை” என்று பாகவதரே சொன்னார். அவர் சொன்ன சொற்கள் எந்த அளவுக்குச் சொந்த வாழ்வில் நொந்து வெந்து போயிருப்பார் என்பதை அறிந்துகொள்ளலாம். 1955இல் இருந்தே நெருங்கிய நண்பர் ஒருவருடன் கோவில்களுக்குச் சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். சமயபுரம் கோவிலுக்கு அடிக்கடி செல்வதும் அங்கேயே ஒரு திங்களோ அல்லது திங்களுக்கு மேற்பட்டோ தங்கும் பழக்கத்தை மேற்கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த எஸ்.எஸ். இராசேந்திரன் சமயபுரத்துக்கு வந்து, சென்னையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளத் தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். இந்த நல்ல அறிகுறியை ஏற்றுக்கொண்டு செல்லாமல், “சமயபுர மாரியம்மை தம் உடல் நலத்தைக் காப்பாள்” என்று கூறி எஸ்.எஸ். இராசேந்திரன் வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

உடல் நலமும் வளமும் புகழும் குறைந்தபோதும் கடவுள்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் பிறரிடமிருந்து எந்தவகை உதவியையும் பெற்றுக்கொள்ள உறுதியாக மறுத்துவிட்ட பண்பையும் பாராட்டிச் சென்றுவிட்டார். கடவுள்பால் அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை யால் உடல்நலம் பேணலில் தனிக்கவனம் செலுத்த வில்லை. மருத்துவரையும் தவறாமல் காண்பதில்லை, கணையச் சுரப்புநீர் (இன்சுலின்) ஊசியைத் தாமே உடலில் செலுத்திக் கொண்டார். குருதி உயர்அழுத்தத்தாலும் கடுமைமிகு நீரிழிவாலும் இறுதிநாள்களில் துன்பப்பட்டார். இறப்பதற்குப் பத்துநாள் முன்னதாகப் பொள்ளாச்சி யில் இசையரங்கில் பாடினார். அன்றைக்கு அவர் இசையைக் கேட்டவர்கள் இன்றைக்கும் அவ்விசையைப் போல் கேட்டதில்லை என்கிறார்கள்.

சென்னைப் பொது மருத்துவமனையில் 1959 அக்குதோபர் 22 ஆம் நாள் சேர்க்கப்பெற்றார். பத்து நாள் படுக்கையில் கிடந்தார். நவம்பர் ஒன்றாம்நாள் மாலை 6,30 மணிக்கு இசையுலகிற்கு ஈடு செய்ய இயலா இழப்பை ஏற்படுத்திவிட்டு இயற்கை எய்தினார். திருச்சி நகர்ப்புறத்தே உள்ள சங்கிலி யாண்டார் புரம் என்னும் சிற்றூரில் புதைக்கப்பட்டார். பெருந்திரளாக மக்கள் கூட்டம் சேர்ந்துவிட்டதால் பாடிவீட்டுப் பகுதி (கண்ட்டோன்மெண்ட்) யில் இருந்த பாகவதர் வீட்டிலிருந்து 4.30 மணிக்குப் புறப்பட்ட இறுதி ஊர்வலம் இடுகாட்டைச் சென்றடைய 4.00 மணி நேரத்துக்கு மேல் ஆகியது.

பாகவதர் இறப்பையொட்டிச் சீர்காழி கோவிந்தராசன் இரண்டு பாடல்களைப் பாடினார். ஒன்று தியாகராச பாகவதர் மீதும் பாகவதர் சிறப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த கலைவாணர் மீது மற்றொன்றும் பாடினார். “ஏழிசை மன்னா எங்கு நீ சென்றாயோ” என்ற பாடல் கண்கலங்க வைக்கும். பாகவதர் ஆளுமை யையும் நுண்கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யும் அப்பாடலில் அமைந்த சொற்கள் மிகப்பொருத்த மாக விவரித்தன. “கண்ணிழந்தால் என்ன கண்ணிய மதை உன் காலம் உள்ளவரை கடைப்பிடித்தாய்” எனும் சொற்கள் பாகவதர் தம் மாற்றுக்குறையா மதிப் பார்ந்த பண்புகளின் மதிப்பு மிக்க போற்றுதலுரை யாகும்.

நிறைவு

பன்முக ஆளுமையுடைய ம.கி. தியாகராச பாகவதர் இசை விரும்பியர்க்குக் கிட்டற்கு அரிய பரிசிலாவார். நாடகத்தில் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு நிகராக விளங்கினார். திரையுலகில் மூத்த இசையறிஞர்களைக் காட்டினும் மேம்பட்டு விளங்கினார். அவர் செய்த தாக்கத்தைப் போன்று மூத்தோர்கள் செய்யவில்லை. இசையரங்குகளில், கட்டுறுதித்திறன் மிக்க அவரை முற்றாக ஒதுக்கினர். வருந்துமாறு மறந்தனர். தமிழிசைச் சங்கத்திற்காகத் தேவராப் பண்ணிசை ஆராய்ச்சியில் பெரும்பங்காற்றினார் என்பதும் கருநாடக இசையில் பேரார்ந்த அறிவுடையர் என்பதும் அறிந்துகொள்ளாமல் கருநாடகப் பாடகருள் ஒருவர் என்றும் திரைப்பட நடிகர் என்றுமே அறியப்பட்டார் என்பது தமிழகத்தின் வாய்ப்புக் கேடாகும்.

மேல்கண்டதற்கு நிகரான வாய்ப்புக் கேடு ஒன்றும் உண்டு. அது, செவ்வியல் கருநாடகப் பாடல் களை இசைத்தட்டு வடிவத்தில் பதிவுசெய்யும் கருத்தினராக எப்போதும் இல்லாததுதான். இசைத்தட்டு வடிவத்தில் அவருடைய கருநாடகப் பாடல்கள் பதியப்பட்டிருக்குமானால் சாத்திரிய இசையுலகில் தனக்கென நிலையான இடத்தை அவர் பெற்றிருப்பார். அழகிய அமைதி, பண்பார்ந்த ஆளுமை வாய்ந்த வண்ணனைக்கு அப்பாற்பட்ட தேனின் கசிவந்த இனிய குரலிசை, பாகவதரின் நயவர் (இரசிகர்) உள்ளங்களில் வட்டமிட்டுச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். தொன்மக் கதைபோல் பாகவதர் தோன்றினும் அவர் இறப்பின்போது ஓசையெழுப்பாமல் அமைதியாக உள்ளுக்குள் வருந்திய பலர் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பாகவதர் தம் கலையுலகத் தொண்டும் இசையுலகத் தொண்டும் என்றென்றும் நினைவில் நின்று நிலைத்திருக்கும்.

(சிந்தனையாளன் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

நன்றி: கீற்று.காம்

இன பற்று இழிவானதா?

இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியது” என்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம். குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா? இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளிக்கிறார்? சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்

எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட!

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா? மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன. இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம். கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்! சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால்தான். அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான். எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன. ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது. ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும்தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது. எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா? தமிழ் இனம் சிந்திக்கட்டும்!

ஆக்கம்:
இ.பு.ஞானப்பிரகாசன்.
நெருடலுக்காக..

நன்றி ; நெருடல்.காம்

தமிழகத்தில் மலையாளிகளின் ஆக்கிரமிப்பு


தமிழகத்தில் கடை விரித்திருக்கும் மலையாளிகளின் கிருத்துவ சபை தனது மொழி பற்றை காட்டியிருக்கும் பள்ளி வளாகம். தமிழன் மலையாளியின் மூத்திரத்தை வாங்கி குடிக்கட்டும். அப்போதாவது இவனுக்கு தன் மொழி மீதும் இனம் மீதும் பற்று வருமா ?
மலையாளி எங்கிருந்தாலும் தன்னை அடையாலபடுதிகொல்கிறான். கன்னடன் தன்னை கன்னடன் என்கிறான், தெளுங்கனை பற்றி சொல்லவே தேவையில்லை , ஏனெனில் அவன் பேசுகிற கொச்சை மொழிக்கு எழுத்தே இல்லாவிட்டாலும் உளறுவான் , தமிழன் மட்டுமே தன்னை இந்தியனாகவும் திராவிடனாகவும் நினைத்து அடிபட்டு உதைபட்டு சாவான் , - எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்குபிறப்பினும் அயலான் அயலானே!! பாரதிதாசனின் இந்த வார்த்தைகளுக்கு விளக்கம் தேவையில்லை !!
- கருவைமுருகு .

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! – குர்ரம் பர்வேஸ்


Jammi-kashmir

காஷ்மீரில் ஜூன் 11 லிருந்து ஆகஸ்ட் 8 க்குள் மட்டும் 51 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் என்று இந்திய அரசு சொல்கின்றது.

உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் ஒரு அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில், சிறீநகரிலிருந்து ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள்ர் திரு. குர்ரம் பர்வேஸ், பெங்களுரிலிருந்து காஷ்மீரிகளின் சுயநிர்ணய இயக்கத்தின் சமய மற்றும் பண்பாட்டுப் பிரிவிலிருந்து மாணவர் திரு காலிது வாசிம் மற்றும் கவிஞர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சி தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் சேவ் தமிழ் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 120 பேர் கலந்து கொண்டனர்.

14 ஆகஸ்ட் 2006 ல் செஞ்சோலையில் சிங்கள வான்படையால் குண்டு வீசி கொல்லப்பட்ட 61 குழந்தைகளையும், இந்திய படையினரால் கடந்த இரண்டு மாதத்தில் கொல்லப்பட்ட 51 காஷ்மீரிகளையும் நினைவு கூறும் விதமாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், சேவ் தமிழ் சார்பாக திரு அருண் அவர்கள் உரையாற்றினார். அவர் தன் உரையில் பேசியது பின் வருமாறு, ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்த நான்காம் கட்ட ஈழப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியை வெளியிடாமல் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை நாம் நன்கு அறிவோம். இன்று காஷ்மீரில் நடக்கும் போராட்டத்தையும் ஊடகங்கள் மறைப்பதையும், திரிப்பதையும் நம்மால் உணர முடியும். எனவே, காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண காவலரைப் பார்த்தாலே பயப்படும் நம்மைப் போன்ற பொது மக்கள், காஷ்மீரில் உயிரைத் துச்சமாக மதித்து ஆயுதமேந்திய காவற் படைகளை நோக்கி போராடுவதன் காரணம் என்ன? காரணம், ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் வெடித்து எழுவது அன்றி வேறொன்றும் இல்லை. நமக்கு மேலும் சில கேள்விகள் உள்ளன. பிற இடங்களில் போராடும் மக்களைக் கலைப்பதற்கு கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்து இந்திய படையினர் காஷ்மீரில் மட்டும் ஏன் துப்பாக்கியால் சுடுகின்றனர்? அதுவும், முழங்காலுக்கு கீழே சுடாமல் தலையில் சுடுவதன் காரணம் என்ன? மக்கள் திரள் வீதிக்கு வந்து போராடுவதை ஏன் பயங்கரவாதம் என்று சித்தரிக்கின்றனர்? நாம் நேசிப்பது காஷ்மீர் மக்களையா? இல்லை காஷ்மீர் மக்கள் வாழும் நிலத்தையா?

கவிஞர் இன்குலாப் தன் உரையில் காஷ்மீர் எப்படி இந்தியாவால் 1948 இல் ஆக்கிரமிக்கப்பட்டது என்பதையும் காஷ்மீர் மக்களின் விடுதலை வரலாற்றையும் விளக்கிப் பேசினார். இந்திய அரசு எப்படி காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தையும் இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஒடுக்குகின்றது என்று விளக்கினார். மேலும், ஜனநாயகம் என்பது அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை என்று கேள்வி கேட்பவர்களை ஒடுக்குவதும், எச்சரிப்பதும் ஜனநாயகமாகாது என்றும் சொல்லி இதற்கு சான்றாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். நான்காம்கட்ட ஈழப் போரில் ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொல்வதற்குத் துணை போன இந்திய அரசின் கரங்களில் இரத்தக் கறைப் படிந்துள்ளது என்று இந்திய அரசைக் கண்டித்தார்.

இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் காஷ்மீர் குறித்து திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கும் மாயைகளை உடைத்துப் பேசினார் திரு காலிது வாசிம். 1948 இல் இந்தியாவோடு காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மன்னர் அரிசிங்கிற்கு மக்கள் ஆதரவு கிடையாது. மேலும், அம்மன்னர் கூட நிபந்தனையோடு கூடிய இணைப்பு என்றும் பொது வாக்கெடுப்பு மூலம் இணைப்பு குறித்து காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கண்டறியும் வரை நடைமுறையில் இருக்கும் தற்காலிகமான இணைப்பு என்றும் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்படி ஒரு நியாயமான பொது வாக்கெடுப்பு கடந்த 62 ஆண்டுகளில் நடத்தப்படவில்லையாதலால் அவ்வொப்பந்தம் தன்னுடைய சட்டப்பூர்வ மதிப்பை இழந்துவிட்டது.

இப்போது நடக்கும் காஷ்மீர் மக்களின் எழுச்சிமிக்கப் போராட்டம் ஏதோ வளர்ச்சியின்மையின் காரணமாக மக்கள் வெளிப்படுத்து கோபம் என்று காரணம் சொல்லப் பார்க்கின்றார்கள் இந்தியாவின் அறிவு ஜீவிகள். காஷ்மீர் மக்கள் தங்களுடைய உரிமையான உள் கட்டமைப்பையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், வேலை வாய்ப்புகளையும் கோருகின்ற அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து விடுதலையைத் தான் விரும்புகின்றனர்.காஷ்மீர் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று தொடர்ச்சியாகப் பொய் சொல்லி வருகின்றது இந்திய அரசு. அப்படியெனில், இது வரை காஷ்மீர் பிரச்சனை குறித்து 18 முறை ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே ஏன்? இந்தியா பாகிஸ்தானோடு மேற்கொண்ட தாஸ்கெண்டு மற்றும் சிம்லா உடன்படிக்கையில் காஷ்மீர் பற்றி பேசியிருப்பது ஏன்? காஷ்மீர் பிரச்சனையில் காஷ்மீர் மக்கள் தான் முதன்மையான தரப்பு. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்காமலும், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்காமலும் இவ்விடயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது.

அண்மையில் இஸ்ரேலின் தலைமை இராணுவ அதிகாரி இந்திய இராணுவ அதிகாரியைச் சந்தித்து பிரிவினைவாதப் போராட்டங்களை எப்படி ஒடுக்குவது என்று கலந்து ஆலோசித்தார். உலகெங்கும் உள்ள ஒடுக்கும் அரசுகள் ஒன்று சேர்ந்து விட்டன. உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ஒடுக்குமுறைக்கெதிரானப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். ஆசாத் காஷ்மீர் போராட்டமானாலும், இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டமானாலும், வடகிழக்கு இந்தியாவில் நடக்கும் நாகாலாந்து விடுதலைப் போராட்டமானாலும், சீனாவிலிருந்து விடுதலை கோரும் திபெத்தியப் போராட்டமானாலும் நமது மொழியும், வரலாறும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நீதிக்கான நமது போராட்டம் ஒன்று தான். மக்கள் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்து முடித்தார் திரு. காலிது வாசிம்.

இறுதியாகப் பேசிய திரு.குர்ரம் பர்வேஸ், உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரானக் கூட்டமைப்பினர், காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி 2010, ஆகஸ்ட் 13 ஆம் நாள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிய 52 தோழர்களுக்கு காஷ்மீர் மக்களின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துவிட்டு, இந்திய அரசைக் கண்டித்தார். இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிகக் நுட்பமாகக் கவனித்து வ்ருகின்றோம். எங்களுக்கு எழுச்சியூட்டியப் போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இலங்கை அரசு ஒரு பிரபாகரனைக் கொன்று விடலாம். ஏன், இன்னும் பல பிரபாகரன்களைக்கூடக் கொன்று குவிக்கலாம். ஆனால் தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

இது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்திய படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. அடிப்படையில் காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர்க்கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் வெடிகுண்டையோ துப்பாக்கி ரவையையோ இதுவரைக் கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! என்ற முன்னுரையோடு காஷ்மீரில் நடப்பதை விவரிக்கத் தொடங்கினார்.

அந்த உரை பின்வருமாறு:

ஜம்மு காஷ்மீரில் 1990க‌ளிலிருந்து , 70,000ற்க்கும் அதி:க‌மான‌ பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், 8,000 பேர் காணாமல் போயுள்ள‌ன‌ர். காஷ்மீரில் உள்ள‌ 6,71,000 இராணுவ‌, துணை இராணுவ‌, காவ‌ல் துறையின‌ரின் பெரும் ப‌குதி காஷ்மீரின் ப‌ள்ள‌தாக்கு ப‌குதியில் உள்ள‌ பொதும‌க்க‌ளை க‌ட்டுப‌டுத்துவ‌தில் தான் உள்ள‌தே த‌விர‌ எல்லை பாதுகாப்பில் அல்ல‌. மேலும் இராணுவ‌ம் இன்று க‌ல்வி நிலைய‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள், உண‌வ‌க‌ங்க‌ள், விளையாட்டு மைதான‌ங்க‌ள், க‌டைவீதிக‌ள் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌து.

த‌ற்போதைய‌ நிலையில் இராணுவ‌ம் ம‌ற்றும் துணை இராணுவ‌க் குழுக்க‌ள் துப்பாக்கியால் சுடுத‌ல், சித்த‌ர‌வ‌தை செய்த‌ல், க‌ண்ணிவெடி வைத்த‌ல், கைது செய்த‌ல், ம‌னித‌ கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துத‌ல், பாலியல் பலாத்காரம், க‌ட்டாய‌ப‌டுத்தி வேலை வாங்குத‌ல், காணாம‌ல் போக‌ச் செய்த‌ல், கொலை செய்த‌ல் போன்ற‌ எல்லாவ‌கையான‌ வ‌ன்முறைக‌ளையும் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ கொடுமைக‌ளை செய்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீண்ட‌ ஒன்று.

ச‌ன‌வ‌ரி 2004 லிருந்து ந‌வ‌ம்ப‌ர் 2008 வ‌ரையிலான‌ கால‌த்தில் ம‌ட்டும்(மும்பை தாக்குத‌லுக்கு முன்ன‌ர் வ‌ரை) 6588 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த‌ கால‌க‌ட்ட‌த்தைத் தான் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காலம் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டன. அமைதி காலம் தவிர்த்த போர் காலங்களில் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவாக இருக்கும். வேடிக்கையாக, இந்தியாவும்ம், பாகிசுதானும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது, காசுமீரில் 6588 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக, ஜம்மு காசுமீரில் அமைதி பேச்சுவார்த்தை என்பது தணடனை பயமில்லாமல் பொதுமக்களை கொலைசெய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கின்றது. ஜம்மு காசுமீரில் வாழும் மக்கள் உலக அரசியல்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலக சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் இந்த அமைதி வழி போராட்டத்தை இந்திய அரசு ஆயுதப்படைகளைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதுவும் மக்களின் வலியை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன.

இந்திய அரசு வன்முறை மற்றும் அமைதி வழி போராட்டம் என்ற எந்த வகையில் மக்கள் போராடினாலும் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியைக் காட்டுவதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளிலிருந்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குவது என்பது இந்திய அரசு இந்த பிரச்சனையை எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் காட்டுகின்றது. தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல, 1989லிருந்து காசுமீர் மக்களை இராணுவம் மற்றும் துணை இராணுவம் மூலம் சிறைபடுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும்,1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும் தான். இந்திய அரசு காசுமீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாக கூறியுள்ளது. ஆனால் கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது தீவிர இராணுவாதமாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ அல்லது சுதந்திரத்திற்காக போராடும் தலைமையையோ அரசு அணுகியதில்லை. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து அரசு இது வரை பரிசீலத்தது கூட இல்லை.

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறுகின்றது ஆனால் மக்களின் விருப்பமான சுய நிர்ணய உரிமையை பற்றி மட்டும் பேசுவதே இல்லை.இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காசுமீர் ஒரு பிரச்சனை(problem) அல்ல, இது ஒரு சச்சரவான(conflict zone) பகுதி. இந்தியா காசுமீரை இராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைத் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்கள் செயலிழக்க வைத்துள்ளது இந்திய அரசு. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அது தான் இந்திய இராணுவம். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய இராணுவத்தால் தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கின்றது.இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு, கடந்த மே மாதத்தில் 100 கிராமப் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது போன்ற “சுய பாதுகாப்பு” பிரச்சாரங்களையும், குழுக்களையும் மேற்கொள்வதன் மூலம் இராணுவமயமாக்கலையும், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் பெருகச்செய்து இப்பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகின்றனர்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைச் சகித்துக்கொள்ளாமை:

காஷ்மீரில் இராணுவ நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஒரு வழியாகவே மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைக் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அரசு திரும்ப திரும்ப உறுதியளித்துள்ளது. ஆனால், “இந்தியாவே வெளியேறு, திரும்பிப் போ” என்றும் ’இந்தியாவே, காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்று வீதிகளில் முழங்கும் மக்களை இந்தியப் படைகள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதன் மூலம் அவர்கள் வன்முறையின்றி குடிமைச் சமூகம் தங்கள் வெறுப்பைக் காட்டுவதைத் தான் கிஞ்சித்தும் தாங்க முடியாதவர்களாக இருக்கின்றார் என்பதைப் பார்க்க முடிகின்றது. காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று ஓமர் அப்துல்லா ஜூன் 24,2010 அன்று சொன்னார். அதைத் தொடர்ந்து, அமைதியானப் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்தத் தலைவர்கள் மீது இந்தியப் படைகள் அடக்குமுறையை ஏவினார்கள். துணை இராணுவப் படையால் கொல்லப்பட்டவர்களாகக் அழுதுக் கொண்டு, கோபத்தோடு வீதிகளில் பேரணியாகச் செல்லும் மக்கள் எப்போதும் ஆயுதமேந்தியப் படைகளைக் கொண்டே ஒடுக்கப்படுகின்றார்கள். இந்தியாவின் உள்துறைச் செயலர் திரு.ஜி.கே.பிள்ளை, பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறியதாலும், சோதனைச் சாவடிகளைத் தாக்கியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லி சி.ஆர்.பி.எப் மற்றும் காவல்துறையின் வருந்தத்தக்க செயல்களை மன்னிக்கவும், நியாயப்படுத்தவும் செய்கிறார். இது, இந்தியப் படைகள் இந்திய அரசின் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருப்பதையே காட்டுகின்றது. மேலும், இராணுவ ஆட்சியைக் குடிமை சமூகம் எதிர்ப்பதைக் குற்ற நடவடிக்கையாகப் பார்க்கும் இந்திய அரசின் போக்கைச் சுட்டிக்காட்டுகின்றது.

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயங்கரவாத்திற்கு இணையான தேசத்துரோகமாகக் சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. அமைதியானப் போரட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் கல்லெறிவதென்பது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கின்றார்கள். அரசியல் ரீதியாகக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே கல்லெறிதல். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது.

விடுதலையைக் கோரும் தலைவர்கள் எண்ணற்ற வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராடுவதைக் கூடத் தடுக்கின்றார்கள். சான்றாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஸ்ரீநகர் வந்து, மனித உரிமை மீறல்களை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் உறுதி அளித்துக் கொண்டிருந்த போது சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். தேர்தல் நடந்த பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள்; பிறகு, பிரிவினைவாதிகள் தேவையற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என்று இந்தியப் பிரதமர் 2008 ஆம் ஆண்டு சொன்னார்.

இராணுவம் மற்றும் துணை இராவத்தின் செயல்கள் குறித்து கவனிப்பதும், அதற்கு பொறுப்பேற்கவும் அரசுக்கு அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை.போராட்டங்களில் பங்கேற்கும் சிறுவர்கள் உள்ளிட்ட மக்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்கின்றார்கள். அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவுகள் பாதுகாப்புப் படையினரை விளைவுகளைப் பற்றி கவலைப்படாமலும், முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்றியும் செயல்பட அனுமதிக்கின்றது. அரசியல் தலைவர்களின் அழைப்பை ஏற்று மக்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத எழுச்சி என்று நவம்பர் 2009 இல் சித்தரித்துப் பேசினார் லெப். ஜெனரல் பி.எஸ். அகர்வால். 2008 மற்றும் 2009 இல் நடந்த அமைதியானப் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் மக்கள் திரளை நோக்கிச் சுட்டதால் போராட்டங்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போயின. வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட எதிர்ப்புகளை ’வலைதளப் பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தி கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயல்வீரர்க்ள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை யாரிடமும் இல்லை. காவல்துறையினர் சிறைக்காவலில் இருப்பவர்களிடமும், கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலையைக் வேண்டுபவர்களிடமும் லஞ்சம் கேட்பது மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது முதலிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசு மற்றும் அரசுடைய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாராரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் உறுதி செய்யப்படாத சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பு காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.

சூலை 7, 2010 அன்று ஜம்மு காசுமீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் மியான் குயோம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்பது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஐயத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து இரண்டு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும், மேலும் அரசு நிர்வாகம் ஒருவரின் மூலம் அமைதி மற்றும் ஒழுங்கு குறையும் என கருதினால், இந்த சட்டத்தின் மூலம் அவரைக் கைது செய்து இரண்டு வருடம் தடுப்புக்காவலில் வைக்க முடியும். தனது மனித உரிமை செயல்களுக்காகவும், அதிலும் குறிப்பாகத் தடுப்புக் காவலிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கியதாலும், இந்திய அரசை எதிர்த்து போராடுபவர்களுக்காக வாதிடுவதாலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வாதிடுவதாலும், இந்திய இராணுவ, துணை இராணுவத்தின் குற்றங்களை விசாரிப்பதனாலும், சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததாலும், காசுமீர் ஒரு “சச்சரவான நிலப்பகுதி”(disputed territorய்) என அறிவித்ததாலுமே குயோமை கைது செய்துள்ளார்கள். சூலை 18, 2010 அன்று ஜம்மு காசுமீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் குலாம் நபி சகாகீனும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைவில்லாமல் கொல்லப்படும் பொதுமக்கள்:

2010 ச‌ன‌வ‌ரியிலிருந்து ஆக‌த்து வ‌ரையிலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும் 89 பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இதில் 71 பேர் இந்திய‌ ஆயுத‌ப்ப‌டையினால் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் இன்ன‌மும் எங்க‌ளை(பொது ம‌க்க‌ளை) வ‌ன்முறை செய்வ‌தாக‌வும், இந்திய‌ இராணுவ‌ம் அமைதியின் வ‌டிவ‌ம் என்றும் கூறி வ‌ருகின்ற‌ன‌ர்.

இராணுவ‌ ஆட்சி?

இந்திய‌ அர‌சு த‌ற்பொழுது ந‌டைபெற்று வ‌ரும் போராட்ட‌ங்க‌ளை காசுமீரின் பிர‌ச்ச‌னையாக‌க் க‌ருதவே இல்லை. ஆனால் அதே ச‌ம‌ய‌த்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காசுமீரில் இராணுவ‌ம் த‌ன‌து ப‌டைக‌ளை அதிக‌ரித்தும், ப‌ல‌மாக‌ வேரூன்றியும் வ‌ருகின்ற‌து. இந்திய அரசு இராணுவம், துணை இராணுவத்தின் அடக்குமுறை செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாமாலும் உள்ளது.ஒருபுறம் ’காசுமீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய இராணுவப்படை’ என்று கூறிக் கொண்டே மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதற்கு நியாயம் கற்பிக்கின்றது. எமது “பாதுகாவலர்கள்” வித்தியாசமானவர்கள். அவர்கள் எப்பொழும் எங்களை எதிர்களாகவும், துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகப் பார்க்கின்றனர். இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காசுமீரில் இராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது.

பொதுப் பாதுகாப்புச் சட்டம், சச்சரவுப் பகுதி சட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் போன்றவை எல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்க்கும் ஏற்படுத்தும் தண்டனை பயத்தை சட்டப்பூர்வமாக இல்லாமல் செய்கின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று பதிவியேற்றப் பின்னர் முதலமைச்சர் அப்துல்லா “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்” நீக்கப்படும் என அறிவித்தார். இதை ஆயுதப்படை கடுமையாக எதிர்த்தது, மேலும் ஆயுதப்படை, இந்த சட்டத்தை நீக்குவது “பிற்போக்குத்தனமானது” எனவும், “காசுமீர் பள்ளதாக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும்” எனவும், இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் கூறியுள்ளது. விடுதலை விரும்பும் தலைவர்களுடன் “சுயாட்சி” பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்” நீக்கப்படும் என்றும் கடந்தத் தேர்தல் அறிக்கையில் அவர் கூறியிருந்ததாலே அப்துல்லா வெற்றி பெற்றிருந்தார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை” நீக்குவது சட்டபூர்வமாக மட்டுமல்லாமல் அரசியல் பூர்வமாகவும் தண்டனை பயத்தை கொண்டு வரும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை” நீக்குவது மட்டுமல்லாமல் தங்களது பாதுகாப்பும் மேம்படுத்தப்படவேண்டுமென காசுமீரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இறுதியாக:

இந்திய அரசு நிர்வாகத்தாலும், இராணுவத்தினாலும் வன்முறை சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாகக் காசுமீர் உள்ளது. காசுமீரில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என இந்திய அரசும், சர்வதேச சமூகமும் இன்று வரை கூறவே இல்லை. ஜ்ம்மு காசுமீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவமயமாக்கல் “உள்நாட்டு பிரச்சனை” என்று கூறப்படுகின்றது, ஆனால், இந்த பகுதி சர்வேதச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதி. இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களையும் சர்வதேச சமூகமும் கண்டிக்காமல் மௌனியாக இருந்து வருகின்ற‌து. காசுமீர் பிரச்சனையும் மற்ற சர்வதேசப் பிரச்சனைகளை போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் அவசரமான கவனமும், ஒரு முடிவும் தேவை.தற்பொழுது இங்கு ஒரு சர்வதேச மேற்பார்வையாளர்களும் இல்லை. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா, பாகிசுதான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும் காசுமீர் மக்கள் ஒரு தரப்பு என்பது தவறிக் கொண்டே இருக்கின்றது. தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்து இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களைத் திட்டமிட்டு கடுமையாக அடக்குமானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கின்றது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறை சக்கரம் சுழலும்.

நன்றி: தமிழரை காப்போம் ( save tamils)

சனி, ஆகஸ்ட் 28, 2010

இந்தியாவில் விடுதலைப்புலிகள்மீதான தடை இனியும் தேவையா?

டெல்லி: இந்தியாவில் விடுதலைப்புலிகள் [^] மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன? என்பதை அறிய நேற்று மாலை டெல்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை.

பாஜக தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் [^] மீது கடந்த 20 ஆண்டுகளாக தடை உள்ளது. இந்தத் தடை தொடர வேண்டுமா... புலிகள் அமைப்பு பற்றிய இந்தியாவின் வருங்கால நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை 3.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கான இந்தப் பொது விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றம் [^] எண் 2 ல் நடந்தது.

விடுதலைப் புலிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நடந்த இந்தப் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை.

தமிழகத்திலிருந்து பாஜகவைச் சார்ந்த ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அவர் தனது கருத்தை கூறும் போது, "விடுதலைப்புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டதாய் இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இல்லாத ஒரு இயக்கத்தை நினைத்து எதற்காக அச்சப்பட வேண்டும்?" என்று வாதாடினார்.

இந்த விசாரணையில் ஒருவரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளாததால், அடுத்த மாதம் 21ம் தேதி சென்னையிலோ அல்லது டெல்லியிலோ இந்த விசாரணையை மீண்டும் நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார்.

விசாரணை சென்னையில் நடக்கும்போதாவது மற்றவர்கள் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்


IMG_6279

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.

பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்
?

பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.

இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.

கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?

பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.

இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?

பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.

செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.

ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.

இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?

பதில்: எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!

கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

பதில்: கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!

கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?

பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.

தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?

பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.

கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.

கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?

பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.

கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!

கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?

பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.

எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.

கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.

இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.

நன்றி; மீனகம்.காம்


போலித் தமிழ்த் தலைவன்- சிதம்பரம் தம்பி


கள்ளத் தனம்மிகுந்தோன் - கொடுங்

கவுடில்ய னுக்கிவன் முன்பிறந்தோன்!

சொல்இன நலம்உரைக்கும் - கறுஞ்

சிந்தையில் தன்னலம் பாய்விரிக்கும் !

எண்ணிய முடிப்பதிலும் - போட்டிக்கு

இருப்பவர் எவரையும் துடைப்பதிலும்

நுண்ணிய கலைஞனிவன்!- காய்

நகர்த்தலில் நிகரிலா மன்னனிவன்!

உறவுக்குக் 'கை'கொடுத்தான்! - இன

உரிமைக்குக் கல்லறை பல சமைத்தான் !

வருபுனல் காவிரியை - இவன்

வற்றவைத் தான்மிகு தன்னலத்தால்!

பகையுடன் கொஞ்சிவந்தான்! - கெஞ்சிப்

பல்லிளித்து உரிமைகள் அடகுவைத்தான்!

மிகப்பெரும் வினைத்திறத்தால் - தன்

மனைஉயர் வொன்;றையே நிதம்நினைத்தான்!

தமிழினைத் தமிழினத்தை - நெஞ்சில்

தாளாப் பகையாய்ச் சுமப்பவரை

உவந்து வளர்த்துவிட்டான்! - இன

உயிர்ப்பகைக்கு ஊக்கம் உரம்அளித்தான்!

குடிநலம் புரிவனென்றான்! - மதுக்

குடியராய்த் தமிழரைக் கெடுத்துஉயர்ந்தான்!

விடிவிலாத் துயரினர்முன் - இவன்

வீசினான் 'இலவசம்"! அவர்புதைந்தார்!

ஆற்றை அடகுவைத்தான் ! - மண்ணை

அயலவர்க்கு இங்கே பகிர்ந்தளித்தான்!

சோற்றுக்(கு) இலாதவர்க்கே வண்ணத்

தொலைக்காட்சி குடிக்காசால் உவந்தளித்தான்!

முன்னவர் சொந்தநிலம் - எங்கள்

மீனவர் தென்கச்சத் தீ(வு)அதனை

“அன்னை” கொடை கொடுத்தாள்! - வீரன்

அடங்கி ஒடுங்கி முடங்கி விட்டான்!

மணற்கொள்ளைத் திருடர்களால் - வன

மரங்களைக் கடத்திடு;ம் கயவர்களால்

பணம்பண்ணிக் கும்பல்களால் - ஆன

பண்புசால் தானையின் தலைவனிவன்!

தமிழ்எங்கும் எதிலும்என்றான்! கல்வி

தமிழ்தா என்கையில் திரும்பிநின்றான்!

தமிழிலா தமிழர் மண்ணில் - இவன்

தாராள மயங்களை இறக்கிவைத்தான்!

ஆங்கிலக் கொள்ளையர்க்கே -- இங்கு

ஆவன யாவையும் உடன்புரிந்தான்!

பாங்குறு தாய்த்தமிழ்சொல் - பள்ளி

பார்க்கவும் ஊக்கவும் நினைவிழந்தான் !

நெஞ்சம் கலங்கவில்லை! - மக்கள்

நூறா யிரர்மாண்ட(து) உறுத்தவில்லை!

கொஞ்சி மகிழ்ந்திருந்தான் !-டெல்லிக்

கொலைகாரர் உறவிலே திளைத்திருந்தான்!

ஈழம் எரிகையிலே - மக்கள்

உள்ளங்கள் வெதும்பித் துடிக்கையிலே

ஆளப் பிறந்தமகன் - ஆட்சிக்(கு)

ஆகத் திரிந்தனன் டெல்லியிலே!

தமிழைத் தமிழ்நிலத்தில் - ஆட்சித்

தகுமொழி ஆக்கி நலம்புரியான்

இமயம் குமரியிடை - நடு

ஆள்மொழி கோரிப் பிதற்றுகின்றான்!

ஆக்கச் செயல்விழையான்! - நாளும்

ஆரவா ரக்கூத்தை மறந்தறியான்

மாக்கொலை நினைவழித்தல் - வேண்டி

மாநாடு போட்டுக் கலக்குகிறான்!

போலிக்(கு) இலக்கணமாய்- பல

பொய்கள் பரப்பும் இருள்திரையாய்

வாழ்ந்து நிறைந்துவிட்டான் - வர

லாறுசீர் செய்வார் கடன்பெரிதே!

நன்றி : சமூகநீதி தமிழ்தேசம் .

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

திராவிடர்களிடம் சில கேள்விகள் .....

நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்



எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.

நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.

பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.

(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.

(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.

பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.

தமிழ் வடமொழி
கருங்குழலி கிருஸ்ணவேணி
காரரசி கிருஸ்ணராணி
காரரசன் கிருஸ்ணராசா
பொன்னடியான் கனகதாஸ்

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,

ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.

பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.


CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.

TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.

LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்

DR. LE. DE. FOREST - (FOREST - காடு)
FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923

ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.

COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.

ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.

GARY BECKER - (BECK - மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.

SIR RICHARD STONE - (STONE - கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.

FREDERICK NORTH - (NORTH - வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.

SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820

STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.)

(COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.

DR. LIAM FOX - (FOX - நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.

மேலும் சில பெயர்கள் :-
ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER

பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.

சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.

முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.

பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.

மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.

தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.


இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.

- தமிழ் வளர்ச்சிக் கழகம் -[23 - 06 - 1997]

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள்

August 17, 2010

சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீருமா என்ன? எல்லாம் நடந்து முடியட்டும். நீதி, தர்மம், அறம் இருக்குமாயின்-இறைபரம்பொருள் உள்ளதாயின், இந்த மண்ணில் என்றோ ஒருநாள் தமிழ் மக்கள் உரிமை பெற்று பிரவாகம் அடைவர். அப்போது இதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாமல் போகும்.

அவ்வாறில்லை தமிழ் மக்களாகிய நாம் துன்பத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும் எனில், அது நம் தலைவிதி என்று நினைத்து விட வேண்டியதுதான். இவ்வாறு இருப்பது புத்திசாலித்தனமா? என்று நீங்கள் கேட்டால் மிகப் பெரும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளேயே காட்டிக் கொடுப்போர் இருந்தனர். அதுபோல தற்போதைய தமிழ் அரசியலுக்குள்ளும் எத்தனையோ விதமானவர்கள்.

தமிழினம் அழிவைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை கொள்ளாமல் தங்கள் சுய இலாபத்தை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கொண்டிருக்கும் பிரகிருதிகள்.நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்? ஆகையால் எல்லாம் நம் தலைவிதி என்று நினைப்பதை விட வேறு வழியேதும் இருக்கிறதா? உலக நாடுகள் உதவும் என நினைத்து நினைத்து ஏமாந்து அழிந்து போனதைத் தவிர வேறு எதனைக் கண்டோம்?

ஆக, சொந்தக் காலில் நிற்போம். நாமே எங்கள் சுதந்திரத்திற்கும் பொறுப்பென்பதை உணர்வோம். எனினும் எங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னதாக, தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஒரு கணம் சிந்திப்பதே சாலச் சிறப்புடையதாகும்.

அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும். சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர்.

ஆனால் நாங்களோ! எதுபற்றியும் கவலையற்றவர்களாக, மோட்டார் சைக்கிளில் ஓடுவதும் கையடக்கத் தொலைபேசியில் உரையாடு வதும்…! எப்படி எங்கள் எதிர்காலம் அமையும். அன்புசால் இளைஞர்களே! உங்கள் கைகளில்தான் தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள் ளது. சுவாமி விவேகானந்தர் காட்டிய இளை ஞர்களாக நீங்கள் மாறவேண்டும்.

அரசியலின் வகைமையைத் தீர்மானிக்க வேண்டும். அறிக்கை விடும் கோமாளிகளாக எங்கள் அரசியல் இருப்பதை மாற்றி ஆக்கபூர்வ மான செயற்பாட்டை அமுல்படுத்தும் அரசியல் கலாசாரத்தைத் தமிழனத்தில் உருவாக்க வேண்டும். வாருங்கள் என்னருமை இளைஞர்களே! அகிம்சைப் பாதையில் அறிவெனும் ஆயுதத் தோடு அரசியல் களத்தில் குதியுங்கள் எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள.

யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி
வலம்புரி பத்திரிகையின் தலையங்கம்

குற்றவாளிக்கூண்டில் “கடிதம் கருணாநிதி”, நீண்டுகொண்டிருக்கும் கொலைக்குற்றச்சாட்டு


உலகவரலாற்றில் பழம்பெரும் ஜனநாஜக நாடாகவும், ஆசியாக்கண்டத்தில் முக்கிய நாடாகவும் கண்டறியப்பட்ட இந்தியா. ஈழத்தின் போர்க்குற்றத்திற்கு உடந்தையென்ற அவப்பெயரை சம்பாதித்திருக்கிறது.

குடும்பச்சுயநலவாதி, ஊழல்மூலம் உலகப்பணக்காரனாகிய தமிழ்நாடு முதலமைச்சர் “கடிதம் கருணாநிதி” தலைமையுடன் மற்றும் சில பெருத்த அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் எதேச்சதிகாரப்போக்காலும் ஈழத்தின் போர்க்குற்றத்திற்கு உடந்தையென்ற அவப்பெயர் இந்தியாமீது விழுந்திருக்கிறது,

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம்,”கடிதம் கருணாநிதி” ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி, கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை, தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார்.

இலங்கை அரசால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தில் ஆரம்பந்தொட்டே தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்திவந்த இந்தியா ஒருகட்டத்தில் தான் இலங்கைப்பிரச்சினையிலிருந்து ஒதுங்கிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது,

இருந்தும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இனங்காணப்பட்டபோது அதுபற்றி பல மனிதாபிமானம் கொண்ட இந்திய அரசியல்த்தலைவர்கள் தலையிட்டு பாராளுமன்றிலும் வேறுபல பொதுவான ஊடக அறிக்கைகள் மூலமும் விசாரித்துக்கொண்டபோதும், ஸ்ரீலங்காவில் நடைபெறுவது உள்நாட்டு உரிமைசம்பந்தமான கிளர்ச்சி. அவைகளில் தாம் எந்தச்சந்தர்ப்பத்திலும் தலையிடப்போவதில்லை என்றும். எந்தவிதமான யுத்த உபகரணங்களோ ஆளணி உதவிகளையோ தாம் செய்யமாட்டோம், செய்யவுமில்லை, இருந்தும் அங்கு மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்காக
அரசியல்ரீதியாக பேச்சுவர்த்தைகள் மூலம் படுகொலைகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக பாடுபடப்போகிறோம், என்று உறுதிபடக்கூறியதற்கான ஆதாரங்கள் நிறைய பல அரசியற்தலைவர்களிடம் கடிதங்களாகவும் வேறுபல ஆவணங்களாகவும் இருந்துகொண்டிருக்கிறது,

இந்தநிலையில் 35 வருடங்களுக்கு மேலாக நடந்துவந்த ஈழ ஸ்ரீலங்கா போராட்டத்தில், பணத்திற்காகவோ. அல்லது சிங்கள அரசாங்கத்தின் நட்பை வளர்ப்பதற்காகவோ நயவஞ்சகமாக தமிழ்நாடு முதலமைச்சர் “கடிதம் கருணாநிதியின்” முற்றுமுழுதான ஆதரவைப்பெற்று ஈழத்தமிழ்மக்களை அழித்தொழிப்பதற்காக சர்வ உலகத்தால் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளையும், நச்சுவாயு, சிதறிசின்னாபின்னமாக்கும் க்ளஸ்ரர் எறிகுண்டுகளையும், பாவித்து ஈழத்து தமிழர்கள் இரண்டு இலட்சத்துக்கு மேலானமக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா காரணமாகியிருந்தது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் வேறு நாடுகளின் உதவியோடுதான் இந்தயுத்தத்தை நடத்திக்கொண்டிருப்பதாக ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத்தமிழர்களும் நம்பியிருந்தனர், அந்தநம்பிக்கையை பயன்படுத்தி இந்தியா கோரப்படுகொலைகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்தது,

அந்த நேரத்தில் தமிழகத்தில் வைக்கோ, நெடுமாறன், நாஞ்சில்சம்பத், சீமான் ,போன்ற அரசியல்த்தலைவர்கள் உண்மைகளை அம்பலப்படுத்தியபோது. அவர்கள் மக்களை பிழையாக வழிநடத்துவதற்கு முனைகின்றனர் என்று தேசியப்பாதுகாப்புச்சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திய கருணாநிதி. ஜனநாயகவழியில் போராட்டம் நடத்திய அனைவரையும் சிறையில்த்தள்ளி இரும்ம்பு மனிதனாக நடந்துகொண்டார்.

வீதிக்குவந்து போராடிய வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அடித்து ஒடுக்கப்பட்டனர். உண்ணாவிரதமிருந்த தாய்மார்கள் தூக்கியெறியப்பட்டனர். உச்சக்கட்டமாக வேறுவழியின்றி உயிரை மதிக்காமல் தீக்குளித்து 19 பேர் தெருத்தெருவாக கருகி சாம்பலானபோது அவர்களது தியாகத்தை மிகவும் மலினப்படுத்தி கருணாநிதி கூறியது. குடும்பப்பிரச்சினை காரணமாகவும் குடித்துவிட்டு அரசின் உதவிபெறுவதற்காகவும்தான் அவர்கள் தீக்குளிப்பதாக கொமண்ட் அடித்து கொச்சைப்படுத்தினார்.

இவையெல்லாவற்றிற்கும் தண்டனைபெற்றுத்தரும் முயற்சியாக துரோகிகளை இனங்காணும் களமாக காலக்கட்டாயமாக மலேசிய நாட்டின் பினாங் மானில அரசியற்கட்ட்சித்தலைவர் கல்விமான் துணைமுதலமைச்சர் தமிழுறவு, திரு பழனியப்பன்.ராமசாமி அவர்களெடுத்திருக்கும் முயற்சி ஈழத்தமிழர் வாழ்வில் முளைவிட்டிருக்கும் இன்னொரு விடிவெள்ளியாகும்,

இங்கு பேராசிரியர் அவர்களின் ஒப்புதல் பெற்றபின் அவர்களின் மின்னஞ்சல் முகவரி வெளியிட இருக்கிறோம், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் “கடிதம் கருணாநிதியின்” உண்ணாவிரத நாடகத்தின் பின்வந்த மூன்றுதினங்களிலும் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான இறந்த மக்களின்
விபரங்கள். மற்றும் எல்லாவிபரங்களையும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பின்னர் சிலதினங்களில் அறிவிக்க இருக்கிறோம். தயவுசெய்து தகவல்களை விரைந்து திரட்டுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

துணைமுதல்வர் திரு பி, ராமசாமி அவர்கள் மேலும் தெரிவித்த விடயங்கள்; சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம். போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது.

மேலும் இப்போர்க்குற்றத்தில் “முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்”. ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது.என்றும் குறிப்பிட்டிருக்கிறார்,

அடுத்ததாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஜே ஜெயலலிதா அவர்களும் கருணாநிதியின் குற்றத்தை வழிமொழிந்து குற்றவாளிக்கூண்டில் ஏற்றி விசாரிக்கப்படவேண்டியவர் கருணா என அறிவித்திருக்கிறார், தொடர்ந்து வைகோ, நெடுமாறன் அவர்களும் மிகவும் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர், இந்தச்சந்தற்பத்தை ஈழத்தமிழினம் சரியாகப்பயன்படுத்தவேண்டும், குற்றவாளிகள் பலர் இருந்தாலும் நல்லவன்போல் பாசாங்குசெய்து நாடகத்தின் மேல் நாடகங்கள் தொடர்ந்து நடத்தி கருவறுத்த கருணாநிதியை தப்பிக்கவிட்டால் உலகத்தில் அதைவிடக்கொடுமை வேறு இருக்கமுடியாது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

8 Comments on “குற்றவாளிக்கூண்டில் “கடிதம் கருணாநிதி”, நீண்டுகொண்டிருக்கும் கொலைக்குற்றச்சாட்டு”

  • mortin wrote on 15 August, 2010, 12:51

    காந்தி உண்ணாவிரதம் இருந்து சாப்பிடமாட்டேன் ன்னு அடம் பிடிச்சி சுதந்திரம் வாங்கி குடுத்தாரு…அதுக்கு பேருதான் அகிம்சை அப்பிடித்தான் போராடனும் ன்னு எங்க நாட்டு காங்கிரசு கட்சி சொல்லுது…..உன்னாவிரதமின்னா என்னா ன்னு இந்த நயவஞ்சக காங்கிரசுகாரனுக்கும் உலகத்தமிழ் இனத்தின் துரோகி கருணாநிதிக்கும் எடுத்து சொன்னாலும் எடுபடாது…..யுத்தகளத்தின் இடையில் நடந்த ராஜிவின் தமிழ் இன துரோகத்திற்கு எதிராக எங்கள் திலீபனை உண்ணாவிரதத்தில் உயிரைக்குடித்த போதே கலங்காத சண்டாளர்களை இந்த உலகம் கருவறுத்து காரி உமிழும் நாளும் வேகமா வரணும்.
    அரச பயங்கர வாதிகளை அடியோடு கருவறுத்து.அரசியல் எல்லைகளை கடந்து ஆங்கிலேயர்களை போல இந்த தமிழ் இனம் ஒற்றுமையாய் வாழத்தான் போகிறது

  • rukku wrote on 15 August, 2010, 14:23

    முதலில் கருணியை பிடித்து நலமடிக்கவேணும் அதுக்கிப்பிறகுதான் எண்ணை கிடாரத்திலை இறக்கி கொஞ்சம் கொஞ்சமாக சூடேத்தி கொல்லவேணும்,

  • rukku wrote on 15 August, 2010, 14:34

    மறந்திட்டன் உண்ணாவிரதம் என்று நாடகம் நடத்தின குற்றத்திற்கு தண்டனையாக ஒருமாதத்திற்கு தனிய உப்புத்தண்ணிகுடுத்து கட்டி வைக்க வேணும்,,மனிதச்சங்கிலி நாடகத்துக்கு கறள்பிடிச்ச சங்கிலியால் கோமணம் கட்டவேணும்,, தள்ளுவண்டிலை பறிச்செறிஞ்சுபோட்டு தவண்டு திரிய விடவேணும்,,குண்டியிலை ச்சூட்டுக்கோல் காய்ச்சி குறிசுடவேணும்,,

  • msr.santhanam wrote on 16 August, 2010, 15:12

    great,true.karunaneethiku savu vara mattungathe kadaule.

  • kuruvi wrote on 16 August, 2010, 20:05

    சிவசங்கர் மேனன், நாராயணன் , அந்தோணி ,ஆகிய மலையாளிகளும் பிரணாப் முகர்ஜியும் செர்த்துக்கொள்ளப்படவேண்டிய கொலைக்குற்றவாளிகள் ,முதல் எதிர் கருணா ,சோனியா ,

  • palpandyan wrote on 16 August, 2010, 21:54

    தமிழினதுரோகி கருணாநிதி ஒரு தீயசக்தி இவரை பதவி இறக்கினாள் தமிழனுக்கு நல்லது

  • Anpu wrote on 17 August, 2010, 1:34

    Iyaaa sammiii! kanuuum ennaa! Nadappathai kathaipom, seiya vendiyathai sari vara seivom! Now we’ll help the people who are battered by this bloody ethnic war, then we’ll fight to bring the criminals to justice.

  • kmar wrote on 17 August, 2010, 18:11

    கருணாநிதி காலமாகிவிட்டதாக ஒரு காதுவழிச்செய்தி உண்மையா பொய்யாதெரியவில்லை, கடவுள் கிருபையிருந்தால் உண்மையாக இருக்கும், விட்டுப்பிடிப்பதுதானே கடவுளின் திருவிளையாடலும் ஏதோ ஒரு முன்னோட்டத்தின் பிரதிபலிப்புத்தான் அது என்பதுமட்டும் புரிகிறது, யாராவது செய்தியை உறுதிப்படுத்துவீர்களா,

  • nandri ; nerudal.com