திங்கள், நவம்பர் 29, 2010

இ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகமே: கோவை ஞா‌னி



அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ, இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல மொழி, முதல் மொழி, இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்ற நம்பிக்கைகளை இன்றும் அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல, இந்திய நாகரிகத்தினுடைய அடித்தளம் தமிழ் நாகரிகம்தான்.

அறிஞர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். இந்திய நாகரிகத்தினுடைய மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் என்பதை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

WD
இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் என்றால் வேளாண்மையைச் சொல்ல வேண்டும், நீர்ப் பாசனங்களைச் சொல்ல வேண்டும், கால்நடைகளைப் பற்றி சொல்ல வேண்டும், மருத்துவம் பற்றி சொல்ல வேண்டும். இசை பற்றி, தர்க்கம் பற்றி, மெய்யியல் பற்றி, அறிவியல் பற்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய வேளாண்மையில் தொடங்கி அறிவியல் வரை அனைத்துத் தளங்களிலும் விளங்கியது தமிழ் நாகரிகம் மட்டும்தான். இவற்றில் ஆரியத்தினுடைய பங்களிப்பு என்பது எள்ளளவும் கிடையாது. வேளாண்மையிலோ, கட்டடக் கலையிலோ, சிற்பத்திலோ, இசையிலோ, மருத்துவத்திலோ, கணிதத்திலோ, தர்க்கத்திலோ தமிழினுடைய பங்களிப்புதான் பெரும் பகுதி உண்டோயொழிய ஆரியத்தின் பங்களிப்பு என்பது பெயரளவிற்கு அங்கொன்று, இங்கொன்று இருக்கலாம் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய வரலாறு பற்றி ஆய்வு என்று சொன்னவர்களெல்லாம் என்ன சொல்லித் தொலைத்தார்கள் என்றால், எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய நாகரிகத்தினுடைய ஆதாரம் என்று சொன்னார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை. அத்தனையும் தமிழ் நாகரித்தோடு தொடர்புடையனதான். வட இந்தியாவில் ஹிந்தி போன்று ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளைப் பார்த்தீர்களென்றால் - பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் - சமஸ்கிருதச் சொற்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடந்தாலும் கூட, அந்த வட இந்திய மொழிகள் அத்தனையிலும் இருக்கிற வாக்கிய அமைப்பு என்பது தமிழினுடைய வாக்கிய அமைப்புதான்.

தமிழ் வாக்கியத்தில் நம்முடைய மக்கள், 'காலையில் எழுந்து டிஃபன் பண்ணி, ஃப்ரண்டை சந்தித்துத் திரும்பினேன்' என்று சொன்னால் அந்த வாக்கியம் முழுவதும் தமிழ், இடையில் ஆங்கிலச் சொற்கள். அதேபோலத்தான் வட இந்திய மொழிகள் முழுவதிலும் வாக்கிய அமைப்புகள் உள்ளன. வாக்கிய அமைப்பு என்பது ஒரு மொழியில் எவ்வளவு வலுவான அம்சம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. வாக்கியம் முழுவதும் தமிழாக இருக்கிறது. இடையில் ஆங்காங்கு சமஸ்கிருதம் ஏராளமாகச் சேர்ந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தீர்களென்றால் இன்று இந்தியாவில் தமிழுக்கு மரியாதை இல்லை, தமிழனுக்கு மரியாதை இல்லை.

ஆனால், செம்மொழி ஆய்வு என்கிற முறையில் நீங்கள் இந்த ஆதாரங்களைத் தேடித் தொகுத்து, இதில் தமிழஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்த முடியும் என்று சொன்னால், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் தமிழ் நாகரிகம் என்பதை மெய்ப்பிக்க முடியும். மா.பி.கந்தையா சொல்லிக் கொண்டிருந்தார், க.ப.வே. சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பல அறிஞர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்க முடியுமானால், இந்திய அரசியலில், இந்தியாவினுடையபொருளியலில் தமிழனுக்கான இடம் கிடைக்கும்.

இன்று மைய அரசிற்கு அடி வருடியாக, அடிமையாகச் செயல்படக் கூடியவன்தான் மைய அரசினுடைய மரியாதைக்குரியவன். மைய அரசில் செல்வாக்கு பெறவேண்டும் என்று சொன்னால், மைய அரசு, சமஸ்கிருதம், வட இந்திய பெருமைகளையெல்லாம் ஒப்புக்கொண்டவன்தான் இருக்க முடியும்.

சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெரியார் இருக்கிறார், திராவிட அரசியல் இருக்கிறது. சமஸ்கிருத மறுப்பு இருக்கிறது. இதனை வட இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்று சொன்னாலும் கூட வடக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்திய அரசியலில் தமிழனுக்குரிய மரியாதையை, செல்வாக்கை, அழுத்தத்தைப் பெறுவது என்று சொன்னால், தமிழைச் செம்மொழி என்று ஏராளமான ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதில் அடங்கியிருக்கிறது என்கிற முறையில்தான் தமிழைச் செம்மொழி என்று அறிவித்த உடனேயே எங்களைப் போன்றவர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் எதுவம் இல்லை. இந்தத் திட்டங்களை நீங்கள் முன்வைக்கும் போது, இன்றைக்கு நடக்கும் இந்திய அரசியலிற்கு, சமஸ்கிருத மொழிக்கு, ஆரிய ஆதிக்கத்திற்கு, வருணாச்சரமத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி.

இன்னொன்று என்னவென்று சொன்னால், திராவிட மொழிகள் என்று சொல்லப்பட்டவை மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவைகளெல்லாம், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னட மொழிக்காரர்களும், தெலுங்கு மொழிக்காரர்களும் ஆத்திரப்பட்டார்கள், எங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு, அறிவிக்க வேண்டும் என்று. ஆகவே செம்மொழியினுடைய காலவரையறை 1,000 ஆண்டு என்று நிர்ணயிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

உலக அளவில் செம்மொழி என்று சீன மொழியோ, கிரேக்க மொழியோ ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொன்னால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது. அரசு அதிகாரம், அரசு அனுமதி என்பது தேவையே கிடையாது. நம்ம இந்தியாவில் மட்டும்தான் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையைக் கிளப்பி கடைசியில் அதனை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறோம். இதுவொரு பிறழ்வு என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த வரையறையை நாம் மீறவேண்டியதில்லை.

கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு என்று சொல்லும்போது, இல்லையென்பது உண்மையென்றாலும் கூட, உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவர்கள் செய்யக்கூடிய ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? பேராசிரியல் நாச்சிமுத்து, தற்பொழுது டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடியவர். அவர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார். தமிழுக்கு செம்மொழி தகுதி என்பது கன்னட மொழி பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆந்திர மொழி பேசுகிறவர்கள், மலையாள மொழிப் பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்று சொன்னால், செம்மொழி என்பது தமிழனுக்கு மட்டும் உரியது இல்லை. உங்களுக்கும் சேர்த்துதான் இது செம்மொழி. ராமசாமி அவர்கள் கூட ஒருமுறை சொன்னார், கன்னட அறிஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், கன்னட மொழி ஆய்வு என்று செய்யத் தொடங்கினீர்களென்றால் கடைசியல் நீங்கள் தமிழுக்குப் போய்ச் சேருவீர்கள். உண்மையிலேயே மலையாள மொழியோ, கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தம்மைச் செம்மொழி என்று சரியான முறையில் ஆய்வு செய்வார்களேயானால் அவர்கள் தமிழுக்கு வந்துச் சேருவார்கள். அதனா‌ல், இந்த வகையான ஆய்விற்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

இன்னொன்றைச் சொல்லி எனது கருத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அது, தமிழ் மொழி ஆய்வு என்பது தமிழனுக்கு விடுதலை தரவேண்டும் என்று நான் சொன்னேன். தமிழியல் ஆய்வு என்பது மக்களோடு சம்பந்தப்பட்டது. காவிரி, வைகை, தாமிரபரணியோடு, இங்கிருக்கக்கூடிய நீரோடு, நிலத்தோடு, காடுகளோடு, இங்கிருக்கக் கூடிய வாழ்க்கையோடு, இங்கிருக்கக் கூடிய மக்கள் வாழ்க்கை மேம்பாட்டோடு சம்பந்தப்பட்டது.

அப்படியிருக்கும்போது, இங்கு காவிரி இல்லை, வைகை இல்லை, தாமிரபரணி இல்லை என்று சொன்னால், இங்கு தமிழனுக்கு என்ன வாழ்வு? தமிழ் மொழிக்குதான் என்ன வாழ்வு? அதேபோல, இங்கிருக்கக் கூடிய நீர்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உட்கார்ந்துகொண்டு, அவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் தமிழனுடைய வாழ்வு, தமிழ் மக்களுடைய வாழ்வு என்ன ஆகும்?

செம்மொழி ஆய்வு என்பது சொல்லக்கூடிய இந்தத் திசையில் போய் கடைசியில், தமிழ்நாடு தமிழனுக்குரிய நாடாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழனுக்குத்தான் செல்வாக்கு, தமிழக பொருளியலை நிர்ணயிக்கக் கூடியவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும், தமிழ் மக்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழனுடைய நீர்நிலைகள் மற்றும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அந்நியருக்கு நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

இதெல்லாம் கூட ஆய்வினுடைய நோக்காக இருக்க வேண்டும். தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த அக்கறையும் வேண்டும். ஏதோ மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி என்பது மக்களிடத்தில் இருந்து விடுபட்டு, நீரோடு நிலத்தோடு விடுபட்டு, உழவர்களோடு, நெசவாளிகளோடு, கலைஞர்களோடு, சிற்பத்தோடு, சமயத்தோடு விடுபட்டுச் செய்யக் கூடிய ஆய்வாக இருக்கவே முடியாது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஆய்வுதான் தமிழனுக்கான விடுதலையைப் பற்றிய ஆய்வாகவும் இருக்க முடியும். இதுதான் என்னுடைய பொதுவான ஒரு கருத்து.
நன்றி : வெப்உலகம் .காம்

ஞாயிறு, நவம்பர் 28, 2010

பகடி கருத்துப் படங்கள் - பயணங்கள் முடிவதில்லை


ஒவ்வொரு முறையும் இந்தி அரசால் அனுப்ப படும் மலையாளி இந்த முறையும் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து திரும்பியுள்ளார் . கடிதம் கருணாநிதியின் கவலை நியாயமானது என்று கூறும் அவர் , மெதுவாகத்தான் நிவாரண பணிகள் நடக்கும் , ஆனால் இந்தியாவின் கவலை அதுவல்ல அதைவிட பெரியது எனவே தமிழர்களின் நலன் மட்டும் முக்கியமல்ல என கூறியிருப்பது வியக்கத்தக்க செய்தியல்ல . நாம் என்ன செய்ய போகிறோம் ? என்பதுதான் .

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 7


சென்ற கட்டுரை தொடர்ச்சி....

பாத்திமா மாதா கோயில் திருவிழா என்று வைத்துக் கொள்ளுங்கள் சுமார் இருநூறு பேர் தேர்பவனிக்கு வருவார்கள் . நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக இக்கூட்டம் செல்ல வேண்டும் , பவனியில் இரண்டிரண்டு பேராக செல்வார்கள். மெதுவாக செபமாலை உருட்டிக்கொண்டு நத்தை போல் நகர்வார்கள் . நகரப் பேருந்துகள் , வெளியூர் பேருந்துகள் , நடுச் சாலையில் காத்துக் கிடக்க வேண்டும் . இதுதான் அநீதமான சாலை மறியல் . இருக்கிற உரிமைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டு மனித மாண்புகளை காலில் இட்டு நசுக்குவது ! வெத்து வீராப்பை வெளிச்சம் போட்டு காட்டுவது!!

அதிகாலையில் மசூதியில் ஒலிபெருக்கி வழியாக ஓதுகிறார்கள் . ஒலி காதை கிழிக்கிறது. தூக்கம் கெடுகிறது. இரவு நெடுநேரம் உழைத்துவிட்டு தூங்குகிற உழைப்பாளியும் அச்சத்தம் கேட்டு அதிர்ச்சி கொண்டு எழ வேண்டும். மார்கழித் திங்களில் இனி அய்யப்பசாமிக்கு ஒலி பெருக்கிகள் அலறும் . தேவாலயங்களில் அவரவர் விருப்பம்போல் நள்ளிரவு வழிபாடுகள் என்றும் , அதிகாலை வழிபாடுகள் என்றும் ஒலிபெருக்கிகள் அலறும். மனிதத் தன்மை இல்லா இச்செயல்களை மதச் சகிப்புத் தன்மை எனும் அழுகிப்போன கொள்கையை மக்களிடையே திணிக்கிறார்கள் .

உசேன் இருவது ஆண்டுகளுக்கு முன் வரைந்த சரஸ்வதி ஓவியத்திற்காக அவரது ஓவியக் கூடத்தை தகர்த்து நொறுக்குகிறது பஜ்ராங்க்தல் எனும் பார்பனிய அமைப்பு . அருண் சவுரி போன்ற பார்பனிய பற்றாளர்கள் எரிகிற தீயில் என்னை விடுவது போல் மத உணர்சிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்கிறார்கள் . ஆக மதத்தின் பெயரால் மனிதபண்பை இழந்தால் , மனித உரிமைகளை மீறினால் , பொது நலனை காலில் இட்டு நசுக்கினால் அதற்கெல்லாம் மதவாதிகள் ( அவர்கள் கிருத்துவரானாலும் , இசுலாமியரனாலும் , பார்பனரனாலும் ) புனித புனுகு பூசிவிடுவர் .

இன்று தாழ்த்தப் பட்டோர் உரிமைக்காக ஆயர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் . சண்முகநாதன் போன்ற ஆர் .எஸ் .எஸ் தலைமையும் தாழ்த்தப் பட்டோர் நலனுக்காக விக்கி விக்கி அழுகிறது. அரசோடு சலுகைக்காக போராடும் திருச்சவை தான் வழங்கவேண்டிய உரிமைகளை தன் மக்களுக்காக வழங்கி இருக்கிறதா? தாழ்த்தபட்டோருக்கு தனி கல்லறைகள் உண்டா ? இல்லையா? சாமியார்கள் மத்தியில் சாதி சங்கங்கள் உண்டா? இல்லையா ? ஆயர்களில் சாதி வெறியர்களும் பற்றாளர்களும் உண்டா? இல்லையா? தாழ்த்தப்பட்ட தொல்குடியினர் திருச்சவைக்குள் போராடிய போதெல்லாம் வன்முறையும், வசைமொழியும் கிருத்துவத் தலைமைகளால் அள்ளித் தெளிக்கபட்டதா இல்லையா? பாண்டிச்சேரியை தலைமையிடமாக கொண்ட சில துறவற அவைகள் வெளிபடையாகவே சில சாதிக் காரர்களுக்கவும் , தாழ்த்தபட்டவர்களுக்ககவும் தனித் தனியாக நடத்தப் படுகிறதா இல்லையா? தொல்குடியினரின் போராட்டங்களை பிற பொது நிகழ்சிகளில் ஆயர்கள் கொச்சை படுத்தி பேசியதில்லையா? தெலுங்கர்கள் அதிகமாக வாழும் அவைகளில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கபடுவதும் நசுக்கபடுவதும் உண்டா இல்லையா? இதெற்கெல்லாம் கிருத்துவத் தலைமை என்ன செய்துகொண்டிருகிறது ? பூசை மந்திரத்தை திருத்துவது , பீடத்தில் பூ வைக்கதிருக்க சட்டம் போடுவது என்று நேரத்தையும் காலத்தையும் போக்குகிறார்கள்.

இன்று தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக போராட சட்டபடியான உரிமை இன்றைய கிருத்துவத் தலைமைக்கு இருக்கலாம் .ஆனால் நன்னெறி அடிப்படையில் பலருக்கு அத்தகுதி கிடையாது . எப்படி ஆர் எஸ் எஸ் இன்று நீலிகண்ணீர் வடிக்கிறதோ அதற்கும் கிருத்துவ தலைமை தாழ்த்தப்பட்டோருக்கு இன்று வடிக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லை . பார்ப்பனீயம் அல்லது பாசிசம் என்பது பார்பனருக்குள் மட்டும் இல்லை . ஆர் எஸ் எஸ் போன்ற தீவிர அமைப்புக்குள் மட்டும் இல்லை கிருத்துவ , இசுலாமிய சாதியத் தலைமைக்குள்ளும் புதைந்து ஊறிக் கிடக்கிறது . மதங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் , மொழி அடிப்படையிலும் , பாலியல் அடிப்படையிலும் ஒடுக்கபடுகிற எல்லோரும் ஒன்றிணைந்து போரிட்டாலேயே கபடர்களின் வேடங்களைக் கிழிக்க முடியும் .

தொடரும்.....

சனி, நவம்பர் 27, 2010

மாவீரர் நாள் 27.11.2010






நிகழ்வு ஒன்று :
ஈழத்தில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த ஈகிகளின் நினைவேந்தல் நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அனுசரிக்கபடுகிறது . அதுசமயம் இந்த ஆண்டு கரூர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஜி ஆர் திருமணமண்டபத்தில் அரங்கு கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்தை கரூர் மாவட்டபொறுப்பாளர் திரு . முரளி தலைமை தாங்கி நடத்தினார் . தமிழர்களத்தின் கரூர் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு . சீவானந்தம் மாவீரர் நாள் குறித்த சிந்தனைகளையும் , சீமான் தளை செய்யப்பட்டதில் ஆளும் தி மு க அரசின் சட்ட மீறல்களையும் , தமிழர்கள் இனப்பற்று கொள்ளவேண்டியத்தையும் தமது கருத்துரையில் கூறினார். இனி நாம் செய்ய வேண்டியது குறித்த உறுதிமொழியினை திரு முரளி தலைமையில் அனைவரும் எடுத்துகொன்டனர். நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் . கூட்டத்தில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர் . இந்த நாள் வெறும் இரங்கல் கூட்டத்திற்கானது மட்டுமல்ல நாம் நமது காலத்தில் தமிழர்களை சாதி கடந்து ஒருங்கிணைத்து நாம் தமிழர்களாய் ஒன்றானால் மட்டுமே எந்த போராட்டமும் சாத்தியம் என்பதை உணர்த்தியது.
நிகழ்வு இரண்டு :
அதேபோல் கரூர் பேருந்து நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது . கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திரு . பாண்டியன் தலைமை தாங்கினார். திரளான பெண்கள் பங்கு கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த நிகழ்வாக அமைந்தது. முதலில் மாவீரர் பதாகைக்கு மலர் தூவி வீர முழக்கமிடப்பட்டது . பின்னர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் . குழந்தைகள் அஞ்சலி செலுத்தியது கண்டு அனைவரும்நெஞ்சம் நெகிழ்ந்தனர் . கூட்டத்தில் வழக்குரைஞர் திரு .சீவானந்தம் , சந்திரன் , உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர் .
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு நடுவே மிக அமைதியாக நிகழ்ந்தது .

செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் . கரூர்.

வெள்ளி, நவம்பர் 26, 2010

மாவீரர் நாள் - 2010


மாவீரர் தின உறுதிமொழி !
மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும் , நாளை நமது ஈழம் பிறக்கும் ! நம்பிக்கை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துவதென்ன?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாக்கப்பட்ட தமிழினம் இன்று வரை அடிமையாக வாழ்ந்து வருகின்றது , தனக்கேற்பட்ட இன்னல்களுக்கு காரணம் தேடி அலைகிறார்கள் நம்மில் பலர் . ஏதேதோ பிதற்றல்களை காரணமாக காட்டி நமக்கு ஆறுதல் தருவதுபோல் நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள் சிலர் . பொதுஉடமைத் தத்துவம் கூட நமக்கு விடியலைக் தரவில்லை .

தமிழ்நாட்டில் தமிழனைத் தவிர அனைவரும் தமிழினத் தலைவர்கள்தாம் , அந்தத் தலைவர்களால் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரமுடியாது. ஏனனில் அவர்கள் தமிழரல்லர் ! நண்பன் யார் ? எதிரி யார் ? என அடையாளம் காணமுடியாதபடி தமிழினம் மாயைகளில் மயக்குண்டு கிடக்கின்றது.

ஈழம் வீரம் நிறைந்த மண்தான் . அந்த மண்ணின் மாவீரர்களுக்கு நம்மால் மௌன அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும் , அதுவும் அரசின் அனுமதி பெற்றபிறகுதான் ! ஏனனில் இது தமிழ்நாடுதான் ஆனால் தமிழர்களுக்கான நாடல்ல . இது எதைக் காட்டுகிறது. தமிழன் தன்னை ஆளவில்லை , வந்தாரைஎல்லாம் வாழவிட்டு ஆளவிட்டு அழகு பார்க்கிறது தமிழினம் . முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்பும் அவர்களைத்தான் நம்புகிறது தமிழினம் . தன்னால் எதாவது செய்ய முடியுமா என ஏங்கும் ஒரு சில தமிழர்களும் இந்தி வல்லாண்மை கூட்டாச்சி அரசால் தளைப் படுத்தப்படுகின்றனர் . எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப் படுகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதால் தமிழர்களின் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க தோள்கொடுக்க தயங்குகின்றனர் . காரணம் ஆயிரக்கணக்காக சொல்லலாம் . தமிழக அரசின் அச்சுறுத்தல்கள் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் தோற்றுவிக்கப் படுகின்றன . தமிழர் அல்லாதோரை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுள்ளான் .

உண்மைகளை உரக்கச் சொல்லும் பாவலர் காசியானந்தனின் பாடல் வரிகளும், தமிழரை எழுச்சிகொள்ளச் செய்யும் புலவர் செம்பியனின் கவிதை வரிகளும் , அறிஞர் குணா , போன்றோரின் எழுத்துகளும் தமிழினத்தை தலை நிமிரச் செய்யவல்லன . ஆயினும் ஊடகங்களின் கயமைத் தனத்தால் உண்மைகளை தமிழர்கள் அறிய முடியா வண்ணம் சிந்தனை மழுங்கி வாழ்கின்றனர் .

காலம் மாறும் , காட்சிகளும் மாறும் இது இயங்கியல் விதி . வரலாற்றை ஒன்றின் ஊடாக ஒன்றை மீளாய்வு செய்ய வேண்டும் . அவற்றின் ஊடாக நாம் நம்மை அடையாளப்படுத்தி நமக்கான உரிமைகளை பெறுவோம், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம் ! தமிழகத்தின் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண தமிழர்கள் ஓரணியில் திரள்வோம் . தமிழர் நாட்டை தமிழர்தானே ஆளவேண்டும் . இந்த நன்னாளில் அதற்கான உறுதிமொழியை ஒவ்வொரு தமிழரும் ஏற்போம் . தமிழ்நாடு தமிழர்கே ! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!

- மா.முருகானந்தம் ,
ஓவியன் . கரூர்.

வியாழன், நவம்பர் 25, 2010

சென்னையை மீட்கப் போராடியவருக்கு சென்னையில் சிலை எப்போது - ஆதிரை

1968 ஆம் ஆண்டு சென்னை யில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது கடற்கரையில், பல்வேறு தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், நாயக, நாயகி களுக்கு சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கு முன்பும் பின்பும் கூட சென்னை மாநகரில் முக்கிய அறிஞர் கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளன. எனில், சென்னை மாநகர் இன்று தமிழர் களுக்கு, தமிழகத்துக்கு சொந்தமாக இருக்கக் காரணமான, அதற்காக போராடிய அரிய மனிதர் ம.பொ.சி.க்கு மட்டும் சென்னையில் சிலை இல்லை. சிலை வைக்க இடமில்லையா, இல்லை ஆட்சி யாளர்களுக்கு மனம்தான் இல்லை.

ம.பொ.சி.மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாத, ஆட்சி யாளர்கள் தெரிவிக்க விரும்பாத ஒரு பெயர். திராவிட கோட்பாட்டை எதிர்த்து தமிழ் தேசிய கருத்தாக்கத்தை நிறுவி, அதற்காகவே நாளெல்லாம் பேசியும் எழுதியும் வந்த ஒரு மாபெரும் ஆளுமை அவர்.

இந்தியத் தேசியத்தையும் திராவிட நாட்டையும் பேசி வந்த தமிழகத் தலைவர்கள் மத்தியில் இந்தியாவிற்குள் அடங்கிய தமிழ் அடையாளம் பற்றி முதலில் பேசியவர் ம.பொ.சி. விடுதலைப்போரில் ஈடுபட்ட காலத்திலேயே ம.பொ.சி யிடம் மொழி வழி இனவுணர்வு, இந்தியா தேசிய ஒருமைப்பாட்டுணர்வு பற்றிய சிந்தனைகள் தோன்றி விட்டன. பாரதியும் திரு.வி.க வும் வளர்த்தெடுத்த வரலாறு தமிழகத்தில் தேக்கமுற்ற நிலையில் ம.பொ.சி தமிழ் இலக்கிய வழி வந்த தமிழடை யாளத்தை கையில் எடுத்தார். அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கழகத்தின் கொடியில் வில்- புலி-மீன் ஆகிய தமிழ் மூவேந்தர் சின்னங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. அவர் மாநகராட்சியில் பணியாற்றிய காலத் தில்தான் சென்னை மாநகராட்சியின் கொடியிலும் வில்-புலி-மீன் ஆகிய சின்னங்களை பொறிக்கச் செய்தார். ‘உறவுக்குச் சின்னம் தேசியக் கொடி (மூவண்ணக்கொடி) உரிமைக்குச் சின்னம் தமிழ்க் கொடி இதை மறத்தல் கூடாது’ என்று ம.பொ.சி. 01.11.1947ல் ‘தமிழ் முரசு’ இதழில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1945ல் ஜூன் 26இல் திருச்சி மலைக்கோட்டையில் நடந்த இலக்கிய கூட்டத்தில்தான் முதன் முதலில் ‘மாநில த்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி’ என்ற தன் இலட்சிய முழக்கத்தை வெளியிட்டார் ம.பொ.சி. விடுதலை பெறுவ தற்கு முன்னரே அதற்கான பேச்சுகள் தொடங்கிய நிலையில் தொலை நோக்கோடு புதிய தமிழகத்தைப் பற்றி சிந்தித்து அதன் எல்லைகளை விவரித்து சுய நிர்ணய சுதந்திர சோசலிச தமிழ்க் குடியரசு அமைக்கக் கனவு கண்டார். அதற்கான முயற்சிகளையும் தன் இயக்கத்தின் வாயிலாக முன் னெடுத்தார்.

ஆந்திரர்கள் ‘விசால ஆந்திரம்’ என்றும் கேரளர்கள் ‘ஐக்கிய கேரளம்’ என்றும் கூறி வந்த காலத்தில் மா.பொ.சி. ‘புதிய தமிழகத்தை’ முன் வைத்தார். தமிழ் முரசு முதல் இதழில் (1946மே)‘சுதந்திர இந்தியாவில் சுதந்திர தமிழ் அரசு, சுதந்திர அரசியலை நிர்ணையிக்கும் உரிமை பெற்றி ருக்க வேண்டும். மேற்சொன்ன சுய நிர்ணய உரிமை இந்தி யாவிலுள்ள சகல தேசிய இனங்களுக்கும் உண்டு என்பதே நமது கொள்கை’ என்று தெளிவு படுத்தியுள்ளார்.

இந்திய தேசியம், திராவிடத் தேசியம், போன்ற வறட்டு வாதங்கள் தமிழகத்தை சூழ்ந்திருந்த நிலையில் தமிழ் தேசியம் குறித்த ஓர்மையைத் தமிழக மக்களிடம் ஏற்படுத்தினார். தமிழ கத்தின் வடக்கெல்லையின் சில பகுதிகளையும் தெற்கெல் லையும் பறி போகாமல் காத்தார். அப்போதிருந்த தலைவர்களின் உறுதுணை இருந்தி ருந்தால் பறிகொடுத்த பகுதிகளில் சிலவற்றை மீட்டெடுத்திருக்க முடியும். ஆனால் கெடு வாய்ப்பாக திராவிட வறட்டுவாதம் பேசியும் இந்திய தேசியத்தை மட்டுமே வலியுறுத்தியும் வந்த தலைவர்களால் தமிழகம் சில பகுதிகளையும் இழக்க நேர்ந்தது.

அளவில் சிறியதாயினும் சாதனை பல புரிந்த தமிழரசுக் கழகத்தின் பங்களிப்பாக பலதைக் கூறலாம். இவற்றுள் 1.சுயநிர்ணய சுதந்திர சோஷலிசத் தமிழ் குடியரசுத் தத்துவத்தைப் படைத்தது 2.எல்லைகளைக் காக்கப் பல போராட்டங்கள் புரிந்து ஒரளவேனும் எல்லைகளைக் காத் தது 3. மாநில சுயாட்சித் தத்துவத்தை உருவாக்கியது 4. தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையைப் பாதுகாத்து மீட்டது 5. திராவிட இயக்க எதிர்ப்பில் ஈடுபட்டது. 6.தமிழ் பயிற்று மொழி அமையவேண்டும் என்று பாடு பட்டது 7.ஆங்கில இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியது 8.தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான முயற்சியை முன் னெடுத்தது. 9.தமிழ் நாட்டில் அயலவர் ஆதிக்கத்தை எதிர்த்தது 10. தமிழ் அடையாளத் துடன் இளங்கோவடிகள் விழா, பாரதி விழா, வ.உ.சி.விழா, தமிழர் திருநாள், சிலப்பதிகார மாநாடு போன்றவற்றைக் கொண்டாட வழி வகுத்தது ஆகியனவற்றைக் குறிப் பிட்டுச் சொல்லலாம். மதராஸ் மனதே” என்று ஆந்திரர் முழங்கிய.காலத்தில் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று எழுந்த ஒற்றைக்குரல் ம.பொ.சி யுடையது. நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்திலும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் சென்னையில் குடியேறிய தெலுங்கர் கள் சில நூற்றாண்டுகள் இங்கு வாழ்ந்த துணிவில் சென் னைக்கு உரிமை கொண்டாடினர். பொட்டி ஸ்ரீராமுலு சென் னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டி உண்ணா விரதம் தொடங்கினார். அதற்கு ஆந்திர கேசரி என்று போற் றப்படும் பிரகாசம் பந்துலு ஆதரவளித்தார். தொடர்ந்து 58 நாட்கள் உண்ணா

விரதம் இருந்தபின் 1952 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு உயிர் நீத்தார் ஸ்ரீராமுலுவின் இந்த உயிர்த் தியாகம் ஆந்திரர்களின் ஆத்திரத்தைத் தூண்டி விட்டது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த மிகப் பெரிய கலவரத்தில் அரசு அலுவல கங்கள் தீக்கரையாக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு அடியோடு குலைந்தது.

இப்படிப்பட்ட சூழலில் ம.பொ.சி. தீரத்துடன் போராடிச் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றல், சென்னையிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தந்திகளை அனுப்பி எதிர்ப்பைப் பதிவு செய்தல், போன்ற போராட்ட முறைகள் மூலமாகச் சென்னையைக் காத்தார்.அப்போது தமிழக முதல்வரா யிருந்தவர் ராஜாஜி. அவர் முதல்வர் பதவியை இழந்தாலும் இழப்பேனே தவிர சென்னையை இழக்க மாட்டேன் என சென்னையைக் காக்க உறுதியோடு நின்று விடுத்த எச்சரிக் கையும் இதற்குத் துணை நின்றது. இதையட்டி ‘ஆந்திரப் தேசம் காவால, அரவ ராஜாஜி சாவால’ என்ற முழக்கம் ஆந்திரமெங்கும் எழுந்தது சென்னையைக் காக்க இவர்கள் போராடிய காலகட் டத்தில் திராவிடத் தலைவர்கள் சென்னை ‘திராவிட நாட்டில்’தானே உள்ளது என்று சமாதானம் கூறினார்கள். தமிழகக் காங்கிரஸ் தலைமையும் நடுவணரசுக்குச் சங்கடம் ஏற்படுத்த விரும் பாமல் அமைதி காத்தது.

இவ்வாறு ம.பொ.சி. உரு வாக்கிய தமிழரசுக் கழகம் அன்றைக்கு நடத்திய போராட்டங்கள் ஒவ்வொன் றையும் விரிக்கின் செய்திகள் பெருகும் இப்படிப்பட்ட தமிழகத்தின் தந்தை யாக நாம் போற்றியிருக்க வேண்டிய ம.பொ.சி.க் குத்தான் சென்னையில் ஒரு சிலைகூட இல்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழர்க்கு, தமிழுக்காக போராடியவர்களை. தமிழர்க்காகக் குரல் கொடுத்தவர்களை, தமிழ் நாட்டுக்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்தவர்களை நினைவிருப்பதில்லை தமிழகத்தின் இன்றைய சீரழிந்த நிலைக்கு காரணகர்த் தாக்களாய் விளங்கும் தலைமைகளுக்கு மூலை முடுக்கெல் லாம் சிலை; பட்டி தொட்டியெல்லாம் நினைவிடங்கள்; ஒட்டு அரசியலுக்காக சாதி மக்களின் தலைகளை எண்ணி எண்ணி, தலைவர் கள் பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்த வர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு சிலை அமைப் பதும் தமிழினப் பண்பாட்டை நிலை நிறுத்திய தனிமனித முயற்சிகளின் மூலமே சாதித்த ம.பொ.சி. ஆபிரகாம் பண் டிதர், தேவநேயப் பாவாணர், போன்ற உண்மை உணர்வாளர் களுக்கு சிலை ஏதும் அமைக்கா திருப்பதும் தமிழகத்தின் சீர ழிந்த நிலையைக் காட்டி நிற்கிறது. திராவிடக் கலாச்சாரத் தின் சவலைக் குஞ்சுகளாம் இன்றைய தமிழ்த் தலைமுறையினர்க்கு இத்தகைய தியாகத் தலைவர்களின் பெயர் கூடத் தெரியாத இழிநிலைதான் எங்கும் நிலவுகிறது. தமிழுக்காக தமிழருக்காக தமிழ்நாட்டுக்காகப் பாடுபட்ட தமிழ்த் தலைவர்கள் மறக்கடிக்கப்பட்டு. அந்நிய மொழிபேசும் அண்டை மாநிலத்தாரே முன்னூறு ஆண்டு களாய் ஆட்சி செய்ததில் தமிழன் சுரணை இன்றி உறக்கத்தில் இருக் கிறான். ‘‘தமிழன் என்றோர் இன முண்டு தனியே அவர்க்கொரு குண முண்டு”என்று இந்த நிலையைத்தான் நாமக்கல்லார் அன்றைக்கே பாடிச் சென்றார் போலும்

தமிழ்த் தலைவர்களுக்குச் சிலை வைத்தல் என்பது வெறுமனே அவர் களைத் திருவுருவாக்கும் முயற்சியன்று தமிழ்த் தேசியம் குறித்த. தமிழர் அடையாளம் குறித்த சிந்தனைகளை இன்றைய தலைமுறையினர் எண் ணத்தில் விதைப்பதற்கான விதை களாகவே இவர்களின் சிலைகள் இருக்கும். தமிழுக்காகவே உண்மை யாகப் பாடுபட்ட தலைவர்களை அறியும்போது, அவர்தம் வரலாற்றை உணரும்போதுதான் இன்றைய தலைமுறை, தமிழ் உணர்வும், இனவுணர்வும் பெற்றுப் புத்தாக்கம் பெறும்.

நம் அண்டை மாநிலமான ஆந்திராவில், உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் பெயரால் பல்கலைக்கழகம். மாவட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது அவருக்கு ஆந்திராவில் மட்டுமல்ல சென்னை யிலும் அவருக்கு சிலை வைக்கப் பட்டிருக்கிறது. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சென்னையில் உள்ள இல்லம் இன்றைக்கும் ஆந்திர அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது ஆனால் நம்முடைய மாநிலம் உருவான வரலாறு, அதற்காக நடத்தப் பட்ட போராட்டங்கள், பாடுபட்ட தலைவர்கள் பற்றிய அறிவு கிஞ்சித்து மின்றி உணர்வற்ற பிண்டங்களாய் நம் தமிழ்க் குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அப்படி நடமாட விட்டுள்ளனர். தமிழுக்காகப் பாடு பட்டவர்கள் தனிப்பெரும் ஆளுமை களாகக் கட்டமைக்கப்படாமல் திராவிடவாதம் முட்டுக்கட்டை போட்டு தமிழர்களை அறியாமை இருளில் கிடத்தி அரசியல் வணிகத்தில் இலாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறது. அந்நாளையத் தமிழ்ச்சான்றோர் விதைத்தவற்றின் பயனையெல்லாம் தான் மட்டுமே அறுவடை செய்து கொழுத்துக் கிடக்கின்றது தமிழ் நாட்டின் மாபெரும் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான. நாம் என்றைக் கும் நினைவுகூர வேண்டியவரான ம.பொ.சியின் நூற்றாண்டு விழாவில் அவருக்குச் சிலைவைக்கவும் நினைவு அஞ்சல் தலை வெளியிடவும் அவரது நூல்களை நாட்டுடமையாக்கவும் உத்திரவிடுவதாக. தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விழா மேடை யிலேயே அறிவித்தார். அஞ்சல் தலை வெளியிடப்பட்டது, நூல்களும் நாட்டுடமையாக்கப் பட்டன. தமிழக மக்களுக்கு எந்நாளும் தமிழ்த் தேசியத்தை அடையாளம் காட்டும் ம.பொ.சியின் சிலை அமைப்பதாக 2006-ல் செய்த அறிவிப்பு மட்டும் இன்றுவரையிலும் அறிவிப்பாகவேஇருந்து வருகிறது. சிலை அறிவிப்பை அடுத்து சிற்பி மணிநாகப்பாவின் சிற்ப அரங்கில் ம.பொ.சி.யின் ஆளுயரச் சிலையும் தயாராகிவிட்டது. ஆனால் அந்தச் சிலையை நிறுவுவதுபற்றி ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை சிலை வைக்கும் எண்ணமே கிடப்பில் போடப்பட்டது போன்று மௌனமாகிவிட்டது தமிழக அரசு. ம.பொ.சி.யின் திருவுருவச் சிலையைச் சிற்பியின் வலைதளத்திலே எவரும் பார்வையிடலாம் பல்வேறு அமைப்புகளிலிருந்து ஊதப்பட்ட சங்குகளுக்குப் பிறகு அரசின் காது சிறிது அசைந்து கொடுத்தது ம.பொ.சி.யின் இல்லம் இருக்கும் இருசப்ப கிராமணித் தெரு முனையில், என்.கே.டி. மேல்நிலைப் பள்ளி அருகில் ம.பொ.சி.யின் சிலைவைக்கத் தீர்மானித்து சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் சிலைவைக்கப்பட இருந்தஇடத்தைப் பார்வையிட்டுச் சென்றதாகவும் அறியப்படுகிறது செம்மொழி மாநாட்டையட்டி ம.பொ.சி.யின் சிலை திறக்கப்படும் என்ற நப்பாசையில் இருந்த தமிழார்வலர்களுக்கு மீண்டும் ஏமாற்றம். மறுகடியும்தமிழக அரசிடம் பெருத்த மௌனம்! மலினப்பட்டுப்போன திராவிட அரசியலின் வழமையான போக்கு, சிலை அமைக்கும் முயற்சியைத் தள்ளிப் போடு கிறதா? வாக்கு வங்கி அரசியல் நடத்தியும் சாதி ஓட்டுக ளுக்காகக் கூழை கும்பிடு போட்டும் பதவி வேட்டை மட்டு« ம குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சூழலில் வெறுத்துபோய் இருக்கின்ற தமிழக மக்களுக்கு இப்பெருத்தலைவரின் சிலை மீண்டும் தமிழ்த் தேசியம் குறித்த ஓர்மையை ஏற்படுத்திவிடுமோ. தமிழ் அடையாளம் குறித்த சிந்தனை கிளர்ந்துவிடுமோ என்று அச்சமுறுகிறதா தமிழக அரசு? தமிழக அரசின் இச்செய்கை தமிழக மக்களுக்கு நிச்சயமாக நன்மையைத் தராது.

மறக்கடிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகளின் சிலைகள் தமிழகம் முழுவதும் நிறுவப்படவேண்டும் தலைவர்களைச் சாதிச் சிமிழுக்குள் அடைத்து அதன் அளவில் அவர்களை முடக்கிப் போடாமல் அவர்களது வரலாற்றைப் பாடப் பத்தகத்தில் வைத்து அவர்களைத் தமிழ்த் தேசியத் தலை வர்களாக அடையாளம் காட்ட வேண்டும். தூய தமிழ்ச் சிந்த¬னையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் வளரும் இளம் தலைமுறையாம் மாணவர்களுக்குவழி காட்டு தலா கவும் வளமூட்டுவதாகவும் அமைய அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோக்கில் ம பொ சி யின் சிலையை சென்னை மாநகரின் மையப்பகுதியில் அரசு உடனடியாக நிறுவ அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

நன்றி : மண்மொழி ( கீற்று.காம்)

சனி, நவம்பர் 20, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 6

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி .....

ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) முன்பாக நண்பரொருவர் வேர்களின் மூன்றாம் இதழில் இதே கட்டுரையின் ஒரு பகுதியில் நான் கராத்தே கன்னியர்கள் என்று குறிப்பிட்டது பற்றி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார் . அதாவது , ''நாங்களே ஒரு சிலர்தான் இயக்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றோம் , நாங்களும் கூட கராத்தே கற்பது தவறாகுமா ? '' என்று . முதலில் கட்டுரையில் கராத்தே கற்பது பற்றிய கருத்தையே நான் குறிப்பிடவில்லை . முற்போக்கு வேடம் கட்டிய அவைகளுக்குள் உள்ள ஊத்த நாறிய நடைமுறைகளையே குறிப்பிட்டு இருந்தேன் . குறிப்பாக நன்கொடை வாங்குவது குறித்து மட்டுமே கட்டுரயின் அவ்விடத்தில் எழுதியிருந்தேன் . மீண்டுமொருமுறை வாசித்து தெளிக . கராத்தே கற்றோ கற்காமலோ இன்று இயக்கங்களில் இணைந்து குமுக மாற்றுப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தலை வணங்குகிறேன் !

கராத்தே கற்பது பற்றிய வினாவை எழுப்பியிருப்பதால் அது குறித்த என் கருத்தையும் இங்கே சொல்லிவிடுகிறேன் . கராத்தே கற்பதை ஆதரிக்கிறேன் , அதே நேரத்தில் வேற்று விளம்பரத்திற்காக மட்டும் பயன்பட்டால் அது போக்கிரித்தனமாகும் . குமுக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அது அமையும் போதுதான் லட்சியப் பாதையின் கனவுகள் நனவாகும் .
''சமுதாய மாற்றத்திற்காக தீவிரவாதிகள் படையில் முன்னணி வீரர்களாய் , முன்னோடிகளாய் தம்மை இழப்பதற்கு தயார்நிலையில் இருப்பவர்கள் அற்பனத்தை மேற்கொண்ட துறவிகள் ! இப்படிப்பட்ட தீவிர நிலைக்கு நம்மை ஆயத்தப்படுத்தி எதிர்கொள்ளும் சவாலை எற்றுவாழ வழிகாட்டுவதன் வார்தைப்பாடுகள் '' ( ௧)

( தீவிரவாதிகள் என்று தவறான சொல் இங்கு பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தங்களை போராளிகள் என்று குறிப்பிடுவதாக நினைக்கிறன் ) இப்படி , ஒரு புரட்சியை எழுத்தளவில் திருச்சவை நிறுவனங்கள் தங்களின் ஏடுகளில் எழுதி நிறைத்து வைத்துள்ளன . எதார்த்தத்தில் இவற்றில் எதை நடைமுறையாக்கி இருக்கின்றார்கள் . கூட்டுடமைத் தத்துவத்தின் எழுச்சியின் போது அதை மிஞ்சுகிற ரேரும் நோவரும் என்ற புரட்சிக் கட்டுரையை எழுதித் தள்ளியது திருச்சவை . ஆனால் செயல்பாட்டில் முதலாளித்துவத்திற்கு சோரம் போனது.

1. தெலுங்கர்களும் , மலையாளிகளும் உள்ள அவைகளில் எத்தனை தமிழர்களுக்கு பதவி கொடுத்துள்ளனர் ? உயர்பதவிகளை இன்று யார் வைத்துள்ளார்கள் ? பட்டியலிட்டால் முகத்திரை கிழிந்துபோகும்!
2. சாதிவெறி கொண்டு அலையும் நிறுவனத் தலைமை எங்கு தொல் தமிழருக்கு உரித்தான இடத்தை கொடுத்துள்ளது ? அவர்களது இடங்களைப் பிடித்து வைத்துகொண்டு ''பறையனும் பள்ளனும் இப்படிதான் ''என்றுதானே திமிர் கொண்டு பேசித்திரிகின்றனர்?
3. சேலம் ஆயர் இல்லத்தில் ஒரு பெண் குழந்தை தொழிலாளி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி சீரழிக்க பட்டபோது , புரட்சி வேடம் கட்டிய பெண் விடுதலை பற்றி வெடித்துப் பேசும் அவைகளெல்லாம் சொரிந்துகொண்டா இருந்தன ?
4. புதுபட்டிச் சிற்றூரில் அங்கி போட்ட வெரிநாயோன்று கன்னியர் இல்லம் புகுந்து வேலைகாரப் பெண்ணை நாசம் செய்து வந்தபோது உருட்டிமிரட்டி அமுக்கிவிட்டது துறவிகள் இல்லையா ?

போர்கலைகள் இங்கெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்கிறதா ? தற்காப்புக்காக கற்கும் போர்கலைகளுக்கு ஒரு வரம்பு உண்டு. தற்காப்பு என்பது போர்கலையின் ஒரு சிறு பகுதியே ! அநீதியை எதிர்த்துப் போராட தன்னை அர்பனிப்பவந்தான் போராளி . தன்னை தற்காத்துக் கொள்பவன் மட்டுமல்ல . தற்காப்பு அம்மாதிரி அநீதிக்கெல்லாம் எதிரான போரின் ஒரு பகுதியாக அமையும் போது பாராட்டாது இருக்க முடியுமா?
பணிசெயும் இடங்களில் ஏற்படும் இடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ளத்தான் இக்கலையை பயன்படுத்துகிறோம் என்கிறார்கள் சிலர் ,சரி .

1. எத்தனை பேர் இக்கட்டுகளும் , இடர்பாடுகளும் , எதிரிகளும் நிறைந்துள்ள இடங்களில் இன்று பணியாற்றுகின்றனர்.?
2. அப்படி ஈடுபடுகின்ற தோழர்களுக்கு உயர்நுட்ப தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படுகிறதா ?
3. இதுவரை கற்றுள்ளது நடைமுறைப் படுத்தக்கூடிய கலைகளா அல்லது உடற்பயிற்சிக்காக அளிக்கப் படுபவைகளா ?
4. தற்காப்புக் கலைகளும் சரி , போர்கலைகளும் சரி கற்கிரவர்கள் போராளிகளாக அல்லது குமுக மாற்றுப் பணியில் ஈடுபடுபவர்களாக இருந்தால் முதன் முதலாக ,தங்களுக்கு இதுவெல்லாம் தெரியும் என விளம்பரப் படுத்துவார்களா ? விளம்பரப்படுத்தினால் அவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன ?
5. ஒன்றை புரிந்துகொள்க , இயக்கங்கள் நிறுவனங்களாக மாறுவது இயல்பு. நிறுவனங்கள் ஒருபோதும் இயக்கங்களாக மாறாது. இறுக்கமான நிறுவனகள் உடைக்கப்பட்டு புதிய மக்களியக்கங்களுக்கு அவற்றை நல்ல உரமாக்க வேண்டும் . செத்துப்போன நிறுவனங்களை கட்டியளுவதைவிட்டு மக்களியக்கங்கள் துளிர்த்து எழட்டும் .
கறந்த பால் முலை புகா , கடைந்த வெண்ணை மோர்புகா. உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா , விரிந்த பூ உதிர்ந்தகாய் மீண்டும் போய் மரம்புகா , இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! ( 2)

உள்ள நேர்மையோடு தங்களைத் தாங்களே வினவுக்குட்படுதுவதே சரியானது. வினா ஒன்றை எழுப்பியதால் எம் கருத்தை இங்கு எடுத்துரைப்பது சரி என்றே இவ்வாறு விடையருத்தோம். இனி கட்டுரையைத் தொடர்வோம்...

தினமலரின் வாரமலரில் இரு திங்களுக்கு முன் ஒருவர் கடிதமொன்றை எளிதியிருந்தார். ( 3) திருச்சி மதுரை சாலையிலுள்ள பஞ்சப்பூர் மக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அது தேவையற்றது எனவும் குறிப்பிட்டு இருந்தார் . உண்ணாதிருந்து போராடினால் அதிகாரிகள் வருவதில்லை . மனு கொடுத்தால் தூர தூக்கிப் போட்டுவிடுகிறார்கள் . சாலை மறியல் செய்தால் ஓடி வருகிறார்கள் . பிரச்சனை தீர்கிறது. மக்களுக்கு வேறு வழியில்லாமல் அடைப்பது யார்? சரி மக்கள் தாங்கள் உரிமைக்காக போராடும் போது அதை எதிர்கின்ற ஒரு பிரிவினர் மற்றொன்றையும் நோக்க வேண்டும் .

தொடரும் ....

செவ்வாய், நவம்பர் 16, 2010

சுப . வீக்கு கலங்கியிருப்பது பித்தமல்ல! சித்தம்! - அரிமா


16.11.2010 செவ்வாய்

கீற்று இணையத்தில் மீண்டும் ஒருமுறை சுபவீரபாண்டியன் திராவிடம் குறித்துத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்! “சுபவீக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பலமுறை என்னை உந்தும், நச்சரிக்கும், கேட்டுக் கொள்ளும் நண்பர்களுக்கு முதலில் நான் சொல்வது, சுபவீயைப் பற்றியோ அவரது வீம்பு மிகுந்த கருத்துக்கள் பற்றியோ பதில் அளித்துக் கொள்ள நமக்கு நேரமில்லை. நம் நாடு, நம் மக்கள், நம் மக்களின் விடுதலை என்று பயணப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் சுபவீ போன்றவர்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருப்பது நேரத்தை வீணடிப்பதுதான் என்று கருதுகிறேன்!
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் எவராவது ஒருவர் இன்னும் திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் என்றால் அந்தக் கயமைக்கும், கழிசடைத்தனத்திற்கும் என்ன பெயர் சூட்டுவது? நாட்டுப்புறத்திலே சொல்வார்கள். ஒருவன் வெளிக்கு இருந்து கொண்டே வெள்ளரிக்காயைத் தின்று கொண்டிருந்தானாம்! பெரியவர் ஒருவர், “ஏண்டாப்பா, இருந்துக்கிட்டே தின்னுறியே! கால் கழுவிவிட்டு பிறகு உண்டால் என்ன?” என்றாராம். பையன் வீம்புக்கு, “நீ என்னவே சொல்லுறது? நான் இருந்துக்கிட்டும் சாப்பிடுவேன்! தொட்டுக்கிட்டும் சாப்பிடுவேன்!! உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போவும்” என்றானாம்.
சுபவீ திராவிடத்தைத் தொட்டுக்கிட்டுதான் சாப்பிடுவார்!
பாவாணரை சற்று இழுத்திருக்கிறார்! பாவாணராகட்டும், பாவேந்தர் ஆகட்டும், மறைமலையடிகளாகட்டும், அறிஞர் குணாவாகட்டும்! இவர்கள் அனைவருமே தத்தமது ஆய்வின் வழியாக முற்றான உண்மைகளை முழுமையாக நமக்கு ஆக்கித் தருகிறவர்கள் அல்லர்! அப்படி அவர்கள் சொல்வதும் இல்லை! ஆனால், வலுவான திருப்புமுனைகளை அவர்கள் நமக்கு காட்டித் தந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைத்த தரவுகளின் வழியாக அதிர்வை ஏற்படுத்தும் ஆய்வுகளை அரும்பாடுபட்டு படைத்திருக்கிறார்கள். குணா ஐயா அவர்கள் சொல்வார்கள். “பாவாணரின் தோள்மேல் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகள் நாம். பாவாணருக்கு ஒரு தொலைவு தெரியுமென்றால், அவரது தோள்மீது அமர்ந்திருக்கிற நமக்கு சற்று அதிகமாகவேத் தெரியவேண்டும்!” என்பார்.
திராவிடத்தை வேரறுக்கும் திருப்பணியைச் செய்கிற நமக்குத் தோள் கொடுத்தவர் அந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரே! அவர் பாதம் தொட்டு வணங்குவோம்!
அவருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற ஒரு பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் அதை மறைத்துவிட்டார்கள் என்றும் சுபவீ புலம்பியிருக்கிறார். பட்டத்தைக் கொடுத்தது, ஈ.வெ.இரா. அவர்கள்! அதாவது, “நான் ஒரு கன்னடன்” என்று அறிவித்த பெரியார் அவர்கள்! “தமிழர் கழகமாய் தொடங்க முடிவு செய்ததை திராவிடர் கழகமாக அறிவித்தவர்” “வீட்டு மொழியாக, தெரு மொழியாக ஆங்கிலம்தான் வரவேண்டும் என்று மொழிந்தவர்” “வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று அறிவுருத்தியவர்” “தமிழ், காட்டுமிராண்டி மொழி என்றவர்” இதுமட்டுமா? பாவாணரும் பெரியாரும் சந்தித்தார்களா? என்றால், ஆம்! அப்படிப்பட்ட சந்திப்புகளுள் ஒன்றுதான் இதோ!
பெரியார், ஆங்கிலப்பள்ளிகள் தொடங்கிக் கொண்டேயிருந்தார். பாவாணரிடம் சிலர், தமிழ் மொழி ஆய்வுக்காக தமிழ்ப் பள்ளி ஒன்று தொடங்க பெரியாரிடம் சென்று பேசுங்கள் என்றார்கள். பாவணரும் மிகுந்த நம்பிக்கையோடு போனார். காசு பெரியாரிடம்தானே இருந்தது! “பள்ளியில் இறைவாழ்த்துக்குப் பதிலாக உங்கள் வாழ்த்தே பாடுவோம்” என்றெல்லாம் சொல்லிப் பாவாணர் தமிழ்ப் பள்ளி அமைக்க பெரியாரிடம் வேண்டினார்! பெரியார் ஒப்புக் கொள்ளவே இல்லை! இப்படிப்பட்ட பெரியார் எப்பேர்ப்பட்ட பாவாணருக்கு “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்று பெயர் சூட்டியதிலும் உள்நோக்கம் இருந்திருக்கும்! இன்று அவரது பிறங்கடையான சுபவீ அதைச் சுட்டுவதிலும் உள்நோக்கம் இருக்கும்!
1947ல் திராவிட நாடு ஏட்டில் “ஐ.என்.ஏ. திராவிடர்” என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டார் பெரியா£! நேத்தாஜியின் இந்திய தேசியப் படையில் சேர்ந்து உழைத்தது, உயிர் கொடுத்தது, உயரிய ஈகம் செய்தது அனைத்தும் தமிழர்கள் ஆனால், கட்டுரையில் வரிக்கு வரி, திராவிடர் என்றே தமிழர்களைச் சுட்டுகிறார்! அதை அண்மையில் தெலுங்கர் ஒருவரால் நடத்தப்படும் இதழ் ஒன்று மறுபதிப்பு செய்திருக்கிறது! இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவில்லை! விஷ ஊசி ஏற்றுகிறார்கள்! நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
“திராவிடத்தை எதிர்த்துக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் அல்லது அமைப்புகள் பார்ப்பனருக்கு ஆதரவு” என்று முடித்திருக்கிறார். முதலில் மென்மையாக ஒன்றைச் சொல்வோம். “பார்ப்பனர் வேறு! பிராமணர் வேறு!” பிராமணர் தமிழரல்லர்! பிராமணர் வடுகர்! தமிழ் பேசும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் சிலர் இருக்கிறார்கள்! தமிழ்நாட்டில் இவர்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருப்பார்கள்! இவர்களுள் இனத்திற்கும் மொழிக்கும் விடுதலைக்கும் இரண்டகம் செய்வோரைக் கட்டி அணைத்து முத்தமிட எந்தத் தமிழனும் சொல்லவில்லை! எந்தத் தமிழ்த் தேசிய அமைப்பும் சொல்லவில்லை! திராவிட எதிர்ப்பில் முனைப்போடு நிற்கிற எத்தனைப் பேர், எத்தனை அமைப்புக்கள் பார்ப்பனரோடுக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!
ஆனால், நீங்கள் கருணாநிதியோடு கொஞ்சிக் குலவுவது எப்படி? திராவிடன் என்கிற பேரிலே தெலுங்கனையும் கன்னடனையும் மலையாளிகளையும் ஆளவிட்டு சுரண்டவிட்டு தமிழனை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டபிறகும் என்னடா இது திராவிட ஓர்மை! மண்ணாங்கட்டி ஓர்மை!
காமாட்சி நாயுடு திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது தெலுங்கு பிராமணர் உள்ளிட்ட 18 சாதிகளை இணைத்துத்தான் கட்சி கண்டார்! அப்போது, சுபவீ எதைச் சூப்பிக் கொண்டிருந்தார்!
தமிழ்ப் பார்ப்பனர் காஞ்சி மடத்திற்கும் மடாதிபதியாக இயலாது! காமாட்சி நாயுடு கட்சியிலும் சேர இயலாது! தெலுங்கு, கன்னடர்தான் வடுகர்! அவர்தான் திராவிடர்! பிராமணர் என்பார் வடுகர்! அதாவது, தெலுங்கு, கன்னட இனத்தைச் சேர்ந்தவர்கள்! செயேந்திர சரஸ்வதி, செயலலிதா, சோ, கருணாநிதி, விசயகாந்து ஆகியோர் இனத்தால், திராவிடர் அல்லது வடுகர்! சாதியால் ஒருத்தர் பிராமணர், நாயக்கர், சின்ன மேளம் அல்லது பொட்டுக்கட்டி!
நாங்க, மறையர், மள்ளர், வன்னியர், நாட்டுக் கோட்டை செட்டியாரு, நாடார், பரவர், கரையார், முக்குவர், வேளாளர், தேவர், கள்ளர், மறவர், பார்ப்பனர் இது போன்ற நாங்களெல்லாம் தமிழர்!
“தமிழர் என்று சொன்னால், பார்ப்பனர் உள்ளே வந்துவிடுவர்! அதனாலத்தான், திராவிடர் என்கிறேன்” என்றார் பெரியார்! ஆனால், அவர் பிராமணரோடு மிக நெருக்கமாக இருந்தார்!
பெரியார் குற்றாலத்திலே ராஜாஜியோடு தீவிர ஆலோசனை செய்து கட்சிச் சொத்தைத் தொண்டர்களிடம் விடாமல் வாரீசு அரசியலுக்காக மணியம்மையைத் திருமணம் செய்யப் பரிந்துரைத்தது இருவருக்கும் இடையில் நடந்த கொஞ்சலா? குலாவலா? பெரியார் கன்னடர், ராஜாஜி தெலுங்கர்! அவர் பலிஜா நாயுடு! இவர் தெலுங்கு பிராமணர்!
ஆக, நீங்க இனமாக ஒன்று சேர்ந்தால் அது, அரசியல்! பகுத்தறிவு! ஆனால், ஒடுக்கப்பட்டுக் கிடக்கிற நாங்க ஒன்று சேர்தால் திராவிடம், பார்ப்பனீயம் என்றெல்லாம் பிதற்றுகிறீர்கள்!
தமிழ்நாட்டில் நிறைய பேருக்குத் திராவிட நோய் கண்டிருந்தது! நல்ல தமிழ்த் தேசிய மருந்து கண்டு அதில் பலர் நோய் நீங்கி நலமுடன் திடமுடன் இருக்கின்றனர்! ஆனால், சுபவீக்கு நோய் கண்டமாதிரித் தெரியவில்லை! திராவிடப் பேய் பிடித்திருக்கிறது போல இருக்கிறது! வேப்பிலை, வெத்திலை எல்லாம் சரிப்பட்டு வராது! நல்ல மனநல மருத்துவர் வேண்டும்! சுபவீ விரைவில் நலமடைய வாழ்த்துவோம்!

- அரிமாவளவன்

செய்தி வெளியீடு : ஊடகப் பிரிவு , தமிழர் களம் . தமிழர்நாடு .

திங்கள், நவம்பர் 15, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 5


சென்ற கட்டுரை தொடர்ச்சி .....

துறவற அவைகள் ஏடுகளில் விதவிதமாக விளம்பரம் செய்து இளைஞர்களையும் , இளம் பெண்களையும் தத்தம் அவைகளில் சேர அழைக்கும் . இயேசுவை ஏழைகளில் காண .... சபை உன்னை உருக்கமாய் அழைக்கிறது. - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கிட - நலிவுற்றோருக்கு நற்செய்தி அறிவித்திட ,- என நடைமுறையோடு தொடர்பில்லாத சொல்லடைகளை வைத்து மயக்குற அழைப்பார்கள் . ஒவ்வொரு அவையும் இம்மாதிரி ஆள்பிடிப்பதர்க்கு என்றே ஆட்களையும் , தொடர்பாளர்களையும் நிரம்ப வைத்திருப்பார்கள் . ஆதிக் கிறுத்துவரின் வாழ்வைக் கண்டு ஆண்டவன் அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினானாம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத தூரம் வந்துவிட்ட இக்காலத்தில் கடவுளுக்கே இவர்களால் நெருக்கடிதனே !

சின்ன அகவையிலேயே பிள்ளைகளைப் பிடிக்க அவைகளுக்குள் போட்டி நடக்கிறது . தமிழகச் சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைச் சார்ந்து வாழப் பழக்கப்பட்டவர்கள் . தாங்களாக தங்களது வாழ்வு பற்றி முடிவு எடுக்க திராணியற்றவர்கள். ஆக இம்மாதிரி துறவற அவைகளில் சேருவது பெரும்பாலும் பெற்றோர்களின் விருப்பு வெறுப்பு எனும் அடிப்படியிலேயன்றி வேறொன்றுமில்லை . அவர் தற்சார்போடு முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளவரானால் ஒருவேளை நம்மோடு சேரமட்டாரோ என்கிற அச்சம் அவையருக்கு உண்டு . எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் கொத்திக்கொண்டு போகிற அவைகளும் உண்டு . கவர்சிகரமான விளம்பரங்களும் பசப்புச் சொற்களும் கூறி அழைத்துக்கொண்டு செல்வாரும் உண்டு.

உருவாக்கத்திற்கும் பயிற்சியளித்தலுக்கும் வேறுபாடு உண்டு. இயல்பும் , பட்டறிவும், துணைகொண்டு தங்களது வாழ்க்கைக்கும் , வளர்ச்சிக்கும் , பொறுப்பைத் தாங்களே எடுத்துக்கொண்டு பிறரின் வழிகாட்டுதலோடு வளர்வது உருவாக்கம். குதிரை, நாய், கிளி, போன்ற உயிரினங்களுக்கு அளிப்பது பயிற்சி . இதில் தனிச் சிந்தனைக்கு , பொறுப்பெடுத்து செய்தல் போன்றவற்றிற்கு இடம் கிடையாது . கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும் . சொன்னதை செய்ய வேண்டும் . செய்தால் பாராட்டு கிடைக்கும் . தட்டிக் கொடுப்பார்கள் . குருட்டுத்தனமாய் பணிந்து வாழ்ந்தால் துறவற வாழ்வில் கிடைப்பதும் அதுவே . சிந்திப்பது , வினா எழுப்புவது, எதார்த்தத்தில் பெரும் குற்றங்களாகும் . ஆகவே பெரும்பாலான துறவியருக்கு சொல்லிக் கொடுத்ததே தெரியுமேயன்றி, தற்சார்பு, தனிச்சிந்தனை என்பதெல்லாம் கிடையாது . வினாக்கள் கேட்டதற்காக துறவறச்சவையிலிருந்து , குருமடங்களில் இருந்தும் வெளியே வீசி எறியப்பட்டவர்களின் சோகக் கதைகள் ஏராளம் . தேவ அழைத்தல் உனக்கு இல்லையென்று காரணம் சொல்லுவார்கள் . ஏதோ கடவுளுக்கு சித்திரகுப்தன் வேலை பார்பதுபோல ! நல்லவர்களை, நேர்மையானவர்களை துறவறமும், கிறுதுவச்சமயமும் நிறையவே இழந்துள்ளன .

உருவாக்க நேரத்தில் நாள் அட்டவணை ஒன்று பின்பற்றப்பட வேண்டும் . பசித்தாலும் பசியாவிட்டலும் , மணியடித்தால் தீனியின் முன்னால் போய் நிற்க வேண்டும் . ஒர்மையில்லா ஒரு மன்றாட்டை படிப்பார். பின்பு தீவனம் போடப்படும். சட்டம் , ஒழுங்கு, எனும் பெயரில் ஒரு போலித்தனமான , மனித உணர்வற்ற கடமைகள் ஆற்றப்படும்.

ஒருநாள் அது மாலை நேரத்து வேலை நேரம். கையில் வாளியைத் தூக்கிக்கொண்டு செடிகளுக்கு தம்பியொருவன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான், இடது கையில் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ! மழை கொட்டுகிறது. அவனோ கடமையைச் செய்துகொண்டிருந்தான் . அருகிலிருந்த பெரிய சாமியார் கேட்டார் . என்னடா முட்டாள்தனமான செயலென்று. அவனாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அவனுக்கு கொடுத்திருந்தால் அவன் அங்கு வாழவும் முடியாது.

விதவிதமான தியானங்களை அவர்களுக்கு நடத்துவார்கள் . கண்ணை மூடி நிலவைக் காண சொல்லுவார்கள் . கண்ணை மூடி மென்மையான உணர்வுகளை உணர அழைப்பார்கள். மெல்லிய ஒளியில் அமர்ந்து பாடல்களை இசைத்து கடவுளைக் காண முயலுவார்கள் . பின்பு சில நிமிடங்களில் கிடைத்த உணர்வுகளை மற்றவர்களோடு பகிரச் சொல்லுவார்கள் . இந்நேரத்தில் பெரும்பாலும் கதையளப்பார்கள் .தியானத்தின் போது தூங்கியவன் கூட கடவுளைக் கண்டதாக நாம் நம்பும்படி பகிர்ந்துகொள்வான். வயிறு புடைக்க உண்டு களித்துவிட்டு ஏழைகளுக்காக உருக்கமாக வேண்டுவர் . மழைக்காக செபிப்பர். அதே நாளில் மாலை நேர விளையாட்டைக் கெடுப்பதுபோல மழை வந்துவிட்டால் கடவுளைக் கரித்துக்கொட்டுவர்.

ஈராக்கின் மீது அமெரிக்க வல்லட்சிப் படைகள் குண்டுமாரி பொழிந்து வந்தநேரம். ஒவ்வொருநாளும் தொலைக் காட்சியின் மாலை செய்தியிலும் போர் பற்றிய செய்தித் தொகுப்பு காட்டப்பட்டது. அதை காண முண்டியடுத்துகொண்டு பலர் ஓடுவர். ஆர்வமாய் அதை காண்பர். பின்பு அந்த ஈராக்கிய மக்களுக்காக கண்ணீர் சிந்தி மன்றாடுவர். ஒரு நாள் போர் நிறுத்தம் செய்தியாக வாசிக்கப்பட்டது . - அய்யய்யோ போர் நின்னுடுச்சா ! - என மிக இயல்பாக அக்கநீர்த்துளி மகான்கள் உச் கொட்டி வருத்தப்பட்டுக் கொண்டனர்.

உருவாக்கத் தளங்களில் போய் பார்த்தால் வானுலகில் உள்ளது போன்ற காட்சியை காணலாம் . அமைதி! கண் மூடிச் செபிக்கும் இளைஞர்கள் , கடமைகளை இயந்திரம் போல ஆற்றும் உயிர்கள் ! இப்படி பலப் பல காட்சிகளை காணலாம். இது ஒரு சுடுகாட்டு அமைதி. வாழ்வோடு தொடர்பில்லாத செபங்கள். அன்னியபடுக்கிடக்கும் ஒரு வாழ்வு . உழைப்போடு தொடர்பில்லாத உணவு. மக்களின் அன்றாட பிரச்சினைகளை , வாழ்வை, பொழுது போக்குகளை , உறவுகளை , அறியாத குமுக ஆய்வாளர்களாம் இவர்கள் !

மனித ஒர்மயைதான் அம்மானாக்கரில் முதன்முதலாக மழுங்கடிக்கிறார்கள் . ஆகவே முதலில் பிற மனிதரிடமிருந்து அவர்களை அப்புறப் படுத்திவிடுவார்கள். மக்களோடு மக்களாக வாழ்கிறவனுக்கு இருக்கிற பட்டறிவு உள்ளே பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இருப்பதில்லை . நான்கு சுவற்றுக்குள் உலகமே இருப்பதாய் நினைக்கும் கிணற்றுத் தவளைகள் இவர்கள் . இதை நியாயப் படுத்துகிற ஒரு கருத்தியலையும் எண்ணத்தில் ஏற்றி வைத்திருப்பார்கள் . '' செபித்தால் எல்லாம் மாறிவிடும்'' என்று சொல்லுவார்கள் . செய்ய வேண்டியதை செய்ய மாட்டார்கள் . தங்களது சோம்பேறித்தனத்தை , ஈடுபாட்டை நோக்கிய அச்சத்தை , நம்பிக்கையற்ற தனத்தை இப்படி புனிதப்புனுகு போட்டு மறைப்பார்கள்.

சின்ன கயிறு பின்னி வைத்துகொண்டு வெள்ளிக் கிழமை இரவுகளில் விளக்கை அணைத்துவிட்டு தங்களுக்கு தாங்களே கசையடி கொடுத்துக் கொள்கிறார்கள் . இயேசுவின் கசயடியை தாங்களே பெற்றுக் கொள்கிறார்களாம் . இது ஒரு நாடகம் . நசுக்கப்பட்ட மக்களின் சார்பாக இயேசு எடுத்த உறுதியான சில நிலைபாடுகளுக்காக கிடைத்த தண்டனை அக்கசயடி . அவர் தான் யூத இன மக்களுக்காக போராடி மாண்ட ஒரு வீரப் போராளி. கோழைகள் எப்படி இதில் பங்கேற்க முடியும் ? ஏழைக்காக ஒரு நேர உணவை ஒதுக்க மாட்டார்கள் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் இணைய மாட்டார்கள் . தவறை தவறு என சுட்டிக்காட்ட திராணியற்றவர்களாக இருப்பார்கள் . ஆயரை எதிர்த்தால் எதிர்காலம் கிடையாது என எண்ணுவார்கள். அதிபரை எதிர்த்தால் அழிந்தோம் என்பார்கள் . இவர்கள் இயேசுவின் மாணவர்களாம் !

உருவாக்க காலம் என்பது அவைக்கு அவை மாறுபடுகிறது . பெரும்பாலான அவைகள் பொன்னான இளமைக் காலத்தை நீண்ட கால பயிற்சி எனும் உருளையை ஏற்றி சிதறிடித்து விடுகிறார்கள் . 16 ஆண்டு கால பயிற்சி கொடுப்போரும் உண்டு. பலருக்கு பயிற்சியின் நிறைவில் அஞ்சலகம் சென்று ஒரு தொலைவரி ( தந்தி ) விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி அனுப்பத் தெரியாது. ஒரு மக்கள் கழகம் ( சங்கம் ) அமைப்பது எப்படி என்று தெரியாது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடவோ , வழிநடத்தவோ தெரியாது . தமிழ் பேச தெரியாது. ஆனால் கத்தி கரண்டி , முள் வைத்து உண்ணத் தெரியும் , பார்பதற்கு கொழுகொழுவென இருக்கும் பலருக்குள் ஆன்மா இருக்காது. மனித பண்புகள் இருக்காது. வெயிலில் நடக்க முடியாது. நகரப் பேருந்தில் பயணம் செய்ய முடியாது. மக்களுக்காக தெருவில் இறங்கி கூக்குரலிட முடியாது. புரட்சிக்குப் பூபாளம் பாடும் புத்துலகச் சிற்பிகலாம் இவர்கள்!

குருமடத்திலோ, துறவற வாழ்விலோ ,நுழைந்துவிட்டால் , அது ஒரு புனிதமான வாழ்வு. போய்விட்டு திரும்பக்கூடாது என எளிய மக்கள் பலர் நினைக்கின்றனர். ஆகவே ஒன்றுமறியாமல் உள்ளே நுழைந்த இளையோருக்கு உள்ளே போனபின்தான் உள்ள நிலைமை புரிகிறது. வெளியேறிவிட வேண்டும் என நினைத்தால் குமுகாயம் ஏற்றுக்கொள்ளது எனும் பெருங்கவலை வாட்டுகிறது.
உள்ளேயோ அதைவிட பெருங்கொடுமை! ஆக மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் வாழ்வில் பிடிப்பிழந்து நடைபிணங்களாக அலைவோரே பலர்.

இவ்வக்கட்டைச் சிறப்பாக பயன்படுத்தி கொள்வர் அவை உயர் அதிகாரிகள் . பிடித்த எலியை எப்படி பூனை அணு அணுவாகச் சாகடிக்குமோ அப்படி கொல்லுவர் . வெளியே அனுப்பி விடுவோம் என மிரட்டுவார். இளம் உள்ளங்கள் பயந்து நடுங்கி சாகும். இயேசு ஏழைகளை நேசித்தார் என்று தொண்டைகிழியப் பேசும் இவர்கள் ஏழை மாணவர்களை தம் அவைக்கு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் .
சாமானியரை நேசித்த இறைவன் என முழங்குவார்கள் . தொல் தமிழ் மாணவர்களை எப்படியாவது பயிற்சிக்காலத்தில் ஒழித்துக்கட்ட முயல்வார்கள். தாய் தகப்பனை அண்ட விடமாட்டார்கள். அதுவும் மலையாளிகள் வாழும் அவைஎன்றால் தமிழ் மாணவ, மாணவியருக்கு கொடுமையான வாழ்வு வேறெங்கும் அமையாது.

இப்பயிற்சிக்காலத்தில் ஒட்டு மொத்தத்தில் வழிநெடுக பொறிகள் வைத்திருப்பார். தப்பிப்பது மிக கடினம் . அதிபர்களுக்கு சிங்கி தட்டவேண்டும் . அப்போது தப்பிக்கலாம் . தப்பித் தவறி மனித உரிமை , வினா எழுப்புதல் , தற்சார்பு , என மனிதப் பண்பில் உயர்ந்தால் அந்தோ பரிதாபம் ! கோடரி அவர் வாழ்வைத் தாக்கும் , எனவே , பயிற்சிக்காலம் முடியும் வரை ஒரு போலி வேடம் தரிப்பார் மாணவர். கூழைக்கும்பிடு போடுவார். குருட்டுப் பணிவை வெளிச்சம் போட்டுக்காட்டுவார் . பயிற்சியின் இறுதியில் மனித பண்பு கொஞ்ச நஞ்சம் மீதமிருந்தால் அவருக்கு மேலும் சில ஆண்டுகள் பயிற்சியாக ( தண்டனையாக ) கொடுத்து முழுமையான மனிதபண்பு அவரில் மறைந்து ஒழிந்த பின்னரே இறுதி உறுதிப்பாடு. குருப்பட்டம் போன்ற நிலைகளை அவர்களுக்கு கொடுப்பர். நெருஞ்சி முல்லை விதைத்துவிட்டு நேந்திரம் பழத்தையா தேட முடியும் ? விதைத்ததை தானே அறுக்க முடியும்!

தொடரும்....

ஞாயிறு, நவம்பர் 14, 2010

''தமிழர்களை திருவோடு ஏந்தவைக்கும் திராவிட அரசியல்'' - அரிமா


கோவில்பட்டி - 14.11.2010 ஞாயிறு .

மள்ளர் மீட்பு களத்தின் கொள்கை விளக்க புத்தக வெளியீட்டுவிழா கோவில் பட்டியில் நடைபெற்றது.

தமிழர் களத்தின் மாநில பொதுசெயலாளர் திரு .அரிமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். அதன் விவரம் ....

திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர் .
களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.
நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம் !
தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளைதீர்க்க , களம் அமைத்து விட்டதால் செந்தில் மள்ளரும் , அரிமாவளவனும் மட்டுமே போதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என எண்ண வேண்டாம். ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி , அதனால் நாம் இழந்ததை பற்றியும் , இனி என்ன செய்யபோகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் .
லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல் , தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு . வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் , அதன் கூட்டணி கட்சியையும் தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்ற ஒவ்வொரு தமிழரும் பாடு பட வேண்டும் .

நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம் , இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !! என்று அவர் எழுச்சியுரையாற்றினார்

கூட்டத்திற்கு திரு . செந்தில் மள்ளர் ,தலைமை தங்கினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திரு . தன்மானன் சிறப்புரை நிகழ்த்தினார் . மள்ளர் களத்தின் நிர்வாகிகளும், இளைஞர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு ; ஊடகபிரிவு , தமிழர் களம் .

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா 4


சென்ற கட்டுரையின் தொடர்ச்சி ....


ரேரும் நொவரும் என்று திருச்சவை , ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய மடல் ஒன்றினை தயாரித்து வெளியிட்டது. ( அறிக்கைகளை மட்டும் வைத்து திருச்சவையை எடை போட்டால் போராளி இயக்கங்களை விட புரட்சிகரமானது இத்திருச்சவை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுவோம் கவனம் !) கூட்டுடமைக் (கம்யுனிசம்) கொள்கை உலகின் பல நாடுகளில் வேரூன்ற ஆரம்பித்துவிடும் .அதை கருத்தளவில் எதிர்கொள்ளவே ரேரும் நொவரும் எழுதப்பட்டது . அதன்பின்பு திருச்சவை அதுபோன்ற பல அறிக்கைகளை வெளியிட்டது . தொழிலாளர் நலன் பற்றியும் , தொழிலாளர் சங்கங்கள் பற்றியும் புரட்சிகரமாய் இவை உரையாற்றின . ஆனால் நடைமுறையில் , சங்கங்கள் என்றாலே திருச்சவைக்கு எட்டிகாயாயை போல கசக்கும் . தொழிலாளர் ஒற்றுமை , அவர்தம் உரிமைகள் என்ற சொற்களை கேட்டாலே கோபமும் , சோகமும் , திருச்சவை ' முதலாளிகளை ' கவ்விக் கொள்கிறது .

துணைவியாரை இழந்த பெரியவர் ஒருவருக்கு வயதுவந்த இரண்டு பெண் குழந்தைகள் . ஒருநாள் என்னிடம் வந்து , 'எதாவது வேலை பார்த்துக் கொடுங்கள் , வாழ்க்கையைத் தள்ளி விடுகிறேன் ' என்றார் . தமிழகத்தின் வடபகுதிகளில் வலுவாக காலுன்றி வளர்ந்திருக்கும் ஒரு அவையின் தலைவியை எனக்கு தெரியும். இவருக்காக அவர்களிடம் கேட்டேன் . ''மனமுவந்து'' சரிஎன்றனர். வெங்காலூரில் உள்ள ஒரு இல்லத்தை சொல்லி அவ்வில்லத்தின் தலைவியை போய் பார்க்கச் சொன்னார்கள் . நானும் போய் பார்த்தேன் . ஆளை வேலைக்கும் சேர்த்துவிட்டேன் . இரவுக் காவலர் பணி அவருக்கு . இரவில் கண் விழிப்பார். காலையில் சற்று ஓய்வு எடுப்பார் . ஒரு கிழமை கழித்துப் போய் அவரை பார்த்தேன். சோகமாய் இருந்தார் . பகலிலும் தோட்ட வேலை பார்க்கச் சொல்கின்றனர் என்றார் . நானும் செய்கிறேன் என்ன செய்வது ... என்றார் . எனக்கு தூக்கி வாரிபோட்டது . இல்லத்தலைவியை போய் பார்த்தேன் . அவர் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் உழைத்து மாதம் வெறும் ஐந்நூறு உருவா மட்டும் சம்பளம் கொடுகிறார்கள் . இம்மாதிரி லச்சகணக்கான தொழிலாளர்கள் கிருத்துவ நிறுவனங்களுக்குள் சிதறி கிடக்கிறார்கள் . ஒருங்கினைக்கபடாத தொழிலாளர்கள் என்று இவர்களுக்கு பெயர். குடும்ப சோகங்களை தாளாது இந்த வெம்மையை வாழ்நாளெல்லாம் சுமக்கும் வேதனை மனிதர்கள் , இல்லப் பணியாளர்கள் என்று எல்லா கிருத்துவ நிருவனங்களுக்குள்ளும் வைத்திருகிறார்கள் , சமைக்க , இல்லத்தை தூய்மை படுத்த , காவல் காக்க, என்று பல்வேறு பணிகளை கொடுகின்றனர் . இவர்களுக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட பணி நேரம் இதுதான் என்று கிடையாது. ஆண்டு விடுமுறை கிடையாது. உழைக்க வேண்டும் . மாடு மாதிரி உழைக்க வேண்டும் . தொழிலாளர்களுக்கு விடுப்பு நாட்கள் இருக்கிறது என்று கூட பலருக்கு தெரியாது . நடைமுறை இப்படியிருக்க ,

இந்த திருச்சவையின் புரட்சிகர அறிவிப்புகள் எல்லாம் இந்த உழைப்பு பற்றி , சம்பளம் பற்றி, எதாவது சொல்கிறது என்றால் 'ஆம் ' . வாய் கிழிய பேசுகிறது . ஒரு தொழிலாளியின் மாத சம்பளமானது , அவரது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்கு . குடும்பத் தலைவியும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தை தவிர்க்கும் அளவிற்கு சம்பளம், ( வீட்டுத் தலைவி வீட்டிலிருந்து பிள்ளைகளை கவனிக்க வேண்டுமாம் ) , ஆண்டிலோருமுறை மகிழ்ச்சி பயணம் திருப்பயணம் செல்ல பணம், மருத்துவசெலவுக்கு பணம் , எதிர்கலத்திற்காக சேமித்து வைக்க பணம் , ஒரு இல்லம் அமைத்துக்கொள்ள பணம் , என்று நீண்டு கொண்டே போகிறது . துறவியர் பேரவை கூட்டங்கள் , மறை மாவட்ட அறிக்கைகள் சில நேரங்களில் இச்சம்பளம் பற்றி பேசும்போது மாதத்திற்கு 500 அல்லது 600 என்று குத்துமதிப்பாக சொல்லுவார்கள் . இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடுவார்கள் . ( இந்த சம்பளத்தை வைத்து நாக்கு வழிக்கவா?) அதாவது பல இடங்களில் இது கூட கொடுப்பதில்லை என்று தானே அர்த்தம் . ஆகவே இந்த தொகையே பெரிய கருணை செய்து கொடுக்கும் தொகையாம். இதை செயல்படுத்கிற பெரிய பாக்கியவான்களும் புன்னியவதிகளும் என்ன செய்வார்கள் என்றால் , சம்பளத்தை கையில் கொடுத்துவிட்டு தங்கியிருக்கிற இடத்துக்கு வாடகையாக 150 கொடு , உனக்கு போடுகிற உணவுக்கு ஒரு 200 கொடு என்று பிடுங்கிவிட்டு மிச்ச மீதியை கையில் திணித்துவிட்டு போய்விடுவார்கள் . தொழிலாளர்கள் தங்குவதற்கு கோழிக்கூண்டு போல் சின்ன ஒரு குகையை கொடுப்பார்கள் . பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த இருட்டறையை கொடுப்பார்கள் . செத்தொழிய வேண்டிய தலைமுறை இது.

கேரளாவில் தொழிற் சங்கங்கள் இருக்கின்றன , அங்கே இப்படி வாலாட்ட முடியாது . ஆகவே கேரளாவிலுள்ள துறவற இல்லங்களுக்கு தமிழக இளைஞர்களையும் , இளம் பெண்களையும் வேலைக்கு அனுப்பும் முகவர் வேலைகளை இங்குள்ள ''துறவற முதலாளிகள் '' இப்போது செய்கின்றனர்.

வறுமையும் , பசியும் , பிணியும் , வாட்டும் உலகமிது . தொழிலாளர்கள் , தங்கள் குடும்பத்தையும் , தங்களையும் எப்பாடு பட்டாவது இவற்றிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் .என்று இரவு பகல் பாராது உழைக்கிறார்கள் . நீதி , சமத்துவம், பற்றி ஊருக்கு கதை அளக்கிற கும்பல் இப்படி தங்களிடம் வந்து மாட்டிகொள்ளும் உழைப்பாளர்களை ஈவு இரக்கமின்றி கசக்கிப் பிழிவதும், அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை சுரண்டுவதும் கலப்படமற்ற மனித உரிமை மீறல்களே!

திண்டிவனம் தொழிலாளர்கள் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் ஒரு பிரச்சினை . ( இன்று வரை தீர்கபடாத பிரச்சினை ) 32 தொழிலாளர்கள் திடுதிப்பென வேலை நீக்கம் செய்யபடுகின்றனர் . ஊதிய உயர்வு கேட்டார்கள், அதை அடைய தங்களுக்குள் சங்கம் அமைக்க முயன்றனர் , இதுதான் காரணம். போராட்டம் மூண்டது. திருச்சவையின் துறவிகளே சிலர் இந்த நியாயமான தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சிறை சென்றனர், ஆனால் வேலை நீக்கம் செய்த நிறுவனம் பொய் பிரச்சாரத்திற்கு , சுவரொட்டிகளுக்கு , காவல் துறையினருக்கு கையூட்டு , வன்முறைக்கு , என ஏராளமாய் செலவு செய்தது. ஒடுக்குவதற்கு செய்த செலவை ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் கேட்ட தொகையை விட அதிகம் கொடுத்திருக்கலாம் .

அதே நேரத்தில் , ஆயர்களும் , துறவற அவைத்தலைவரும் நீதி , நியாயம், எங்கிருக்கிறது என்று பார்கவில்லை . திருச்சவையின் நிறுவனம் ஒன்றை தெருவுக்கு இழுக்கலாமா? என்று அழுகிய புண்ணை மூடி மறைத்தனர் . இவர்களுக்கு 32 தொழிலாளர்கள் குடும்பங்கள் பட்டினியால் செத்தாலும் பரவாயில்லை, அழுகி , நாறிப்போன நரகல் இருப்பது தெரியகூடாது .அவ்வளவுதான் , உள்ளே நரகல் இருக்கிறது என விளம்பரபலகை போட
தேவையில்லை . அதுவே தனது வாடையால் விளம்பரம் தேடிக்கொள்ளும் .

இயேசு புரட்சியாளராகவும் , நீதி உணர்வு நிறைந்தவராகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலைப்பாடு எடுதவருமாய் இருந்தார் . அவர் அப்படியிருக்க அவரை மிக அருகில் பின் பற்றுவதாயும் அவராலேயே அழைக்கபட்டவராயும் கூறும் துறவிகள் மட்டும் என் இப்படி மனிதத்தன்மை இழந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள் ? எனும் வினா எழுகிறது. இயேசுவை விட்டுவிடுங்கள் துறவிகளாய் ஆகிறவர்கள் , நிறுவனங்களுக்குள் அதிகாரத்தை சுவைப்பவர்கள் எல்லாம் வனத்தில் இருந்து வந்தவர்களா? அவர்களும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து , மனிதர்கள் படும் துன்பங்களை கண்டு அறிந்தவர்கள்தானே. எப்படி இப்படி மாறிபோகிறார்கள்? எப்படி கடந்தவைகளை மறந்து விடுகிறார்கள் ? மறக்கடிக்கிற ஒரு உருவாக்கம் அவர்களுக்கு 'ஏற்படுகிறது '. அவ்வுருவாக்கத்தில் நடப்பதுதான் என்ன? .....

தொடரும் ....

வெள்ளி, நவம்பர் 12, 2010

ஓரிடத்தில் குடியிருக்கும் தாயுள்ளம், பேயுள்ளம்! -- அரிமா




தேர்தல் வந்துவிட்டாலேயே பிதற்றல்களும் பித்தலாட்டங்களும் மடை திறந்த வெள்ளம்போலத் தொடங்கிவிடும். அப்படித்தான் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் திரு தங்கபாலு திருவாய் மல(ர்)ந்தருளியுள்ளார். இன்றைய அவரது அறிக்கையிள் சாரம் இதுதான்!

“சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாகச் செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். ஆனால் அறிக்கைவிட்டு வாய் வீச்சைக்காட்டும் வைகோ இலங்கை தமிழர்களுக்காக இழந்தது என்ன?” என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் தேதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
(பின்னர் தங்கபாலு நடுவணரசு இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்)

தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும் செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார் தங்கபாலு.

தங்கபாலு தாயுள்ளம் என்ற பெரிய சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். முட்டைகளை அடைகாத்து, குஞ்சுபொரித்துப் பராமரிக்கிற கழுகுக்கும் பருந்துக்கும் இருப்பது தாயுள்ளம்தான்! கோழி அடைகாத்து பத்து குஞ்சுகளைப் பராமரிக்கும்போது அதற்குப் பேரும் தாயுள்ளம்தான். கழுகு தன் குஞ்சுகளுக்காக கோழிக்குஞ்சுகளை அள்ளிக் கொண்டுபோய் அறுத்து, கிழித்து, கீச் கீச் என்று கதற அதை உணவாக்கி தன் இளசுகளுக்குப் பரிமாறும்போது கழுக்குக்கு அது தாயுள்ளச் செயல்தான். ஆனால், கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் அது பேயுள்ளம் இல்லையா? பேய்ச் செயல் இல்லையா? கொடூரம் இல்லையா? கொலை இல்லையா?
சோனியாகாந்தியின் உள்ளம் யாருக்குத் தாயுள்ளம்? யாருக்குப் பேயுள்ளம்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்!
இந்தியப் படைகளை அனுப்பி, ஆயுதங்களைக் கொடுத்து, வேவு பார்த்து, வேதனையை விதைத்து நம் தமிழ் மக்கள் ஒரு லட்சம் பேருடைய உயிருக்கு உலை வைத்தது மட்டுமல்லாமல் இன்னும் பல்லாயிரக்கணக்கான நம் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பெண்டு பிள்ளைகளுக்குப் பாதுகாப்பின்றி நாடோடிகள் போல அலைந்து திரிந்து கிடப்பது தாயுள்ளத்தாலா? அல்லது பேயுள்ளத்தாலா?
தங்கபாலு இன்றைக்கு விட்டிருக்கிற இந்தக் கழிசடை அறிக்கைக்கு அடுத்த செய்தி என்னவென்றால், “யாழ்ப்பாணத்தில துப்பாக்கி முனையில் தமிழர்களை விரட்டிவிட்டு அந்த இடங்களில் சிங்களர்களைக் குடியமர்த்துகிறார்கள்” என்று. ஆக, இன்றைக்கும் நமது மக்கள் சிங்களக் காடையார்களால் தாக்கப்பட்டு தவித்து வரும்போது தாயுள்ளம் என்ன பேன் பார்த்துக் கொண்டா இருக்கிறது?
“பிரதமர் பதவியைத் துறந்து தியாகம் செய்தார்” என்கிறார் தங்கபாலு. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றபோது குடியரசுத் தலைவராக இருந்தவர் தமிழரான அப்துல்கலாம் அவர்கள். ஊருக்கே தெரிந்த ஒரு செய்தி என்னவென்றால், “அன்னிய நாட்டைச் சேர்ந்த சோனியா காந்திக்குத் தான் பதவியேற்பு செய்ய ஒப்புதல் அளிக்க இயலாது” என்று கூறிவிட்டாராம். அதற்குப் பழி தீர்க்கத்தான் திரு. அப்துல்கலாம் மறு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருந்தபோது காங்கிரசு வஞ்சம் தீர்த்தது. பதவிப் பித்துப் பிடித்தக் கருணாநிதியும் அதற்கு உடன்பட்டார். இதிலென்னடா தியாகமும் ஈகமும் இருக்கிறது?
“வை.கோ. இழந்தது என்ன?” என்று கேட்கிறார்.
ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் காவிரியில் இரண்டகம் செய்கிறீர்கள், ஈழத் தமிழர்களைக் கொல்கிறீர்கள், தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களன் கொல்லும்போது பாராமுகமாய் இருக்கிறீர்கள். எல்லாத் திட்டங்களுக்கும் நாங்கள்தான் பணம் கொடுக்கிறோம் என்று பிதற்றுகிறீர்கள்.
வை.கோ. எதிர்கட்சியில் இருக்கிறார். தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் குரல் எழுப்புகிறார். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார். காங்கிரசுக் கட்சியின் பித்தலாட்டங்க¬ளைப் போல அவர் செய்தது கிடையாது என்றுதான் நம்புகிறோம். கொலைகாரக் காங்கிரசை அம்பலப்படுத்துவதே நற்செயல்தானே!
அடுத்து நமக்கெல்லாம் நமட்டுச் சிரிப்பை ஏற்படுத்தும் வரிகள்! கருணாநிதியின் உண்ணா நோன்புப் போராட்டத்தில் காங்கிரசார் பங்கேற்றார்களாம்.
முதலில் கின்னஸ் புத்தகம் போடுபவனைச் சாத்த வேண்டும். இன்றைக்கு வரை கருணாநிதியின் உண்ணாநோன்பை பதக்கப்பட்டியலில் ஏற்றாமல் இருக்கிறான்! உலகிலேயே மிகக்குறைந்த நேரம் உண்ணாநோன்பு இருந்தவர் யார்? என்றால் அது கருணாநிதியைத் தவிர யாராக இருக்க முடியும்? அப்பப்பா, அல்லது கருணாநிதியின் மொழியில் சொன்னால், அம்மவோ, என்னா நாடகம்? என்னா வேடம்?
ஏண்டா அப்பா, 3 மணி நேரத்திற்கு கடற்கரையில் படுத்து இருந்துவிட்டு உண்ணாநோன்பு முடிந்தது என்று அறிவித்துவிட்டு எழுந்துபோன அந்தப் பித்தலாட்டத்தையா நோன்பு என்று நோகடிக்கிறீர்கள்?
இராசீவ்காந்தியைக் கொன்ற கொலையாளிகளுக்கு வைகோ துதிபாடுவதாகச் சொல்கிறார். ஆக, மீண்டும் ராசீவ் கொலையை நினைவுக்குக் கொண்டுவருகிறார் தங்கபாலு! இராசீவ்காந்தி ஏதோ ஒரு நேர்ச்சியில் (விபத்தில்) சாகவில்லை. விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ யாரும் அவரைக் கொலை செய்யவில்லை என்று கருதப்படுகிறது. பழி தீர்த்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.
கொலையோடு தொடர்புடையதாகக் கருதப்படும் சந்திராசாமி உள்ளிட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். சோனியா காந்தி அவர்களை விட்டுத்தான் வைத்திருக்கிறார். சோனியா காந்திக்கும் இதில் தொடர்புண்டு என்று சுப்பிரமணியசாமி சூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். அதற்கும் பதில் இல்லை. விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆட்சியிலுள்ள காங்கிரசுக் கட்சி சொல்கிறது. இப்படி, “யார் கொன்றது?” என்ற முடிச்சி அவிழாமல் இறுகிக் கொண்டு இருக்கிறது. கொல்லப்பட்ட இடத்தில் எடுத்த ஒரு முகாடையான படம் கே. ஆர். நாராயணனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. அது விசாரணைக்கு வர மறுக்கிறது என்று அண்மையில் இன்னும் குற்றச்சாட்டுகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன! இந்த ஐயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இராசீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படை செய்த அட்டூழியங்களும் கொலைகளும்தான் அவரைப் பழிவாங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது என்று விசாரித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள், தெருவில் நடப்பவர்கள் என்று அனைவருமே சொல்லிவிடுவார்கள். இராச குடும்பத்தில் செத்தால் அது ஒப்பற்ற உயிர்! சரி, மறுக்கவில்லை! அப்படியானல் எங்கள் குடும்பத்தில் கொத்துக் கொத்தாகச் செத்தால் அது என்ன ம..ரா? மழித்து வெளியே போட!
“நாங்கள்தான் காசு கொடுத்தோம், நாங்கள்தான் காசு கொடுத்தோம்” என்று ஒரு பட்டியலையே தங்கபாலு நாயக்கர் விட்டிருக்கிறார்.
போபர்சு ஊழலில் சுருட்டிய பணத்திலிருந்தா அள்ளிக் கொடுத்தீர்கள்?
சோனியாவின் உறவினரான இத்தாலிய குவத்ரோச்சி இந்தியாவில் அடித்த கொள்ளையிலிருந்தா கொடுத்தீர்கள்?
காமன் வெல்த் விளையாட்டுப் போடடிகளில் காங்கிரசுக் கல்மாடி அடித்த கொள்ளைப் பணத்திலிருந்து பகிர்ந்தளித்தீர்கள்?
கார்கில் போரில் மரித்த போர்வீரர்களுக்கு கட்டிய வீடுகளில் அடித்த கொள்ளையில் பங்கு பிரித்துக் கொடுத்தீர்கள்?
அல்லது ஸ்பெக்ட்ரம் ஊழலில் எடுத்த பங்கில் ஒரு பகுதியை ஒதுக்கினீர்களா?
தங்கபாலுவும் அவரது “தாயுள்ளப் புகழ்” சோனியா காந்தியும் ஏதோ பரம்பரைப் பணக்காரர்கள் போலவும் அவர்களது கஜானா பிதுங்கி வழிந்ததிலிருந்து வழித்து எடுத்துக் கொடுத்தது போலவும் தமிழ்நாட்டுத் தலைவர் பிதற்றுகிறார்.
தாய்க்கும் சேயுண்டு! பேய்க்கும் சேயுண்டு! இரண்டு சேயுமே தத்தமது தாய்களைத் “தாய்” என்றுதான் விளிக்கும்! தங்கபாலுவின் தாய் நமக்கு தாயாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை! பேயைத் தாயாக வைத்துக் கொண்டு தாய்மைக்கு இலக்கணம் தேடுகிற தங்கபாலுவுக்குப் பசி வந்துவிட்டது!
இராப்பிச்சைகளுக்கு பகல் பசி வந்துவிட்டது! ஆமாம், தேர்தல் வந்துவிட்டால் இந்தச் சிக்கல்தான்! இனி, “அம்மா, தாயே பிச்சை போடம்மா” என்ற கத்தல்களும் கதறல்களும் கேட்கத் தொடங்கிவிடும்! பேயுள்ளத்தைத் தாயுள்ளம் என்கிறார்! ஈகம் செய்தோம், அள்ளிக் கொடுத்தோம் என்கிறார்!
பித்த வாந்தி இது! கடுக்காய்தான் மருந்து!! இடித்து வையுங்கள்! தேர்தல் நாளன்று நிறையவே தேவைப்படும்!

---- அரிமாவளவன்

செய்தி வெளியீடு : ஊடகபிரிவு , தமிழர் களம் , கரூர்.

வியாழன், நவம்பர் 11, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா - 3


சென்ற கட்டுரை தொடர்ச்சி ...

இன்று இலங்கையின் பாலசூரியா பற்றி கேட்க ஆரம்பிக்கிறோம் . மரியாளை , புரட்சிகரமான பெண்ணாக இவர் பார்த்தாராம் . அதோடு நின்றிருந்தால் பிரச்சனை ஒன்றுமிருந்திருக்காது . ஆனால் , அப்படி பார்ப்பதன் விளைவாக திருசவையின் இன்றய போக்குகளில் சில அடிபடையான மாற்றங்களை கொணர வேண்டும் எனும் கருத்தியலை உள்ளடக்கியதாக அப்பார்வை உருவெடுக்கும்போது திருச்சவையின் அதிகாரிகள் வெகுண்டு எழுகிறார்கள் . மனித உரிமை மீறல்கள் மிக இயல்பாக நடக்கிறது . உளச்சான்று அறவே இன்றி ஆட்களையும் அவர்தம் உரிமைகளையும் , உணர்வுகளையும் காலிலிட்டு நசுக்குகிறார்கள். இவ்வெதார்தங்களை காணும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது . இவர்கள் தூக்கிபிடிக்கும் கோட்பாடுகள் இவர்களது தன்னலத்தை வளர்த்தெடுக்க , ஆட்சி அதிகாரத்தை , தக்க வைத்துகொள்ள ஒரு ஏதுவான கருவியாக இருக்கிறது. ஆகவே தவறான கோட்பாடுகளையும் கூட தங்களை காத்துக் கொள்ளும் குறுகிய நோக்கங்களுக்காக கட்டி அழுகிறார்கள் . எலும்புகூட்டுக்கு சுகமில்லை என்று கட்டி அழுகிறவர்களிடம் , ''சடம் அது '' என்று சுட்டிக் காட்டினால் , எழுந்து உதைகிறார்கள் . வைக்கோல் திணித்து பொய் கன்றுகளை உருவாக்கி மாட்டிலிருந்து பாலை கறப்பார்கள். அதாவது சரி போகட்டும் எனலாம் , ஆனால் பொய் மாட்டையே உருவாக்கி மடியை இழுத்தால் பாலா வரும்? திருச்சவையின் பல கோட்பாடுகள் 'வைக்கோல் பொம்மைகளே !'

திருச்சி இறையியல் கல்லூரியில் 18 ஆண்டுகளாக செல்வராசு எனும் ஒரு பேராசிரியர் பணிபுரிந்து வந்திருக்கிறார் , அவர் கல்லூரியில் இருந்துகொண்டே எதை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அதற்கு மெல்ல மெல்ல உரு கொடுக்க துவங்கியிருக்கிறார். அதாவது , மக்களுக்கான நியாயமான போரட்டங்களில் ஈடுபடுவது , தொல் தமிழருக்கான சீரிய நிலைபாடுகள் எடுப்பது , தொழிலாளர்கள் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திகொள்வது என செல்ல ஆரம்பித்தார். ஆயர்கள் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். இனி 'விட்டுவைக்கலாகாது ' என நினைத்தனர். ''பேராசிரியர்களை களப்பணிக்கு அனுப்ப வேண்டும் '' என்று பொதுவாக அறிக்கை ஒன்றை ஒன்றும் அறியாதவர்கள் போல முதலில் வெளியிட்டனர். பின்பு , ''கட்டிலுக்கு ஏற்றார்போல காலை வெட்டினார்கள் '' இவருக்கு களப்பணி பட்டறிவு தேவை என்று காரணம் கூறி ஒப்பந்தங்களை உடைத்து , பனி நீக்கம் செய்தனர். இவரது களப்பணிதானே இவரை காலி செய்வதற்கே காரணமானது ! ஆனால், அழுகிய முட்டைகளுக்கு சந்தனம் தேய்த்தார்கள் . ''கடவுளின் திட்டமிது.... ஏற்றுக்கொள்ளுங்கள் '' என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்கள் . கடவுளையே தங்களின் மட்டமான செயல்களுக்கு துணைக்கு அழைத்தார்கள் .18 ஆண்டுகாலம் சொந்த பிள்ளையை போல வளர்த்தெடுத்த மாணவர்களிடம் ''போய் வருகிறேன் '' என்றுகூட சொல்ல வாய்ப்பு தரவில்லை. உடன் பணியாற்றிய தோழர்களிடம் கூட 'நன்றி' சொல்லவும் விடவில்லை. ஆக ,அங்கே மனிதம் கொலையுண்டது .உளச்சான்று நெரிக்கபட்டது. தூக்கு தண்டனை பெற்றவன்கூட இறுதிவிருப்பத்தை நிறைவேற்றிகொள்கிறான். ஆனால் திருச்சவையின் தண்டனை பெற்றவர்களுக்கு அதுவெல்லாம் சாத்தியமில்லை.

சாமானியனுக்கும் தெரியும் இது ஒரு சதி என்று. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்றால் உலகமே நம்பிவிடுமா என்ன? ஆனால் பூனைகள் கண்ணை மூடிவிட்டால் உலகமே இங்கு இருண்டு விடுகிறது.! குற்றம் , குற்றமில்லை , வழக்கு, உசாவல் , எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் . மனிதம் எங்கே போனது.? உளச்சான்று அறவே கிடையாதா? மனித உணர்வுகளை இப்படி நடுங்கும்படி திடுதிப்பென செய்கிறோமே என மனிதபண்பு ஒரு மயிரளவும் இவர்களுக்குள் இழையோடாதா? திருச்சவையின் சர்வாதிகரத்திற்கு பெயர்தான் கடவுளின் விருப்பமா? இப்படி பலர் வினா எழுப்ப துவங்கினர்.

மற்றொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . திருச்சவையில் ஊழல், ஒழுக்ககேடு, சாய்க்கடை அரசியல் , சாதிவெறி , இதுவெல்லாம் பிரச்சனைக்குரிய செயல்பாடுகளே அல்ல . இவைகள் நடைமுறையில் மிக எளிதாக நடைபெற்று வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை கண்டுகொள்வதில்லை. காரணம் ; ஒன்று ,எதிர்க்க திராணி இல்லாமை . மற்றொன்று , எதிர்க்கும் தகுதி இல்லாமை. ( ஏனெனில் இவர்களே இம்மட்டச் செயல்பாடுகளை மடைதிறந்து விடுகிறவர்கள்)

பள்ளி ஆண்டு துவங்கும்போது , ஆயர்கள் அறிக்கை விடுவார்கள் . ''நன்கொடை வாங்காதீர்கள் , கிருத்துவருக்கு நம் நிறுவனங்களில் முதலிடம் கொடுங்கள் '' என்று. ' எளியோருக்கு நற்செய்தி' அறிவிக்கும் அவைகள் , புரட்சிகர 'கராத்தே' கன்னியர்கள் அவை இப்படி . ''ஏழைகளுக்காகவே ஏங்கி ஏங்கி வாழுகின்ற அவைகள்'' இந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உண்டு. இவர்களின் ஆலயங்களில் , இல்லங்களில் எல்லாம் அறிக்கை வாசிக்கப்படும் , பின்பு ......துடைத்து தூர வீசப்படும். 50,000 உருவாவை கேட்டுப் பெற்று ஆசிரியர்ப் பயிற்சி பள்ளியில் இடம் கொடுகிறார்கள். கட்டிட நிதி வேண்டும் என்கிறார்கள் . கருவிகள் வாங்கவேண்டும் என்கிறார்கள் . ' எங்கள் அவையின் நிறுவனங்கள் நன்கொடை வாங்குவதில்லை ' என்று ரோமில் போய் பொய் பேசுகிறார்கள் . ஆனால் தங்கள் பள்ளிகள் முன் , அல்லது அவர்களது நிறுவனங்களின் முன் இதை கொட்டை எழுத்துகளில் எழுதி வைப்பார்களா? சொல்லுக்கும் செயலுக்கும் தெரிந்தே முரண்பட்ட ஒரு கும்பலை ' விபசார தலைமுறை ' என்று இயேசு கரித்துக்கொட்டினார் !!

நடைமுறையில் இப்படி அநியாயமாக நடந்து கொள்ளும் துறவியரை , கிருத்துவர்களை, ஆயர்கள் கண்டித்துள்ளனரா? பணி நீக்கம் செய்கின்றனரா? மறைமாவட்டத்தை விட்டுஒடிவிடு என்கின்றனரா? யார்மீது சட்டம் பாய வேண்டுமோ அவர்கள் மீது அதை பாய விடுவதில்லை . ''நன்கொடைகள் '' என்ற பெயரால் நடக்கும் இக்கொடுமைகளுக்கு இவர்களும் ஒத்துபோகிறர்கள். ஏழைகள் 50,000 உருவாவை இப்படி வாய்கரிசியாக போடா முடியுமா? எத்தனை ஏழைகளின் கண்ணீருக்கு இவர்கள் விடை சொல்லியாக வேண்டும் . எப்படி எளியோருக்கு நற்செய்தி அறிவிப்பார்கள் ?

தொடரும் .....

இனியோ அலறமாட்டோம் !!- மகா.தமிழ் பிரபாகரன்

எம் பாட்டன் முப்பாட்டன்
ஆண்ட தமிழ்நாடு!
வேற்றோனுக்கு தாய்வீடு...
மாற்றான் மொழி பேசும்
தமிழ்நாடன் மொழியென்றால் ஏசும்
ஆங்கிலேயன் நயாகராவில்
வருக! வருக!!
தமிழன் பயாகராவில்
"WELCOME ENTRY TICKET 2 Rs/-" ஆடுவது மானாட மயிலாட
ஆளுவது தமிழ்நாட
நடத்துவது செம்மொழிமாநாட
பாரடா! தமிழ்ப்படும் பாட்ட
தெலுங்கன் ஆள்கிறான்
கன்னடன் அடிக்கிறான்
மலையாளி வாழ்கிறேன்
தமிழன்
அலைகிறான்!அழிகிறான்!!
கேட்டால் தமிழ்நாடென்கிறான்...
தமிழ் பேசா
வேற்றோன் நாடு!
அதற்கே தமிழீழ
தனிநாடு அண்ணன்
கட்டமைத்த செந்தமிழ்நாடு!!
தமிழர் நாதமதில்
தமிழீழமே இசைந்திடும்
குருதி கண்ட உடல்
நீர்க்கொண்ட விழிகள்
மறக்குமா? ரணங்கள்
இனியோ அலறமாட்டோம்...
அனல் காக்கும்
நெருப்பாய் போராடுவோம்!
பதுங்கும் புலிகள்
பாய புறப்படுவோம்!
பாயிந்து வென்றிடுவோம்!
தாய்நாடு புகுந்திடுவோம்!!
எதிரியை விரட்டிடுவோம்!!!
இனி,
அண்ணன்புலி ஈழநாட்டில்..
தம்பிபுலி தமிழ்நாட்டில்...

நன்றி: தமிழ் ஈழ புரட்சிகர மாணவர்கள் இணையம் .

புதன், நவம்பர் 10, 2010

மதமும் மனிதஉரிமை மீறலும் - அரிமா - 2


சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

''மதம் என்பது , இம்மை , மறுமை , கடவுள் என்னும் மூன்றையும் பற்றி , ஒருவன் மதித்துக்கொள்ளும் கருத்தேயன்றி வேறன்று '' (1) என்கிறார் பாவாணர் . '' பலர் தீய ஒழுக்கத்தை விட்டு நல்ல ஒழுக்கத்தை மேற்கொண்டிருந்ததற்கும் மறுமையில் இறைவன் எரி நரகிலிட்டு தண்டிப்பான் எனும் அச்சமே கரணியமாகும் . பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது. ஆதலால் , மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிபடையாகும் '' என்று தொடருகிறார் பாவாணர் . ( 2 ) பாவாணர் மேலோட்டமாக இப்படிச் சொல்லிச் செல்கிறார் . ஆனால் , ''சமயத்தையும் மதத்தையும் நுட்பமாக வேறுபடுத்திய மரபு தமிழருக்குண்டு''. ( 3 ) இயற்கை , அதற்கு புறம்பான புற ஆற்றல்கள் பற்றிய இறையியல் விளக்கம் , மக்களின் அன்றாட வாழ்க்கை வழிமுறைகளையும் , வழிபாட்டு முறைமைகளையும் இணைத்திடும் ஒரு கருத்தியலே சமயம் . அக்கருத்தியலை அல்லது கோட்பாட்டை தற்காத்துகொள்ளும் அமைப்பியல் கட்டுமானமே மதம் என தெளிவு படுத்துகிறார் குணா . ( 4 ) ஆக , பாவாணர் மேலோட்டமாக மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சமயத்தையே குறிக்கும் .

கருத்தியல் எல்லோருக்கும் பொதுவானதாக அல்லது ஒன்றாக இருக்கமுடியாது . சமயம் என்பது குமுக , அரசியல் சூழலை உள்வாங்கி வெளிபடுத்தும் கருத்தியல் என்றால் , அது பல்வேறு சூழலுக்கு தகுந்தாற்போல் மாறுவதும் , வேறுபடுவதும் இயற்கையே . முகமது நபியின் சமயம் இயேசுவின் கோட்பாடுகளுக்கு வேறுபட்டது. வானில் வேர்கள் தோன்றாது. மண்ணிலேய அவை வளரும் . இயேசு வாழ்ந்த சூழலில்தான் அவர் கொண்ட கருத்தியல் விளைந்தது . பல எதார்த்தங்களோடு ஏற்பட்ட உராய்வினாலும் பட்டறிவாலுமே அது உருவாகி இருக்ககூடும் . கருத்தியலை காப்பாற்ற அமைப்பியல் வளர்ந்தது. திருச்சவை உருவானது. பின்பு அக்கருத்தியல் பல தேசங்களுக்கு பரவியபோது அந்தந்த சூழலுக்கேற்ப அக்கருத்தியல் பொலிவு பெற்று வளர்ந்திருக்கவேண்டும் . ஆனால் கருத்தைவிட அமைப்பே அழுத்தம் பெற ஆரம்பித்தது. யூத மதத்தின் இருக்கதிற்கெதிராக உரோமை வல்லாட்சியலர்களுக்கு எதிராக உருவெடுத்த கிறித்துவ கருத்தியல் , ஒடுக்கப்பட்ட யூத இனத்தின் விடுதலையை கனவு கண்டது. இன்று பல இடங்களில் ஒடுக்குகிறவர்களின் சார்பாகவே கிறித்துவம் திசை மாறி கிடக்கிறது.

தமிழகத்தில் செயல்பட்டுவரும் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் , வடபகுதியில் செயல்பட்டு வந்த மண்ணின் மைந்தர் இயக்கம், தொல் தமிழ் ( தலித் ) கிறித்துவர் விடுதலை இயக்கம் , தமிழ் இறையியல் மன்றம் போன்ற அமைப்புகளும் இயக்கங்களும் தமிழ் மண்ணில் கிறித்துவ கருத்தியலுக்கு உண்மையான உரு கொடுக்க அரும்பாடு பட்டு வருகின்றன . ஆனால் கிறித்துவ அமைப்பியலை கட்டிபாதுகாக்கும் பொறுப்பை தங்கள் சிரமேற்கொண்டு அலையும் ஆதிக்க திருச்சவை , அடக்குவதும், எதிர்பதுமாய் செயல்பட்டு வந்திருக்கின்றன . ( ஆதிக்க திருச்சவை என்று நாம் குறிப்பிடும்போது ஆயர்கள் என்று மட்டும் கணக்கில் எடுக்ககூடாது . 'கனமான' பொதுநிலையினர் , துறவற சபையின் தலைமைகள் , திருச்சவையின் பல ஏடுகள் , என்கின்ற அவ்வதிகார இனத்தையே ஒட்டுமொத்தமாக கணக்கிலெடுக்க வேண்டும்.)

''பெர்மகோ'' எனும் ஒரு பாதிரியார் புனேயிலுள்ள குருதவக் கல்லூரியில் பாடம் கற்பித்து வந்தார். ரொம்ப கெடுபிடியான ஆள். தேர்வு நேரங்களில் மாணவர்களிடம் ஈவு இரக்கம் காட்டமாட்டார் . இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் . திருச்சவைகளுக்கு மத்தியில் ஒற்றுமை பற்றிய ஆய்வு அடங்கிய புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். அச்சிடலாம் என புனே மறைமாவட்ட ஆயர் அப்புத்தகத்திற்கு இசைவும் கொடுத்திருந்தார். இப்புத்தகத்தின் ஒரு பகுதியில் பாப்பனவருக்கு தவறாவரம் அளிக்கும் திரு அவை சட்டங்கள் எந்த அளவுக்கு சரியான மரபு சார்ந்தது அல்லது சட்ட பூர்வமாக இயற்றப்பட்டது என்பது பற்றிய வினாக்களை அப்புத்தகத்தில் எழுப்பி இருந்தார். இவரொன்றும் இவரது தனிப்பட்ட கருத்துகளை அதில் சொல்லவில்லை. திருச்சவையின் ஆவணங்களையே இதற்கு ஆதாரமாக்கி இருந்தார்.

உரோமே வெகுண்டு எழுந்தது . எடுத்த எடுப்பிலேயே , ''இவர் இனி கற்று கொடுக்க கூடாது '' என தடை போட்டது. உசாவல் , நடுநிலை நோக்கு , நேர்மையான பார்வை, நல்லது கெட்டதுகளை ஆராய்வது , உண்மைகளை மனத் துணிவோடு ஏற்கும் பொறுப்புணர்வு திருஅவைக்கு எள்ளளவும் இருந்தது கிடையாது என்பது மீண்டும் வெட்ட வெளிச்சமாகியது. கடந்த காலங்களில் பலியாக்கப்பட்ட பல நூறு ஆட்களுள் பெர்மகொவும் ஒருவர் .

தொடரும் .....

செவ்வாய், நவம்பர் 09, 2010

மேதகமைக்கு சில.....- ஜார்ஜ் வில்லி

20.10.2010 இல் ஹீச்டன் நகரில் அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் திரு.ஜார்ஜ்வில்லி அவர்கள் மஹிந்த ராஜபக்சவை வரவேற்று பேசியதன் மொழியாக்கம் .

மொழிபெயர்ப்பு; திரு .இரா.சீவானந்தம். வழக்குரைஞர் . கரூர்

மேதகு ராஜபக்ச , திருமதி ராஜபக்ச , மாண்புமிகு மக்களவை பெண் உறுப்பினர் ஷீலா சக்சன் லீ , மாண்புமிகு தூதரக பெருந்தலைவர் அரோரா , மற்றும் மரியாதைக்குரிய விருந்தினர்களே, சீமாட்டிகளே , கனவான்களே ....

மேதகமை ராஜபக்ச அவர்களுக்கு இம்மாநகரின் நல்வரவு.

நீங்கள் ஓக் மரங்களையும் , பாடும் பறவைகளையும் பொருட்படுத்தாமல் இருந்தால் நான் பேசுவது இலங்கையின் பொருட்டு எளிதில் தவறாக எடுத்து கொள்ளலாம் . இலங்கை நான் பிறந்த மண் , என் தாய் , என் மனைவி சாந்தியின் பெற்றோர் , எங்கள் தாத்தா, பாட்டி ஆகியோர் என் தாயகத்தின் புனித மண்ணில் புதைகபட்டுள்ளனர்.

மேதகமையே , நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து கொழும்பிற்கு இடம் பெயர்ந்த போது பத்து வயது சிறுவன்! படுல்லாவை சேர்ந்த என் மனைவி ''தியத்லவாவில்'' வளர்ந்தவள் . அங்கே அவளின் தந்தை எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு படையணி தலைவர், யாழ்ப்பாணத்தில் நான் வேப்ப மரத்தின் இனிமையை நுகர்ந்துள்ளேன் . நான் கொழும்பில் பள்ளிக்கு செல்லும்போது நான் சுவைத்த சிவப்பு நாவற்பழங்கள் என்னுடைய வெள்ளை சட்டையை கரை படுத்தியுள்ளன . மரங்களில் பழுத்து கனிந்திருக்கும் பலா பழங்களை காகங்கள் உடைத்து திறக்க முயலும் வண்ணம் உள்ள பலா பழங்களின் ஈர்ப்பையும் நான் அறிவேன் !

விசாகத் திருவிழாவின் போது போடப்படும் பளிச்சிடும் வண்ண பந்தல்களை நான் கண்டுள்ளேன் . ஏழைகளுக்கான தானசாலைகளில் கூச்சமின்றி உணவு உண்டுள்ளேன் . கோவில்களின் மணியோசையும் கேட்டதுண்டு. மல்லிகை மற்றும் ஊதுபத்திகளின் மணத்தையும் நான் நுகர்ந்துள்ளேன் .

ஹீரத் பாதிரியார் அப்பமும் திராட்சை ரசமும் கொடுக்கும் சடங்கிற்காக நான் அவருக்கு துணையாக இருந்தபோது அனைத்து புனித தேவாலயத்தின் மணியோசைகளை கேட்டதுண்டு .

ஆனால் நான் 1975 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த பிறகு எனக்கு வலி, துயரம், மனஉளைச்சல் இருந்துவருகிறது. நெல் வயலுக்கு தண்ணீரை கொண்டு வரும் மாபெரும் மகாவளி கங்கை சிங்கள மற்றும் தமிழரின் குருதியாக பாய்ந்தது .

நான் இங்கே அமெரிக்க ஐக்ய நாடுகளிலிருந்து , எனது முன்னோர்கள் பூமி நரகத்தின் ஆழத்தில் மூழ்குவதை கவனித்து வருகிறேன் . இங்கு யாரை குற்றம் சொல்வது என ஒருவராலும் உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் குற்றம் சொல்வதற்கான காலம் நீண்டு செல்கிறது.

மேதகமையே தாங்கள் துட்டகாமினி வழி வந்தவர், எமது மக்கள் எல்லாளன் வழி வந்தவர்கள். துட்டகாமினி தனது யானை ''கண்டுலா'' மீதிருந்து எல்லாளன் உடன் போரிட்டு வென்று கொன்றது எவ்வாறு என்பதை நினைவில் கொள்ளுங்கள் . துட்டகாமினி முதன் முறையாக இலங்கை முழுவதையும் ஒன்றுபடுதியதற்காக இன்றும் நினைவு கூறபட்டாலும் மற்றொரு வகையிலும் நினைவு கூறபடுகிறார். எல்லாளனை வென்று கொன்றபிறகு தனக்கு தக்க சமமான எதிரி என மதித்து எல்லாளனுக்கு ஒரு நினைவு சின்னத்தை கட்டினான் . தன்னுடைய குடிகள் எள்ளலாலனை அவமதிப்பதை நிறுத்தி அவனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என ஆணையிட்டான் . அவ்வாறு செய்ததின் மூலம் தான் எத்தகைய பெருந்தன்மையாளன் என காட்டியது மட்டுமின்றி தான் ஒரு பெரிய அரசியல் வாதி எனவும் மெய்பித்தான். எல்லாளனின் தோல்விக்கு பிறகு தமிழ் மக்களையும் தான் ஆள வேண்டியுள்ளது என்பதை அறிந்திருந்தான் .

மேதகமையே விதியும் நல்வாய்ப்பும், தங்களின் மாபெரும் அரசியல் திறனும் தங்களை வரலாற்றின் தனித் தன்மையுள்ள புள்ளியில் வைத்துள்ளது. வருகின்ற ஆண்டுகளில் தனக்கு முன்பு பலரும் தோற்ற போதும் 25 ஆண்டுகளுக்கு பிறகு கலக காரர்களை இறுதியாக தோற்கடித்தார் மஹிந்த ராஜபக்ச என்ற மாபெரும் தலைவர். மாவீரர் என வரலாற்று நூல்களில் வாசிப்பார்கள். அவர்கள் தங்களை 21 நூற்றாண்டின் துட்டகாமினி எனக் கூட சொல்வார்கள். ஆனால் தாங்கள் துட்ட காமினியின் ஒளி வட்டத்தை சூடிக்கொள்ள வேண்டும் என்றால் மேதகமையே தங்களும் ஒரு நினைவு சின்னத்தை கட்ட வேண்டும். அதுகூட ஒரு டோகொபவா , கட்டிடமோ அல்ல . அமுல்படுததக்க அதிகாரங்களுடன் உள்ள சட்ட பாதுகாப்புள்ள ஒரு புதிய கொள்கையே அது. 1958 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தில் எர்புடுதிய தவறுகளை தாங்கள் செய்யாதீர்கள் . பல்கலை கழகங்களுக்கு செல்ல வேண்டிய இளைஞர்களை தளைபடுததீர்கள் .

தமிழ் மக்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்கள் என என்னும்படி செய்யவேண்டாம் . அவர்களுடைய மதத்தையும் , மொழியையும், மதியுங்கள். தமிழ் மக்களை பற்றி சிலவற்றை அறிந்துகொள்ளுங்கள். மேதகமையே அவர்களுக்கு மொழி கடவுள் போன்றது . உலகில் சில நாகரிகங்களே தம்முடைய மொழி மீது பக்தியும் அர்பணிப்பும் கொண்டன .

தாங்கள் ஒரு வழக்கறிஞராக பயிற்றுவிகபட்டவர் , தாங்கள் துவக்க காலத்தில் ஒரு உறுதியான மனித உரிமை காவலராக இருந்துள்ளீர்கள். தற்போது தாங்கள்
மிக பிரபலம் பெற்றுள்ளீர்கள். தம்முடைய வெற்றிகளுக்கு பின் ரோமுக்கு திரும்பும் ஜூலியஸ் சீசரை போல வெற்றி நாயகனாக அதிகாரம் பெற்றுள்ளீர்கள் .எவர் ஒருவரும் தங்களை மறுக்கவோ கேள்வி கேட்கவோ இயலாது. சட்டப் பள்ளியில் ''சொல்ச்பெரியின்'' அரசமைப்பு சட்டத்தை நீங்களும் நானும் பயின்றவர்கள் . வலிமையான சட்ட விதிகளை இயற்றி கோருங்கள் அது தொடர்பாக என்னுடைய உதவி ஏதேனும் தேவைப்படின் நான் இலவசமாக தருகிறேன் என சபை முன்பாக தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் மக்கள் நிர்வாணமாக பசியோடு எங்களுக்கு ஒரு இடம் உண்டு என்ற உத்திரவாதத்தை தங்களிடமிருந்து எதிர்பார்த்து கொண்டிருகிறார்கள். அதை தாங்கள் உறுதிபடுத்துங்கள். தாங்கள் ஒரு பிரபாகரனை கொன்றுள்ளீர்கள்.ஆனால் மற்றொருவர் வளர இடம் தராதீர்கள் . மற்றொருவர் வாளோடும் , துப்பாகியோடும் வருவதை தங்களால் தடுக்க இயலாது . மனதாலும் மதி நுட்பத்தாலும் மட்டுமே செய்ய இயலும் . தாங்கள் புத்தரிடம் கற்ற கருணை, உண்மை, நீதி ஆகிய ஆயுதங்களே தங்களுக்கு தேவை.

எந்தஒரு காலத்திலும் வெறுப்பு வெறுப்பை ஒழிக்காது ! அன்பே வெறுப்பை ஒழிக்கும் என்பது பழைய பாடம் என தம்மை பீடத்தில் புத்தர் போதித்துள்ளார்.தாங்கள் இந்த அழகான நகரத்திலிருந்து விடை பெற்று இலங்கைக்கு செல்லும்போது அங்கே 10 வயது பையன் பள்ளிக்கு செல்லும் போது அவனது வெள்ளை சட்டையில் நாவற்பழ கரையை தவிர வேறு கரை படியாது என்றும் , காலையில் காகம் பலா பழத்தை தவிர வேறு எதையும் கொத்தி தின்னாது எனவும் , வேப்ப மரங்களில்நான் நுகர்ந்த தவிர வேறு எதுவும் வேப்ப மரத்தில் தொங்காது எனவும் இங்கே எனக்கு உறுதிமொழி கொடுங்கள் .மேதகமையே எங்களை சொர்கத்துக்கு திரும்ப விடுங்கள் , தாங்களும் சொர்கத்துக்கு வாருங்கள்!!

இம்மொழி பெயர்ப்புக்கான ஆதார காட்சி வடிவ ஆவணம் :
http://www.youtube.com/watch?v=ei4cURPJdrY


நன்றி; திரு .இரா.சீவானந்தம். வழக்குரைஞர் . கரூர்.

செய்தி வெளியீடு; ஊடகபிரிவு. தமிழர் களம் , கரூர்.

ஞாயிறு, நவம்பர் 07, 2010

மதமும் மனித உரிமை மீறலும் - அரிமா


மதமும் மனித உரிமை மீறலும் என்ற இந்த கட்டுரை தொகுப்பு திரு .அரிமாவளவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது. பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான இந்த கட்டுரை தொகுப்பு இப்போது நம் வலைப்பூவில் தொடராக மீண்டும் வெளியாகிறது.
மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் பாதிகபட்டவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்பிகிறோம் .

''கடவுளுக்கு எல்லாம் தெரியும் . கடவுள் மனிதனுக்கு அடக்கம் . ஆகவே மதத்திற்குள் எல்லாம் அடங்கும் . மதத் தலைமைக்கு எல்லாம் தெரியும்.'' இது ஒரு ஆபத்தான கருத்து. இதைவிட ஆபத்தானது இக்கருத்தை நடைமுறைபடுத்தும் எதார்த்தம். அதாவது , மதத் தலைவர்கள் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பம் அவரின் செயல்கள். அவர்கள் வழியாகத்தான் கடவுள் பேசுகிறார் அல்லது செயல்படுகிறார்.''

மதத்துக்கு தெரிந்தது ''உலகம் தட்டையானது '' என்று. கலிலியோ , உலகம் உருண்டையானது என்றான் . கலிலியோவை கொலை செய்தது திருச்சவை . கலிலியோ சொல்வது பொய் . இனி யாரும் அவர் சொல்வதை கேட்காதீர்கள். என்றுகூட சொல்லியிருக்கலாம் . உலகத்தின் உருவம் பற்றிய கருத்துகளை எடுத்துரைப்பது ஒன்றும் உயிர் போகிற காரியம் அல்ல . ஆனாலும் அவருக்கு கிடைத்தது கொலைத்தண்டனை. அறிவியல் தளத்தை அறியாத திருச்சவை அதிலும் தன் மூர்கதனத்தை காட்டியது. ஒரு அறிவாளி கோழையாகி விடுவதால் கவலயில்லை .ஆனால் ஒருமுட்டாள் மூர்கனவது பெரும் பேரிடரை வருவிக்கும்!

வங்காள பெண் எழுத்தாளர் தசுலிமா நசுரின் பெண்ணின விடுதலையை முன்னிறுத்தி குரானை எதிர்த்து எழுதினார் என்பது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே! வாங்க தேச மதத்தலைவர்கள் அவருக்கு கொலைத்தண்டனை விதித்தார்கள், அவர் தப்பித்து வாழ்ந்து வருகிறார் .
சல்மான் ருஷ்டிக்கு ''சட்டனிக் வெர்ச்'' எனும் நூலை எழுதியதற்காக அயதுல்லா கொமனியும் அவரது ஆதரவளர்களும் கொலைத்தண்டனை விதித்தார்கள் . அவரும் மறைந்து ஒளிந்து வாழ்கிறார்.

அயோத்தி பிரச்னையில் பார்பனத் தலைவர்கள் , ஆர்.எஸ் .எஸ். போன்ற அமைப்புகள் சட்டம், நீதிமன்றம், ஒழுங்கு, மனித உரிமைகள் , மாந்த உணர்வுகளை அறவே புறக்கணித்து ஒன்றுமறியா இசுலாமியத் தோழர்களை வெட்டி சாய்த்தனர் . எல்லாம் ராமருக்காக!

சிலுவை போரில் நடந்த கொலைகள் எல்லாம் இயேசுவுக்காக !

''உயிரை கொடுத்தவன் கடவுள். அவரே திரும்ப எடுத்துக்கொண்டார்.'' இறுதி சடங்கில் சாமியார் பிரசங்கம் வைத்தார். ''உயிரை எடுக்க கடவுள் ஒருவருக்கே அதிகாரம் உண்டு.தற்கொலை செய்து கொண்டவனுக்கு கோவில் அடக்கம் கிடையாது போ !'' அதட்டினர் சாமியார். கடவுளுக்கே எல்ல அதிகாரமும் ! அடுத்து , 'கடவுள்களாகிய' மதத் தலைவர்களுக்கே அந்த அதிகாரமெல்லாம் உண்டு. கலிலியோவை கொல்ல கடவுளுக்கே அதிகாரம். மதத் தலைவர்களும் 'கடவுள்கள்' ஆனதால் அவர்களே அவதிகரத்தை எடுத்து கொண்டனர்.

குமுகவியலாளர் ( சமூகவியலாளர்) தெய்வீக போர்வை என்று அழைக்கிறார்கள் . அதாவது , சில நடைமுறைகளை ஞாயபடுத்த அல்லது தங்களுக்கு சாதகமாக்க மதத் தலைமை பலவேளைகளில் ஒரு புனித போர்வையை அவ்வெதார்த்ததின் மீது போர்த்தும் . எடுத்துகாட்டாக , நாலு வருணங்கள் என்கிற சாதிபிரிவு பார்ப்பானின் கைங்கர்யம் . ஆனால் இவர்கள் பிரம்மனின் தலை, கை, தொடை, கால்களிலிருந்து, பிறந்தவர்கள், என ஒரு அக்கிரமச் செயலை தெய்வ செயலாக திரித்து , நடைமுறைகளை வினாக்களுக்கு அப்பற்பட்டதாக்கி விடுகின்றனர். இந்த புரட்டினால் பார்ப்பான் தன் ஆதிக்கத்தை குமுகத்தில் நிலைநிறுத்தி , நன்மைகளை பெற்றுகொள்கின்றான். ஒரு நல்லவரை பழிவாங்க ஆயரோருவர் அவரை பதவி நீக்கம் செய்கிறார் . ''தண்ணியில்லா காட்டுக்கு'' அனுப்ப முயற்சிக்கிறார். ''கடவுளின் விருப்பம் என்று இதை எடுத்துகொள் '' என ஒரே போடாக போட்டுவிடுகிறார் . இது யாருடைய விருப்பம் ? கடவுளுடைய விருப்பத்தை இவர் எப்படி கண்டறிந்தார் என்பதெல்லாம் வியப்பானது, வேடிக்கையானது .

கிரோசிமா , நாகசாகி எனும் யப்பான் நாட்டு நகரங்களின் மீது அணுகுண்டை வீச அமெரிக்க விமானம் குண்டு பொருத்தப்பட்டு தயாராய் நின்றது. இறுதி நேர அறிவுரை விமானிகளுக்கு வழங்கபடுகிறது . ''குண்டை போட்டபின் திரும்பிகூட பார்க்க கூடாது . பார்த்தால் நீங்களும் அழிந்து போவீர்கள் . குண்டு வீச்சு வெற்றி பெற்றதும் கொடுக்க வேண்டிய குறிப்பு சொல் - புத்தர் சிரித்தார் !'' என்பது . அறிவுரை முடிந்தது . விமானிகள் விமானத்தில் ஏற தயாரானார்கள் . போதகர் ஒருவர் திருவிவிலியதோடு அருகில் வந்தார் . வானகத் தந்தையை நோக்கி செபித்தார், ''தந்தையே இந்த விமானிகளை பாதுகாப்பாய் திரும்பி கொண்டு வந்து சேரும் '' என்றார் . பின்பு அவர்களை ஆசிர்வதித்தார் . சிலமணி நேரங்களில் யப்பான் நாட்டு நகரம் ஒரு சுடுகாடானது . பல ஆயிரம் பேர்கள் துடித்து மாண்டனர். 'கொலைகாரனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் கொலையுண்டவர்களுக்கு கிடைக்கவில்லை'. ஒரு மிருகச் செயலுக்கு தெய்வீக போர்வை கிடைத்தது.

ஈராக்கில் அமெரிக்கா குண்டுமழையை பொழிந்தது . பல ஆயிரம் ஈராக்கிய படைவீரர்கள் சரணடைய வந்தபோது , அமெரிக்க கொலைஞர்கள் அவர்களை பெரு மணற்பரப்பில் உழுது கொன்றனர். அரக்கன் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபனாய் இருந்து அக்கொலைவெறி போரை நடத்தி கொண்டிருந்தான் . பில்லி கிரகாம் எனும் நற்செய்தி போதகர் அவனுக்கு அருகில் இருந்து ஆன்மிக சக்தி அளித்துவந்தராம் .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத மதத்துக்குள் ''ஒரு புயல் '' எழுந்தது. சொல்லில் நேர்மை . செயலில் தீர்க்கம். அவரே இயேசு எனும் யூத இன போராளி .மதத் தலைமையை கடுமையாக சாடினார். அவருக்கும் கொலைதண்டனைதான் கொடுத்தனர். அந்நிய ஆச்சியலர்களான உரோமையர்களுடன் சேர்ந்து அக்கொலையை நிறைவேற்றினார்கள்.

கருத்துகளை எதிர்கொள்ள இயலாதபோது , அல்லது நேர்மையானவர்களின் செயல்பட்டு தீவிரம் , இறுக்கமான அல்லது சொகுசான வாழ்வை , அல்லது அமைப்பை வினாவுகுள்ளாகும் போது . அல்லது அதை உடைக்க முற்படும்போது , 'பாதிக்கபடுபவர்கள்' எதிர்தாக்குதல் நடத்துகிறார்கள்.

இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே . கருத்தை தாக்கும் போதும் இவர்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . நிறுவனம் ஆட்டம் காணும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . தங்களது ஊழல் அம்பலமாகும் போது தற்காப்பில் இறங்குகிறார்கள் . தங்களது பணம் அல்லது சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படும்போது தற்காப்பு நடவடிக்கையில் இறங்குகிறார்கள் . காரணம் , நிறுவனத்தோடு ஒன்றித்து விடுகிறார்கள் . பணத்தோடும், ஊழலோடும், கருத்துகளோடும், ஒன்றித்து விடுகிறார்கள் . ஆகவே இதுவெல்லாம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்போது தாங்களே பாதிகபடுவதாக எண்ணி , ஒரு மன நோயாளி போல தங்களது 'எதிரிகளை ' கண் மண் தெரியாமல் தாக்குகிறார்கள். தங்களிடம் இருக்கிற அல்லது இருப்பதை நினைக்கிற , எல்லா அதிகாரங்களையும் இதற்காக பயன்படுத்த இவர்கள் தயங்குவதில்லை.

சிவகங்கை ஆயர் தனது மறைமவட்டதிலிருந்து பெண் துறவி ஒருவரை விரட்ட படாத பாடுபடுகிறார் . அதுறவியின் சபைதலைவர்களையும் நெருங்கி அவரை வெளியேற்ற கூறி வருகிறாராம் . ''நாடு கடத்தல் '' எனும் தண்டனையை அரசே கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன . ஆயர்கள் விடவில்லை . மறை மாவட்டம் என்பது என்ன ? மறை மாவட்ட ஆயருக்கு அம்மாவட்ட எல்லையிலிருந்து ஒருவரை விரட்ட அல்லது அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய அதிகாரம் உள்ளதா? நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட செய்யத்துணியாத இம்மாதிரி செயல்களை எப்படி இவர்கள் செய்ய துணிந்தனர் ? ஒரு சிற்றூரில் அவ்வூர் ஊராட்சி கூடுகிறது. ஊர் நாட்டாண்மையும் மற்றவர்களும் கூடுகிறார்கள் .ஒரு வழக்கு உசாவபடுகிறது. குற்றம் உறுதிபடுத்த படுகிறது . ஊர்த்தலைவர் குற்றவாளியை ஊரை விட்டு விரட்டி விடலாமா ? கை கால்களை வெட்ட சொல்லலாமா? சில இடங்களில் செய்யவும் செய்கிறார்கள். பீகார் மாநில சிற்றூர் ஒன்றில் பெண் ஒருத்தி செய்த பாலியல் குற்றத்திற்காக அறை ஒன்றில் அடைத்து உடலூறு ( சித்திரவதை) செய்து பின்பு யார் வேண்டும் என்றாலும் அவளை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என இசைவு கொடுத்துவிட்டனர். பதினெட்டு காடு மிராண்டிகள் அதை செய்தனர். சட்டத்தை தன் கையில் எடுத்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான செயல்களே . கடவுள் பெயரால் அதை செய்தாலும் அதற்கும் காடுமிரண்டிதனம் என்பதுவே பொருத்தம் . ''கடவுள் பெயரால் மதத்திற்குள் நடக்கும் அட்டூழியம் ஏராளம் .''

---- தொடரும்