தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், ஆகஸ்ட் 29, 2011
''கச்சதீவு நமதே''
29.08.11 திருச்சி
திருச்சி அய்கப் இல்லத்தில் திரு .சீதையின் மைந்தன் அவர்கள் தயாரித்த ''கச்சதீவு நமதே'' என்ற குறுவட்டு தமிழர் களத்தின் சார்பாக வெளியீடு விழா நிகழ்ந்தது. நிகழ்வின் முன்னதாக தமிழர்களின் மரண தண்டனையை தடை செய்யகோரி தன் இன்னுயிரை நீத்த சகோதரி செங்கொடி அவர்களுக்கு தமிழர் களத்தின் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குறுவட்டு வெளியிடப்பட்டது. குறுவட்டினை உலகத் தமிழர் பேரமைப்பினை சேர்ந்த திரு .பொன்னிறைவன் அவர்கள் வெளியிட திரு . வீ, நா. சோமசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . அதை தொடர்ந்து திரு . பொன்னிறைவன் அவர்கள் வாழ்த்தியும் கச்ச தீவை மீட்க நாம் போராட வேண்டும் என்றும் பேசினார் . திரு . வீ .நா . சோமசுந்தரம் அவர்கள் பேசுகையில் இந்தியா மோசடி செய்து தமிழர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்றும் நாம் இந்திய அரசுக்கும் , தமிழக அரசியல் வாதிகளுக்கும் எவ்வாறெல்லாம் அடிமையாக வாழ்கிறோம் என்பதையும் தெளிவாக்கினார் . அடுத்ததாக பேசிய தமிழர் களத்தின் பொது செயலாளர் தமிழ்த் திரு . அரிமாவளவன் பேசுகையில் ஈழச் சிக்கலுக்கும் , தமிழக மீனவர்கள் கொல்லபடுவதற்கும் காரணமாக இருக்கும் இந்திய அரசின் கூட்டமைப்பிலிருந்து தமிழ் நாடு தனி நாடாக பிரியாமல் நாம் இழந்த உரிமைகளை மீட்க முடியாது என்றும் , திராவிடத்தை தமிழ் நாட்டிலிருந்து வேரடி மண்ணோடு களைய வேண்டும் எனவும் தமிழர்கள் திராவிட அரசியல் வாதிகளை இன்னமும் நம்பிகொண்டிருப்பதுதான் மோசமான ஒன்று. என்றும் இனிமேலும் நாம் ஒரு தமிழரை கூட இழக்ககூடாது , அதற்காக நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே இருக்கும் உடமைகளை காக்கவும் முடியும் என்று பேசினார் . அடுத்ததாக ஏற்புரை வழங்கிய திரு . சீதையின் மைந்தன் அவர்கள் கச்சதீவு நமது மண் அதை எப்பாடு பட்டாவது மீட்க வேண்டும் , அதற்கு தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . கச்சதீவு வெறும் மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமை பிரச்சினை .என்று பேசினார். நிறைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழர் களத்தின் மணப்பறை பகுதி பொறுப்பாளர் திரு .ராமு நன்றியுரை வழங்கினார் . நிகழ்வில் பெரும்பாலான வழக்கறிஞர்களும் , மாணவர்களும் பங்கு கொண்டனர் .நிகழ்வின் முன்னதாக தமிழர் பண்பாட்டு கலை குழு மாணவிகளின் தமிழர் தாயகத்தை மீட்கவேண்டும் தனி தமிழ் நாடு பிறக்கவேண்டும் என்ற பாடல் எழுசியூட்டுவதாக இருந்தது.
செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம் .
சனி, ஆகஸ்ட் 27, 2011
தூத்துக்குடியில் தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
27.08.2011.- தூத்துக்குடி
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கூடாது என்றும் , கச்சதீவை மீட்க கோரியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் படி தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பழைய நகராட்சி கட்டிடம் முன்பு நிகழ்ந்தது. ஆர்பாட்டத்தில் பெருமளவில் பெண்களும் , பொதுமக்களும் , மீனவர்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . தமிழர் களத்தின் பொது செயலாளர் திரு . அரிமாவளவன் அவர்கள் பின்வருமாறு பேசினார் .
தாய்த் தமிழ்நாட்டின் தமிழர்களே,
கூடங்குளம்!
அன்று ஓர் அழகிய சிற்றூர். நாம் பாடித் திரிந்த பழகி மகிழ்ந்த ஓர் இனிய ஊர். இன்று தென் தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் ஓர் அதிர்ச்சிச் சொல்லாக மாறி நிற்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகப் எத்தனையோ பேர் போராடியும்கூடத் தான் நினைத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்பதுபோல அரசு நடந்து கொண்டிருக்கிறது. அணுஉலை வந்துவிட்டது. பேரதிர்ச்சியுடன் பெருஞ்சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.
மறுபுறத்தில் எத்தனைக் காலம்தான் போராடுவது? என்று சலித்துப் போன மக்கள்! கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிற பட்டாக்கத்திபோல பயமுறுத்துகிறது. நமது எதிர்காலமும் நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
காவிரிக்காக தஞ்சை விவசாயிகள் போராடுகிறார்கள். மீதமுள்ள தமிழ்நாடு வேடிக்கை பார்க்கிறது! கச்சத்தீவுக்காக அல்லது மீனவர் படுகொலைக்காக ராமேசுவரம் மீனவர்கள் போராடுகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஈழத்தமிழருக்காக தமிழர்தேசிய இயக்கங்கள் போராடுகின்றன. மற்றவர்கள் பார்வையாளர்கள். அதுபோலவே கூடங்குளத்திற்காக ஒரு சில கிராமங்கள் இப்போது போராடுகின்றன. மீதித் தமிழகம் வேடிக்கை பார்க்கிறது. இந்த மாதிரியான நிலை ஆட்சியாளர்களுக்கு இன்னும் ஊக்கமாய் இருக்கிறது.
போராடுகிற மக்களுக்கிடையில் இனி ஒரு புரிந்துணர்வும், கைகோர்ப்பும், தோள்கொடுப்பும் இல்லையென்றால் தமிழர் நாம் எல்லோருமே விழப்போகிறோம், வீழ்த்தப்படப் போகிறோம். இது ஓர் எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, எதார்த்தமும்கூட!
இறுதியாக தமிழர் களத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நிகழ்வில் கலந்து கொண்டு போராட்டம் சிறப்பாக நடைபெற்றதர்காக நன்றி தெரிவித்தார்.
செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011
தமிழர்களை காப்பாற்றக்கோரி மனித தொடரி !
கரூர் .26.08.2011 வெள்ளிகிழமை
ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முருகன், சாந்தன் ,
பேரறிவாளன் ஆகியோரின் கொலை தண்டனையை தடை செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் , உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மனித தொடரி போராட்டம் நடந்தது . நிகழ்வில் இந்திய அரசின் தமிழரை பழிவாங்கும் நோக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்ப பட்டன . மேலும் பேரறிவாளன் சிறையில் எழுதிய கடிதம் தமிழர் களத்தின் அமைபினரால் துண்டறிக்கையாக பரப்புரை செய்யப்பட்டது . போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிறையில் வாடும் மூவரின் படங்கள் தாங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையை தெரிவிப்பதாக இருந்தது .
நிகழ்வில் ம தி மு க , உலகதமிழர் பேரமைப்பு , தமிழர் களம் , தி க , பெரியார் தி க , கொங்கு இளைஞர் பேரவை , பெண்கள் தன் உதவி குழுக்கள் , தமிழர் முன்னணி , நாம் தமிழர் , தமிழர் உணர்வாளர் கூட்டமைப்பு , உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர் . நிகழ்வை ம தி மு க வினர் ஏற்பாடு செய்திருந்தனர் .
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
இந்தி (யா) அரசே அப்பாவி தமிழர்களை விடுதலை செய் !
ஊழலில் திளைத்து சுவைத்து எங்கும் தனது கொடிய வல்லாண்மையை நிலைநாட்ட ஆர்பரிக்கும் இந்தி (யா) அரசே , தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதால் உனக்கு இழப்புகள் அதிகம் . ராஜீவ் கொலையில் எவ்வித தொடர்பும் இல்லாத தமிழர்களை கொல்ல நினைப்பது உன் வெறிதனதையே காட்டுகிறது . உண்மையான குற்றவாளிகள் வெளியில் நலமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் எம்மவர்களை நீ கொல்ல நினைப்பது நியாயமல்ல .அவர்களை உடனே விடுதலை செய் !
புதன், ஆகஸ்ட் 24, 2011
அணுமின் நிலைய பேரிடர் குறித்துப் போராட அரிமாவளவன் அழைப்பு
இறுகிப் போன மத கட்டுமானங்களை உடைப்போம் வாருங்கள்
செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
தமிழர் உயிர்கள் காப்பாற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
23.8.2011 கரூர் .
கரூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழர்கள் சாந்தன் , பேரறிவாளன் , முருகன் ஆகியோரின் உயிர் பறிக்கும் மரண தண்டனையை தடை செய்ய கோரி கரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நிகழ்ந்தது.
உலக தமிழர் பேரமைப்பின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சந்திரன் , தமிழர் களம் ரவிசந்திரன் , உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினரும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . இந்த ஆர்பாட்டத்தை வழக்கறிஞர் ராசேந்திரன் , சாமியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர் .
ஆர்பாட்டத்தில் தமிழர் களம் ரவிச்சந்திரன் இந்திய அரசு தொடர்ந்து தமிழர் விரோத போக்கை செயல்படுத்தி வருவது தமிழரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் , அப்பாவி தமிழர்கள் தண்டிகபடுவது வன்மையான செயல் என்றும் தமிழக அரசு உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
ராஜீவ் கொலைவழக்கு - வெளிவரும் உண்மைகள் !
புதன், ஆகஸ்ட் 17, 2011
நாடற்ற குடிகள் என்பதாலேயே நாதியற்றவர்களானோம்! அரிமாவளவன்
செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம்
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011
''தொல்காப்பியத்தின் காலம் '' நூல் வெளியீடு
கடந்த ஞாயிறு அன்று சென்னையில் ஆய்வறிஞர் திரு குணா அவர்கள் எழுதிய ''தொல்காப்பியத்தின் காலம் '' என்ற அரியதொரு ஆய்வு நூல் வெளியிடப்பட்டது . நிகழ்வை சென்னை மாவட்ட தமிழர் கள பொறுப்பாளர் திரு சாம்சன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் .
தமிழர் களத்தின் தமிழர் பண்பாட்டு கலை குழுவினரின் கலை நிகழ்வுடன் துவங்கியது. பாதை அமல் அவர்களின் கல்லூரி மாணவிகளின் மேடை நாடகம் அனைவரையும் சிந்திக்கும் படி இருந்தது. நிகழ்வில் டேவிட் பிரபாகரன் அவர்கள் அய்யாவின் நூலை அறிமுகம் செய்து துவக்க வுரை நிகழ்த்தினார் . நூலை திரு. பழனியப்பன் விஸ்வநாதன் வெளியிட முனைவர் தெய்வநாயகம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . தமிழர்களத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ''காக்க மறந்தாயே '' என்ற ஈழத் தமிழர்களின் அவலத்தை கண்முன் காட்டும் குறுவட்டினை பாவலர் செம்பியன் அவர்கள் வெளியிட திரு. பொன்னிறைவன் அவர்கள் பெற்றுக் கொண்டார் . புலவர் பாவிசைகோ , முனைவர் அருகோ, தோழர் பெ. மணியரசன் , பாவலர் இராமச்சந்திரன் , தமிழர்களத்தின் அரிமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . ஆய்வறிஞர் குணா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் . நிகழ்வின் இறுதியாக மை பா . சேசுராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார் . முன்னதாக பேராசிரியர் சாம்சன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . பாவலர் பாமரன் அவர்கள் அய்யாவின் நூல்களை வரிசையாக தொகுத்து பாடலாக பாடியது சிறப்பாக இருந்தது. விழாவில் கல்லூரி மாணவர்களும் தமிழ் அறிஞர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011
காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா
காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா 02.08.11 அன்று கருவூரில் அவரது இல்லத்தில் தமிழர் களம் சார்பாக கொண்டாடப்பட்டது . நிகழ்வில் அணைத்து தமிழ் உணர்வாளர்களும், அய்யாவின் நண்பர்களும் கலந்து கொண்டு அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் , அய்யாவின் வழியில் தமிழர் தேசியத்தை வென்றெடுப்போம் என்றும் உறுதிபூண்டனர். நிகழ்வில் தமிழர் கள சட்ட ஆலோசகர் , வழக்கறிஞர் ஜீவானந்தம் அய்யாவின் பணிகளை பாராட்டி பேசினார். முடிவில் தமிழர் கள இலக்கிய பிரிவு பொறுப்பாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார் . ஓவியர் இல பரணன், உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை!
தமிழ்நாட்டு அரசியலே தாயக விடுதலையின் திறவுகோல்! பாவலரேறு விழாவில் தமிழர்களம் அரிமாவளவன் எழுச்சியுரை!
--
அன்புடன்,
"தளவாய்" பனிவளன்(+919842978005)