புதன், நவம்பர் 30, 2011

கருத்துப் படம் !


கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் தமிழகம் ஒன்றுபடும்!

கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் தமிழகம் ஒன்றுபடும்

தலையங்கம்:ஏன் இந்த ஓரவஞ்சனை?



கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது.

இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.

இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.

புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர். கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (http://player.vimeo.com/video/18283950?autoplay=1)காணக் கிடைக்கிறது.

இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.

அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது. மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=514116&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
(http://player.vimeo.com/video/18283950?autoplay=1)

திங்கள், நவம்பர் 28, 2011

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டம் வலுக்கிறது!


104 வது நாளாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்கும் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக்குழு 27.11.11 அன்று தமிழக முதலமைசர் அவர்களுக்கு மாநில அரசு அணுஉலைக்கு எதிரான ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தி தொலைநகல் அனுப்பியுள்ளது. தொடர் உண்ணாநிலைப் போராட்டக் களத்தில் உறுதியாய் நிற்கும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திசம்பர் 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டக்குழு ஒன்றுகூடி நான்காம் கட்டப் போராட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிபுநர் குழுவின் அறிக்கையை ஆய்வுசெய்த அணுஉலைக்கு எதிரான நிபுணர்குழு அவ்வறிக்கை தங்களுக்கு நிறைவு இல்லை எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அணுஉலை போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர்களத்தின் கிழக்கு மண்டலப் பிரதிநிதிகள் இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேறனர்.

கொள்ளையோ கொள்ளை !

ஞாயிறு, நவம்பர் 27, 2011

மாவீரர் நாள் !






கரூர் 27.11.2011
தமிழர் களத்தின் சார்பில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது . நிகழ்வில் தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு. சீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார் . தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த மாவீரர் நாளில் தமிழினம் இனப் படுகொலையால் கொல்லப்பட்ட துயரத்தை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது என்றும் , ஈழம் பிறக்க தமிழர்கள் ஒரே இனமாய் ஒன்றிணைந்து களம் கண்டால்தான் தீர்வு கான முடியும் எனவும் இந்தியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரிதான் என்றும் தமிழ்நாட்டு அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் தருணம் இதுவே என்றும் கருத்துரை வழங்கினார் திரு சீவானந்தம் அவர்கள் . அவரை தொடர்ந்து வழக்குரைஞர் ராஜேந்திரன் , அரசு , செந்தில் , சதாசிவம் , குறழகன் உள்ளிட்ட பலரும் தங்களது மாவீரர் சிந்தனைகளை விதைத்தனர். முடிவில் முருகானந்தம் நன்றி தெரிவித்தார் .
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

ஞாயிறு, நவம்பர் 13, 2011

தமிழர் எழுச்சிப் பெருவிழா ! -புதுவை 2011






12.11.2011. புதுவை .

தமிழர் களத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் நாளை தமிழர் எழுச்சிப் பெருவிழாவாக நிகழ்த்துவது வழக்கம் . இந்த ஆண்டு நவம்பர் முதல் நாள் அல்லாமல் பனிரெண்டாம் நாள் புதுவையில் முதன் முறையாக நிகழ்த்தப் பட்டதற்கு தொடர் மழையும் ஒரு காரணம் . மற்றொன்று தமிழர் களத்தின் வேர்கள் பதிந்து புதுவையில் சில மாதங்களே ஆன நிலையில் புதிய தலைமுறையினரால் நிகழ்த்தப் பட இருந்ததால் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது . அதற்காக அங்கு பணியாற்றியவர்களின் உழைப்பு வீண்போகவில்லை. அதன் அதிர்வுகள் இனிதான் தொடரும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. இனி களத்தில் ....
அந்த இனிய மாலை நேரத்தில் புதுவையின் நடுவில் புயலாய் ஆர்பரித்துக் கிளம்பிய தமிழர் பண்பாட்டுக் கலை குழுவினரின் அதிரடி ஆட்டத்தில் ஒரு கணம் திகைத்து நின்றது புதுவை .நிகழ்வை திருதமிழர் களத்தின் பன்னாட்டு செய்தி தொடர்பாளர் திரு சங்கர் தாமொஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார் .ஆய்வறிஞர் குணா , ந.மு.தமிழ்மணி . பேரா.சாம்சன், கரூர் அரசு, நீலமேகம் , புலவர் கி த பச்சையப்பன், புலவர் செம்பியன், பறம்பை அறிவன் , தமிழாலயன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு திரு அழகர் (எ) பிரகாசு அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அடுத்ததாக உரை நிகழ்த்திய திரு. தமிழ்மணி அவர்கள் பேசுகையில் இந்தநாள் தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக பிரிந்த நாள் மட்டுமல்ல . புதுவையும் தனி மாநிலமாக பிரிந்த நாள் என்றும், இந்திய விடுதலை போராட்டம் என்பது மக்களுடைய விடுதலைக்கான போராட்டம் அல்ல . இந்தியா என்ற கற்பனை நாட்டை வெளி நாட்டவர்கள் சுரண்டுவதை தடுத்து தாங்கள் சுரண்ட இங்கிருந்த பெரு முதலாளிகள் தான் விடுதலை போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த நாட்டின் வளங்களை கொள்ளையிட்டனர் . இங்கிருந்த தேசிய இனங்களின் உரிமைகளை பறித்துவிட்டனர் . அதேபோல் மொழிவழி மாநில போராட்டங்களை ஒடுக்கியதும் இந்த இந்திய பேராய கட்சிதான் . இந்தியா என்றும் இந்தியர் என்றும் நம்மை நம்பவைத்து பலிகடாவாக்கியது இந்த இந்திய பேராய கட்சிதான் என்றும் இந்திய முதலாளிகளின் , வந்தேறிகளின் கபட நாடகத்தை அம்பலப் படுத்துவதே தனது குறிக்கோள் என்றும் துவக்க உரை நிகழ்த்தினார் .
அடுத்ததாக பேசிய புலவர் பாவிசைகோ கூடங்குளம் அணு உலை கட்டியதில் நடந்திருக்கும் ஊழல்களை தனது நகைசுவையான பேச்சில் அம்பலப் படுத்தினார். தமிழர்களின் சொத்துகளை கொள்ளையடித்த இந்த இழவெடுத்த இந்திய ஒருமைப்பாடு நமக்கு வேண்டாம் . தமிழர்களுக்கான பூக்காடாக தனி தமிழ்நாடு பிறக்கட்டும் என்றும் பேசினார் .
தமிழர் களத்தின் தெற்கு மண்டல பொறுப்பாளர் திரு மை பா சேசுராசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் குறித்தும் , இந்திய அரசு தமிழர்களின் போராட்டத்தை எப்படி கொச்சை படுத்துகிறது என்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடக்கிறது என்றும் விரிவாக எடுத்துரைத்தார் . தமிழக அரசும் தமிழர்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்கிறது என்றும். அணுகுண்டோடு வாழச் சொல்லும் இந்தியா எங்களுக்கு தேவையில்லை. தமிழர்களின் இறையான்மைதான் எங்களுக்கு தேவை . அடிவாங்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கும் காலம் வரும் என்று எழுச்சியுரை நிகழ்த்தினார். அணு உலைக்கு எதிரான எழுச்சி முழக்கத்துடன் அவரின் உரை முடிந்தது .
அடுத்ததாக தலைமை உரை நிகழ்த்திய தமிழர்களத்தின் பொதுசெயலாளர் திரு அரிமாவளவன் பேசுகையில் இந்திய தேசிய அடிமையாக வாழும் நாராயண சாமி போன்ற தமிழர்கள் வாழ்வதுதான் வேதனை என்றும், கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கான திட்டம் அல்ல மக்களின் வரிபணத்தை கொள்ளையடிப்பதற்கான திட்டம் என்றார். அப்துல் கலாம் தமிழினத்திற்கு நல்லவராக நடந்துகொள்ளவில்லை என்பதை விளக்கினார் . தேர்தலின் போது மட்டும் தமிழர்களாக தெரிந்தவர்கள் இன்று கூடங்குளத்தில் போராடும் போது மீனவர்களாகவும், கிறித்துவர்களாகவும் தெரிகின்றனர் .கமிசன் பணத்திற்காக ஹச் சி எல் நிறுவனம் தரமில்லாத கட்டிடத்தை கூடன்குளதிற்காக கட்டி கொடுத்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது என்றார் . பல லச்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் , தமிழினத்தை சுரண்டிப் பிழைக்கும் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவும் இத்தாலி சோனியா அரசு இந்த திட்டத்தை தமிழர்கள் தலையில் திணிக்கப் பார்க்கிறது என்றும் , சங்க பரிவார அமைப்புகளின் எடுபிடியாக தினமலர் நாளேடு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் சுட்டிகாட்டினார் . அதே சமயம் உயர் கல்வி இன்று தமிழ் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது அதற்காக தமிழர்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார். மேலும் தமிழர் களம் அமைப்பானது வெறும் புத்தகங்கள் படித்துவிட்டு மட்டும் துவங்கப்பட்டதல்ல . 1991 இல் கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது தானும் நேரடியாக அந்த கொடுமையை அனுபவித்ததன் விளைவே தமிழர் களம் தோன்ற காரனமாயிருந்தது. இருப்பத்திஒரு ஆண்டுகளாக எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழின விடுதலையை நோக்கி களப் பணியாற்றும் ஒரு இயக்கம்தான் தமிழர் களம் என்றார் . எனவே இனி இதுதான் தருணம் இது தமிழர் களத்தின் காலம் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி களமாட வாருங்கள் தமிழராய் வாருங்கள் !என்று பேசிய அவர் இந்த நிகழ்வின் எழுச்சி தீர்மானங்களை வாசித்தார் . அவை
௧. பேரிடர் விளைவிக்கும் அணு உலைகளை தில்லி அரசு தமிழகத்தின் மீது திட்டமிட்டே திணித்த சதியை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை தமிழர் களம் முழுமையாக ஆதரிக்கிறது. கூடங்குளம் அணுஉலையை உடனே மூடவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுகொள்கிறது.
௨. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாகண்டிகையில் இயற்கை வளங்களை அழித்து, அடித்தட்டு மக்களின் வாழ்வாதரங்களை பாழாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் கொடுமையை தமிழர் களம் வன்மையாக கண்டிக்கிறது. மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட இடங்களை அவர்களிடமே திருப்பி தரவேண்டும் .
௩. மக்களின் வரிபணத்தில் நடத்தப்படும் நடுவண் அரசின் உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் மாற்று மொழியில் இருப்பதால் தமிழ் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர் . இது இந்தி வெறியையும் , இன வெறியையும் காட்டுகிறது . எனவே பொதுவான நுழைவுத் தேர்வுகள் அந்தந்த மாநில மொழியிலேயே நடத்தபடவேண்டும் என தமிழர் களம் கோருகிறது.
௪.ராசீவ் காந்தி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பாவித் தமிழர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.
௫.13500 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உடனே பணி நீக்க ஆணையை திரும்ப பெற்று அப்பணி யாளர்களை மீண்டும் பணியிலமர்த்த வேண்டுகிறது.
௬.இந்திய திராவிட கூட்டுச் சதியால் தமிழர்களின் மரபு வழிச் சொத்தான கச்சத் தீவை சிங்களர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது வரம்பு மீறிய செயலாகும் . அப்பாவி தமிழ் மீனவர்கள் 550 கும் மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டுள்ளனர் தமிழ் மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது. இது உடனே தடுக்கப்பட வேண்டியதாகும் . அல்லது இந்திய கடற்படையானது தமிழர்களின் சோழக் கடற்கரையினை விட்டு விலக வேண்டும் . கட்சத்தீவை மீட்டு மீண்டும் அதை தமிழர்களிடம் ஒப்படைக்கவேண்டும் .
௭. தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டை காடாக மாறிவருகிறது. இந்த சூழலில் புதுவையில் அமைந்திருக்கும் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கல்லறை எவ்வித பராமரிப்பும் இன்றி குப்பை மேடாக மாறி கிடப்பது வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது. எனவே புதுவை அரசானது அவரின் கல்லறையை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் எனவும் இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது
இறுதியாக எழுச்சியுரை நிகழ்த்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் பேசுகையில் விடுதலைக்கு முன்பிருந்தே இந்திய அரசியலாளர்கள் தமிழர்களை ஏமாற்றிதான் வந்துள்ளனர் என்றும் நீண்ட காலம் அடிமையாக வாழ்ந்த தமிழினம் மொழி வழியாக பிரிந்த நாள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டாட்டமான நாள் என்றால் தமிழர்களுக்கு அது ஒரு இழப்பை உணர்த்தும் நாளாகும் . தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது. மார்வாடி குஜராத்தி, மலையாளிகளால் சுரண்டப்பட்டு வரும் தமிழகத்தை மீட்க தமிழர்கள் சாதி கடந்து மதம் கடந்து ஒரே இனமாய் ஒன்றிணைய வேண்டும் . அப்போதுதான் தமிழர்களுக்கான நாடாக தமிழ்நாடு இருக்கும் என்று தனது கருத்தை ஆழமாக விதைத்தார்.
நிகழ்வில் சென்னையிலிருந்து வந்து மேடை நாடகம் நிகழ்த்திய கல்லூரி மாணவர்கள் திராவிடத்தால் நாம் வீழ்ந்ததை சுட்டிக் காட்டியதும . தமிழகத்தில் தமிழர்கள் ஏதிலியாக தவிக்கும் சூழல் நிகழ்வதை கண்முன் நிறுத்தினர்.
நிகழ்வில் அரிமாவளவன் எழுதிய நெருப்பு விதைகள் புத்தகம் வெளியிடப்பட்டது. நூலை ஆய்வறிஞர் திரு குணா அவர்கள் வெளியிட திரு .தமிழ்மணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தமிழர் களத்தின் புதுவை மாநில செய்தி தொடர்பாளர் திரு .சு.அன்பழகன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழர் எழுச்சிப் பெருவிழா வானது நிறைவு பெற்றது.

செய்தி : ஊடகப்பிரிவு . தமிழர் களம் , கரூர் .

வெள்ளி, நவம்பர் 04, 2011

கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து கரூரில் தமிழர்களம் போராட்டம்






30.10.2011 Sunday

பேரிடர் விளைவிக்கும் அணுஉலையை எதிர்த்து ஒருபுறம் பொதுமக்கள் திரண்டு போராடி வருகின்றனர். அணுஉலையை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. சாதி மத அடிப்படையில் போராட்டத்தைத் திசைதிருப்ப சில ஊடகங்கள் முயன்று வருகின்ற வேளையில் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி அதைத் தமிழகமெங்கும் விரிவுபடுத்தும் நோக்கோடு தமிழர்களம் கரூர் நகரில் நேற்று போராட்டத்தில் குதித்தது. போராட்டத்திற்கு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமை தாங்கினார்.
“போபால் நகரில் விஷ வாயுக் கசிவினால் பல்லாயிரம் மக்கள் பலியாகினர். ஆனால், யூனியர் கார்பைட் என்ற அந்த நிறுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் என்ற அமெரிக்கனை தனி விமானத்தில் ஏற்றி தப்ப வைத்தது அன்றைய காங்கிரசு அரசு. காமன்வெல்த் போட்டிகள் தொடங்குமுன்னரே கட்டடங்கள் இடிந்து விழுந்து காங்கிரசுக் கல்மாடி இன்று கம்பி எண்ணுகிறார். மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புடைய அமெரிக்கனான ஹெட்லியை தப்பவிட்டது மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறைச் செயலராக இருந்த எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளோடு பேரம்பேசியதை விக்கிலீக்ஸ் கசிய விட்டது நாடறிந்த உண்மை. இவர்கள்தான் தேசப் பற்றாளர்களாம். இவர்கள்தான் கூடங்குளத்திற்கு நற்சான்றிதழ் கொடுத்து நம் தலையில் அதைக் கட்டப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு மின்சாரம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் சொட்டுத் தண்ணீர் தராத கேரளாவிற்கும் இனவெறி இலங்கைக்கும் மின்சாரம் போகப்போகிறது. பயன்பாட்டை அறுவடை செய்யக் காத்திருக்கும் இவர்கள் அணுஉலையை அவர்கள் இடத்தில் நிறுவ எதிர்க்கிறார்கள். ஆக அவர்களுக்கெல்லாம் பயன்பாடு வேண்டும் பாதிப்பு வேண்டாம். ஆனால் தமிழர்கள் தலைமீது அத்தனைப் பாதிப்பும் வேண்டும் என்கிறார்கள். 14ஆயிரம் கோடியைக் கொட்டிவிட்டோம் என்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்திலே எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினீர்கள்? எதற்காக அந்தத் திட்டத்தில் மண்ணையள்ளிப் போட்டீர்கள்? ராமர் பாலம் இருந்தது என்ற புராணத்தை மேற்கோள் காட்டித்தானே நிறுத்தினீர்கள். அலைக்கற்றை ஊழலில் அடித்தீர்கள், சட்டசபைக் கட்டடத்தை இழுத்து மூடுகிறீர்கள். அப்போதெல்லாம் வராத கரிசனை பேரிடர் விளைவிக்கும் அணுஉலைக்கு மட்டும் எப்படி வருகிறது? அணுஉலை ஆபத்து இல்லை என்றால் தில்லியில் வைத்துக் கொள்ள வேண்யதுதானே. இந்தக் கொலை ஆலையில் கொட்டிய பணத்தை மாற்றுத் திட்டங்களில் செலவிடுங்கள் என்று திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு இவர்களிடம் வேண்டுகிறோம். மின் சேமிப்புத் திட்டத்தின் வழியாக கூடங்குளத்தில் கிடைக்கப்போகும் 2000 மெகாவாட்டைவிட அதிகம் பெறலாம் என்ற திட்டத்தை இவர்களிடம் கொடுக்கிறோம். இதே அணுஉலையை மாற்று மின் திட்டத்திற்காகப் பயன்படுத்தி அதே அளவு மின் உற்பத்தி செய்யலாம் என்றும் திட்டத்தை அளிக்கிறோம். ஆனால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல அணுஉலைக்காக மத்திய அரசு ஒற்றைக்காலில் நிற்கிறது. காரணம் இது மின் திட்டமல்ல. அணுக்கழிவுகளுக்காக, அணு ஆயுதங்களுக்காக செயற்படுத்தப்படப்போகும் திட்டம் என்பது தெளிவாகிறது. அதனால்தான் ஆலையில் வேலை செய்கிறவர்களுக்கு 15 கி.மீ. தள்ளி செட்டி குளத்தில் இருப்பிடங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிற பல்லாயிரம் தமிழ் மக்கள் சாக வேண்டும். வந்திருக்கிற அவர்கள் பாதிப்பு என்றால் தப்பி ஓடவேண்டும். எனவேதான், இந்தப் பேரிடர் திட்டம வேண்டாம் என்கிறோம். எல்லா மாநில அரசுகளும் எங்கள் மாநிலத்தில் அணுமின் நிலையம் வேண்டாம் என்கிறது. இழித்தவாயர்கள் தமிழர்கள் என்று எண்ணிக்கொண்டு மத்திய அரசு எங்கள் மீது இதைத் திணிக்க முற்படுகிறது. இழுத்து மூடும்வரை ஓயமாட்டோம்” என்று அரிமாவளவன் தன் உரையில் குறிப்பிட்டார். வழக்கறிஞர் சீவானந்தம், அரசமாணிக்கம், ரவிசந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீண்டும் ஓர் ஐராவதப் புரட்டு! - குணா

மோரியர்களுக்கு முன்பு கீழைக்கங்கைக்கரையில் நன்னர் என்னும் தமிழ் அரசக்குடி ஆண்டுவந்தது. நன்னர் அரசக்குடி மிக மிகத் தொன்மையான அரசக்குடி. செங்கம் கணவாய், கொண் கானம், திருவாதவூர் எனப் பலவிடங்களில் இந் நன்னர்கள் ஆண் டதைப் போன்றே வடக்கே சோணையாறு கங்கையாற்றில் கலக் கின்ற பட்டினம் (இக் காலத்துப் பட்னா) என்ற நகரத்தைத் தலை நகராகக் கொண்டும் நன்னர்கள் ஆண்டுவந்தனர். நன்னர் என்ற தமிழ்ப்பெயரே பாகத மொழியில் ‘நந்த’ என்றானது. இதனால், நந்தர் அரசக்குடி, தமிழ்க்குடியேயாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி, மக்கள் எளிதில் நடமாடவியலா இருண்ட பகுதியாகப் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்தபோது அங்கு வடுகர் என்ற அநாகரிக மக்கள் வாழ்ந்து வந் தனர். பண்டை உரோமைச் செருமானிய அநாகரிகர் பன்னூறு ஆண்டுக்காலம் அலைக்கழித்துப் பின்னர் அந்த உரோமப் பேரர சையே வீழ்த்தி உரோமானியமயமானதைப்போல், கீழைக்கங்கைக் கரையிலிருந்த தமிழரசுகளை ஓயாது அலைக்கழித்துவந்த வடுகர் களும் ‘நந்தர்’ என்றான தமிழ் நன்னர்களின் அரசைக் கைப்பற்றி மோரிய அரசு என்ற முதல் வடுக அரசை நிறுவினர்.

இவ் வடுகர்கள் தமிழர் நாகரிகத்தையே தமதாக்கிக்கொண்டு ஒரு கலப்பு நாகரிகத்தைத் தோற்றுவித்தனர். எழுத்தும் இலக்கிய மும் சமயமும் இல்லாத அவ் வடுகர்கள், தமிழ்ப் பேச்சுவழக்கோடு வடுகம் என்ற கொடுந்தமிழைக் கலந்து பாகதம் (பிராகிருதம்) என்ற ஒரு புதிய மொழியை உருவாக்கினர். கி. மு. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழ் வரிவடிவத்ததைத் தழுவிப் புதிதாக உரு வான பாகத மொழிக்கு வரிவடிவத்தை முதன்முதலில் அமைத் தவன் மோரியன் அசோகனேயாவான். மோரியன் அசோகனுக்கு முன் பாகத மொழிக்கு எழுத்தே இருந்ததில்லை.
தமிழ் வரிவடிவத்தைத் தழுவி அசோகனால் வடிவமைக் கப்பட்ட பாகத மொழி எழுத்திற்குப் பிராமண வரலாற்றாசிரியர் களும் ஆய்வாளர்களும் ‘அசோகன் பிரமி’ என்னும் திருப்பெயர் சூட்டினர். பின்னர், அந்த அசோகன் ‘பிரமி’யிலிருந்தே தமிழுக்கு வரிவடிவம் வந்ததெனப் பொய்யாகப் புரட்டிக் கூறி வரலாயினர். இத்தகைய பிராமண வரலாற்றாய்வாளர்களில் ஒருவராக ஓயாது ஒழியாது ‘பிரமி’ என்னும் காயைத்திரி மந்திரத்தை ஓதிக்கொண் டிருப்பவர்தாம் ஐராவதம் மகாதேவன்.

தமிழையும் பாகதத்தையும் கலந்து கி. பி. 2ஆம் நூற்றாண்டில் (ஐரோப்பியச் சரக்கான எசுப்பராந்தோ என்னும் செயற்கை மொழியினைப் போன்று) செயற்கையாக உருவாக்கப்பட்டுப் பேச்சுவழக்கில் என்றுமே இருந்திராத சவமொழியாயிருந்ததே பிராமணர்கள் கண்ணெனப் போற்றும் சங்கத (சமற்கிருத) மொழியாகும். இந்தச் சங்கதத்திற்கெனத் தனி வரிவடிவம் ஏதும் நெடுங்காலம் வரை இருக்கவில்லை. ‘அசோகன் பிரமி’ என்ற பாகத வரிவடிவத்தைத் தழுவி வடஇந்தியாவில் கி. பி. 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தேவநாகரி என்ற வரிவடிவம் சங்கதத்திற்கு உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவிலோ, தமிழ் வரிவடிவத்தைத் தழுவிப் பல்லவ வடுகர் தோற்றுவித்த கிரந்தம் என்னும் வரிவடிவத்திலேயே சங்கத நூல்கள் எழுதப்பெற்றன. தமிழ் நான்மறையின் திருட்டு வடிவ மாகிய இருக்கு முதலான நான்கு வேதங்களையும் கி. பி. 5ஆம் நூற் றாண்டில் பல்லவக் கிரந்த எழுத்தமைதியில் தமிழகத்தில்தான் மொழிபெயர்த்து எழுதிவைத்தனர். கி. பி. 19ஆம் நூற்றாண்டில்தான் சங்கதப் புலவர்களெல்லாம் கூடி இனிச் சங்கத நூல்களைத் தேவ நாகரி வரிவடிவத்தில்தான் எழுத வேண்டுமென முடிவெடுத்தனர்.

சங்கத மொழிக்கெனப் பொதுவான வரிவடிவம் அதுவரை இருக்கவில்லையென்ற பேருண்மையை மறைக்கவே ஐராவதங்கள் அசோகனுக்கு முன்பு தமிழுக்கும்கூட எழுத்தே இருந்ததில்லை யெனப் பொய்யுரைத்து முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைக் கின்ற திருவிளையாடலை அரங்கேற்றி வருகின்றன.

பொருந்திலாற்றங்கரையில்...

இத்தகு நிலையில், 2009ஆம் ஆண்டில் பழனிக்கு 12 கட்டை தொலைவில் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் பொருந்திலாற்றின் கரையிலுள்ள பொருந்தில் என்ற ஊரில் கண்டெடுக்கப் பட்ட பெருங்கற்படைக் காலத்திற்குரிய கல்லறையொன்றில் மாந்த மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டு எலும்புகளும் அடங்கிய நான்கு கால்களைக் கொண்ட தாழி யொன்று அகழ்ந்தெடுக்கப் பட்டது. வயிர என்று தமிழில் எழுதப்பெற்ற இரண்டு புரிமணை களுடன், இரண்டு கிலோ எடையளவிலான நெல்லும் அங்குக் கிடைத்தது.

இவை போக, சூதுபவழம் (Carnelian), நுரைக்கல் (Steatite), படிகக்கல் (Quartz),, வச்சிரக்கல் (Agate) முதலானவற்றாலான 7,500 மணிகளும், குதிரையேற உதவும் மூன்று இணை அடிக்கொளுவிகளும் (Stirrups) இரும்பு வாள்களும், கத்திகளும், நான்குகால் சாடி களும் தாழிகளும் பூக்குவளைகளும், தட்டுகளும் கிண்ணங்களும் கிடைக்கப்பெற்றன. தலைமகன் ஒருவனின் கல்லறையாக அக் கல்லறை இருந்திருக்க வேண்டும் என்று அக் கல்லறையை அகழ்ந் தாராய்ந்த புதுவைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே. இராசன் கூறுகின்றார்.

இந்தக் கல்லறையில் கிடைத்த நெல்லின் காலத்தை அறிவ தற்காக அதனை அமெரிக்காவின் மியாமி நகரத்திலுள்ள பீட்டா அலசல் கூட்டிணைவு (Beta Analysis Inc) என்னும் ஆய்வுநிறுவனத் திற்கு விடுத்தனர். முடுக்கிநிறை நிறமாலை அளவியல் (Accelerator Mass Spectrometry/AMS) என்னும் காலக்கணிப்பு முறையில் அந் நெல்லின் காலம் கி. மு. 700க்கும் கி. மு. 490க்கும் இடைப்பட்டது என்று முடிவு கூறப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைத்த ஒரு தொல் பொருளை ‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பிற்கு ஆட்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

எச்சரிக்கை

‘முநிஅ’(AMS) காலக்கணிப்பில் ஒரு பெரிய குறைபாடு உண்டு. அக் குறையை 2400 சிக்கல் (2400 Problem) என்று குறிப் பிடுவர். கி. மு. 2500ஆம் ஆண்டிற்கும் கி. மு. 2400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருள்களின் காலத்தை அம் ‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பு, கி. மு. 750ஆம் ஆண் டிற்கும் கி. மு. 400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாகத் தவறாகக் காட்டுமாம். இதனாலேயே அக் குறைபாட்டை ‘2400 சிக்கல்’ என்று அழைக்கலாயினர் (Charles Keally,Yayoi Culture).

‘முநிஅ’ (AMS) காலக்கணிப்பிலான அந்த ‘2400 சிக்கலைக்’ கணக்கில் கொண்டால், பொருந்தில் பெருங்கற்படைக் கல்லறை யின் காலம் உள்ளபடியே கி. மு. 2500ஆம் ஆண்டிற்கும் கி. மு. 2400ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டதாயிருத்தல் வேண்டும். மேற் கூறிய ‘2400 சிக்கலைக்’ கருத்தில் கொள்ளாமலேயே பொருந்தில் கல்லறையில் காணும் எழுத்தமைதியின் காலம் கி. மு 700க்கும் கி. மு. 400க்கும் இடைப்பட்டதெனக் கூறப்படுகின்றது.

வயிற்றெரிச்சல்

தமிழகத்தில் கிடைக்கின்ற தொல்லெழுத்துகளையெல்லாம் அசோகனின் ‘பிரமி’ எழுத்தெனக் கீறல் விழுந்த இசைத்தட்டாய் உடனே ஒலித்துவரும் ஐராவதம் மகாதேவனிடம் பொருந்தில் எழுத்தமைதியைப்பற்றிக் கூறியபோது, அவர் தேள் கொட்டினாற் போன்று துடித்துப் போய்விட்டாராம். பொருந்தில் கல்லறையில் கிடைத்த எழுத்து அசோகனின் ‘பிரமி’ எழுத்துக்கு முந்தைய தமிழ் எழுத்தே என்பதைச் சுட்டிக்காட்டியதால்தான் அவ்வாறு நொந்து போனாராம். ‘இல்லை, இல்லை, அது அசோகன் பிரமியே!’ என்று ஓலமும் இட்டாராம்.

புதுவைப் பிரெஞ்சுக் கழக இந்தியவியல் துறையின் தலைவ ராயுள்ள முனைவர் சுப்பராயலு என்ற வடுகரும் ஐராவதத்திற்கு ஒத்து ஊதினார்.

வயிரம் என்பது தூய தமிழ்ச்சொல். வல்-வயிர்-வயிரம் என்னும் வழியில் ‘மீவலிமையானது’ என்றே அது பொருள்படும். ‘வயிரம்’ என்னும் சொல்லை ‘வைரம்’ என்று திரித்தும் ஒலிப்பர். ‘வயிர’ என்ற சொல் பொருந்தல் கல்லறையில் இருப்பதால், அது பாகத மொழிச் சொல் என்று சுப்பராயலு வகையினர் திரித்துக் கூறுகின்றனர். பொருந்தில் கல்லறை எழுத்து, கி. மு. முதல் நூற் றாண்டிற்குரியது என்றும் இவர் போன்றோர் வேண்டுமென்றே குறைத்துக் கூறுகின்றனர்.

மறுபுறத்தில் - இந்தியத் தொல்லியல் அளத்தல் துறையின் இயக்குநராயிருந்து ஓய்வு பெற்ற கே. வி. இரமேசு, அப் பொருந்தில் எழுத்துகள் அசோகனின் காலத்திற்கு முந்தியன என்று நேர்மை யாகக் கருத்துரைத்தார்.

பிரிட்டனின் காம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியரான திலிப் கே. சக்ரபர்த்தி என்பாரும்கூடக் கூறப்படும் தமிழ் ‘பிரமி’ என்ற வரிவடிவம் கி. மு. 500ஆம் ஆண்டிற்கு முந்தையது என்று கூறுகின்றார்.

சேரலத்துக் கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியராகிய எம். ஆர். இராகவ வாரி யார் பொருந்தில் எழுத்தின் காலத்தைப் பற்றிய அமெரிக்க ஆய் வகத்தின் காலக்கணிப்பு ‘வியத்தக்க நல்ல முடிவு’ என்று பாராட்டி யதுடன், பொருந்தில் கல்லறையில் கிடைத்த எழுத்தமைதி கி. மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதெனக் கருதுகின்றார்.

என்னே புரட்டு!

புதிய கற்காலக் கற்கோடரிகள் செம்பியன் கண்டியூரில் கண் டெடுக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றின் மீதிருந்த எழுத்துகள் ‘சிந்துவெளித்’ தமிழ் எழுத்துகளே என்று கூறியவர்தாம் ஐராவதம்.

ஆனால், அதே ஐராவதமும் அவருக்கு ஒத்து ஊதும் சுப்பரா யலுவும் மட்டும் பொருந்தில் கண்டுபிடிப்பு என்னும் ஒரேயொரு கண்டுபிடிப்பை வைத்துத் தமிழ் எழுத்துகள் அசோகனின் ‘பிரமி’ எழுத்துகளுக்கு முந்தியனவெனக் கூறலாகாதென்று இன்று வஞ் சனை பேசுகின்றனர்.

தமிழ் எழுத்து அசோகனுக்கும் மீமிக முந்தையது என்பதைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல தமிழகத்தில் கிடைத்திருப் பினும், பொருந்தில் எழுத்து என்னும் ஒற்றைச் சான்றை வைத்துத் தமிழ் எழுத்து அசோகனின் ‘பிரமி’க்கு முந்தையதெனக் கூறலாகா தென்னும் அவர்களின் புரட்டுகளிலும் சரடுகளிலும் புதைந்துள்ள உள்நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐராவதத்தின் தமிழ் ‘பிரமிக்’ கோட்பாடு மிகவும் தவறான தென்பதை அண்மையில் வெளியிடப்பட்ட தொல்காப்பியத்தின் காலம் என்னும் நூலில் சற்று விரிவாக நான் மறுத்துள்ளதையும் ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்பது என் பணி வான எதிர்பார்ப்பு.

ஆரிய-திராவிடக் காழ்ப்பின் வழிவந்த ஐராவதங்களின் கூற் றுகள் பிழையானவை என்பதைத் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கடிந்து கொள்ளாததன் கரணம் புரியவில்லை. தமிழ் எழுத்து வர லாற்றுக்குத் தானே அதிகாரி என்றும் - தான் பெரிய கொம்பன் என்றும் - காற்றூதிய தவளைபோல் புடைத்துக் காட்சி தரும் ஐராவதங்களைப் பார்த்துத் தமிழ் ஆய்வாளர்கள் ஏன்தான் அரண்டு மிரண்டு வெற்றுப் பார்வையாளர்களாய்க் குன்றிக் குறுகி நிற்கின்றனரோ தெரியவில்லை. ஐராவதத்தின் ஆய்வுகள் தமிழின் - தமிழரினத்தின் - தொன்மையை மறுக்கவும் சிறுமைப்படுத்த வும் செய்யும் ஒரே நோக்கம் கொண்டவை.

ஐராவதங்களைத் தமிழ்ப் பகை என்று அடையாளப்படுத்தத் தமிழ் ஆய்வாளர்கள் துணிந்தாரில்லை. அராபியனின் கூடாரத் தில் புகுந்த ஒட்டகத்தைப்போல் தமிழர் வரலாற்று ஆய்வுத்துறை யில் ஐராவதம் புகுந்துகொண்டு தமிழெதிர்ப்புக் காழ்ப்புடன் குழப்பி வருவதைத் தமிழர்கள் அகலக் கண்திறந்துப் பார்த்தல் வேண்டும்.

ஆய்வு என்ற புலத்தில் தமிழையும் தமிழரினத்தின் வரலாற் றையும் இழிவுபடுத்தும் ஐராவதங்களின் போலி ஆய்வுகளைத் தமிழுலகு புறக்கணிக்க வேண்டும்; வெற்றுப் பித்தலாட்டங்கள் என்று அவற்றை வெறுத்தொதுக்க வேண்டும்.
பெரும்பாலும் ஆரியக்கூத்தாடும் தாண்டவக்கோனாகவும் - சில வேளைகளில் திராவிடக் கூத்தாடும் கூத்தாண்டவராகவும் - விளங்கும் ஐராவதங்களை எதிர்த்து இனி வீடு கட்டி அறிவுச் சிலம்பம் ஆட வேண்டாமா?

எண்ணித் துணிக!
2.9.2011

இந்திரன் வழிபாடு - குணா

இந்திரன் ஒரு வானியல் உருவகமாகும். ஞாயிறு பெயரும் பாதையே ஞாயிற்றுமண்டிலம். வான்கோளின் நடுவரையிலிருந்து எப்சிலான் (e) என்ற கோணத்திலிருக்கும் நீள்வட்டப் பாதையே அஞ் ஞாயிற்றுமண்டிலம். இந்த ஞாயிற்றுமண்டிலத்தின் உச்ச நிலையே இந்திரனின் குடியிருப்பு என்று தொல்தமிழ் வானியலார் கற்பித்தனர். வடக்குநோக்கிப் பெயர்கிற ஞாயிற்றின் வடசெலவு (உத்தராயனம்) முடிந்து அதன் தெற்குநோக்கிய பெயர்ச்சியாகிய தென்செலவு (தட்சிணாயனம்) தொடங்கும் புள்ளிநிலையை இக் கால வானியல் வேனில்முடங்கல் (Summer Sols-tice) என்று குறிப்பிடுகின்றது.


ஞாயிற்றின் பெயர்ச்சியிலான உச்சநிலை என்பதால், அப் புள்ளிநிலையைக் குறிக்கும் இந்திரனை வானுறையும் தேவர்களுக் கெலாம் தலைவனாக்கினர். இதையொட்டித் தொல்தமிழ் வானியலார் ஆக்கிய வானியல் புனைகதைகளே இந்திரனைப் பற்றிய தொன்மக்கதைகளாக வழிவழியாக வந்தன.


வடகோளரையில் வேனில்முடங்கலுக்குள் ஞாயிறு புகுவது சூன் 20/21ஆம் நாளாகும். இது முதுவேனில் பருவத்தில் நிகழும். இடியுடனும் மின்னலுடனும் பெய்யும் கோடைமழை இக் காலத்தது. இதனால்தான், இடியும் மழையும் இந்திரனோடு தொடர்புடையனவாயின. இதனையொட்டியும் தொன்மங்கள் புனையப்பட்டன.


செத்தோரையெல்லாம் விண்ணில் திகழும் உடுக்களாக்கி மடிந்தும் மடியாமல் அவர்கள் அங்கு வாழ்கின்றனரென்ற தமிழரின் தொல்முன்னோர்களின் கற்பனையே ஒரு நம்பிக்கையானது. இதனால்தான், செத்தபின் வானுலகம் புகுவதென்னும் நம்பிக்கை புரையோடியுள்ளது.

செத்தோரெல்லாம் உடுக்களாகிவிடுவரென்றால், அவ் வுடுக்களே தேவர்களாயிருத்தல் வேண்டுமன்றோ? எண்ணரியனவான உடுக்கள் எல்லாவற்றையுமா தேவர்களாக்க முடியும்? முடியாதே! அதனால்தான், நினைவில் வைத்துப் போற்றத்தக்க ஒரு சிலர் மட்டுமே தெய்வங்களாக்கப்பட்டனர்.

ஞாயிற்றுமண்டிலத்தின்மீது 27 உடுத்தொகுதிகள் (Constellations) உண்டு. ஆரல் (கார்த்திகை) தொடங்கி அடுப்புக்கொண்டை (பரணி) வரை என்றமையும் அந்த இருபத்தேழு உடுத்தொகுதிகள் அனைத்தையுமா தேவர்களாக்கினர்? இல்லையே!


இந்திரனின் தலைமையில் வானுறையும் தேவர்கள் 33 பேர் என்பதுதான் கணக்கு. இந்திரன் ஞாயிற்றுமண்டிலத்தின் மீதான ஒரு ஞாயிற்றுநிலை மட்டுமேயென்றபோதும், அவன் தலைமையிலான தேவர்கள் எல்லாருமே வானில் உலவும் உடுக்களாகவோ ஞாயிற்றுநிலைகளாகவோ இல்லை. பின்னர், யார்தான் அம் முப்பத்து மூன்று தேவர்கள்?


எழுத்துகளே தேவர்களாயின!


உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு, ஆய்தவெழுத்து ஒன்று, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இரண்டு என்று தமிழிலுள்ள முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாகக் கற்பிக்கப்பட்டனவென்பதை இன்றைய ஆய்வுகள் தெள்ளத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.


இந்திரனுக்கும் தமிழின் எழுத்திலக்கணத்திற்கும் இடையில் கண்ணும் இமையும் போன்ற உறவுள்ளமை இதனால் புலப்படும். இதை வைத்தே, ஐந்திரம் என்னும் தமிழ் இலக்கணநூலை யாத்தவன் இந்திரனே என்று சொல்லப்பட்டது. ஐந்திரம் என்ற அந்த இலக்கணநூல் நமக்கேன் கிடைக்கவில்லை? இந்திரன் வழிபாட்டையும் இந்திரனை இறைவனாகக் கொண்ட சமயத்தையும் கூண்டோடு ஒழித்தபோது, அவன் இயற்றியதாகக் கூறப்பட்ட ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலும்கூடச் சுவடும் தெரியாதவாறு அழித்தொழிக்கப்பட்டிருக்க வேண்டுமன்றோ?


கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கவிராச மார்கம் என்ற இலக்கண நூலாகும். அதற்குமுன் கன்னட மொழியில் இலக்கியமென யாதும் இருந்ததில்லை. கவிராச மார்கம் என்னும் அம் முதல்நூல் உள்ளபடியே பல்லவன் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் சங்கதப் புலவனாயிருந்த தண்டி என்பான் சங்கத மொழியில் ஆக்கிய காவ்ய தர்சா என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அதாவது, கன்னட மொழியில் முதன்முதலில் தோன்றிய நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலேயாகும்.


சங்கதம் என்னும் எசுப்பராந்தோ அல்லது செயற்கைமொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. அந்த மொழியிலான முதல்நூலும்கூட ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இருந்தது போலும். அந் நூல், தமிழிலான ஐந்திரம் என்னும் இலக்கணநூலின் மொழிபெயர்ப்பாகவே இருந்திருக்க வேண்டும். இதனால்தான், சங்கத மொழிக்கான முன்னோடி இலக்கண மரபு ஐந்திர இலக்கண மரபேயென ஏ. சி. பர்னெல் கூறுவார். தமிழ் ஐந்திரத்தைச் சங்கத மொழி யில் மொழிபெயர்த்துக்கொண்டபின், அதன் தமிழ் மூலத்தையே அழித்திருக்க வேண்டும். அடுத்து அந்தச் சங்கத மொழிபெயர்ப்பை யும்கூட அழித்துவிட்டனர் போலும்.


மறைந்த தமிழ் நான்மறையின் திருட்டு வடிவம்தான் சங்கத மொழியிலான இருக்கு முதலான நான்கு வேதங்கள் என்பது என் நிலைப்பாடு. அந்த இருக்குவேதத்தில் இந்திரன் தலைமையில் 33 தேவர்கள் வானில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்திரன் உள்ளிட்ட 31 தேவர்களின் பெயர்கள் மட்டுமே அதில் காட்டப்படுகின்றது. பாகத மொழியிலோ சங்கத மொழியிலோ குற்றியலிகரமும் குற்றியலுகரமும் இல்லாததால், இருக்குவேதத்தில் வரும் தேவர்களின் எண்ணிக்கை 33 ஆயினும், அதில் 31 தேவர் களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னிரு உயி ரெழுத்துகளைப் பன்னிரு கதிரவர்(ஆதித்தர்)களெனக் கூறுகின்ற இருக்குவேதம், அதே கதிரவனைக் குறிக்கின்ற மித்திரன், சவித்தா, சூரியன் என்பவற்றையும்கூட முப்பத்தொரு தேவர்களில் அடக்குவது கூறியது கூறல் என்ற பிழையாகும். தமிழிலான முப்பத்து மூன்று எழுத்துகளே முப்பத்து மூன்று தேவர்களாவர் என்கின்ற உண்மையை அறியாமையாலோ அதை வேண்டுமென்றே மறைப்பதற்காகவோ பிராமணர்கள் இக் குழறுபடியைச் செய்து வைத்துள்ளனர்.


சுவடும் தெரியாது போனதேன்?


சமயம் என்னும் கருத்துருவைத் தழுவிய விளக்கங்களும் வழி பாடுகளும் சடங்குகளும் தோன்றுவதற்கு மீமிக முன்னால் குருட்டு நம்பிக்கைகளும் அந் நம்பிக்கைளைச் சார்ந்த சடங்குகளும் வழிபாடுகளுமே தொல்மாந்தரிடம் பரவலாயிருந்தன. இந் நம்பிக்கைகளின் வழிவந்த சமயக் கோட்பாடுகள் மக்களின் அரசியல்-பொருளியல்-குமுகியல் கட்டுமானங்களையும் வாழ்வியல் நெறிகளையும் முற்றாக ஆட்கொண்டு அவற்றை ஆட்டிப்படைக்கவும் செய்துவந்ததே நடப்புண்மை. நம்பிக்கை என்ற உளத்தியல் கூறு, வாழ்வியல் என்ற புறமெய்ம்மையைத் தன் பிடிப்புக்குள் இறுக்கி வைத்துக்கொண்டு அப் புறமெய்ம்மையின் மீதே ஆளுமை செய்கின்ற போங்கை வரலாற்றின் வழிநெடுகிலும் காண்கின்றோம்.

உருத்திரன் வழிபாடு சிவனியச் சமயமாவதற்கும், மாயோன் வழிபாடு மாலியச் சமயமாவதற்கும் மிக முன்னரே தோன்றி மிகப் பரவலாயிருந்த வழிபாடே இந்திரன் வழிபாடு. இந்த இந்திரன் வழிபாடு பன்னூறு ஆண்டுகளாக அரசர்களுக்குரிய அரசு வழிபாடாகவும் இருந்தது. இந்திரனுக்கு ஊர்தோறும் கோயில்கள் இருந்தன. கோயில்கள் இருந்ததால், பூசாரிகளும் இந்திர விழாக்களும் இருந்திருக்கத்தானே வேண்டும்?


இந்திரன் வழிபாட்டிற்கு இணையாகப் பின்னர் வளர்ந்ததே ஐயனார் வழிபாடு. ஆசீவகத்தின் முனைவர்களான மற்கலி, பூரணர், கணி நந்தாசான் ஆகியோரின் உருவகம்தான் ஐயனார் வழிபாடு. கி. பி. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி. பி. 7ஆம் நூற்றாண்டில் முகட்டினைத் தொட்ட சிவனிய, மாலிய இறைப்பற்றி (பத்தி) இயக் கத்தின் எழுச்சியால் ஒருகால் மிகப் பரவலாகவும் அரசர் போற்றிய வழிபாடாகவுமிருந்த இந்திர வழிபாடு, அதன் சுவடுகளும்கூடத் தெரியாவண்ணம் முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டது. இந்தி ரனுக்கு இணையாக வளர்ந்தோங்கிய ஐயனாரையாவது ஊருக்கு அப்பால் ஏரி குளங்களுக்கு அருகில் ‘புறம்பணையான்’ என்றாவது வைத்தனர். ஆனால், இந்திரனை மட்டும் சுவடு தெரியாது அழித்தொழித்ததோடு நில்லாது, அந்த இந்திரனைப் பழிக்கவும் தூற்றவும் செய்த கதைகளும் தொன்மங்களாகப் புனைந்துரைக்கப்பட்டன.


முளைக்காத வித்து


இந்திரனின்மேல் இவ்வளவு பெரிய கடுப்பு ஏன் வந்ததென் பதைத் தமிழ் அறிவர்கள் கண்டறிய முற்படவேயில்லை. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஆய்வுநெறிகளும் விளக்கங்களும் தமிழ்த் தெய்வமான இந்திரனுக்கு ஏன் இந்தக் கதி என்பதைத் தெரிந்து கொள்ள முனையவில்லை. அக்கால் ஆழ வேரோடி யிருந்த ஆரிய-திராவிடக் கருத்தியலே இதற்கான முதற்கரணம். ஆரிய-திராவிடக் கருத்தியல், இந்திரனை ஆரியக் கடவுளாகவே கருதியது. வந்தேறித் திராவிடர்கள் கற்பித்த ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு போட்ட கோட்டைக் கடக்கத் தமிழர்களில் ஆய்வா ளர்கள் எவரும் துணிந்தாரில்லை. இந்திரன் என்ற தமிழ்த் தெய்வத்தை அவர்கள் ஆரியருக்கே நீரட்டித் தந்துவிட்டனர். ஆரியக் கருத்தியலாருடன் சேர்ந்து ‘திராவிடர்’களும் இந்திரனை ஆரியனாகவே பார்ப்பதென்பது அவர்களின் வந்தேறி நலன்களுக்கு ஏற்புடையதாயிருந்தது. இதனால், வடுகம் எடுத்த இருவேறு தோற்றங்(அவதாரங்)களே ஆரியமும் திராவிடமும் என்றாயின.


முந்தைய சென்னை மாகாணத்திலிருந்த பழைய வடுக ஆள வந்தார்க்கு அந்த ஆரிய-திராவிடக் கருத்தியல் ‘திராவிடம்’ என்ற பற்றுக்கோட்டைக் காட்டியது; அவர்கள் அதைக் குரங்குப்பிடி யாய் பற்றிக்கொண்டனர்.


பண்டைய உரோமப் பேரரசை ஓயாமல் அலைக்கழித்துப் பின்பு அந்த உரோமையே கைப்பற்றித் தாங்களே உரோமானியமய மான செருமானிய அநாகரிகரைப்போல், அநாகரிகர்களாயிருந்த வடுகர்களும்கூடப் பண்டைத் தமிழரசுகளை அவ்வாறே அலைக் கழித்துப் பின்னர் அந்தத் தமிழரசுகளையே வீழ்த்தித் தமிழ்மயமாயினர் என்பதும் வரலாறு.


இவ்வாறு தமிழரசுகளை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், வானியல் உருவகங்களின் வழிவந்த பண்டைத் தமிழரின் பெருந் தெய்வ வழிபாட்டு வடிவங்களாகிய இந்திரன், மாயோன் (மால்), சேயோன் (கார்த்திகேயன் வடிவில் முருகன்), உருத்திரன் (சிவன்) ஆகிய தெய்வங்களைத் தமதாக்கிக்கொண்டனர். கீழைக்கங்கைக் கரையிலிருந்த நன்னர்(நந்தர்)களின் அரசை வீழ்த்தியதோடு நில் லாத இவ் வடுகர்கள், தென்னிந்தியாவில் முடங்கிய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளையும் வீழ்த்தி ஆளவந்தார்களாகிக் குந்திக் குதிர்ந்து வந்தேறி ஆட்சியியல் கட்டுமானத்தைக் கண்டபின் - குறிப்பாகப் பல்லவ வடுகரின் காலத்தில்- வடக்கிலிருந்து வந்த அருகத்தையும் புத்தத்தையும் சேர்த்து இந்திரன் வழிபாட்டையும் ஒழிக்கத் துணைபோயினர்.


திருநாவுக்கரசர் “ஆனைஇனத்தின் துகைப்புண்ட அமணரா யிரமும் மாய்த்தற்பின்” - அதாவது, யானையைச் சமயக்குறியீடாகக் கொண்ட ஆயிரம் ஆசிவகரைப் பழையாறையில் கொன்று கொலைவெறியாட்டை நடத்திய பின்னரும் - திருஞானசம்பந்தரின் தூண்டுதலால் பாண்டியநாட்டில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவி லேற்றிய பின்னரும் - அக்கால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மீப்பெரும் சமய வன்முறை வெறியாட்டிலிருந்து தப்பிப் பிழைத்த அருகரின் ஊர்கள் சில தமிழகத்தில் இருக்கத்தான் செய்தன; அருகர் கோயில் களும் எஞ்சிக் கிடக்கத்தான் செய்தன. ஆனால், இந்திரனுக்கான கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்களாகவும் பெருமாள் கோயில்களாகவும் செய்யப்பட்டன. இந்திரனுகென்று ஒரு கோயிலையும் விட்டுவைத்தாரில்லை. ஆசீவகம் என்னும் அறிவுச் சமயம் இருந்த இடம்கூடத் தெரியாதவாறு முற்றாக அழித்தொழிக்கப்பட்டது.


இவ்வாறு நேர்ந்ததற்கான கரணங்களைத் தேட வேண்டும்.


வடுக வந்தேறியத்தின்கீழ் இந்திரன் வழிபாடு ஒழிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுவதால், அந்த இந்திரன் வழிபாட்டை உயிர்ப்பிக்கவோ புதுப்பிக்கவோ வேண்டுமெனக் கூறுவதாகாது.


தமிழரினத்தின் வீழ்ச்சிக்குக் கரணமாயிருந்த வடுகப் படையெடுப்புகளுக்குப்பின் புதிதாக முளைத்த அல்லது புகுத்தப்பெற்ற சமய நம்பிக்கைகளும்கூடத் தமிழர்களின் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் வழிகோலியதை இக்ககாலத்துத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் எண்ணத்தில்தான் இந்திரன் வழிபாட்டைப்பற்றிக் கருத்துரைக்க முனைந்தோம்.


இந்திரனை வரன்முறையற்ற பெண்வெறியனாகவும் காமு கனாகவும் தொன்மங்கள் காட்டுகின்றன. இந்திரன் வழிபாடு அருவருக்கத்தக்க காமக்களியாட்டங்களுடனும் சடங்குகளுடனும் தொடர்புடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவற்றின் ஊடாக நன்கு குறிப்பறிய முடிகின்றது. இக் காமக்களியாட்டங்கள் வரம்பு மீறிச் சென்றதால், கடுந்துறவுவழி நின்ற ஆசிவகமும் அருகமும் புத்தமும் அந்த இந்திர வழிபாட்டை எதிர்த்துக் களம் கண்டிருக்க வேண்டும். இச் சூழலை வடுகப் பிராமணியம் பயன்படுத்திக் கொண்டது. இது இந்திர வழிபாட்டுக்கு எதிரானதொரு சூழலைத் தோற்றுவித்திருக்கும்.


மேலும், அக்குத்தின்றி நெடுஞ்ஞாண் கிடையாகத் தரையில் வீழ்ந்து இறைவனிடம் அடிபணிகின்ற (சரணாகதி) நெறியான இறைப்பற்றி (பத்தி) நெறி, அடிமைகளாய் வழியறியாது திகைத்து நின்ற தமிழர்களிடம் மீப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியதும்கூட இந்திர வழிபாடு ஒழிக்கப்படுவதற்கான கரணங்களில் ஒன்றாயிருந்திருக்கும்.


4.8.2011