திங்கள், ஆகஸ்ட் 29, 2011

''கச்சதீவு நமதே''






29.08.11 திருச்சி
திருச்சி அய்கப் இல்லத்தில் திரு .சீதையின் மைந்தன் அவர்கள் தயாரித்த ''கச்சதீவு நமதே'' என்ற குறுவட்டு தமிழர் களத்தின் சார்பாக வெளியீடு விழா நிகழ்ந்தது. நிகழ்வின் முன்னதாக தமிழர்களின் மரண தண்டனையை தடை செய்யகோரி தன் இன்னுயிரை நீத்த சகோதரி செங்கொடி அவர்களுக்கு தமிழர் களத்தின் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குறுவட்டு வெளியிடப்பட்டது. குறுவட்டினை உலகத் தமிழர் பேரமைப்பினை சேர்ந்த திரு .பொன்னிறைவன் அவர்கள் வெளியிட திரு . வீ, நா. சோமசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . அதை தொடர்ந்து திரு . பொன்னிறைவன் அவர்கள் வாழ்த்தியும் கச்ச தீவை மீட்க நாம் போராட வேண்டும் என்றும் பேசினார் . திரு . வீ .நா . சோமசுந்தரம் அவர்கள் பேசுகையில் இந்தியா மோசடி செய்து தமிழர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்றும் நாம் இந்திய அரசுக்கும் , தமிழக அரசியல் வாதிகளுக்கும் எவ்வாறெல்லாம் அடிமையாக வாழ்கிறோம் என்பதையும் தெளிவாக்கினார் . அடுத்ததாக பேசிய தமிழர் களத்தின் பொது செயலாளர் தமிழ்த் திரு . அரிமாவளவன் பேசுகையில் ஈழச் சிக்கலுக்கும் , தமிழக மீனவர்கள் கொல்லபடுவதற்கும் காரணமாக இருக்கும் இந்திய அரசின் கூட்டமைப்பிலிருந்து தமிழ் நாடு தனி நாடாக பிரியாமல் நாம் இழந்த உரிமைகளை மீட்க முடியாது என்றும் , திராவிடத்தை தமிழ் நாட்டிலிருந்து வேரடி மண்ணோடு களைய வேண்டும் எனவும் தமிழர்கள் திராவிட அரசியல் வாதிகளை இன்னமும் நம்பிகொண்டிருப்பதுதான் மோசமான ஒன்று. என்றும் இனிமேலும் நாம் ஒரு தமிழரை கூட இழக்ககூடாது , அதற்காக நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே இருக்கும் உடமைகளை காக்கவும் முடியும் என்று பேசினார் . அடுத்ததாக ஏற்புரை வழங்கிய திரு . சீதையின் மைந்தன் அவர்கள் கச்சதீவு நமது மண் அதை எப்பாடு பட்டாவது மீட்க வேண்டும் , அதற்கு தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . கச்சதீவு வெறும் மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமை பிரச்சினை .என்று பேசினார். நிறைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழர் களத்தின் மணப்பறை பகுதி பொறுப்பாளர் திரு .ராமு நன்றியுரை வழங்கினார் . நிகழ்வில் பெரும்பாலான வழக்கறிஞர்களும் , மாணவர்களும் பங்கு கொண்டனர் .நிகழ்வின் முன்னதாக தமிழர் பண்பாட்டு கலை குழு மாணவிகளின் தமிழர் தாயகத்தை மீட்கவேண்டும் தனி தமிழ் நாடு பிறக்கவேண்டும் என்ற பாடல் எழுசியூட்டுவதாக இருந்தது.
செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம் .

சனி, ஆகஸ்ட் 27, 2011

தூத்துக்குடியில் தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்






27.08.2011.- தூத்துக்குடி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கூடாது என்றும் , கச்சதீவை மீட்க கோரியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் படி தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பழைய நகராட்சி கட்டிடம் முன்பு நிகழ்ந்தது. ஆர்பாட்டத்தில் பெருமளவில் பெண்களும் , பொதுமக்களும் , மீனவர்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . தமிழர் களத்தின் பொது செயலாளர் திரு . அரிமாவளவன் அவர்கள் பின்வருமாறு பேசினார் .

தாய்த் தமிழ்நாட்டின் தமிழர்களே,

கூடங்குளம்!

அன்று ஓர் அழகிய சிற்றூர். நாம் பாடித் திரிந்த பழகி மகிழ்ந்த ஓர் இனிய ஊர். இன்று தென் தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் ஓர் அதிர்ச்சிச் சொல்லாக மாறி நிற்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகப் எத்தனையோ பேர் போராடியும்கூடத் தான் நினைத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்பதுபோல அரசு நடந்து கொண்டிருக்கிறது. அணுஉலை வந்துவிட்டது. பேரதிர்ச்சியுடன் பெருஞ்சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.

மறுபுறத்தில் எத்தனைக் காலம்தான் போராடுவது? என்று சலித்துப் போன மக்கள்! கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிற பட்டாக்கத்திபோல பயமுறுத்துகிறது. நமது எதிர்காலமும் நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

காவிரிக்காக தஞ்சை விவசாயிகள் போராடுகிறார்கள். மீதமுள்ள தமிழ்நாடு வேடிக்கை பார்க்கிறது! கச்சத்தீவுக்காக அல்லது மீனவர் படுகொலைக்காக ராமேசுவரம் மீனவர்கள் போராடுகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஈழத்தமிழருக்காக தமிழர்தேசிய இயக்கங்கள் போராடுகின்றன. மற்றவர்கள் பார்வையாளர்கள். அதுபோலவே கூடங்குளத்திற்காக ஒரு சில கிராமங்கள் இப்போது போராடுகின்றன. மீதித் தமிழகம் வேடிக்கை பார்க்கிறது. இந்த மாதிரியான நிலை ஆட்சியாளர்களுக்கு இன்னும் ஊக்கமாய் இருக்கிறது.

போராடுகிற மக்களுக்கிடையில் இனி ஒரு புரிந்துணர்வும், கைகோர்ப்பும், தோள்கொடுப்பும் இல்லையென்றால் தமிழர் நாம் எல்லோருமே விழப்போகிறோம், வீழ்த்தப்படப் போகிறோம். இது ஓர் எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, எதார்த்தமும்கூட!

இறுதியாக தமிழர் களத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நிகழ்வில் கலந்து கொண்டு போராட்டம் சிறப்பாக நடைபெற்றதர்காக நன்றி தெரிவித்தார்.

செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

தமிழர்களை காப்பாற்றக்கோரி மனித தொடரி !


கரூர் .26.08.2011 வெள்ளிகிழமை
ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முருகன், சாந்தன் ,
பேரறிவாளன் ஆகியோரின் கொலை தண்டனையை தடை செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் , உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மனித தொடரி போராட்டம் நடந்தது . நிகழ்வில் இந்திய அரசின் தமிழரை பழிவாங்கும் நோக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்ப பட்டன . மேலும் பேரறிவாளன் சிறையில் எழுதிய கடிதம் தமிழர் களத்தின் அமைபினரால் துண்டறிக்கையாக பரப்புரை செய்யப்பட்டது . போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிறையில் வாடும் மூவரின் படங்கள் தாங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையை தெரிவிப்பதாக இருந்தது .
நிகழ்வில் ம தி மு க , உலகதமிழர் பேரமைப்பு , தமிழர் களம் , தி க , பெரியார் தி க , கொங்கு இளைஞர் பேரவை , பெண்கள் தன் உதவி குழுக்கள் , தமிழர் முன்னணி , நாம் தமிழர் , தமிழர் உணர்வாளர் கூட்டமைப்பு , உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர் . நிகழ்வை ம தி மு க வினர் ஏற்பாடு செய்திருந்தனர் .

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

இந்தி (யா) அரசே அப்பாவி தமிழர்களை விடுதலை செய் !


ஊழலில் திளைத்து சுவைத்து எங்கும் தனது கொடிய வல்லாண்மையை நிலைநாட்ட ஆர்பரிக்கும் இந்தி (யா) அரசே , தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதால் உனக்கு இழப்புகள் அதிகம் . ராஜீவ் கொலையில் எவ்வித தொடர்பும் இல்லாத தமிழர்களை கொல்ல நினைப்பது உன் வெறிதனதையே காட்டுகிறது . உண்மையான குற்றவாளிகள் வெளியில் நலமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் எம்மவர்களை நீ கொல்ல நினைப்பது நியாயமல்ல .அவர்களை உடனே விடுதலை செய் !

புதன், ஆகஸ்ட் 24, 2011

அணுமின் நிலைய பேரிடர் குறித்துப் போராட அரிமாவளவன் அழைப்பு




தாய்த் தமிழ்நாட்டின் தமிழர்களே,

கூடங்குளம்!
அன்று ஓர் அழகிய சிற்றூர். நாம் பாடித் திரிந்த பழகி மகிழ்ந்த ஓர் இனிய ஊர். இன்று தென் தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் ஓர் அதிர்ச்சிச் சொல்லாக மாறி நிற்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகப் எத்தனையோ பேர் போராடியும்கூடத் தான் நினைத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்பதுபோல அரசு நடந்து கொண்டிருக்கிறது. அணுஉலை வந்துவிட்டது. பேரதிர்ச்சியுடன் பெருஞ்சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.
மறுபுறத்தில் எத்தனைக் காலம்தான் போராடுவது? என்று சலித்துப் போன மக்கள்! கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிற பட்டாக்கத்திபோல பயமுறுத்துகிறது. நமது எதிர்காலமும் நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
காவிரிக்காக தஞ்சை விவசாயிகள் போராடுகிறார்கள். மீதமுள்ள தமிழ்நாடு வேடிக்கை பார்க்கிறது! கச்சத்தீவுக்காக அல்லது மீனவர் படுகொலைக்காக ராமேசுவரம் மீனவர்கள் போராடுகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஈழத்தமிழருக்காக தமிழர்தேசிய இயக்கங்கள் போராடுகின்றன. மற்றவர்கள் பார்வையாளர்கள். அதுபோலவே கூடங்குளத்திற்காக ஒரு சில கிராமங்கள் இப்போது போராடுகின்றன. மீதித் தமிழகம் வேடிக்கை பார்க்கிறது. இந்த மாதிரியான நிலை ஆட்சியாளர்களுக்கு இன்னும் ஊக்கமாய் இருக்கிறது.
போராடுகிற மக்களுக்கிடையில் இனி ஒரு புரிந்துணர்வும், கைகோர்ப்பும், தோள்கொடுப்பும் இல்லையென்றால் தமிழர் நாம் எல்லோருமே விழப்போகிறோம், வீழ்த்தப்படப் போகிறோம். இது ஓர் எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, எதார்த்தமும்கூட!

உங்களை அன்போடு அழைக்கிறேன்.

வரும் 27 ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மற்றும் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக தமிழர்களம் தூத்துக்குடியில் ஓர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பேரிடரிலிருந்து காக்கவேண்டும் என்று உணர்கிற நீங்கள் வரவேண்டும். மட்டுமல்ல உங்களைச் சார்ந்தவர்களையும் வரச்சொல்லுங்கள். போராடுவோம். வென்று காட்டுவோம்.

உங்கள்
அரிமாவளவன்

இறுகிப் போன மத கட்டுமானங்களை உடைப்போம் வாருங்கள்


இறுகிப் போன மத கட்டுமானங்களை உடைப்போம் வாருங்கள்
புத்தக வெளியீட்டு விழாவில் அரிமாவளவன் உரை

திரு. அன்வர் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “கருப்பாயி என்கிற நூர்ஜகான்” என்ற நூல் வெளியீட்டுவிழா திருநெல்வேலியில் நடந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக சாதிக் கொடுமையை எதிர்த்து நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மதம் மாறிய தமிழர்களின் வாழ்வு எத்தகைய சிக்கல்களுக்குள் சிக்கிக்கிடக்கிறது என்பதை விவரிக்கும் நாவல் இது. வெளியீட்டு விழாவிற்கு பழம்பெரும் எழுத்தாளர் தி.க.சி. அவர்கள் தலைமையில் நடந்தது. அரிமாவளவன் நிறைவுரை ஆற்றினார். “மதம் வேறு! சமயம் வேறு! மதம் என்பது கோட்டுபாடுகள், கோயில்கள், பூசாரிகள் ஆகியனவற்றைச் சுற்றியே இருக்கும். பொருளாதாரமும் அதிகார வெறியுமே அதன் உள்ளடக்கம். சமயம் என்பது முற்றிலும் வேறானது, சமயம், மனிதனையும் ஆன்மீகத்தையும் மையப்படுத்தியிருக்கும். நாராயணகுருவும் இயேசுவும் கபீரும் சமயவாதிகள். ஹிரோசிமா நாகசாகியில் அணுகுண்டு போடக் காத்திருந்த விமானிகளை ஆசிர்வதித்து அனுப்பியவர் ஒரு கிருத்துவச் சாமியார். அவர் மதவாதி. மதங்களுக்குள் மனிதர்கள் இருக்க முடியாது. அப்படியானால் லட்சக்கணக்கில் கூடுகிறார்களே? என்று கேட்கலாம். அவர்களுக்கு மயக்க மருந்து போட்டு பூசாரிகள் இழுத்து வருகிறார்கள். ஆத்திகத்தில் மட்டுமல்ல நாத்திகத்திலும் பூசாரிகள் உண்டு. வீரமணி பகுத்தறிவு பேசுகிற பெரிய பூசாரி! அவரும் மடம் வைத்துத்தான் நடத்துகிறார். “சாதிகளுக்கு இடையே இருக்கிற மண்சுவர்கள் உடைந்தால் போதாது மனச்சுவர்கள் உடையவேண்டும்” என்றார் திரு. தி.க.சி. அவர்கள். அவர் சொன்ன அந்த மனச்சுவர்கள் உடைய வேண்டுமென்றால், மதங்கள் உடையவேண்டும். மதமாற்றம் நடக்க வேண்டும். அந்த மத மாற்றம் என்பது இந்து மதத்திலிருந்து இசுலாம் நோக்கிப் போவதோ அல்லது இசுலாத்திலிருந்து பவுத்தம் நோக்கிப் போவதோ அல்லது பவுத்தத்திலிருந்து கிருத்துவம் நோக்கிப் போவதோ இல்லை. கிருத்துவ மதத்தை உடைத்து கிருத்துவச் சமயத்திற்கு போக வேண்டும். அப்போது அங்கு சிலுவைச்சாவுகளும், சிலுவைப்போர்களும் சுரண்டல் வல்லாதிக்கங்களும் இருக்காது. இந்து மதத்தை உடைத்து இந்து சமயத்திற்குப் போகவேண்டும். அங்கு சாதீய ஏற்றத்தாழ்வுகளும் பிராமணீயக் கொடுமைகளும் இந்துத்துவாப் பிதற்றல்களும் இருக்காது. இசுலாம் என்கிற மதத்தை உடைத்து இசுலாம் என்கிற சமயத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அங்கே மதத்தின் பேரால் வன்முறைகளும், ஒடுக்குமுறைகளும் இருக்காது. ஆகவே, மதங்களும் மடங்களும் உடைந்தால்தான் மனிதம் வாழும். மடமை வீழும். பல்வேறு மதங்களுக்குள் சிக்கித் தவிக்கிற சமயவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாந்த உரிமைப் போராளிகள் ஓரணியில் இன்று நிற்க வேண்டும். உள்ளிருந்தே உடைப்பை ஏற்படுத்த வேண்டும். முட்டைகளை உள்ளிருந்தே உடைத்தால்தான் புதிய உயிராற்றல் ஒன்று பிறக்கும். கூமூட்டைகளை மட்டுமே அடித்து உடைக்கவேண்டும்.
மதங்கள் மாந்த உரிமைகளை நசுக்குகின்றன. மதத்தின் பேரால் அரசுகளும் அரக்கர்களும் மனிதர்களைக் கொல்கின்றார்கள். மதம் மாறுவதால் மாற்றம் வந்துவிடும் என்று எண்ணியவர்கள் இன்று ஏமாற்றத்துடன் நிற்கிறார்கள். இவர்கள் பழைய மதத்திற்குத் திரும்புவது என்பது எரிநெருப்பா எண்ணைச்சட்டியா என்கிற கதையில் போய் முடியும். எந்த உரிமைகளையும் யாரும் நமக்கு அள்ளிக் கொடுக்கப்போவதில்லை. கேட்டுப்பெற்றால் அது விடுதலையே அல்ல. எடுத்துக் கொள்வதே விடுதலை. தரமறுக்கிறவனிடம் நமது உரிமைகளை அடித்துப் பிடுங்குவதே அறப்போராட்டம்! அதுவே, உண்மை விடுதலை. அந்த விடுதலைப் பயணத்தில் இந்த நூலும் ஒரு படைக்கருவியாக இருக்கும் என்று நம்பி வாழ்த்துகிறேன்” என்றார்.
கூட்டத்தில் இம்மானுவேல் தேவேந்திரரின் மகள், எழுத்தாளர் தொ.பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழர் உயிர்கள் காப்பாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்



23.8.2011 கரூர் .
கரூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழர்கள் சாந்தன் , பேரறிவாளன் , முருகன் ஆகியோரின் உயிர் பறிக்கும் மரண தண்டனையை தடை செய்ய கோரி கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நிகழ்ந்தது.
உலக தமிழர் பேரமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சந்திரன் , தமிழர் களம் ரவிசந்திரன் , உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . இந்த ஆர்பாட்டத்தை வழக்கறிஞர் ராசேந்திரன் , சாமியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர் .
ஆர்பாட்டத்தில் தமிழர் களம் ரவிச்சந்திரன் இந்திய அரசு தொடர்ந்து தமிழர் விரோத போக்கை செயல்படுத்தி வருவது தமிழரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் , அப்பாவி தமிழர்கள் தண்டிகபடுவது வன்மையான செயல் என்றும் தமிழக அரசு உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011



விரைவில் வெளிவருகிறது
அரிமாவளவனின்
நெருப்புவிதைகள்.


புத்தகம் கிடைக்குமிடம்:

பாவாணர் படமனை,
திருச்சி முதன்மை சாலை,
காந்திகிராமம்,கருவூர்-4
9443363587, 9843955627

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

ராஜீவ் கொலைவழக்கு - வெளிவரும் உண்மைகள் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் அவர்கள் குமுதம் இணைய தளத்திற்காக அளித்த நேர்காணல் ஒரு திருப்புமுனையை நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது நிதர்சனம் . எனவே தமிழர்களே மேற்கண்ட நேர்காணலின் கான்பொளிப் பதிவை thamizham.net , kumutham.com. போன்ற தளங்களில் காணலாம் .

செய்தி : ஊடகபிரிவு தமிழர் களம் .

புதன், ஆகஸ்ட் 17, 2011

நாடற்ற குடிகள் என்பதாலேயே நாதியற்றவர்களானோம்! அரிமாவளவன்




தொல்காப்பியம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட நூல் என்று 900க்கும் மேற்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிஞர் குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம் என்ற நூல் வெளியீட்டுவிழா திரு. அரிமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது. இன உணர்வாளர் சென்னிமலை விசுவநாதன் நூலை வெளியிட தமிழர் சமயம் முனைவர் தெய்வநாயகம் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். முனைவர் அருகோ, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், நகைமுகன், ம. பொன்னிறைவன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தமிழர்களப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் உரையில், “தமிழர்கள் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்! கன்னடக் களப்பிரர்கள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்நாட்டை வன்கவர்பு செய்ததிலிருந்து இழப்புக்கு மேல் இழப்புதான். கண்டவனெல்லாம் வந்தான். வந்தவனெல்லாம் ஆண்டான்! ஆண்டவனெல்லாம் சுருட்டினான். களப்பிரர் முதல் கருணாநிதி வரை சுருட்டல்தான்! இன்னும் இழந்து கொண்டே இருக்கிறோம்.
கோடிக்கணக்கில் சுருட்டியவர்களுக்கு ஓராண்டு ஈராண்டு சிறைத் தண்டனை என்றால் எல்லாருக்கும்கூடத்தான் சுருட்ட ஆசை வரும். இழந்த சொத்துக்களை வட்டியும் முதலுமாக மீட்பதுதான் இயற்கை நீதி. ஆனால், தமிழர்கள் இழந்தவைகளைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான். சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்று குணா மெய்ப்பிக்கிறார். சமற்கிருதம் என்ற சொல்ல “உருவாக்கப்பட்டது” என்றுதானே பொருள். தமிழரின் நான்மறையைத் தழுவித்தான் நான்கு வேதங்கள் உருவாக்கப்பட்டன என்று ஐயந்திரிபட ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார் குணா. ஆனால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழனின் ஆதாரங்களுக்கு யார் செவி மடுக்கப் போகிறார்கள்?

பத்மானபுரம் சொத்துக்கள் தமிழரின் சொத்துக்கள். ஆனால், இன்று தில்லியும் கேரளாவும்தான் அந்தச் சொத்துக்களுக்குப் போட்டி போடுகின்றன. இழந்த தமிழன் வேடிக்கை பார்க்கிறான். 1956ல் எல்லைகளை இழந்தோம். திருவனந்தபுரத்தை இழந்தோம், பெங்களூரை இழந்தோம், திருப்பதி இழந்தோம், எல்லைகளை இழந்தோம், காவிரி இழந்தோம், பாலாறு இழந்தோம், நொய்யலாறு இழந்தோம் இன்னும் பல ஆறுகளை இழந்தோம். இன்று அதன் விளைவுகளை அறுக்கிறோம். தமிழகம் பாலையாகிறது.

தமிழிசைதான் ஏழிசை! களவாடிச் சேர்த்தது கர்நாடக இசை! ஆனால், கர்நாடக இசை கோலோச்சுகிறது. ஏழிசை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தமிழிசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. சமற்கிருதம் ஓதப்படுகிறது. தமிழில் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவுகிறான். ஆக நாம் உருவாக்கிய இசையை நாமே இழந்தோம்.

களறியின் அடிகளே பரதநாட்டியத்தின் அபிநயங்களாயின. களரி இல்லாது போனது. பரதநாட்டியம் தாம் தீம் என்று ஆரவாரமாய்ப் போடுகிறது!

அணுவியலின் தந்தை டெமாக்ரட்டசு என்கிறது இணைய உலகம். அவன் தமிழகம் வந்து அணுவியல் கற்றது தமிழறிஞர் கணிஆதனிடம். கணிஆதன் கற்றது நற்கணியாரிடம். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறுமா? தமிழரின் அணுவியல் ஏற்றம் பெறாததால் ராமர் பிள்ளையின் கன்னெய்யை இழந்தோம். ராமர் பிள்ளை உருவாக்கிய கன்னெய்க்கும் தண்ணீருக்கும் ஒரு மின்துகள் மாற்றம் இருந்தது. அது அணுவியல் மாற்றத்தால் நிகழ்ந்தது. அது தமிழரின் கலை. இந்தி விஞ்ஞானிகள் இயற்பியல் வேதியல் மட்டுமே அறிந்து வைத்தவர்கள். அவர்கள்தான், ராமர் பிள்ளையை பித்தலாட்டம் என்றார்கள். மாறணம் (ஆல்க்கமி) இழந்தோம். செம்பைப் பொன்னாக்கும் பொன்மாறணம் இழந்தோம். இன்று ஆலுக்காஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படித் தமிழர் இழந்தது எண்ணற்றவைகள். வந்தேறிகளின் சூழ்ச்சியால் இழந்தோம் இழந்தோம் எல்லாவற்றையும் இழந்தோம். இழப்பதற்கு இனி ஏதுமின்றி ஏதிலிகளாய் இன்று திரிகின்றோம். சொந்த மண்ணில் அன்னியப்பட்டுக் கிடக்கின்றோம். ஆட்சி இழந்து வந்தேறிகளிடம் கைகட்டி தமிழன் நிற்கிறான்.

கலைகளை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம், வானியல் இழந்தோம், வரலாறு இழந்தோம். இறுதியில் முள்ளிவாய்க்காலோடு ஈழத்தில் 3 லட்சம் சொந்தங்களையும் இழந்தோம். கடற்கரையில் நம் மீனவர்களை இழந்தோம். இன்று அநியாயமாக மரண தண்டனை என்ற பேரில் மூன்று அப்பாவித் தமிழர்களையும் இழக்கப் போகிறோம்.

உலகில் நாம் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஒன்றரைக் கோடிச் சிங்களரிடம் நாம் தோற்றோம். கர்நாடகத்தில் தமிழர்களை இழந்தோம். பர்மாவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இழந்தோம். வரலாறு நெடுக சொந்தங்களையும் சொத்துக்களையும் பெண்டு பிள்ளைகளையும் இழந்தே வந்திருக்கிறோம். காரணம் நாடற்றவர்கள் நாம்! நாடற்றவர்களெல்லாம் இந்த நானிலத்தில் நாதியற்றவர்கள் என்பதை உணர மறுக்கிறோம்!

மீட்க வேண்டியவைகளை மீட்காமல் இனி தமிழனுக்கும் வாழ்வில்லை எதிர்காலமுமில்லை. அப்படி அனைத்தையும் மீட்க வேண்டுமென்றால், தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். 50 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகளுக்கு ஒரு நாடு இருக்கும்போது 800 பேர் இருக்கிற வத்திக்கானுக்கு ஒரு நாடு இருக்கும் போது 12 கோடித் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைந்தால் அது என்ன பாவமா?

நாடற்ற குடிகள் என்போர் நாதியற்ற குடிகள் என்பதை உணர்வோம்! தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை உள்ளத்தில், இல்லத்தில் ஊரில், நாட்டில் பதியுங்கள்.”

விழா சென்னை சாந்தோம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டுக் குழுவினரின் “வருவாண்டா பிரபாகரன்” உள்ளிட்ட பாடல்களால் விழா அரங்கமே முறுக்கேறியது.

செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம்

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

''தொல்காப்பியத்தின் காலம் '' நூல் வெளியீடு






கடந்த ஞாயிறு அன்று சென்னையில் ஆய்வறிஞர் திரு குணா அவர்கள் எழுதிய ''தொல்காப்பியத்தின் காலம் '' என்ற அரியதொரு ஆய்வு நூல் வெளியிடப்பட்டது . நிகழ்வை சென்னை மாவட்ட தமிழர் கள பொறுப்பாளர் திரு சாம்சன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் .
தமிழர் களத்தின் தமிழர் பண்பாட்டு கலை குழுவினரின் கலை நிகழ்வுடன் துவங்கியது. பாதை அமல் அவர்களின் கல்லூரி மாணவிகளின் மேடை நாடகம் அனைவரையும் சிந்திக்கும் படி இருந்தது. நிகழ்வில் டேவிட் பிரபாகரன் அவர்கள் அய்யாவின் நூலை அறிமுகம் செய்து துவக்க வுரை நிகழ்த்தினார் . நூலை திரு. பழனியப்பன் விஸ்வநாதன் வெளியிட முனைவர் தெய்வநாயகம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . தமிழர்களத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ''காக்க மறந்தாயே '' என்ற ஈழத் தமிழர்களின் அவலத்தை கண்முன் காட்டும் குறுவட்டினை பாவலர் செம்பியன் அவர்கள் வெளியிட திரு. பொன்னிறைவன் அவர்கள் பெற்றுக் கொண்டார் . புலவர் பாவிசைகோ , முனைவர் அருகோ, தோழர் பெ. மணியரசன் , பாவலர் இராமச்சந்திரன் , தமிழர்களத்தின் அரிமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . ஆய்வறிஞர் குணா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் . நிகழ்வின் இறுதியாக மை பா . சேசுராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார் . முன்னதாக பேராசிரியர் சாம்சன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . பாவலர் பாமரன் அவர்கள் அய்யாவின் நூல்களை வரிசையாக தொகுத்து பாடலாக பாடியது சிறப்பாக இருந்தது. விழாவில் கல்லூரி மாணவர்களும் தமிழ் அறிஞர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா




காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா 02.08.11 அன்று கருவூரில் அவரது இல்லத்தில் தமிழர் களம் சார்பாக கொண்டாடப்பட்டது . நிகழ்வில் அணைத்து தமிழ் உணர்வாளர்களும், அய்யாவின் நண்பர்களும் கலந்து கொண்டு அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் , அய்யாவின் வழியில் தமிழர் தேசியத்தை வென்றெடுப்போம் என்றும் உறுதிபூண்டனர். நிகழ்வில் தமிழர் கள சட்ட ஆலோசகர் , வழக்கறிஞர் ஜீவானந்தம் அய்யாவின் பணிகளை பாராட்டி பேசினார். முடிவில் தமிழர் கள இலக்கிய பிரிவு பொறுப்பாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார் . ஓவியர் இல பரணன், உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் வழியில் தமிழர்களை ஒருங்கிணைப்பது என்றும்,
2. கொளத்தூரில் கொள்ளணை கட்ட தமிழக அரசை வலியுறுத்தவும், அணைக்கு ''பூ.அர.குப்புசாமி கொள்ளணை'' என்று பெயரிட வேண்டும் என்றும்,
3. நொய்யல் ஆற்றின் பாசன கிளை வாய்காலுக்கு ''நொய்யல் தந்தை '' பூ.அர.குப்புசாமி பெயரிட வேண்டும் எனவும்
4. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிவடைந்து இன்னமும் சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன், ஆகியவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் .
5. திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட வேண்டும் எனவும்
6. வாங்கல் - மோகனூர் ஆற்றுபாலதிற்கு
பூ.அர.குப்புசாமி அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் எனவும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தமிழர் களம் . ஊடகபிரிவு . கரூர் .

தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை!




தொல்காப்பியம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மெய்ப்பிக்கிறார் அறிஞர் குணா. மிக நுட்பமான இலக்கண இலக்கியத்தைக் கொண்ட தொல்காப்பியமே 7000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றால் நம் தமிழ் மொழி?! வடுக வந்தேறிகளின் சூழ்ச்சியால் நமது வரலாறு சிதைக்கப்பட்டது கடந்த காலம்! இது விடுதலையை நோக்கி வீறு கொண்டு நடைபோடும் காலம்! அறிஞர் எழுதிய தொல்காப்பியத்தின் காலம் நூல் வெளியீட்டு விழா வரும் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது. வரவேண்டும்! நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள் வரச்சொல்லி!
தமிழர் களம்

தமிழ்நாட்டு அரசியலே தாயக விடுதலையின் திறவுகோல்! பாவலரேறு விழாவில் தமிழர்களம் அரிமாவளவன் எழுச்சியுரை!


புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு. ந.மு. தமிழ்மணி, சொல்லாய்வறிஞர் அருளியார், தமிழர்களத்தின் புதுவை மாநிலச் செயலாளர் பிரகாசு உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் அரிமாவளவன் சிறப்புரையாற்றினார்.
“முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண்ணில் நடந்து வருகிற ஓர் இன அழிப்புக் கொடுமைகளின் ஒரு பகுதி! இப்படித்தான் தமிழினம் அங்கு காலாகாலமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை உறங்கிக் கிடந்த உலகிற்கு உசுப்பிச் சொன்ன ஓர் நிகழ்வு! அறுபது ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கிற அக் கொடுமைகள் ஈராயிரம் ஆண்டுகளாக உலகப்பரப்பில் தமிழருக்கு நடக்கும் அநீதிகளுக்கு மற்றுமொரு சாட்சி!
கன்னடக் களப்பிரர்கள் 300 ஆண்டுகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து ஆண்டபோது தமிழரின் தலைகளைக் கொய்து மதுரையைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொக்கரித்தார்கள் என்பது வரலாறு! ஆக, ராசபக்சேக்களும், கோத்தபாயாக்களும் அன்றே இருந்திருக்கிறார்கள்!
நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது.
மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின!
பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன!
கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.
தமிழகக் கடற்கரைகளில் 540க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.
தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்!
மலேசியாவில், மணிப்பூரில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்!
இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர். அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது. இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது. இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்! ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்! சொல்லடித் தீரர்கள்!!
ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் சிங்களப் பேரினவாதிகள் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்! ஈழத்தை முளையிலேயே கிள்ளி நசுக்கி எறிந்துவிட வேண்டும் என்பதில் எல்லாரையும்விட இந்தியாதான் முண்டியடித்துக் கொண்டு முனைந்து நிற்கிறது. ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது! இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு.
எதிரி தில்லியில் இருக்கிறான்! அவன் தமிழர்நாட்டை எண்ணி எண்ணியே பதை பதைக்கிறான்! “பாவிப் பயல்கள் எப்போது தனித்தமிழ்நாடு கேட்பார்களோ” என்று உறங்காமல் விழித்துக் கிடக்கிறான்! தில்லியில் சுருண்டு கிடக்கிற அந்த நச்சு நாகத்தின் உச்சந் தலையில் ஓங்கி அடிக்க வேண்டுமென்றால் “இனத்திற்கு ஒரு நாடு” என்கிற உலகப் போக்கிற்கு தமிழ்நாட்டில் நாம் உருக் கொடுக்க வேண்டும்! உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்!! தாயகத்துத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற வேண்டும். இதுவே, பாவலரேறு அவர்களும் கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே கனிந்தும் கடிந்தும் சொன்னது!
தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும்! அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல! அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை. நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக மடிய இந்தியப் படைத்துறை மற்றும் அயலகத் துறை அதிகாரிகள் அதிலும் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலத்து மலையாள அதிகாரிகள் படை வெறியாட்டம் போட, தமிழகத்தின் வீதிகளில் அவர்தம் சொந்தங்கள் தகதகக்கும் தங்கக் கடைகளை விரிக்கத் தொடங்கினார்கள். எவ்வித அச்ச உணர்வும் இன்றி அவர்கள் இங்கே கோலோச்ச முடிகிறது. காரணம், தன் எதிரி யார்? என்பதை விளங்காதத் தமிழர்கள் இங்கே இருக்கிறார்கள். “வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்” என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், “நண்பன் யார்? எதிரி யார்?” என்று வகுத்துக் கொண்ட பின் “களமிறங்கு” என்றான். தமிழ்நாட்டில் இது போராடும் காலம்! விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது! நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்!
தனித் தமிழ்நாடும் தனிஈழ நாடும் நம் இரு விழிகள்!




--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

"தளவாய்"
பனிவளன்(+919842978005)

யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து ஒளித்து வை! காங்கிரசுக் கட்சியின் மீது அரிமாவளவன் கடும் தாக்கு!!



“உள்ளாட்சித் தேர்தலில் ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது” என்று, முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். “காந்தி, நேரு, காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் செய்த தியாகம்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறை சென்றனர். ஆனால், கோடி கோடியாக ஊழல் செய்துவிட்டு திமுகவினர் சிறைக்குச் செல்கின்றனர்.” இப்படியெல்லாம் கூச்ச நாச்சமே இல்லாமல் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்புகூட இல்லாமல் பேசி இருக்கிறார், இளங்கோவன்.

இலங்கைப் பிரச்சனையில் காங்கிரசின் கபட நாடகத்திற்கு இப்போதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். இப்போது தங்களை மாசற்ற அரசியல்வாதிகள்போல இளங்கோவன் சித்தரிக்க முயல்கிறார்.

உத்திரப் பிரதேசம் குறித்துச் சொல்லும்போது ராகுல் காந்தி நான் இந்தியன் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் என்கிறார். மாயாவதி ஆட்களின் நிலப்பறிப்புப் பற்றி ராகுல் சொல்கிறார். 50 ஆண்டுகளாக திரும்பத் திரும்ப வந்த காங்கிரசு அங்கு செய்ததும் அதைத்தானே! அதனால்தானே மக்கள் முலயம்சிங் பக்கம் திரும்பினார்கள். உ.பி. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறார். ஆனால், காங்கிரசு ஆட்சியில் விதர்பாவில் நடந்த விவசாயிகளின் தற்கொலைகள் நாடறிந்த கேவலம்! அதிலும் இழிவு என்னெவென்றால், அந்த விவசாயிகளுக்கு 72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு அத்தனையையும் அமுக்கிக் கொண்டு போனது காங்கிரஸ்காரர்கள்தான். சொட்டுக் காசுகூட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதை ஏன் மறைக்கிறீர்கள்?

அசன் அலி என்பவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 74ஆயிரம் கோடி வரி ஏய்ப்புத் தொடர்பான உசாவலை முடக்கி வைத்திருப்பது யார்? என்று சோனியாவிடம் கேட்டாலேயே விளங்கி விடுமே!

அயல் நாட்டு வங்கிகளில் அதுவும் குறிப்பாக ஸ்விஸ் வங்கிகளில் இருக்கிற இந்தியர்களின் கருப்புப் பணத்தைப் பற்றிய பட்டியலை வெளியிட பிரனாப் முகர்ஜி மறுப்பது ஏன்? 1991 நவம்பர் மாதத்தில் வெளிவந்த ஒரு கணக்கின்படி ராசீவ் காந்தி சுவிஸ் வங்கியில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தார் என்று ஓர் அறிக்கை வெளியானதே! ராசீவ் காந்தியின் மறைவிற்குப் பிறகு அந்த முழுத் தொகைக்கும் வாரீசானது சோனியா காந்திதானே! இன்றைக்கு அந்தப் பணம் வட்டி, குட்டி எல்லாம் போட்டு எவ்வளவாகக் குவிந்து கிடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! ஒரு வேளை இந்தக் குட்டெல்லாம் வெளிவந்துவிடும் என்று நடுங்குவதால்தானோ பிரணாப் முகர்ஜி பட்டியலை வைத்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்?

அலைக்கற்றை ஊழலில் 60 விழுக்காட்டு ஊழல் தொகை யாருக்குப் போனது என்று சோனியா அம்மையாரைத்தான் கேட்க வேண்டும். சிறையில் உள்ள ராசா சிதம்பரத்தின் ரகசியம் பற்றி இப்போதுதான் மெல்ல உடைக்கிறார். அவ்வளவையும் உம்மென்று பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கும் பதறுகிறார். அவர்களையும் உள்ளே தூக்கி வைத்து விசாரிக்க வேண்டியதுதானே!

காமன் வெல்த் போட்டியில் காங்கிரசுக் கல்மாடி அடித்தது சில கோடிகள்! மீதிப் பல கோடிகள் போன திசை என்ன? அவரும்கூட இப்போது “எனக்கு மறதி நோய்” என்று ஒரேயடியாய் வழக்கு விசாரணையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டார்!

இந்தியன் ஏர் லைன்ஸ் ஏன் திவாலாகியது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் லாபம் தரக்கூடிய போக்குவரத்துத் தடங்களை ஏன் யாருக்கு விட்டுக் கொடுத்தது என்றும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேலைக் கேட்டால்தான் தெரியும். ஏர் இந்தியா நட்டத்தில் நலிந்துபோக காங்கிரசுக் கொள்ளை காரணமாய் இருந்தது. ஆனால், அதைத்தூக்கி நிறுத்த மட்டும் அப்பாவி இந்தியர்களின் வரிப்பணம்தான் வேண்டுமா? விமானச் சேவையையே நிர்வகிக்க இயலாத நீங்கள் நாட்டை நலம்பட நடத்துவீர்களா?

நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மத்திய ரிசர்வ் வங்கியில் நடத்திய ஓர் சோதனையின்போது அங்கே பெரும் அளவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு இருந்தது பிடிபட்டது! இது கைப்பற்றப்பட்டது கள்ளனிடமும், கொள்ளைக்காரனிடமும் அல்ல! மத்திய ரிசர்வு வங்கியில். ஏன் காங்கிரசு அரசு அதுகுறித்து மூச்சுப் பேச்சு இன்றி அமைதி காக்கிறது?
ஆக, பணவீக்கம் என்று பிதற்றுவதெல்லாம் உங்களது தரிகெட்ட அரசியலினாலா அல்லது பொருளாதாரத்தினாலா?

20 ஆயிரம் பேரைக் கொன்றொழித்த போபால் விசவாயுக் கசிவுக்குக் காரணமான ஆன்டர்சன் என்ற அமெரிக்கனை கனகச்சிதமாகத் தப்பிக்க வைத்தது உங்களது காங்கிரசு ஆட்சி இல்லையா?

1984ல் நடத்தப்பட்ட சீக்கியப் படுகொலைக்குக் காரணனும் அதைச் செய்யச் சொல்லி ஆணையிட்டவனும் யார்? காங்கிரசுக்காரர்கள் காரணமில்லையா?

அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அறிவித்த பிறகு நாட்டில் நெருக்கடி நிலை அறிவித்து அவர் செய்த அட்டூழியங்கள் பற்றி நீங்கள் அறியாததா அல்லது படிக்காததா? கருத்துச் சுதந்திரத்திற்கு அவர் அளித்த மதிப்பு உலகறிந்த இழிவு என்பது உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது?

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர விமான நிலையத்தில் உங்கள் “இளைய தங்கம்” ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு 9 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டதை நாட்டின் கண்களிலிருந்து மறைத்துவிட்டீர்கள். ஒரு லட்சத்து அறுபதாயிரம் அமெரிக்க டாலரோடு அவர் அங்கு பிடிபட்டார். அப்படிப் பிடிபட்டபோது கொலம்பிய போதைப் பொருள் கடத்தல்காரனின் மகளும் ராகுல் காந்தியின் “மிக நெருங்கிய” தோழியுமான வெரோனிக் கார்ட்டெலியோடு பிடிபட்டார் என்பதில் உண்மையில்லையா?
இறுதியில் அப்போதைய பிரதமர் வாச்பேயி தலையிட்டு அவரை வெளியில் தெரியாமல் தப்பிக்க வைத்தார். ஆனால் பாஸ்டன் விமான நிலையத்தில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவிலுள்ள ஓர் சமூக அமைப்பு அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? என்று விவரம் கேட்டுத் தொணப்பியது. அமெரிக்கக் காவல்துறை உண்மையைச் சொல்ல ராகுலிடம் இசைவு கேட்டது. மறைக்க ஒன்றுமில்லை என்றால் சொல்லித் தொலைத்துவிட வேண்டியதுதானே!

சரி, இனி இந்த அன்னை சோனியாவின் கதைக்கு வருவோம்! தலைமையமைச்சர் பதவியைத் துறந்த ஈகி என்று இன்று உமது கட்சிக்காரர்கள் மேடைகளில் முழங்கி முழங்கி முத்தெடுக்கிறார்கள். 2004ஆம் ஆண்டு நடந்தது என்ன?
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி இத்தாலியரான சோனியா காந்தி பிரதமர் ஆக முடியாது என்று இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு சுப்பிரமணியன்சாமி ஒரு கடிதம் போட்டு வைத்திருந்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அந்தச் சட்டப் பிரிவை மேற்கோள் காட்டி “நீங்கள் ஆக முடியாது” என்று மதியம் 3.30 மணிக்கு அதாவது மாலை ஐந்து மணிக்கு சோனியா காந்தி பதவியேற்பதற்கு தயாராயிருந்த வேளையில் “குண்டு” போட்டார்.
340 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடைய பெயரை முன்மொழிவதாக கடிதங்களை அவர் அனுப்பியிருந்தார். ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி தன் பெயரைத் தானே பரிந்துரைத்திருந்தார் என்பதும் “கேவலமான” ஒரு உண்மை.
சோனியா தலைமையமைச்சர் ஆகவேண்டும் என்று விரும்பியதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அவர் பிரதமர் ஆக முடியாது என்ற நிலை வந்தபிறகுதான், தியாக நாடகம் அரங்கேறியது. அதுவரைக்கும் நரி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எவ்வி எவ்விக் குதித்ததது. எட்டாது போனபிறகு, “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று நகர்ந்து விட்டது
ஹாவர்ட்டு பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி நன்கொடை ஒதுக்கீட்டில்தான் இடம் பிடித்தார். அந்த ஆண்டு 11 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்தது, வேறு யாருமல்ல ராசீவ் காந்தியின் போபர்சு பீரங்கி ஊழலில் பேர் அடிபட்ட இந்துஜாதான்!
ஆனால் மூன்றே மாதத்தில் பல்கலைக் கழகத்திற்கு ராகுல் காந்தி டேக்கா கொடுத்துவிட்டுக் கிளம்பி விட்டார். ராசீவ் படுகொலைதான் அவர் பல்கலைக் கழகத்தைவிட்டு ஓடுவதற்கான காரணம் என்று பலர் நம்பும்படி சரடு விடுகின்றனர். அது சரி! ஆனால், பொருளியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று ராகுலே விடும் சரடுதான் சகிக்க முடியாத சரடு! தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் அவர் படித்தபோது, இந்தியில் தோற்றுப்போன “அறிவாளி” என்பது உலகத்திற்குத் தெரியாது. ஆனால் இந்தி பேசும் உ.பி. மாநிலத்திற்குத்தான் அவர் இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சேவை செய்யப் போகிராராம்!
நூலைப் போலச் சேலை! தாயைப் போல பிள்ளை என்பார்கள்.
சோனியா காந்தி தேர்தலில் வேட்பாளர் பற்றியத் தகவல் அளிக்கும்போது தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சுப்பிரமணியன்சாமி இது குறித்து எதிர் மனு ஒன்று தொடுத்தார். தொடுத்தவுடன் சோனியா காந்தி பட்டென்று தான் கொடுத்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். சோனியா காந்தி உயர்நிலைப் பள்ளி தேறாதவர். கருணாநிதி மாதிரி!
காமராசரும் பள்ளி சென்று படிக்காதவர்தான்! ஆனால், இம்மாதிரிப் பொய் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் அல்லர் அவர்கள்!
ராகுல் காந்தி, “படித்த இளைஞர்களே வாருங்கள், அரசியலில் குதியுங்கள்” என்று ஆர்ப்பாட்டமாகப் பேசி வருகிறார். ஆனால் தாங்கள் ஏதோ மெத்தப் படித்த மேதாவிகள் என்று இவரும் இவரது தாயாரும் போடுகிற புரட்டு நாடகங்கள் நாற்றமடிக்கின்றன!
அது என்ன ராகுல் காந்தி? காந்திக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற மாபெரும் தலைவர்கள் காந்தியத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் இவர்கள் தேர்தலுக்கு மட்டுமே காந்திப் பேரைப் பயன்படுத்துகிறார்கள். ராகுலின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) ராகுல் வின்சி என்ற இத்தாலியப் பெயரில்தானே இருக்கிறது! பெயரில்கூட உண்மையை உடைக்காத இவர்கள் தேசத்தின் தலைவராகத் துடிக்கிறார்.

ராகுல் வின்சி மீதும் சோனியா மீதும், ராசீவ் மீதும், காங்கிரசுக் கட்சியின் மீதும்தான் அண்மைக் காலங்களில் எத்தனை எத்தனை ஊழல் புகார்கள்! ஏர் இந்தியா ஊழல், கே.ஜி. எரிவாயு ஊழல், அலைக் கற்றை ஊழல், காமன் வெல்த் விளையாட்டுகளில் ஊழல், அசன் அலி ஊழல், சுவிஸ் வங்கி ஊழல், போபர்சு தகரிப் பேர ஊழல், ஆதர்சு ஊழல், இப்படிப்பட்டப் பட்டியலில் அடித்த பணம் பல இலட்சம் கோடிகளாகப் போய்க் கொண்டே இருக்கின்றது. ஆனால், கூச்சமே இல்லாமல் சோனியாக காந்தி அலகாபாத் கூட்டத்திலும் சென்னைக் கூட்டத்திலும் ஊழலுக்கு எதிராகப் போர் தொடுப்போம், ஊழலைச் சகிக்க மாட்டோம் என்று விழி தட்டாமல் சொல்கிறார்.
இளங்கோவன், ஊழலில் ஊறிய தி.மு.க.வோடு கூட்டணி வேண்டாம் என்கிறார்! இந்திரா காந்தி காலத்தின் நகர்வாலாப் படுகொலை தொடங்கி ராசீவின் பல்துறை ஊழல்களில் நாறி, சோனியாவின் சுருட்டல்களில், பொய்ப் பித்தலாட்டங்களில் ஊறி, நரசிம்மராவின் ஊறுகாய் ஊழல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காசு கொடுத்த ஊழல் என்று போய் இன்னும் முளைத்து மூன்று இலை விடாத ராகுல் வின்சி (காந்தி) ஏற்கனவே ஏதோ பழம் தின்று கொட்டை போட்டவர் போல பொய்ப் புரட்டுகளில் ஊறித் திளைக்க இளங்கோவன் காங்கிரசுக்குப் பத்தினி வேடம் போடுகிறார். கருணாநிதி, கனிமொழி, ராசா, மாறன் போன்றோரெல்லாம் முழுச் சுளை விழுங்கிகள் என்றால் நீங்களெல்லாம் முழுப்பலா விழுங்கிகளாயிற்றே!
காங்கிரசு தி.மு.க.வோடு இனி கூட்டு சேராது! ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இனி ஒருக்காலும் காங்கிரசோடு கூட்டு சேரமாட்டார்கள், என்று அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


tamilarkalam, oodakapirivu. karur.

தனித்தமிழ்நாடு அமைவது ஒன்றை இனி தீர்வாகும்! பரமக்குடி பொதுக்கூட்டத்தில் அரிமாவளவன்



இலங்கையின் கொடுங்கோலன் இராசபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர்களத்தின் அரிமாவளவன் எழுச்சி உரையாற்றினார். கூட்டத்தில் பாவலர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“இலங்கையின் முற்றதிகாரி இராசபக்சே ஓர் இழிவான இனப்படுகொலைக் குற்றவாளி என்று இன்று உலகிற்கே தெரியும்! ஆனால், அந்த இனப்படுகொலைக்கு முற்றாகத் துணைபோன இந்தியாவையும் இந்திய அதிகாரிகளையும் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாதான் என்னைத் தவறாக வழிகாட்டியது என்று இராசபக்சே இன்று புலம்பித் தவிக்கிறான்! இந்தியா இதை மறுக்கவில்லை!
ஈழத்தமிழர்களின் 62 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் முற்பகுதி அறவழிப்போராட்டமாக அமைந்தது. ஆனாலும் சிங்களப் பேரினவாத அரசு அப்போராட்டங்களை கொலைவெறியோடும் குருதிப் பசியோடும்தான் அடக்கி ஒடுக்கியது. இன்றைக்கு ஊடகங்கள் விழித்துக் கொண்டிருக்கிற காலம்! முள்ளிவாய்க்கால் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், 62 ஆண்டுகாலப் போராட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். காந்தி தேசமென்றும், அகிம்சையின் களம் என்றும் பாரதத் திருநாடு என்றும் பீற்றிக் கொள்கிற இந்தியா கண்ணெதிரே வெட்ட வெளிச்சத்தில் நடந்த இந்த பச்சைப் படுகொலைகளை, இன அழிப்பைக் கண்டும் காணாததுபோலத்தான் இருந்தது. காரணம் “நாங்கள் இந்தியர்கள் நீங்கள் தமிழர்கள்” என்று தில்லி வல்லாட்சி எப்போதுமே கருதி வந்தது. பாலத்தீன விடுதலைக்கும் வங்காளத்தின் விடுதலைக்கும் காவடி தூக்கிய இந்தியா ஈழத்தின் மீது எரி நெருப்பைக் கொட்டியது! காரணம் அவர்கள் இந்தியர்கள், நீங்கள் தமிழர்கள்!

இராசீவ் காந்தி இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்போகிறேன் என்று அனுப்பிய அமைதிப் படை பத்தாயிரம் தமிழர்களைக் கொன்றுவிட்டுத்தான் திரும்பியது. பார்ப்பன ஏடான இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. 44 தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்முறையால் அவர்களைச் சிதைத்து இறுதியில் தெருவில் கிடத்தி தகரிளை ஏற்றிக் கொன்றார்கள் என்று! அமைதிப் படை இப்படியெல்லாம் செய்த அட்டூழியத்தினால் பத்தாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்ட்டார்கள். தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடியவுடன் பதறியடித்து எழுந்த தமிழன் வாஞ்சையோடு பாரத நாட்டின் மூவண்ணக் கொடிக்கு பற்றோடு வணக்கம் செலுத்துகிறான். வெகுளி இவன்! இன்னும் இந்தியாதான் தாய்நாடு என்று நம்பிக் கொண்டு இருக்கிறான்! தில்லிக்காரனோ, “நீ தமிழனடா! நான் இந்தியனடா” என்று இறுமாப்போடு எட்டி உதைக்கிறான்! “எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்து”ப் பழகிய அப்பாவித் தமிழன் ஆயிற்றே! என்ன செய்வது?

இறுதியில் முள்ளி வாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ்ச் சொந்தங்கள் பட்டினிப் பசியோடு, நண்டுகளும் சிண்டுகளுமாய் பச்சைக் குழந்தைகள் பாலுக்கு அழுது கொண்டு நிற்க, பெண்டு பிள்ளைகள் உயிர்ப்பிச்சை கேட்டு பரிதவித்து நின்ற அந்த நேரத்தில் கொடுங்கோலன் ராசபக்சே இந்த காந்தி தேசத்தைக் கேட்டுவிட்டுத்தான் ரசாயணக் குண்டுகளைப் போட்டு அந்த இடத்தை ஐந்து நிமிடங்களில் சாம்பல் மேடாக்கினான்! பிணக்குவியலாய் முள்ளிவாய்க்காலின் கரை மாறியது! அன்றொருநாள் யாழ்ப்பாணத்திற்குள் சிக்கித் தவித்த நாற்பதாயிரம் சிங்களப் படை வீரர்களுக்கு விடுதலைப் புலிகள் உயிர்ப்பிச்சை கொடுத்தார்கள்! ஆனால் நரக நாதாரிகளின் கூட்டில் மலர்ந்த இந்திய சிங்களப் பேய்கள் அந்த 40 ஆயிரம் தமிழர்களை நொடியில் தின்று தீர்த்தது. காரணம் அவர்கள் இந்தியர்கள் நாமோ தமிழர்கள்.

சேனல் 4ன் வழியாக கண்ட காட்சிகளில் உலகே உறைந்து போயிருக்கிற வேளையில் அந்தக் கொலைகாரப் படைகளுக்கு தாய்த் தமிழ் மண்ணில் ஊட்டியில் இன்றைக்கும் பயிற்சி கொடுக்கிறான் இந்தியன்! காரணம் சிங்களன் இன்னும் கொல்லத்துடித்துக் கொண்டிருக்கிறான். அச் சிங்களனுக்கு எப்படி பாலியல் வன்முறைகள் செய்வது, எப்படிக் கொத்துக் குண்டுகள் வீசுவது, எப்படி ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்று இன்னும் பயிற்சி கொடுக்கிறான். காரணம், அவன் இந்தியன்! நீ கீழ் நிலையில் கிடக்கிற, ஒடுக்கப்படவேண்டியவன், நசுக்கப்பட வேண்டியவன், நசுக்கி ஒழிக்கப்பட வேண்டியவன் என்று அவன் கருதுகிற தமிழ் இனத்தைச் சேர்ந்தவன் நீ!

உன் கடற்கரையில் 545 மீனவர்களைப் பிணமாக்கிய சிங்களனுக்கு இந்தியா உதவியது! இன்றும் உதவிக் கொண்டிருக்கிறது. காரணம் அவன் இந்தியன், நீ தமிழன்!

நீ அழிக்கப்பட வேண்டும், உன் இனம், உன் மொழி, உன் சுவடுகள், உன் வரலாறு, உன் கலைகள், உன் பண்பாடு, உன் பெண்கள், உன் பிள்ளைகள், உன் எதிர்காலம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று நினைக்கிற இந்தியன்! நீதான் வெள்ளந்தியாக, வெகுளியாக, பால்மனம் படைந்தவனாக நிற்கிறாய்! இன்னும் நம்பிக் கொண்டு நிற்கிறாய்! பட்டாக்கத்தியை உயர்த்தி நிற்கிற கசாப்புக் கடைக்காரனைப் பார்த்து புன்னகை பூக்கிற ஆட்டுக்குட்டியாய் நிற்கிறாய்! நீ, தமிழன்! அவன் இந்தியன்!

இங்கிலாந்தில் கிடக்கிற ஒரு வெள்ளையன் மாந்த உணர்வினால் தூண்டப்பெற்று சேனல் நான்கு என்கிற தொலைக் காட்சியில் உன் இனம் அழிக்கப்பட்டதை போட்டுக் காட்டினான்! இந்த உலகம் குலுங்கி அழுதது! ஆனால், தமிழினத் தலைவனாகப் பட்டம் சூட்டிக் கொண்டு பதவியில் இருந்த கருணாநிதியிடம் 20க்கும் மேற்பட்ட தொலைக் காட்சிகள் இருந்தன, இன்னும் இருக்கின்றன! அவையெல்லாம் நித்தியரஞ்சிதாவையும் அவர்களது படுக்கைகளையும் வலம் வந்து வலம் வந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன! காரணம் அவர்கள் திராவிடர்கள்! நீயோ தமிழன்! தாழ்ந்து கிடக்கிற தமிழன்!

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிக் கூட்டணிக்கு அன்று நீ கொடுத்திருந்தாய். அவர்கள் தயவில் இந்தாலிய டிராக்கூலாவின் தில்லி அரசாட்சி இருந்தது! உன் சொந்தங்களை அவர்கள் அங்கே கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் ஆயுதங்களும் ஆட்களும் அங்கே படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தபோது கருணாநிதியின் கண் அசைவிற்குத்தான் 40 பேரும் காத்திருந்தார்கள். ஆனால், கருணாநிதி கடற்கரையில் படுத்து நாடகமாடினார்! திகாரில் வாடும் கனிமொழிக்காக கதறியழும் இந்தக் கயவர், நயவஞ்சகர், என் இசைப்பிரியா சிதைக்கப்பட்ட போது அவளைப் போன்ற பல்லாயிரம் பெண்களும் பிள்ளைகளும் இளைஞர்களும் சதைக் குவியலாய் கிடந்தபோது நாடகமாடினார்! காரணம் அவர் திராவிடர்! நீ தமிழன்! வரலாறு அறியாத தமிழன்! அவனுக்கு 1800 ஆண்டு காலப் பகை! உன்னை அழித்தொழித்து அத்தனையையும் அள்ளிக் கொள்ள எத்தனைக்கும் பகைவன்!

உலகப் பரப்பில் 12 கோடித் தமிழர்கள் நாம்! தாய்த் தமிழகத்தில் 7 கோடித் தமிழர்கள் நாம்! ஆனால் இலங்கை என்கிற சுண்டைக் காய் நாட்டில் ஒன்றறைக் கோடி சிங்களர்கள்! அவர்கள் இன்றைக்கு 12 கோடித் தமிழர்களை வென்றிருக்கிறார்கள். இந்த உண்மை கசக்கிறது! எட்டிக்காயின் கேவலமாய்க் கசக்கிறது! 12 கோடித் தமிழர்கள், வரலாற்றில் மிகச் சிறந்த ஓர் இனம்! வீரம் செறிந்த இனம் இன்று ஒன்றைரைக் கோடி சிங்கள இன வெறியர்களால் தோற்கடிக்கப்பட்டுக் கிடக்கிது. ஒரே காரணம்! நமக்கு நாடில்லை! அவனிடம் ஒரு நாடு இருக்கிறது! நாம் நாடற்ற குடிகளாய் இருக்கும் வரை கையேந்தி கையேந்தி கையறு நிலையில் நிற்போம்! எவன் ஒருவன் உன்னை அழித்தொழிக்க நினைக்கிறானோ, அவனிடமே நீ கையேந்தி நிற்கிறாய்! உன் பிள்ளைகளை கொன்றொழிக்க ஆயுதம் கொடுத்தவனிடம் கையேந்தி நிற்கிறாய்! நீ மாயையில் நிற்கிறாய்! இந்தியன் என்ற மாயையில், சேற்றுக் குழியில் சிக்கி நிற்கின்றாய்!

ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க பெருத்த ஆர்வம் காட்டிய கருணாநிதியும், இந்தியாவின் சில மலையாள அதிகாரிகளும் இந்த இனப் படுகொலைக்கு முகாமையான காரண கர்த்தாக்கள்! இவர்கள் இன்று சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். சிவசங்கர மேனனும் நாராயணனும் நிரூபமாவும் கருணாநியின் கோபாலபுரச் சந்திப்புகளுக்குப் பிறகே கொழும்பு சென்று கூடிக் குலவினர்! இவர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளே! ஆனால், எப்படி இதற்கெல்லாம் தீர்வு காணப்போகிறாம்!

ஒரே தீர்வுதான்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்குங்கள், முன்னெடுங்கள், முனைப்போடு செயலாற்றுங்கள்! இந்தத் தமிழ்இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்று நெஞ்சில் நெருப்பாற்றலோடு எழுதிக் கொள்ளுங்கள்! தமிழருக்கு என்று ஒரு நாடு தோன்றினால் மட்டுமே ஈழம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழருக்குத் தீர்வு உண்டு, விடுதலை உண்டு என்று நம்புங்கள்! உன் நண்பன் யார், எதிரி யார் என்று தெளிவாக வகுத்துக் கொள்ளுங்கள்!
நீ திராவிடனுமில்லை! இந்தியனுமில்லை! நீ தமிழன் என்று உன்னை உதைத்துச் சொல்லுகிற திராவிடனுக்கும் இந்தியனுக்கும் முன்பாக துணிந்து நிமிர்ந்து எழுந்து சொல்லுங்கள்! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஓங்கிச் சொல்லுங்கள், உரத்தக் குரலில் சொல்லுங்கள்! தமிழருக்கு என்றொரு நாடு அமைவது தமிழினத்தின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள்! அப்படி நீங்கள் சொல்கிற பொற்காலம் அண்மித்துவிட்டால் உலகத் தமிழர்கள் விடுதலைக் காற்றை விரைவில் சுவாசிப்பர்! என்பது மட்டும் உறுதி.