புதன், செப்டம்பர் 29, 2010

புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு


“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.

இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.

இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.

வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?

போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.

தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?

எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!



--
அன்புடன்,
"நான்தமிழன்.திராவிடன்அல்ல.

"தமிழா,
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "

''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்

எழுதுதாள் ஏந்திழை : நோர்வே நக்கீரா


dfem

எங்கோ மூலையில்

ஏனோ தானோ என்று

என்பாட்டில் கிடந்த என்னை

எட்டி எடுத்து

தட்டித் பின் தடவி

மல்லாக்காய் போட்டு

ஏறி நின்று

எழுந்து….

விழுந்து….

கிடந்து….

என்மேல் எழுதினான்

ஒருகவிஞன்
பேனாவின் அழகில்

மயங்கியதாலே

கூரியமுனையால் குத்துப்பட்டேன்.

கீறப்பட்டேன்

பின் கிழிக்கப்பட்டேன்.
என்மேல் கிறுக்கியவனை

விட்டுவிட்டு

என்னைக் கிறுக்கி என்றது

உண்மையற்ற உலகம்.
நீ எழுதி…எழுதி

எழுந்தபோது

கத்திக் கத்தியே

என் காதலைச் சொன்னேன்

வேதனை தாங்காது

அழுது அழுதே சிரித்தேன்
உலகமே உன்கவிதைகளை

வாசித்து வசியப்பட்டு

உன்வசப்படும் போது

பொறாமையில் பொருமுவேன் -நீ

எனக்கு மட்டும் உரியவன் என்று
உன்னைச் சுமப்பதால்

கண்டவன் நிண்டவன்

கைகளில் நான்

விபச்சாரியாக..

விமர்சிக்கப்பட்டேன்
நீ யோசித்ததை

யார் யாரோ வாசித்தனர்

ஆசித்தனர்….

பூசித்தனர்…..

உன்னால் வாசிக்கப்பட்ட

நான் மட்டும்….

தூசிக்கப்படுகிறேன்.

கண்டவன் நிண்டவன்

கைகளில்…..
நீ எழுதிப்போன தாள்

நான் என்பதால்

யாரும் என்மேல் இனி

எழுதப்போவதில்லை.
என் அடிமடியில்

நீ மறைத்து எழுதிய

கையெப்பம் மட்டும்

உன் முகவரி தெரியாது

வளர்கிறது என் வயிற்றில்
உன்னை வெளியுலகிற்கு

வெளிச்சம் போட்டுக் காட்டியவள்

இருளிலல்லவா கிடக்கிறேன்.

கண்ணா!!

விழி மொழியாயோ?

வாழ்வில் ஒளி தருவாயோ?
என்கருவறை சுமக்கும்

உன் கவிதைகளுக்கு

காசுக்களால் காணிக்கை

பணத்தினால் பட்டாபிசேகம்

என்கருவறைக்கு மட்டும்

கண்ணீர்தானா காணிக்கை???

இதுதான் உலகின் வாடிக்கை

பெண்ணாய் போனதால்

எல்லாமே கேளிக்கை…வேடிக்கை!!!


நன்றி : இனிஒரு.காம்

சனி, செப்டம்பர் 25, 2010

கர்நாடகசங்கீதமா? தமிழ் இசையா? : சு.ஸ்ரீகந்தராசா


T.சௌந்தர் எழுதும் தமிழிசைத் தொடரிற்கு வலுச் சேர்க்கும் பல ஆதரங்களைக் உள்ளடக்கிய கட்டுரையை இனியொருவிற்காக எழுதியவர் அவுஸ்திரேலியாவில் வதியும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகின்ற பண்பட்ட மொழி நமது தமிழ் மொழி.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழுத்தமான இலக்கண வரம்புகள் அமைக்கப்பட்டு, நுணுக்கமான இசைக் கோலங்கள் வகுக்கப்பட்டது தமிழ் இசை.

தமிழ்மொழி அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அவையே முத்தமிழ் என்று வழங்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பனவாகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுட்களும் ஆகும். இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் இயற்றமிழ் என்கின்ற பிரிவின் கீழே வருகின்றன. இசைத்தமிழ் எனப்படுவது இசையும் தாளமும் அமைந்த பாடல்களாகும். நாடகத்தமிழ் என்பது நாட்டியம் அல்லது நடிப்பும் பாட்டும் அல்லது நடிப்பும் உரைநடையும்.

முத்தமிழிலும் தித்திக்கும் தேன்பாகாக இனிப்பதும், எத்தமிழையும் அறியாதமக்களின் இதயங்களையும் கவர்ந்திழுப்பதும் இசைத்தமிழாகும்.

தமிழ் இசையின் தொன்மை

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பதால் அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணம் தோன்றியிருக்கமுடியும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்துபோய்விட்டன.

தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப்பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர், முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும,; இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்.

‘அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே’ என்கிறது தொல்காப்பியம். (நூற்பா எண் – 1268)

‘இசைப்பு இசையாகும் என்கிறது’ 793 ஆவது நூற்பா. இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இதன் பொருள்.

அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று 33 ஆவது நூற்பா சொல்கிறது.

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் கருத்து.

சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்கள் அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர்.

திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்

என்கின்ற வெண்பாவின் மூலம், திருமாலைப்பற்றி எட்டுப்பாடல்களும், முருகனைப்பற்றி முப்பத்தியொரு பாடல்களும், காளியைப்பற்றி ஒரு பாடலும், வைகை நதியைப்பற்றி இருபத்தியாறு பாடல்களும், மதுரையைப்பற்றி நான்கு பாடல்களுமாக மொத்தம் எழுபது பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது. எழுபது பாடல்களின் தொகுப்பான பரிபாடலில் இப்போது கிடைக்கப்பெறுபவை இருபத்தியிரண்டு பாடல்கள் மட்டுமேயாகும். ஏனையவை அழிந்துபோய்விட்டன.

பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர்.
பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார் (பாடல்: 12, வரி 40-43)

என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.

மாறுகின்ற பல்வேறு ஒலிகளை உடையது பரங்குன்றம் எனப் பகர்கின்ற பின்வரும் பாடல்களில் இசைதோன்றுவது பற்றியும், குழல் யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து (பாடல்: 17, வரி 9-21)

விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று (பாடல்: , வரி 33-38)

எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண்,விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது.

மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன.

பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச் சொல்லப்படுகிறது. இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.

இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள அற்புதமான நூலாகும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன.

சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல. முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம், மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என அறியக்கிடக்கின்றது.

அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்ந்தவரான அறிவனார் இயற்றிய பஞ்சமரபு இப்போது கிடைக்கப்பெறும் பழந்தமிழ் இசைநூல்களில் ஓன்றாகும்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவரான, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளிலும் பண், குழல், யாழ் என்றெல்லாம் இசைபற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தென்னாட்டு மக்கள் பாடுவதிலும், பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பதிலும், கூத்துக் கலையிலும் மிகவும் திறமையுள்ளவர்கள் என்று நாட்டிய சாஸ்திரம் என்ற தனது நூலிலே பரத முனிவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது தமிழ் இசையைப்பற்றியே என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது தமிழ் இசை என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவருவது தமிழ் இசையே என்பதும் இசை ஆய்வாளர்களது கருத்தாகும்.

பண்டைத் தமிழ் இசை அறிஞர்கள் ஏழுவகை இசைக்குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக் கணக்கான பண்களைக் கண்டுபிடித்தனர். பலநூற்றாண்டுகளாக அவற்றைப் பயன்படுத்திப் பாதுகாத்துவந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும் அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.

அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.

சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.

தௌளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.
தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக்கொண்டருக்கின்றன. இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.

பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப்பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள், நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்
றன.

இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை மூடுகின்றார்கள்.

கர்நாடக இசை என்பது என்ன?

கர்நாடக இசை கர்நாடக இசை என்று எல்லோரும் களிநடம் புர்pகின்றார்கள். கர்நாடக இசையென்றால் அது கன்னட மொழிக்குச் சொந்தமானது என்றும் கர்நாடக நாட்டுக்கு உரியது என்றும் சிலர் நினைக்கிறார்கள். வடமொழியே அதற்கு மூவம் என்று பொய்யான வாதங்களைப் புரிகின்றார்கள்.
தெலுங்கிலே பாடிக்கொண்டு கர்நாடக இசை என்றால் அது தெலுங்கு மொழிக்குச் சொந்தமானதுதான் என்று எண்ணுகின்ற தமிழர்களுக்கோ எண்ணிக்கையில்லை.

உண்மையிலே கர்நாடக இசை என்று இப்போது சொல்லப்படுவது தமிழ் இசையே. அது தமிழ் மொழிக்குச் சொந்தமானது. தமிழ் மொழியிலேயே தோன்றியது.
தமிழ் மொழியிலேயே வேர் ஊன்றியது. தமிழ் மொழியிலேயே தழை விட்டது, இலை விட்டது, கிளை விட்டது. தமிழ் மண்ணிலே பூத்து மணம் பரப்பியது. அந்த மணத்தினால் கவரப்பட்ட வட நாட்டார் மணம்வந்த திசையைப் பார்த்தார்கள். அந்தத் திசையிலே தமக்கு அண்மையில் இருந்தது கர்நாடக தேசம். எனவே கர்நாடக தேசத்திலிருந்தே அது வருவதாக எண்ணி அதனைக் கர்நாடக இசை என்று அழைத்தார்கள். தென்னாடு முழுவதுமே தமிழ்நாடாக இருந்த காலத்திலே செழிப்புற்று இருந்தது தமிழ் இசை. தமிழ்மொழியிலிருந்து கன்னடமும், தெலுங்கும் பிறந்த பின்னரும், தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்த பின்னரும் தமிழ் இசை தழைத்தோங்கி வளர்ந்தது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின. அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும், மணிவாசகரும், பன்னீராழ்வார்களும், அருணகிரிநாதரும் பாடிய பல்லாயிரக்கணக்கான பக்தி இலக்கியங்களிலே தமிழிசையின் புகழ் இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி எல்லை விரிந்து பரவியது.

12ஆம் நூற்றாண்டில் கி.பி. 1116 முதல் 1127 வரை மகாராட்டிர நாட்டினை சோமேஸ்வர புல்லோகமால் என்ற அரசன் ஆட்சிசெய்தான். இசையிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட அவன் ‘மானச உல்லாசம்’ என்ற நூலை எழுதியவன்.

தென்னிந்தியாவில் சிறப்புற்றோங்கிய செந்தமிழ் இசையால் கவரப்பட்ட அவன் அங்கிருந்து இசைவாணர்களை அழைப்பித்து அந்த இசையின்பத்திலே மூழ்கி இன்புற்றான். அவனது நாட்டுக்குத் தெற்குத்திசையிலேயுள்ள தென்னிந்தியாவிலே வளர்ந்து பரவிநின்ற தமிழிசையை, அவனுக்குத் தென்திசையிலே அருகேயிருந்தது கர்நாடகம் என்பதாலும், கர்நாடகத்திலும், தெலுங்கு தேசத்திலும்கூட அக்காலத்தில் தமிழிசையே வழக்கத்தில் இருந்தமையாலும் அந்த இசைக்குக் கர்நாடக இசையென்று பெயரிட்டு அழைத்தான்.

தென்னாடுகளெல்லாம் அந்நாளிலே திகழ்ந்திருந்தது தமிழிசை ஒன்றுதான் என்பது அந்த மன்னனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் கர்நாடக இசையென்று அவன் அழைத்த பெயரோடு, தென்னாட்டு இசை வடநாட்டாருக்கு அறிமுகமானது. கர்நாடக சங்கீதம் என்று வடநாட்டில் விளங்கியது.

கர்நாடக சங்கீதம் என்று அழைக்கப்படும் தமிழிசையானது உண்மையிலேயே வடநாட்டிலேயே தோன்றியிருந்தால், வடமொழிக்கே அது சொந்தமானதாக இருந்திருந்தால் அந்த இசை வடநாடுகளிலல்லவா செழிப்புற்று வளர்ந்திருக்கவேண்டும். அதன் சான்றுகளாக வானுயர்ந்த கோபுரங்களும், அழகிய சிற்பங்களும் வடநாட்டிலல்லவா அமைந்திருக்க வேண்டும். அந்த இசையோடு தொடர்புடைய ஆடற்கலையின் முத்திரைகளைக் காட்டும் அழகிய சிற்பங்கள் வடநாட்டிலல்லவா நிறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லையே. எல்லாமே தமிழ் நாட்டிலும் தமிழ் வாழ்ந்த அண்டை மாநிலங்களிலுமல்லவா தோன்றி, வளர்ந்து, சிறந்து, புகழ்பட ஓங்கியிருக்கின்றன.

தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழவேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள். ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களை தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை, திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களிலே இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது. தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக ஒலிக்கின்றது.
சுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்த இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச் செதுக்கிவைத்துள்ளனர்.

திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும், திருவண்ணாமலை, திருச்செந்துறை, திருவிடைமருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம், சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப்பற்றியும், இசைக் கலைஞர்
களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.

சாரங்கதேவரின் கயமை

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவர் என்பவர் கஸ்மீர நாட்டிலிருந்து தென்னாடு வந்தார். தமிழிசையை ஆராய்ந்தார். ‘சங்கீதரத்னாகரம்’ என்ற நூலை எழுதினார். வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது. தேவாரங்களின் பண்களைப் பற்றியும் அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சாரங்கதேவர் தமிழில் இருந்த ஒலிக்குறியீடுகளுக்கு வடமொழிப் பெயர்களைப் புகுத்தியதோடல்லாமல், அவை வடமொழியிலிருந்தே தமிழுக்கு வந்தன என்ற தவறான கருத்தையும் பொய்யாக விதைத்தார். அக்காலத்தில் அரசியல் மாற்றங்களால் வடமொழியின் செல்வாக்கு தென்னாடெங்கும் வளரத் தொடங்கியது அதனால் இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. வடமொழிப் பெயர்களோடு தமிழிசை கர்நாடக இசையாகத் தமிழ் நாட்டிலும் வழங்கத் தொடங்கியது.

அராகம் என்ற தமிழ்ச் சொல் இராகமாயிற்று.
செம்பாலையை அரிகாம்போதி என்றார்கள்.
படுமலைப்பாலையை நடனபைரவி என்றார்கள்.
கோடிப்பாலையைக் கரகரப்பிரியா என்றார்கள்.
விளரிப்பாலைக்குத் தோடி என்றார்கள்.
செவ்வழிப்பாலை இருமத்திமத் தோடியானது.
முல்லைத் தீம்பாணி மோகனம் ஆனது.
செந்துருத்திக்கு மத்தியமாவதி என்று பெயரிட்டார்கள்.
இந்தளம் என்பதை மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்கள்.
கொன்றையந் தீங்குழலை சுத்தசாவேரி ஆக்கினார்கள்.
ஆம்பலந் தீங்குழலை சுத்த தன்யாசி ஆக்கினார்கள்.
அரும்பாலைக்குச் சங்கராபரணம் என்றார்கள்.
மேற்செம் பாலையைக் கல்யாணி என்றார்கள்.
செவ்வழியை யதுகுலகாம்போதி என்று மாற்றினார்கள்.
புறநீர்மைக்குப் பூபாளம் என்றார்கள்.
தக்கேசிக்குக் காம்போதி என்றார்கள்.

இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றியமைத்துவிட்டு, அதிலிருந்தே இது வந்ததென்று ஆராய்ச்சிக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்துஸ்தானி இசை

கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசை என அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வடஇந்தியாவெங்கும்பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது. பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசை. அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.

14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய ‘சங்கீத சுதாகரம்’ என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன.

கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன.

தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.
ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. திகட்டாத அந்தத் தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டின்புற்று, அப்பரும், சுந்தரரும், ஆளுடைய பிள்ளையும் எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அப்படியே பின்பற்றி, கன்னட நாட்டுப் புரந்தர தாசரும், தெலுங்கு தேசத்து அன்னமாச்சாரியாரும் கீர்த்தனைகளை அமைத்தார்கள். அந்தக் கீர்த்தனைகளை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு தமிழ் வித்துவான்கள் என்று சொல்லப்படுவோர் ஆடுகின்றபோது நமக்கு வேடிக்கையாக இருக்கின்றது.

பதினாறாம் நூற்றாண்டு முதல் தெலுங்குமொழி பேசும் விஜயநகரத்து வேந்தர்கள் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள். தெலுங்குமொழிக்கும் தமிழர்கள் அடிமையாகவேண்டி ஏற்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தியாகையர் என்பவருக்கு நாரதமுனிவர் இசைச்சுவடிகளைக் கொடுத்ததாகவும், அவற்றைக்கொண்டே அவர் தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடியதாகவும் கட்டுக்கதையொன்றும் உள்ளது. நாரதர் கொடுத்த சுவடி எங்கேயும் கிடைக்கப்பெறவில்லை. அதற்கு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. அறிவுக்கு உகந்ததாகவும் அந்தக் கதை இல்லை.

தியாகையரின் காலத்தில் அருணாசலக்கவிராயரின் தமிழிசைப் பாடல்கள் புகழ்பெற்று விளங்கின. அந்தப் பாடல்களை நன்கு அறிந்திருந்த தியாகையர் அவற்றின் அடிப்படையிலே கீர்த்தனைகளைத் தெலுங்கில் எழுதினார் என்பதுதான் அறிஞர் கருத்து.

தியாகையரும், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என் போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள். தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்து கொண்டிருந்தது. தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் அந்த இசை தமிழ் இசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். இசையறிஞர்களே மக்களிடம் அந்தக்கருத்தை விதைத்தனர். செந்தமிழ் இசைக்குக் குந்தகம் செய்தனர். இன்றுவரை அந்தநிலை தொடர்கிறது.

வேற்று மொழிகளிலே பாடுவதில் நமக்கு வெறுப்பு இல்லை. பாடக்கூடாது என்பது நமது கொள்கையுமில்லை. தமிழ்மொழிப் பாடல்களைப் புறக்கணிப்பது தகுமா என்பதுதான் நமது கேள்வி. தமிழில் பாடுவதைத் தமிழர்களே தவிர்க்கிறார்களே என்பதுதான் நமது கவலை.

தமிழ்நாட்டிலே உள்ள திருவையாறு என்றுமிடத்தில் ஓருமுறை தியாகராசர் விழா நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவிலே தண்டபாணி தேசிகர் அவர்கள் ‘தாமரை பூத்த தடாகத்திலே’ என்ற தமிழ்ப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். உடனேயே விழாவுக்கு வந்திருந்த வித்துவான்களும், பாகவதர்களும் வெகுண்டு எழுந்திருக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களைப் பாடியதால் தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டதென்று சீறிப்பாய்ந்திருக்கிறார்கள். தீட்டுக் கழிக்கப்பட்டாலன்றி இனிமேல் அந்த மேடையில் பாடமாட்டோம் என்று வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள். தண்டபாணிதேசிகர் தெலுங்கிலோ, கன்னடத்திலோ பாடியிருந்தால் இந்தக்கண்டனம் எழுந்திருக்காது. இது நடந்தது எங்கே? தெலுங்கு தேசத்திலா? கர்நாடக மாநிலத்திலா? இல்லை. தமிழ் நாட்டில்! எவ்வளவு கொடுமை இது! அந்த அளவுக்கு அந்நியர்களுக்கு தமிழர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். தாங்களும் அடிமையாகித் தமிழ் மொழியையும் அடிமையாக்குகிறார்கள்.

தமிழ் இசையின் பெருமை

இசையை ஏழுவகையாக பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழுவகைகளாகும்.

இத்தகைய ஏழு சுரங்களும் பண்டைத் தமிழகத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழுகுறியீடுகளாலேயே வழங்கப்பட்டிருந்தன.

‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும்
ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்’
என்று பின்கல நிகண்டு நூலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அதை நாம் அறிய முடிகிறது.

காலத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இசைக் குறியீடுகள் சரிகமபதநி என்று மாற்றப்பட்டன. சூழலை அடிப்படையாகக் கொண்டு இசையின் ஒலிக்குறிப்புக்கள் தமிழில் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டன என்பதை,

சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
வரிபந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

என்கின்ற சிகண்டி முனிவரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.
;குரல்;’ என்பது வண்டின் ஓசை அதுவே ‘ச’
‘துத்தம்’ என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே ‘ரி’
‘கைக்கிளை’ என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே ‘க’
‘உழை’ என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே ‘ம’
‘இளி’ என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே ‘ப’
‘விளரி’ என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே ‘த’
‘தாரம்’ என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே ‘நி’
(சூடாமணி 10-37)
‘சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை’ என்று

ஏழுவகைச் சுரங்களையும் எடுத்தியம்புகின்றது சேந்தன் திவாகரம் என்ற செந்தமிழ் நூல்.

சவ்வும் என்றால் ‘ச’, ரிவ்வும் என்றால் ‘ரி’, கவ்வும் என்றால் ‘க’, மவ்வும் என்றால் ‘ம’ பவ்வும் என்றால் ‘ப’, தவ்வும் என்றால் ‘த’, நிவ்வும் என்றால் ‘நி’ (ச ரி க ம ப த நி)

ஒவ்வொரு வகை இசையும் அவை உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன என்பதையும் நுணுகி ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிறார்கள். மிடற்றிலே பிறப்பது குரல், நாவிலே பிறப்பது துத்தம், அண்ணத்திலே கைக்கிளை, சிரசிலே உழை, நெற்றியிலே இளி, நெஞ்சிலே விளறி, மூக்கிலே தாரம் என்றிப்படிப் பிறக்கும் இசையைத்தான் ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள்.

குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம்பிறப்பென்ப

என்று பின்கல நிகண்டு என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

ஏழுவகைத் தமிழ் இசையினை ஒவ்வோர் இசையின் தகுதிக்கேற்பவும் நான்காகப் பாகுபாடு செய்துள்ளார்கள் நமது பண்டைத் தமிழறிஞர்கள். இடம், செய்யுள், குணம், காலம் என்பனவே அந்த நான்கு தகுதிகளாகும். இடம் என்பது நிலத்தைக் குறிப்பது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜவகை நிலங்களுக்கும் உரிய பண்களாக முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி, மருதம், பாலை என்னும் ஜந்து பண்களும் இடத்துக்குரிய பண்கள் (இராகங்கள்) என்று வகுக்கப்பட்டுள்ளன.

செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக்குறிக்கிறது. எந்தெந்த வகைப் பாடலுக்கு எந்தெந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் அமைத்துள்ளார்கள்.

வெண்பாவிற்கு சங்கராபரணம், அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் தோடி, கலிப்பாவிற்கு பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தப்பாவிற்கு கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன, உலாப் பாடலுக்கு சௌட்டிரம், பிள்ளைத்தமிழுக்கு கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்று பல்வகைச் செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்.

இவ்வாறே குணம் பற்றிய இசையும் வகுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக துன்பம் அல்லது தக்கத்திற்கு ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி, புன்னாகவராளி என்னும் பண்கள் உரியவையாகின்றன.இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு உரிய பண்கள் காம்போதி, சாவேரி, தன்னியாசி என்பவையாகும். நாட்டை என்பது போருக்குரிய பண்ணாகும்.

அடுத்ததாகக் காலம் பற்றிய இசை என்பது வௌ;வேறு காலங்களுக்கும் வேளைகளுக்கும உரியதான பண்களைவகுக்கின்றது.

வசந்தகாலத்திற்கு காம்போதி, தன்னியாசி மாலைநேரத்திற்கு கல்யாணி, காபி, காம்போதி, நள்ளிரவுக்கு ஆகரி, அதிகாலையில் இந்தோளம், இராமகலி, நாட்டை, பூபாளம், நண்பகலுக்கு சாரங்கயம், தேசாட்சரி என்று வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முத்தமிழுக்கும் இனிமைசேர்க்கும் இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக் கிறார்கள்.

பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு வகுத்தபொழுது தமிழ் இசைப் பெயர்களே ஒவ்வொரு பண்ணுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டன. அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன. தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன. அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழியிலேயிருந்து தத்து எடுத்துக்கொண்ட இசை நுணுக்கங்களை வைத்துக்கொண்டு வேற்று மொழியினர் இன்று வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அறிந்தவர்களும் அறியாதவர்களுமாக சில தமிழ் இசை வல்லுனர்களும், கலைஞர்களும் அவையெல்லாம் வடமொழியிலிருந்தும், தெலுங்கிலிருந்தும் இறக்குமதியானவை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆலாபனை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடத் தயங்குகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்யவேண்டும்.

(முற்றும்)

நன்றி : இனிஒரு .காம்

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!
ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

Posted Image
பாதிக்கப்பட்டவர்


இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார். இதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம் ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..? (அவர் ஒப்பம் அருகே காட்டப்பட்டள்ளது)

Posted Image
மருத்துவர் ஒப்பம்
அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார். எனக்கும் அந்த ஒலிப் பதிவை இணைக்கத்தான் விருப்பம் ஆனால் அதை கேட்க முடியாது. அவற்றில் சிலதை கத்தரித்து எழுதுகிறேன்.

1) எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.
2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்...

இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோது
“எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.

இதற்கு முடிவென்ன..?
யார் பதில் சொல்லப் போகிறீர்கள்...?
தமிழராகிய எங்களால் இதற்கு என்ன செய்ய முடியும்...?

தயவு செய்து சிந்தியுங்கள். இவர் ஏற்கனவே வன்னிப் போரில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். இவரிடமும் பணம் இல்லை. இராமருக்கு உதவிய அணில் போலாவது ஏதாவது செய்யுங்கள். இந்தத் தகவலை உலகிற்கு சேருங்கள் முடிந்தால் சம்பந்தப்பட்டவருக்குச் சேருங்கள். இது எம் உறவுக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்பதை மறக்க வேண்டாம்.
இதற்கு சகல பதிவர்களும், வாசகர்களும், இணையத்தள உரிமையாளர்களும் ஒத்துழைப்புத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

குறிப்பு - தயவுசெய்து இக்கட்டுரையை யாரும் அசினுக்கெதிராகப் பயன்படுத்த வேண்டாம் இது எம் பிரச்சனை இதற்கு அவர் மட்டும் பொறுப்பாளியல்ல. அதை அசட்டை செய்தால் தான் அவர் மீது குற்றம். முதலில் எம் மலத்தை நாம் கழுவுவோம் பின்னர் அடுத்தவருடையதுக்காய் மூக்கை பொத்துவோம்.

புதன், செப்டம்பர் 22, 2010

யார் தமிழன் ? விசயகாந்துவா.....


எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!!-பாவேந்தர் பாரதிதாசன் .

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”

என்றார்வள்ளுவர். அறிவுசெல்வங்களில் செவியால் வரும் செல்வமே சிறந்த்து என்பது இத்ன் பொருள்.

நல்ல இசை என்பது இலகுவாகச் செவி வழி புகுந்து விடுகிறது.மிகுந்த சிரமத்துடன் தான் நினவிலிருந்து மறைகின்றது” என்றார் தோமஸ் பீக்சாம்.

மெளனம் முழுமையாக சூழ்ந்துவிட்டநிலையில் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை, கருத்துக்களை ஓரளவேனும் வெளிக்காட்டக் கூடிய ஊடகம் இசையாகும்” என்றார் அட்டஸ்

“பாட்டினைப் போல் ஆச்சரியம்

பாரின் மிசை இல்லையடா……

பண்ணை இசைப்பீர்- நெங்சில்

புண்ணை ஒழிப்பீர்” என்றார் பாரதி.

“துன்பகடலை தாண்டும் போது

தோணியாவது கீதம்”… என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்

“கலைகளைச் சுவைக்கும் திறன் வளர கலைகளே உதவிசெய்யும், என்பதற்கு இசையேசிறந்த உதாரணம் ஆகும்”

என்று கார்ல் மார்க்ஸ் கூறிய மேற்கோள்கள் இசையின் சிறப்பை விளக்குகின்றன.

இப்படி இசையின் சிறப்பை நிறையவே மேற்கோள்காட்டிக்கொண்டே போகலாம். தமிழில் இயல், இசை,நாடகம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. முத்தமிழில் இசையும் நாடகமும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்ததெனவும், அதற்கென சிறந்த இலக்கண நூல்கள் இருந்ததெனவும் வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறியக்கூடியதாக உள்ளது.

இலக்கியம் போலல்லாமல் இசையையும்,நாடகத்தையும் பற்றி எழுதப்படவோ, விவாதிக்கப்படவோ இல்லை என்பது தமிழ்ச்சூழலில் வருந்தத்தக்க உண்மையாகும். அதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து பார்ப்பின் இந்த இரண்டு கலை வடிவங்களும் சாதீய அடையாளங்ககளுடன் இனம் காணப்பட்டமையே என்கிற வரலாற்று உண்மை வெளிப்படும்.

இக்கலைகள் படிநிலையில் குறைந்தது என்று சொல்லப்படுகின்ற சாதியினருடன் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. வரலாற்று நிகழ்வுகளூடாக இவை இன்று மேம்பட்ட நிலையில் உள்ளன போன்றதொரு தோற்றத்தைத் தந்தாலும் அதில் ஈடுபடும் கலைஞர்களை “கூத்தாடிகள்” என்றும் “சின்னமேளக்காரிகல்” ஏன்றும் கேவலப்படுத்தும் நிலையும் நிலைகொண்டுள்ளன. இதற்கான அடிப்ப்டைக்காரணம் மேற்கூறிய கலைகள் சாதி அடையாளங்களுடன் காணப்பட்டமையே என்பதை யாரும் மறுக்கமுடியாது.

படிநிலையில் குறைந்த சாதியினருடன் அடையாளப்படுத்தப்பட்டு வந்த இசை இன்று பார்ப்பனர்களின் கைக்கு மாறியவுடன் அதன்அந்தஸ்தும்”உயர்ந்து” விட்டது. அதன் மர்மம் என்ன?

”இசை என்றால் பார்ப்பனர்கள்தானே முதலிடத்தில் இருக்கிறார்கள்! அவர்கள் தான் பெரிய ஜாம்பவான்கள் என்கிற பயம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் பயன்படும் சொற்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பார்ப்பனர்கள் தான் அதனை வளர்த்துள்ளார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளதுடன், அது அவர்களுடையது தான் என பார்ப்பனர்களும் சாதித்து வருகிறார்கள்.

இவ்வாறே அமெரிக்காவிலும் கறுப்பின இசைக்கலைஞர்களால் ரொக் அன்ட் ரோல்(Rock and Roll) என்ற இசை வடிவம் உருவாக்கப்பட்டு பிரபல்யம் பெறுகிறது. இந்த இசை வகையை வெள்ளை இன இசைக்கலைஞர்கள் பின்பற்றி புகழ் அடைகிறார்கள். இன்று அந்த இசையின் முழு உரிமைக்காரர்களாக வெள்ளையர்களே திகழ்கிறார்கள். அது கறுப்பின மக்களால் தோற்றுவிக்கப்பட்ட இசை என்பது மறைக்கப்பட்டுவிட்டது . அதே போல் தான் ராப் (RAP) என்ற இசை வடிவமும் வெள்ளைன ஆதிக்கத்திற்குற்பட்டு வருகின்றது.

ஆனால் தமிழ் நாட்டில் இசை சாதிய அடையாளங்களுடனேயே 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது அல்லது இசை மரபுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது வரலாறு தருகின்ற பாடமாக உள்ளது. வரலாற்றில் மிகப் பிந்திய காலத்திலேயே பார்ப்பனர்கள் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள். இந்த ஆதிக்கநிலையில் இருந்தே அவர்கள் ஏனைய கலை வடிவங்களை எல்லாம் மட்டம்தட்டியும் வருகின்றார்கள்.

உயர்ந்த கலை அல்லது செம்மைப்ப்டுத்தப்பட்டகலை (Classical Art)என்ற நிலையில் இருந்து ஓவியம்,சிற்பம், நாடகம் போன்ற கலைகள் நாட்டார் கலைகளின் பண்புகளை உள்வாங்கி புதிய பரிமாணங்களை பெற்று நவீன கலைகளாக(Modern Art) வளர்ந்து இன்று உலகலாவியரீதியில் பிரசித்தம் பெற்றுள்ளன. உலக அளவில் இதன் முன்னோடியாக ஓவியர் பிக்காசோவைக் குறிப்படலாம்.

நவீன ஓவியத்தை உலக அளவில் எடுத்துச் சென்று சாதனை படைத்த அவர் “அந்த நவீனத்தின் ஊற்றுக்கண் ஆபிரிக்கநாட்டு கிராமிய சிற்பங்களே” என்றார். பிக்காசோவின் பாதிப்பே தமிழ்நாட்டிலும் பல ஓவியர்களை நாட்டார் கலைகளின் மீது ஆர்வம் கொள்ள வைத்தது எனலாம்.

அதே போல் மேற்கத்திய நாடுகளில் உயர்ந்த இசைமேதைகள் என போற்றப்படுகின்ற ஜோன் ஸ்ராவ்ஸ்( John Strauss) , ஜோகனஸ் ப்ராம்ஸ்(Johhanes Brahms) போன்றோர் நாட்டுப்புற இசையை தமது சிம்போனிகளில் பயன்படுத்தி புதுமை செய்தார்கள்.

தமிழில் தீண்டத்தகாத இசையாக இருந்த நாட்டுப்புற இசையை சினிமாவில் பயன்படுத்தி புகழ்பெறுகிறார் இளையராஜா. நாட்டுப்புற இசைக்கும் புது மவுசை ஏற்படுத்துகிறார். இசையில் புதிய ரசனை மாற்றத்தை அவரது இசை ஏற்படுத்துகிறது.

பார்ப்பணர்கள் இசை பற்றி தகவமைத்த மாயைகளை எல்லாம் இளையராஜா நடுத்தெருவில் போட்டு உடைத்தார் ராஜா. இளைராஜாவுக்கு முன்பிருந்த பெரும்பாலான சினிமா இசையமைப்பாளர்கள் எல்லாம் கர்நாடக இசை கலைஞர்களால் இரண்டாம், மூன்றாம் தர கலைஞர்களாக நடாத்தப்பட்டார்கள்.

சினிமா இசை அமைப்பாளர்களும் தொந்தரவு இல்லாத அவர்களுக்கு பணிந்து போகும் ஒரு போக்கே கடைபிடித்து வந்தார்கள். இவ்வாறு எந்தெந்த வழிகளில் தமக்கு எதிர்ப்பு வரும்போது மட்டம் தட்டியே வந்திருக்கிறார்கள்.

”கர்நாடக இசை என்றால் அது தெலுங்கிலோ அல்லது சமஸ்கிருதத்திலோதான் இருக்க வேண்டும் இவ்விரு மொழிகளிலும் பாடினால்தான் கர்நாடக சங்கீதத்தின் தரம் உயரும், அது உன்னத நிலை எய்தும்” என்பது பார்ப்பண சங்கீத வித்துவான்கள் தோற்றுவித்துள்ள ஒரு மாயை ஆகும்.

இந்தியாவில்-தமிழ்நாட்டில்-பார்ப்பணர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் அதிகாரம் ,ஆட்சிப்பலம், மேலாதிக்கம் என்பன இந்த மாயைக்கு எதிராக எழுந்த குரல்களை எல்லாம் நசுக்க வாய்ப்பளித்தன. இவர்கள் தமிழிசையை அற்பமானதென்று ஒதுக்கியும், புறக்கணித்தும், நிராகரித்துமே வந்தார்கள். அவர்களுக்கு தமிழிசை என்பது தீண்டத்தகாத ஒன்றாகவே இருந்து வந்தது.

எனினும் இந்த எண்ணங்களுக்கு எதிரான வலுவான ஒரு கருத்துப் போராட்டத்தை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து வைத்தவர் தஞ்சை திரு.ஆப்ரகாம் பண்டிதர் தான். இவர் “கர்நாடக இசையின் மூலாதாரம் த்மிழிசையே” என்பதற்கு ஆணித்தரமான நியாயங்களை ஏராளமான ஆதாரங்களோடு முன்வைத்தார். ஆற்றல் படைத்த பல இசை அறிஞர்களையும் வித்துவான்களையும், இசை ஆர்வாலார்களையும் வித்துவான்களையும், இசை ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து தமது சொந்தச் செலவிலேயே ஏழு இசை மாநாடுகளை தமது சொந்தச் செலவிலேயே நடத்தினார்.

அவ்வாறு நடைபெற்ற மாநாடுகளின் பலனாக இசையுலகில் நடந்த தில்லுமுல்லுகளும், இருட்டடிப்புகளும், திட்டமிட்டுச் செய்த சதிகளும் அம்பலத்திற்கு வந்தன.

இவ்வாறான வரலாற்றுச் சான்றுகளை விலாவாரியாகத் தரும் அரிய நூலே “கர்ணாமிர்த சாகரம்” என்னும் வரலாற்று இசை நூலாகும். இந்த நூல் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. இதற்கென புதிய அச்சுச் சாதனங்களை இங்கிலாந்திலிருந்து தருவித்து அச்சகம் ஒன்றையும் உருவாக்கிய ஆபிரகாம் பண்டிதரே பெரு முயற்சியெடுத்து அதனை வெளியிட்டார்.

இந்திய இசையின் சுருதிகள் பற்றி ஆய்வு நடத்திய பண்டிதர், சமஸ்கிருத நூல்களில் சொல்லப்படுவது போல் சுருதிகள் இருபத்தி இரண்டு அல்ல என்றும் இருபத்தி நான்கு சுருதிகளே சரியானவை என்று விளக்கியதோடு, பாடிக்காட்டியும் நிரூபித்தார். தமிழிசையே கர்னாடக இசை என அவர் நிறுவியபோது, பார்ப்பன இசை அறிஞர்களும் ஒப்புக்கொள்ள நேர்ந்தது. பரோடாவில் நிகழ்ந்த இசை அறிஞர்கள் மாநாட்டில் சுருதி குறித்து நடந்த இசைத்துறை ஆய்வுகள் ஆரிய திராவிடப் போராட்டம் என்ற அளவிற்குச் சென்றது.

சுரங்கள் நுட்பமாகப் பிரிக்கப்படும் போது அவை “சுருதிகள்” என்று அழைக்கப்படுகின்றன. தொன்மைக் காலத்தில் அவை “அலகுகள்” என்றும், ”மாத்திரைகள்” என்றும் அழைக்கப்பட்டன. பண்டைய தமிழ் ராகங்கள் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்ட உண்மை அம்பலமானது.

தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர்
செம்பாலைப்பண் -சங்கராபரணம்
படுமலைப்பண் -கரஹரப்பிர்யா
அரும்பாலைப்பண் -கல்யாணி
கோடிம்பாலைப்பண் -கரிஹாம்போதி
விளரிப்பாலைபண் -நடனபைரவி
செவ்வழிப்பண் -தோடி
மேற்செம்பாலைப்பண் -சுத்ததோடி

இங்கே பண் என்பது தமிழிசை ராகத்தையே குறிக்கும். இது மட்டுமா?…

இன்னும் தொடரும்....

நன்றி: இனிஒரு.காம்

வெள்ளி, செப்டம்பர் 17, 2010

தமிழராய் வாழ்வோம் !

வணக்கம் நண்பர்களே,

இன்று ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். நெருப்புநரி (FireFox) எனும் இணைய உலாவியை என் கணிணியில் நிறுவலாம் எனக்கருதி பதிவிறக்கம் செய்யச் சென்றேன். இந்த உலாவி பல மொழிகளில் (மொத்தம் 70) கிடைக்கிறது. அதிலே வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சிங்களம், தெலுங்கு போன்ற மொழிகளும் உள்ளன. தமிழ் மொழியைவிட பல கோணங்களில் பின்தங்கிய மொழிகளெல்லாம் உள்ள போதும் தமிழில் மட்டும் இல்லை.



இதெல்லாம் ஒரு பெரிய விடயம் இல்லை என்றாலும், இது தமிழை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உங்களைப் போலவே நானும் கருதினாலும், ஏன் இப்படி என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.
நான் இந்த நிறுவனத்தை குறைகூறும் நோக்கில் கூறவில்லை. வேறு எங்கோ தவறு நடக்கிறது. அதன் மூலம் நாமாகவே இருப்போம் எனக்கருதுகிறேன். எங்கே தவறு நக்கிறது என்று நாம் முதலில் உணர வேண்டும்.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பும் நண்பர் ஒருவர் மூலம் கீழுள்ள இணைய தளத்தைக் காண நேர்ந்தது.
இந்த கூகிள் பக்கம் மொழிபெர்யப்பு செய்ய உதவும் என்றாலும், தமிழை பயன்படுத்த இயலாது. இங்கும் பல சிறிய மொழிகள் உள்ள போதும் தமிழில்லை.

தமிழ் மொழியைப்பற்றியும், தமிழர்கள் 12 கோடிபேர் உள்ளதையும் இந்நிறுவனத்தார் அறிந்திருக்கவில்லையா? இல்லை அறிந்திருந்தும் ஒரு பொருட்டாகவே கருதவில்லையா?
அல்லது தமிழர்கள் தமிழில் இந்த தளங்கள் வெளிவரத் தேவையான மொழி உதவியை நல்காததா? இல்லை உதவ முன்வந்தும் ஏற்றுக்கொள்ளவில்லையா?
அல்லது தமிழர்கள் அதிகம் இதை (தமிழில் உலாவி, மொழிபெயப்புத் தளம்) விரும்ப மாட்டார்கள் என்று அந்த நிறுவனங்கள் கருதியதாலா? இல்லை பயன்படுத்துவார்கள் என்று அறிந்தும் வென்றும் என்றே புறக்கணித்துள்ளனவா?

இப்படிப்பல வினாக்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. சரி இனி இது போல் ஏதும் தவறு நிகழாமல் இருக்க, இதை நிவர்த்திசெய்ய, தமிழ்மொழி அறிவியல் தளங்களில் அந்நியப்பட்டுப் போகலாம் இருக்க என்ன செய்யாலாம்.

இந்த நிறுவனங்களிடம் சென்று பேசலாம், தமிழில் வராததன் கரணியம் கேட்டறிந்து வெளிவர வகை செய்யாலாம் என்றாலும், அதுவல்ல தீர்வு. அது நோயைத் தீர்க்காது, அந்த நோயின் அறிகுறியை மட்டும் மூடி மறைப்பதற்கு இணையானது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மேற்கூறிய வள்ளுவனின் கூற்றுக்கிணங்க, இந்த நோயின் மூலத்தை அறிந்து அதை நீக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரையில், இந்த நோயின் மூலம், தமிழர்களாகிய நாமே. ஒவ்வொரு தமிழனும் தன் தாய் மொழியில் படிப்பதில் துவங்கி, தமிழில் எழுதுவது, தமிழிலேயே பேசுவது, சமூக-அரசியல்-வழிபாட்டுத்தலங்களில் தமிழைப் பயன்படுத்துவது, குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுதல், வீட்டு விழாக்களை தமிழ் மரபுப்படி நடத்துதல் என தமிழ் நாட்டை 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என பேச்சளவில் இல்லாமல், செயலில் காட்டுவது அவசிய அவசர தேவையாகிறது.

இங்கு கூறிய எதுவுவே சாத்தியமற்ற ஒன்றல்ல. நம்முடைய வாழ்வியல் முறையில் சிறிய மாற்றங்களை கொண்டுவந்தாலே, நெறிமுறையோடு சிந்தித்துச் செயல்படத் துவங்கினாலே போதும்.

பலர் நினைப்பதைப்போல - தமிழை நிலைநிறுத்த, அறிவியல்-உலகமய உலகோடு போட்டியிட, செர்மனியர்களைப் போல நாம் பொருளாதார விடுதலைப் பெற்றிருக்க வேண்டும், அறிவியலில் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும், இதெல்லாம் நடைபெற, முதலில் அரசியல் விடுதலை பெற்று, நமக்கான ஒரு அரசு அமைக்க வேண்டும்.
இந்த கூற்றையெல்லாம் நானும் ஆதரிக்கிறேன். இதெல்லாம் நிறைவடையும் நாள் தான் என்கனவு நாள். இது சாத்தியம் என உறுதியாக நம்புகிறேன். அதற்காக எங்கு-எந்நிலையில் இருந்தாலும்,என்வாழ்நாள் முழுதும் என்னாலானதை செய்யேன் என உறுதிபூண்டு இருந்தாலும், நான் முதலில் கூறிய, வாழ்வியல் முறையில் மாற்றங்களை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை, நம் மனதைத்தவிற.

தமிழர்கள் நாம், தமிழராய் வாழ முன்வருவோமா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !

--
தமிழன்புடன்,
மறத்தமிழன்
"வலுத்தவன் வாழ்வான் - வேலுப்பிள்ளை பிரபாகரன்"
அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம்...




--
-- பாக்கியராசன் சே..

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

தமிழோசை கவிதைகள் ......


''தேமதுரத் தமிழோசை''


மதுரையிலிருந்து வெளிவரும் ''தேமதுரத் தமிழோசை'' திங்களிதழை தமிழர்களாகிய நாம் அவசியம் படித்து தமிழ் பற்று பெற வேண்டுகிறோம் .
திரு தமிழாலயன் அய்யா நடத்திவரும் இந்த இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராகி அவரின் தமிழ்பணி சிறக்க செய்வோம் .
மா.முருகானந்தம் (கருவைமுருகு)
தமிழர் களம் , கருவூர். 9843955627

வியாழன், செப்டம்பர் 16, 2010

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் : (பாகம்-1) - நிராஜ் டேவிட்


[ செவ்வாய்க்கிழமை, 14 செப்ரெம்பர் 2010, 08:31.54 AM GMT +05:30 ]

சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் தேசத்திற்கு நான் மேற்கொண்டிருந்த ஒரு பயணமானது, எனது வாழ்க்கையிலும், எனது எண்ண ஓட்டங்களிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

குறிப்பாக கடந்த 2009 மே 18ம் திகதிக்குப் பின்னர் உளரீதியாக உற்சாகம் இழந்து சோர்விலும், ஏமாற்றத்திலும், இயலாமையிலும், ஆதங்கத்திலும் துவண்டுபோயிருந்த நான் புத்துயிர்பெற்று, புது மனிதனாக என்னை உருவாக்கிக்கொண்ட ஒரு விடயமாக இஸ்ரேல் தேசத்தையும், அங்கு நான் பெற்ற அனுபவங்களையும் கூறலாம்.

சுமார் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அடிமைகளாக வாழ்ந்து, உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டு, மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு, பலம் பொருந்திய நாடுகளினாலெல்லாம் அழிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் எப்படி மீண்டும் தங்களைக் கட்டியெழுப்பிக்கொண்டு, தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்கின்ற சரித்திரங்கள் உண்மையிலேயே ஒவ்வொரு ஈழத் தமிழனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உண்மைகள்.

ஒரு தேசத்தினது அல்லது இனத்தினது விடுதலை என்பது சில வருடப் போராட்டத்தையோ அல்லது சில சம்பவங்களையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தேசத்தின் விடுதலை என்பது பல தசாப்தங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட பயணம்.

இஸ்ரேலியர்களுடைய அந்த விடுதலையின் பயணம் பல நூற்றாண்டுகளைக் கொண்டது. எம்மைப் போல் நூற்றுக்கணக்கான முள்ளிவாய்க்கால்களைக் கண்டுதான் அவர்களுக்கான விடிவு தற்பொழுது அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

இன்று உலகின் போக்கையும், உலக ஒழுங்கையும் மாற்றிவிடக்கூடியதான வல்லமையை இஸ்ரேல் என்கின்ற சிறிய நாடு பெற்றிருக்கின்றதென்றால், அதன் பின்னணியில் நீண்டகாலமாக இஸ்ரேலியர்களுக்கு இருந்த நம்பிக்கை, வைராக்கியம், கடின உழைப்பு, இழப்புக்களைத் தாங்கிக்கொள்ளும் பலம், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீரம், ஒற்றுமை - என்று பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.

இஸ்ரேல் என்கின்ற தேசம் எப்படி உருவானது?

பாபிலோனியர்களாலும், எகிப்தியராலும், ரோமர்களாலும், பிரித்தானியராலும், பேர்சியர்களாலும், கிரேக்கர்களாலும் இன்னும் பல இனக் குழுமங்களினாலும்; அடிமைகளாக்கப்பட்டு பலநூறு ஆண்டுகள் நாடற்றவர்களாக, அகதிகளாக, வேண்டப்படாதவர்களாக வாழ்ந்துவந்த யூதர்களால் எவ்வாறு தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது?

அகதிகளாக அவர்கள் சிதறி வாழ்ந்த தேசங்களில், அடிமைகளாக அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த தேசங்களில் எப்படி அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது?
தங்களுக்கென்று ஒரு நாடு அமையவேண்டும் என்ற நம்பிக்கையிலும் வைராக்கியத்திலும் எப்படி யூதர்களால் நீண்டகாலம் வாழ முடிந்தது?

இந்த விடயங்களைத்தான் இந்த கட்டுரைத் தொடரில் நாம் விரிவாக ஆராயப் போகின்றோம்.

இஸ்ரேல் தேசத்திடம் இருந்து ஈழ தேசம் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள், படிப்பினைகள் என்று ஏராளம் இருக்கின்றன.

அவற்றைத்தான் இந்த தொடரில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று என்னைப் போலவே துவண்டுபோயுள்ள பல ஈழத்தமிழ் உள்ளங்களுக்கு, இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம் தொடர்பான அறிவு என்பது நிச்சயம் ஒரு பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

நாங்கள் வீழவில்லை என்பதையும், நாங்கள் வீழமாட்டோம் என்பதையும், நாங்கள் தோற்கவில்லை என்பதையும், எழுந்துநிற்க எங்களாலும் முடியும் என்பதையும் இஸ்ரேலின் மண்ணில் நான் நின்ற ஒவ்வொரு கணமும் உளமாற உணர்ந்தேன்.

எனது மனதில் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்த எனது அனுபவங்களைத்தான் இந்த தொடரின் ஊடாக உங்களுடனும் நான் பகிர்ந்துகொள்ள முனைகின்றேன்.

இன்று மிகவும் நொந்துபோன நிலையில் இருக்கின்ற ஈழத் தமிழரை நம்பிவந்த நாடுகள் கைவிட்டுவிட்டதாக நாங்கள் கவலை அடைகின்றோம் அல்லவா? இந்தியாவிலும், நெதர்லாந்திலும், பிரான்சிலும், மலேசியாவிலும், கனடாவிலும் அங்காங்கு ஈழத் தமிழர் ஓரிருவர் கைது செய்யப்பட்டால் அல்லது நாடு கடத்தப்பட்டால் உடனடியாகவே நாங்கள் துவண்டு போய்விடுகிறோம் அல்லவா?

இஸ்ரேலிய மக்களுடைய சரித்திரத்தை ஆராய்கின்ற பொழுது அவர்களை வஞ்சிக்காத தேசங்களே உலகில் இல்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவர்கள் உலகின் பல நாடுகளினாலும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள்.

இன்று ஐரோப்பா எங்களை கைவிட்டுவிட்டதாக நாங்கள் கவலை அடைகின்றோம். இதே ஐரோப்பா இஸ்ரேலியர்களை முன்னர் எப்படி நடாத்தியது தெரியுமா?

கி.பி. 1200ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த யூதர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்த அரசாட்சி உத்தரவிட்டது.

கி.பி. 1306ம் ஆண்டு பிரான்ஸில் வாழ்ந்து வந்த யூதர்களை அந்த அரசு நாடு கடத்தியிருந்தது.

கி.பி. 1355ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் டோலியோ நகரில் வாழ்ந்துவந்த 12,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்

கி.பி. 1346ம் ஆண்டு முதல் 1360; ஆண்டு வரையிலான காலப்பகுகளில் கங்கேரியில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1390ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் வசித்துவந்த யூதர்கள் கட்டாயமாக கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

மதம் மாற மறுத்த 180,000 யூதர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

1495ம் ஆண்டு லிதுவேனியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1502ம் ஆண்டு லிதுவேனியாவின் ரோட்ஸ் என்ற நகரில் வாழ்ந்துவந்த பல யூதர்கள் மதம் மாற்றப்பட்டார்கள், அல்லது அடிமைகளாக விற்கப்பட்டார்கள் அல்லது அங்கிருந்து துரத்தப்பட்டார்கள்.

1541ம் ஆண்டு நேப்பிள்ஸில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

1648ம் ஆண்டு முதல் 1656 ம் ஆண்டுவரை போலந்து நாட்டில் இருந்த யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1717 முதல் 1747 வரையிலான காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தும் யூதர்கள் அதன் ஆட்சியால் வெளியேற்றப்பட்டார்கள்.

1940களில் ஜேர்மனி, ஒஸ்ரியா, ஒல்லாந்து, கங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த சுமார் 60 இலட்சம் யூதர்கள் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதுபோன்ற பல கொடுமைகள், இனப்படுகொலைகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை என்பனவற்றைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி விடுதலை பெற முடிந்தது? எப்படி அவர்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்தது?

இந்த விடயங்கள் பற்றிய அறிவை நாம் கொண்டிருப்பது, விடுதலை வேண்டிய ஒரு இனத்தின் பயணத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்றே நான் நினைக்கின்றேன்.

அடுத்த வாரம் முதல் இந்த விடயங்களை நாம் விரிவாகப் பார்ப்போம்.

நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

தமிழர் என்ற அடையாளத்தை உலகத் தமிழர்கள் [^] இழந்து வருகிறார்கள்-மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன்

மதுரை: தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியின் மாண்பையும் இழந்து வருகிறார்கள் என்று மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தெரிவி்த்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.

போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள்
என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம்.

ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள்.

சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள்.

தற்போது உலகம் [^] முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியி்ன் மாண்பையும் படிப்படியாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் நீதிவாணன்.
nandri : thatstamil.com

நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா?

அன்பான முதல்வர் அவர்களுக்கு...

வணக்கமுங்க.

தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.

பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத நெனைக்கும்போது கஷ்டமாயிருந்தாலும், ஊரையே நாம ஒதுக்கிவச்சிட்டதா நெனைச்சி ஆறுதல் பட்டுக்கிறோமுங்க.வேறென்ன பண்ணமுடியும்.

இந்த வேதனை ஒரு பக்கம் உள்ளுக்குள்ள அரிச்சிகிட்டே இருந்தாலும்,ஆதிமனுசனின் கலையை..ஒரு பாரம்பரியக் கலையை இன்னும்விடாம வச்சிருக்கோம்கிறத நெனைச்சா பெருமையாவும் இருக்குதுங்க.அந்த சந்தோசத்துல ரெண்டு அடி ஓங்கி அடிப்பேங்க.

நாங்கல்லாம் தாழ்ந்த சாதிங்களாம்.நான் மட்டும் இல்லீங்க, எங்கள மாதிரி இருக்குற நாட்டுப்புறக் கலைஞருங்க எல்லாருமே பெரும்பாலும் தாழ்ந்தசாதிதான்னு சொல்றாங்க.அதுக்கேத்தமாதிரி நாங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரியிலதான் வசிக்கிறோங்க.நாங்களா விரும்பி அங்க வசிக்கலைங்க. அதுதான் ஒங்க இடமுன்னு ..அந்தசேரியதான் எங்களுக்குன்னு ஒதுக்கி குடுத்திருக்காங்க.நாங்களும் காலங்காலமா சரிங்க சாமீன்னுட்டு அங்கயே இருந்துட்டுவர்றோம். எங்களமாதியான பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்களூம் சேரியிலதான் வசிக்கறாங்களாம்.மோளம் வாசிக்கறவங்க..கொட்டு அடிக்கறவங்க..கரகம் ஆடறவங்க...கூத்து ஆடறவங்க.....புலியாட்டம்..மயிலாட்டம்..
ஒயிலாட்டம்..காளயாட்டம்..அப்படீன்னு இருக்குற எங்கள மாதிரியான கலைஞர்களுக்கு பெருசா அப்படி ஒண்ணும் மரியாதை கிடையாதுங்க. தம்மாத்துண்டு இருக்குற சின்னப்பசங்ககூட எங்கள வாடா..போடான்னு மரியாதையில்லாமத்தான் கூப்புடுவானுங்க.தொழிலுக்குப் போற எடத்துல தன்ணிஅடிச்சிட்டுவந்து அட்றா..அட்ற்றான்னு ஆட்டம்போடுவானுங்க.மோளத்த தூக்கிப்போட்டு ஒடைப்பானுங்க.ஆனா இதையெல்லாம் நாங்க கண்டுக்கறது இல்லீங்க.மக்கள சந்தோசப்படுத்தறப்போ இதுமாதிரி சங்கடம்லாம் இருக்கும்தான்னு சிரிச்சிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சிடுவோம். வேற என்ன பண்ணமுடியும்.

எங்களுக்கு வருசம்பூரா பெருசா ஒன்னும் வேலைஇருக்காதுங்க.எப்பயாவது சாவு வுழுந்தா வேலை வரும்...கோயிலு திருவிழா வந்தா வேலைவரும். மத்தபடி கட்சி ஊர்வம்,மீட்டிங்க்குக்கு கூப்புட்டாங்கன்னா போவோம்.மீதிநாள்ல அத்துக்கூலி வேலைதான்.ஒழவுக்கூலிக்கு போவோம்..செருப்பு தைக்கிறோம்..மாடு அறுக்குறோம்..எதையாவது செய்ஞ்சி வயித்தக்கழுவவேண்டியிருக்கு.

இப்பதான் கொஞ்சநாளா எங்களயும் திரும்பிபாக்க ஆரம்பிச்சிருக்காங்க. வெளியூருங்கள்ல இருந்தெல்லாம் கூப்டறாங்க. நாங்களும் போயிட்டு வர்றோம். ரெண்டு,மூணு வருசமா ஒங்க பொண்ணு கனிமொயி எங்கள சென்னைக்கு கூப்டு ஆட வச்சாங்க.பார்க்கு..பீச்சீ...ன்னு பல இடங்கள்ல ஆடுனோம். கொஞ்சம் காசும் குடுத்தாங்க.ஏதோ எங்கள கவுரவிக்கிற மாதிரி இருந்துச்சி. நீங்ககூட எங்க ஆட்டத்தப்பாத்து நல்லாயிருக்குன்னு சொன்னீங்க.எங்களுக்குன்னு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்னு கூட ஆரம்பிச்சீங்க.அடையாளஅட்டைக்கூட குடுத்தீங்க.ஆனா நலஉதவிதான் இன்னும் குடுக்கல.கோயம்புத்தூர்ல நடந்த செம்மொயி மாநாட்டுக்குக்குகூட மோளம் அடிக்க கூப்டாங்க.போய்ட்டுவந்தோம்.பத்துமைலு தூரம் அடிச்சிக்கினே..ஆடிக்குனே வந்தோம்.அப்ப ஒங்களப் பாத்து கையக்கூட ஆட்டுனேன். நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல.இன்னாடா..இம்மாம் விளக்கமா எழுதறான்னு நெனைக்கறீகளா..இம்மாம்நேரம் சொன்னதுல ஒன்ண நீங்க கவனீச்சீங்களா அய்யா..இந்த நிகழ்ச்சி எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் நடத்தியிருக்கோம். ஒன்ணக்கூட மேடையிலயோ...பெரீய்ய மண்டபத்துலயோ நடத்தல. ஆனா இதே நிகழ்ச்சியில கலந்துகிட்ட மத்தவங்கள்லாம்..அதாங்க...இந்த வீணை வாசிக்கறவங்க...டொய்ங்...டொய்ங்..ன்னு வயலின் வாசிக்கறவங்க...சங்கீதம் பாடறவங்க...கர்னாடக பாட்டு பாடறவங்க..பரதனாட்டியம் ஆடறவங்க..இவங்கெல்லாம் பெரியபெரிய மேடையிலதான் வாசிச்சாங்க.ஒருத்தருகூட தெருவுக்கு வந்து பாடல...ஆடல...இது ஏன்னு எனக்கு புரியல. எங்கூட இருந்தவங்ககிட்ட இதப்பத்திக் கேட்டேன். அப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது..அவங்கள்லாம் ரொம்ப பெரியவங்க..ன்னு சொன்னாங்க. நானும் சரிதான்னுட்டு கம்முனு போய்டுவேங்க. ஆனா ஒரு கேள்வி மட்டும் எனக்குள்ளயே கேட்டுக்குவேன்..”நமக்கு மட்டும் எப்பவும் தெருவுதானா...”என்ற கேள்விதாங்க அது.

தெருவுல ஆடறது ஒண்ணும் கேவலமில்லீங்க. நாங்க அதை கேவலமா நெனைக்கலீங்க.தெருவுலதான் பொறந்தோம்..தெருவுலதான் வாழறோம்...அங்கயே சாவறோம்..ஆனா..நாங்க மட்டும் எப்பவும் தெருவுலதான் ஆடணுமாங்கற கேள்விதான் என்ன துரத்திக்கிட்டேயிருக்கு. அந்தக் கேள்வி இப்ப எனக்கு மறுபடியும் வந்துடிச்சிங்க.அதுவும் நீங்க வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பாலதான், அந்த கேள்வி மறுபடியும் வந்துடுச்சிங்க.


அதுத்த மாசம் ரெண்டு நாளு தஞ்சாவூர்ல நீங்க விழா நடத்தப் போறீங்களாமே..ராஜராஜசோழன் கட்டுன பெரியகோயிலு ஆயிரமாவது ஆண்டுவிழாவ கொண்டாடப் போறீங்களாமே.அந்தவிழாவுல எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடக்கும்னு நீங்க அறிவிச்சதுல இருந்துதாங்க அந்தக் கேள்வி மறுபடியும் கெளம்பிடுச்சி.எங்களுக்கு வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா.. இப்பவும் முதல்நாள் நிகழ்ச்சியில...காலையிலயிருந்து தஞ்சாவூர்ல தெருவோரங்கள்ல நாங்க நிகழ்ச்சி நடத்துவோம்னு அறிவிச்சிருக்கீங்க.அதேசமயம்,அன்னிக்கி சாயங்காலம் பெரியகோயில் உள்ளாற பத்மா சுப்ரமணியம் தலைமையில ஆயிரம் பேரு பரதநாட்டியம் நடத்துவாங்கன்னும் அறிவிச்சிருக்கீங்க.இது என்னங்க நியாயம். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தெருவு..பரதனாட்டியத்துக்கு கோயிலு.. கலைகள்னா எல்லாக்கலைகளுமே ஒண்ணுதானுங்க...எந்தக் கலைஞனுக்கும் உழைப்பு ஒன்னுதானுங்க..வியர்வை ஒண்ணுதானுங்க..அதுல அடிக்கிற் நாத்தமும் ஒண்ணுதானுங்க...அதுல ஏற்றத்தாழ்வு பாக்குறது..வித்தியாசமா நடத்துறது சரியாங்க. ஒருவேளை நாங்கள்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்கங்கிறதால எங்க கலையும் தாழ்த்தப்பட்ட கலைகள்னு முடிவு பண்ணி கோயிலுக்குள்ள வுடக்கூடாதுன்னு தெருவுலயே நிறுத்திட்டீங்களா..? அல்லது எங்க கலைகளுக்கு கோயிலுக்குள்ள நடத்துற அளவுக்கு தகுதியிலையின்னு முடிவுபண்ணிட்டீங்கள..?

உலகத்திலயே எந்த தலைவருக்கும் இல்லாத பட்டப்பேரு ஒங்களுக்கு இருக்கு.’கலைஞர்’னு பேரு வச்சிகிட்டு கலைஞர்களை இப்படி தெருவுல நிறுத்தறீங்களே..ஒருவேளை பரதனாட்டியம் ஆடறவங்கதான் கலைஞர்கள்..மத்தவங்கள்லாம் கலைஞர்கள் இல்லைன்னு நீங்களாவே முடிவுக்குவந்துட்டீங்களா..? ஒங்க ஆட்சியில என்னென்னமோ..இலவசமா குடுக்கறதா சொல்றீங்க.அரிசி குடுக்கறோம்...மளிகை கொடுக்கறோம்..டீவி குடுக்கறோம்..ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்கறோம்...வூடு குடுக்குறோம்...அப்படீன்னு என்னென்னமோ குடுக்கறதா சொல்றீங்க...அதையெல்லாம்விட முக்கியம் மானமும் மரியாதையும்தாங்க. ‘மானமும் அறிவும்தான் மனுசனுக்கே அழகு’ன்னு பெரியாரு கூட சொல்லியிருக்காருங்க. நான் அவருகிட்டதான் வளர்ந்தேன்னு சொல்லிக்கறீங்க..இது ஒங்களுக்கு தெரியாதா..?

அதனால எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களும் தஞ்சை விழாவுல கோயில்ல ஆடறதுக்கு இடம் குடுங்க.பெரிய கோயில் சுவத்துல எங்க பறை சத்தமும் கேட்கட்டுமே..புழுதிபடிஞ்ச எங்க காலுங்க கோயிலுக்குள்ள ஆடட்டுமே...யுகம்யுகமா ஒடுக்கப்பட்டிருக்கிற எங்க குரல் பெரியகோயில் கோபுரத்துல எதிரொலிக்கட்டுமே..அடிமைச்சங்கிலி நொறுங்கநொறுங்க திசைகளெல்லாம் அதிர அதிர... நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா..நட்ட கல்லும் பேசுமோன்னு ரெண்டு நாளைக்கு முன்னாலதானே பேசுனீங்க..அப்புறம் நாங்க ஆடினாமட்டும் கோயில் இடிஞ்சுடுமா..? திட்டமிட்ட இந்த புறக்கணிப்பை...ஒதுக்குதலை...எளிய மனிதர்களை கேவலப்படுத்துவதை ...தடுத்து நிறுத்த...ஒங்க ஒரு கையெழுத்து போதும். செய்ஞ்சீங்கன்னா, சந்தோஷத்துல அடிப்பேன்...
டண்டணக்கா..டண்டன்க்கா...
டண்டணக்கா..டண்டன்க்கா...

இப்படிக்கி...
கருப்பன்
பறை இசைக்கலஞர்







nandri :
"நான் தமிழன். திராவிடன்அல்ல. "
ம.தோமினிக் சேவியர்.

வெள்ளி, செப்டம்பர் 10, 2010

செவ்வாய், செப்டம்பர் 07, 2010

சிங்களபேரினவாதிகளுக்கும் திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

பெப்ரவரி 5, 2010 by tamizhanban

சிங்களபேரினவாதிகளுக்கும் திராவிடதேசியவாதிகளுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.


முல்லிவாய்காளில் சிந்திய இரத்தத்துளிகளின் தொடர்ச்சி செங்கல்பட்டுவரை நீட்சி பெற்றிருக்கிறது. முல்லிவாய்காளில் சிங்களவன் தாகம்தீர்த்த தமிழினத்தின் குருதி மீண்டும் செங்கல்பட்டில் திராவிட ‘தேசியவாதிகளால்’ ருசிபார்க்கப்பட்டிருக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் சிங்கள காடையர்களால் அடித்தே கொல்லப்பட்டான், தமிழில் பேசியதற்காக மாணவன் தாக்கப்பட்டான், தமிழ் இளைஞனின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தொடர்ச்சியாக தமிழர்களின் செங்குருதியில் நினைந்து வழிகிறது ஈழத்தில் செய்திதாள்கள். ஒருவேளை சிங்களவர்களும் செம்மொழி மாநாட்டிற்கு தாயாராகிவிட்டார்களோ என்னவோ?

அடிமை நாய்களுக்கு சுதந்திரம் வேண்டுமா? என்று ஒரு தமிழனை பார்த்து ஒரு தமிழனே பார்த்து கேட்கும் அளவிற்கு இன உணர்வு தமிழகத்தில் வளர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. இந்தியாவில் அகதியாக இருக்கும் திபெத்தியர்கள் நிலையையும் ஈழத்தமிழர்களின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தால் தாயகதமிழர்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள் என்று புரிந்துவிடும். கடந்த நாற்பதாண்டுகளாக திராவிடத்தை பெயரில் தாங்கி இந்திய இறையாண்மை காத்திடவே ஆட்சி நடத்திய திராவிடகட்சியில் ஊட்டிய இன உணர்ச்சியின் வெளிப்பாடுகளை நாம் இன்று பார்த்து கொண்டிருக்கிறோம்.

பெரியார் பேசிய திராவிடம் என்பது இந்தியதேசியத்திற்கு எதிரானது. பொதுவாகவே பெரியார் தேசியவாதங்களுக்கு எதிரானவர். தான் வாழும் காலம் முழுவதும் இந்திய தேசியம் என்பது ஆரியதேசியமே என்று முழங்கிவந்தார். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழக்கங்கள் இட்டவர் பெரியார். ஆரியத்திடம் திராவிடம் அடிமையாகிவிடக்கூடாது என்று தொடர்ந்து போராடிய தலைவனின் பெயரை சொல்லி அரசியல் நடத்திய திராவிடவாதிகள். திராவிடம் என்பதை ஆரியத்தின் துணைதேசியமாக மாற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாதளவில் இறையாண்மையின் பூசாரிகளாக திராவிட கட்சிகள் இருந்துவருகிறார்கள்.

திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட இயக்கம் கட்டியகாலங்களில் பெரியார் ‘பச்சை தமிழர்’ என்று யாரை அழைத்தாரோ அதே காமராசரை ‘கையாலாகதவர்’ என்றும் டெல்லி தலைமையை எதிர்த்து எதுவும் செய்ய இயலாதவராகவும் இருக்கிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர் திராவிடமுன்னேற்ற கழகத்தினர். இன்று வரலாறு மீண்டும் திரும்புகிறது படிக்காத மேதை ஏழைமக்களின் கல்விக்கண் திறந்த காமராசரை என்னவெல்லாம் சொல்லி இவர்கள் விமர்சனம் செய்தார்களோ அதனினும் கீழான நிலையில் இருக்கிறது இவர்களின் ஆட்சி. பதவி சுகத்திற்க்காக எதையும் செய்யும் நிலையில் இருக்கிறார்கள் திராவிடதேசியவாதிகள்.

திராவிட அரசியல் கட்சிகள்தான் இப்படி என்றால் பெரியாரின் கொள்கை வாரிசாக நாம் கருதிய வீரமணி இவர்களைவிட மோசமான சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். பிழைப்புவாதத்தின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். பெரியாரின் அசையும்சொத்து அசையாதசொத்துக்களோடு அறிவுசார் சொத்துக்களும் தனக்கே சொந்தம் என்று வாழ்ந்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த பொழுது வீரமணி அறிவாலயத்தில் பதுங்கி கொண்டதோடு தனக்கு தானே பெரியார் விருது வாங்குவதற்கான தேதி குறித்து கொண்டிருந்தார். ஈழத்தில் அத்தனை மக்கள் செத்துவிழுந்த பொழுதும் வாய்திறவாத வீரமணி கருணாநிதியின் இரண்டுமணிநேர உண்ணாவிரத நாடகத்தின் பொழுது “தலைவனுக்கு ஏதாவது ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!” என்று ‘பஞ்ச்’ விட்டுக்கொண்டிருக்கிறார். உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு ஆறுதல்தரும் ஒரேஒரு தலைவராக கொளத்தூர் மணி அண்ணன் மாத்திரமே இருக்கிறார்.

தாயக தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் எதுவும் பெரியளவில் நடந்தவிடாமல் தடுத்து நிறுத்தியது தேசியவாதம் பேசத்துவங்கிய திராவிடமுன்னேற்ற கழகம். பிரபாகரனை சர்வாதிகாரி என்று கூறிய கருணாநிதி ஈழத்திற்காக போராடிய வழக்கறிங்கர்களை எந்தமுறையில் ஒடுக்கினார் என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினால் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமி மீது வீசிய முட்டைகளுக்கும் தானே பொறுப்பேற்க வேண்டுமா? என்று தனக்குத்தானே பதில் சொல்லி கொள்கிறார். சுப்பிரமணிசாமியை பார்த்தால் பம்மும் தமிழககாவல்துறை ஈழப்போராளிகளை கண்டால் எகிறி அடிக்கிறது. ஈழத்தமிழ் மக்களை அடித்தால் எவன் கேட்பான் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளவேண்டியிருக்கிறது.

திராவிட தேசியவாதிகளை நாம் திட்டினால் உடனே பெரியார் முன்வைத்த திராவிடத்தை எதிர்பதாக கூறி அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியை ரட்சிக்க திராவிடத்தின் பெயரால் பல பூசாரிகள் இன்று இருக்கிறார்கள்.

தமிழன் என்ற இனமோ, அவனுக்கென்று அடையாளமோ எதுவுமே இருக்கக்கூடாது என்று பிஞ்சுகள் என்று கூட பாராமல் குண்டு போட்டு கொன்று முடித்த சிங்கள பேரினவாதிகளுக்கும். பெயரளவில் தமிழ்நாடு என்று வைத்துவிட்டு தமிழையும் தமிழினத்தையும் அழிக்கும் அனைத்து செயல்களுக்கும் துணை போயி ஈழத்தமிழ் மக்களை வதைப்பதன் மூலம் காங்கிரசு கூட்டணியில் இடம்பெறலாம் என்று காய்நகர்த்தும் திராவிடதேசியவாதிகளுக்கும் பெரிதாய் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்கு தானே தமிழதலைவன் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் கருணாநிதிக்கு இன்னும் புகழுக்காக அலையும் மனம் மாறவில்லை. செம்மொழி மாநாடு என்ற பெயரில் தனது புகழ் பாடும் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். வீரமணி சுபவீ என்று கருணாநிதிக்கு வால்பிடித்து பிழைப்புவாதத்தின் தொடர்ச்சியாக சில கருஞ்சட்டை பூசாரிகள் மாநாட்டிற்கு ஆள்பிடிக்க அலைகிறார்கள்.


இந்த இனத்திற்கு தலைவன் ஒருவன் தேவையில்லை. நம்மை நாமே காத்தால் மட்டுமே நமது மொழியையும் நம் இனத்தையும் இனிவரும் காலங்களில் காத்திடமுடியும் என்பதை மனதில் வைத்து உலகத்தமிழர்கள் ஒருங்கிணையவேண்டும். இந்திய தேசியத்திற்கும் இத்தாலி தேசியத்திற்கும் விலைபோய்விட்ட திராவிட தேசியத்தை நம்பி தமிழினத்தை நட்டாற்றில் விட்டது போதும். நமக்கு இப்போதைய தேவை தேசியமல்ல தமிழர் என்ற உணர்வு. திராவிட தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களை கருவறுக்கும் போலி திராவிடவாதிகளை அம்பலப்படுத்துவோம். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைவோம்.

நன்றி ; தமிழன்பன்

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான்


மார்ச் 11, 2010 by tamizhanban

தமிழனும் மலையாளிகளும்! இதுவும் கடிதம்தான் !


அன்புள்ள த!

வணக்கம் தமிழன்பன். நீங்கள் முன்னர் வினவு குறித்த கட்டுரையில் மலையாளிகளை சேட்டன்கள் சேச்சிகள் என்று விளித்து எழுதி இருந்தீர்கள் அது என் மனதை காயப்படுத்திவிட்டது. நாட்கள் பலவாகியும் நீங்கள் அதனை இன்னும் உங்கள் தளத்திலேயே வைத்து இருக்கிறீர்கள் அதனால் மனது பொறுக்காமல் இதனை எழுதுகிறேன்.தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி என் பெயரை பெயரை வெளியிடவேண்டாம் ( தனக்குத்தானே கடிதம் எழுதும் பொழுது பின்நவீனத்துவ ‘லூசு’ செய்வது போலே இப்படி ஒரு வரி இருக்க வேண்டும் அல்லவா?)

மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் என்று வினவு எழுதியதை படித்த பின்நவினத்துவ பெருமாள்கள் அதே தோசையை திருப்பிபோட்டு தமிழர்கள் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று எழுத்துலக கோமாளிக்கு கடிதாசி போட்டு இருக்காங்க . வினவு தளத்துள சங்கரன் வந்து வாழ்த்திய பொழுதே எதையோ ‘நோட்’ பண்ணுறாய்ங்கண்ணு சிறிது சந்தேகம் வந்துச்சு அதை இந்த கடுதாசி தீர்த்து வைச்சிருச்சு.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபிறகு கருணாநிதி முதல்வராக வந்தபொழுது மலையாளிகள் தமிழகத்தில் டீக்கடை நடத்த முடியாத சூழல் உருவாகிப்போனதாக இவனுக கதைவிடுரானுங்க. ஆனா மொழிவாரி மாநிலப்பிரிப்பிற்கு பின்னர் முல்லை பெரியாரில் தமிழனுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு தண்ணீரும் மறுக்கப்பட்டு ராமநாதபுரத்தமிழன் விவசாயத்திற்கு மாத்திரமல்ல குடிக்ககூட தண்ணியில்லாம அல்லாடுகிறான் இதுல இவனுக தமிழ்நாட்டில் தேநீர்கடை நடத்தமுடியவில்லையாம் என்ன கொடுமை சார் இது.

எப்பவுமே கேரளத்தானுங்க எங்க பூமி செங்கொடி பறக்கும் பூமி என்று ஓவரா பில்டப் கொடுப்பார்கள். உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று ‘பெர்பாமன்ஸ்’ கொடுப்பார்கள் ஆனால் பக்கத்து மாநிலத்தானுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டர்கள். ‘பென்னிகுக்’ என்ற புண்ணியவான் கட்டிக்கொடுத்த முல்லைப்பெறியாரை தகர்ப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று அச்சுதானந்தம் என்னும் செங்கொடி தோழர் இன்னும் கேரளமண்ணில் வாழ்ந்து வருகிறார். முல்லைபெரியார் அணையில் குமுளி சாக்கடை நீரை தாரளமாக கலந்து விடுவது கூட தோழர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளின் தொடர்ச்சிதான்.

எனது கல்லூரி காலங்களில் எனது நண்பன் வீட்டு திருமணத்திற்கு மதுரைக்கு போயிருந்தோம் வாகனம் ஓட்டிவந்தவர் மலையாளி. நண்பனின் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவருபவர். எங்களோடு பயணம் நெடுக எதுவுமே பேசவில்லை. தாகம் என்ற பொழுது நாங்கள் கொடுத்த நீரை குடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டான். எனக்கு ‘கோக்’ வேணும் என்றான் நாங்களும் வாங்கி கொடுத்தோம் திருமணவிருந்தில் சாப்பிடும்பொழுதும் ‘கோக்’தான் வேண்டும் என்றான். ‘கோக்’ இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என்றான் ஏன் அப்படி என்று கேட்டால் தமிழ்நாட்டில் ‘இவர்கள்’ ‘கழித்துவிட்ட கழிவுகள் கலந்த நீரை குடிக்கிறோமாம் அதனால் அவரு தமிழ்நாட்டில் தண்ணீர் குடிக்க மாட்டாராம். “அட லூசுப்பயலே தமிழ்நாட்டில் இருந்து தண்ணி எடுத்த்துத்தான் ‘கோக்’ செய்யுராண்டா அப்புறம் எதுக்குடா அதை குடிக்கிற?” என்று கேட்டால் ” அது வேற ரிவராக்கும்னு” நமக்கே பாடம் எடுக்குறான் மக்களே இவய்ங்கள நாம புண்படுத்துறோமாம் “என்ட அம்மே!”

மேலும் தமிழர்களுக்காக தம்வாழ்நாளை அர்பணித்த கம்யுனிஸ்டு தலைவர்களை மலையாளத்தான் என்ற காரணத்தால் நாம் மதிப்பதில்லையாம். தமிழர்கள் தம் வரலாற்றில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுத்தார்கள் என்றால் அது மருத்தூர்கோபாலராமச்சந்திரமேனன் (எம்ஜிஆர்) தவிர வேறு யாரு? மூன்றுமுறை தொடர்ச்சியாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டில் உட்கார்த்தி அழகு பார்த்தவர்கள் தமிழர்கள் எம்ஜிஆரை மலையாளி என்று செய்யப்பட்ட பிரச்சாரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டு தமிழன் மாத்திரமல்ல ஈழத்தமிழனும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவனாக பார்த்தார்கள். ஆனால் ஒரு மலையாள பப்ளிசிட்டி பைத்தியம் தனது வலைப்பூவில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது ‘உங்களுக்கு படிப்பு இருக்கிறது பண்பு இல்லை!” என்பதற்கு பதிலாக “உங்களிடம் பைப்பு இருக்கிறது பம்பு இல்லை” என்றார் என்று கீழ்த்தரமாக விமர்சித்தது சோடாவிற்காக மைக் பிடிக்கும் உருப்படாத உடன்பிறப்புகளை மிஞ்சும் விதத்தில் மக்கள் திலகத்தை அவதூறு செய்தது அனைவருக்கும் நினைவு இருக்கும் இப்பொழுது மலையாளப்பெருமாலு அந்த பப்ளிசிட்டி பைத்தியத்திற்க்கே கடிதம் எழுதுகிறது தமிழர்களுக்காக உழைத்த மலையாளிகளை தமிழர்கள் மலையாளிகள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒதுக்கி வைத்தார்கள் என்று. இதை எங்கே போய் சொல்லி அழுவது தமிழன்பா!

தமிழனின் தொப்புள்கொடி உறவுகளை கூட்டு சேர்ந்து கொன்று அழித்த மலையாளிகள் சிவச்சங்கரமேனங்களும் நாராயணன்களும் நம்பியார்களையும்விட தமிழன் ரெம்ப மோசமானவன் என்று எதோ ஒரு பைத்தியம் தனக்கு தானே கடிதம் எழுதி கொள்ளுமாம் பின்னால பின்னூட்ட பெருமாளு ஆமாப்பா தமிழன் ரெம்ப மோசம்னு எழுதுவாராம். இதுல இவனுக வீட்டுல தனியா உக்காந்து அழுதானுங்கலாம் ஏன் தமிழன் இம்புட்டு மோசமா இருக்காய்ங்கன்னு.
இப்படித்தான் வினவுல ஒருத்தரு எழுதுறாப்ல கேராளாவுல கம்யுனிசம் வளந்திடுச்சு தமிழ்நாட்டு சரியா வளரலன்னு அட போங்கடா இவனுகளா அண்டை மாநிலத்திற்கு தண்ணி விடாதே! உலகத்தொழிலாளிகளே ஒன்று சேருங்கள் தமிழகத்தொழிலாளிகளே நாசமாப்போங்கள் என்பதுதான் கேரளா காம்ரேட்டுகளின் புதுவகையான கண்டுபிடிப்பு போலும். மலையாளத்தான் கொடுத்த தேநீருக்கு நன்றி சொல் என்று புத்திமதி வேறு கூறுகிறார்கள். ஏதோ தமிழ்நாட்டுல எவனுக்குமே தேநீர் போடவே தெரியாத மாதிரி.

கடிதம் எழுதும் போது ரெம்ப தெளிவா இருக்காய்ங்கப்பா அதாவது மொழிவாரி மாநிலத்திற்கு பிறகு தமிழர்கள் மலையாளிகளை விரட்டி அடிச்சது மாதிரியும் தமிழர்கள் கேரளாவிற்குள் காலடி வைத்ததே தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபிறகுதான் என்பது போலவும் நல்லாவே கதை காட்டுரீங்கப்பா. தமிழக முதல்வராகவே ஒரு மலையாளி வரமுடிகிறது கேரளாவுல அது முடியுமா?. ஆனால் இவனுக தமிழர்களுக்கு கேரளா ரேசன்காடு எல்லாம் கொடுத்து இருக்கு தெரியுமான்னு நமக்கே காது குத்துரானுங்க. மலையாளிகள் மிகுதியான நாகர்கோயில் தமிழ்நாட்டோடு இணைந்தது போல தமிழர்கள் நிறைந்த கோட்டயம் கேரளாவோடு இணைந்தது வரலாறு. இதுல எர்ணாகுளத்துப்பக்கம் தமிழர்கள் பல பஞ்சாயத்துப்பக்கம் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்திருக்கிறார்கள்.

இன்னைக்கு இருக்குற முதல்வரு ஓனம் வந்தா உடனே வாழ்த்து சொல்லுறாரு. அதுமாத்திரமில்லாம அரசு விடுமுறைவேறு அறிவித்து இருக்கிறாரு. பொங்கலுக்கு அச்சுக்குட்டி வாழ்த்து சொன்னதுண்டா? தமிழ்நாட்டு திரைத்துறையில் ராதமேனன் கவுதம்மேனன்னு எத்தனை எத்தனையோ மேனன்கள் வந்து கல்லா கட்டுறானுங்க. மலையாளியை ‘தல’ என்று கொண்டாடுறான் தமிழ்நாட்டு சினிமா ரசிகன். அந்த தறுதலையும் தமிழ்நாட்டு பிரச்சனை நாங்க ஏன் போராடணும்னு பேசிக்கிட்டு திரியுது. ஜோய் ஆலுக்காஸ் முதல் மலபார் கோல்டு வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருக்கு. இன்னும் இவர்களுக்கு என்னதான் வேணும்? ஒருவேளை தமிழ்நாட்டை காலிபண்ணிகொடுத்தாத்தான் தமிழனை நல்லவன்னு சொல்லுவானுங்க போல.

அய்யா தமிழன்பரே இப்படியே வரலாற்று உறவு அவர்கள் நமது சேட்டன்கள் சேச்சிகள் என்று கூறி அவர்கள் எவ்வளவு எச்சி துப்பினாலும் நாம சகிச்சுக்கனும்னு சுண்ணாம்பு தடவிப்புடாதீங்கய்யா. ஏதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிப்புட்டேன். தமிழகத்தில் மும்தாஜை கேரளப்பெண்ணாக காட்டி சேச்சிகளை அவமானப்படுத்தி புட்டானுங்கலாம் இதை கண்டுபிடித்த அறிவாளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் சொல்லுற அந்தத்திரைப்படத்துல கொழுப்பெடுத்து பேசிய விவேக்கின் நாக்கில் மும்தாஜு சேச்சி வல்லிய சூடு வைக்காம்போலே சீனு உண்டு பச்சே நிங்கலண்ட படத்தில தமிழனை பாண்டின்னு சம்சாரிக்கும் பட்டிக்கு எங்கணும் சூடுவைக்கும்?”

இப்படிக்கு….

(பறையாம்பாடில்லே!)

நன்றி ; தமிழன்பன்