செவ்வாய், மே 15, 2012

இந்திய அரசே! அணு உலை போராட்டத்தை ஒடுக்காதே: சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்


செவ்வாய்க்கிழமை, மே 15, 2012, 10:46

லண்டன்: கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு சர்வதேச மன்னிப்பு சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசும் இந்திய அரசும் தொடர்ந்து அணு உலை போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கின்னஸ் சாதனையாக 5,000 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது பிரிவினைவாத வழக்குகளும், பல்வேறு வழக்குகளும் போட்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

உதயகுமாரின் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை வாசம் கிடைக்கக்கூடும். இயற்கையை பாதுகாக்க பாடுபாடும் உதயகுமார் போன்றோருக்கு இந்திய அரசு கொடுக்கும் பரிசு இது. மேலும் இடிந்தகரையை சுற்றிலும் 144 தடை உத்தரவு போட்டு ஊருக்குள் யாரும் போகவோ வெளியே வரவோ முடியாதபடி செய்துள்ளது அரசு.

இதை சர்வதேச மன்னிப்பு சபை மனித உரிமை மீறலாகவே கருதுகிறது. அதனால் உலகில் உள்ள அனைவரையும் இந்திய அரசுக்கு தகவல் அனுப்புமாறு சர்வதேச மனிப்பு சபை கேட்டுக்கொள்கிறது. உலகில் உள்ள யாவரும் இந்த கோரிக்கையை இந்திய அரசுக்கு எழுதலாம்.

1. அமைதியாக போராட்டம் நடத்தி வரும் போராளிகளின் மேல் போடப்பட்ட பொய்யான வழக்குகளை திரும்பப் பெறு.

2. சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் முகிலனை விடுதலை செய்.

3. 144 தடை உத்தரவை உடனே நீக்கு. ஊர் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி.

4. சர்வதேச, இந்திய சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் அமைதி வழிப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கு. அவர்களின் கருத்துரிமைக்கு மதிப்பளி.

இந்த கோரிக்கைகளை வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nandri thatstamil.com

திங்கள், மே 14, 2012

அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்


இடி ந்தகரை போரட்ட மக்களுடன் தமிழர் களம் பொது செயலாளர் அரிமாவளவன்  
நாள் 09.05.2012

ஞாயிறு, மே 13, 2012

இடிந்தகரை 
போராட்டம் வெல்லும் !

அணு உலை எதிர்ப்பு போராட்டம்

 
கூத்தங்குளி 

கூடங்குளம்


இடிந்தகரை 

கூடங்குளம்


இடிந்தகரை மக்கள் போராட்டம் 

கூடங்குளம் அணு உலைஎதிர்ப்பு


மக்கள் போராட்ட நிகழ்வுகள் !

வெள்ளி, மே 11, 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம்



இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட 100 பேர் உண்ணாவிரத போராட்டதில் பங்கேற்றனர். மீதமுள்ள போராட்டத்தினர் தங்கள் பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சியில்  உள்ளனர். 

-போரட்ட இடத்திலிருந்து தொடர்பாளர்  

நூல் அறிமுகம்



நற்றமிழ் பெயர்கள் (மகளிர்) 
ஆசிரியர் ஒப்புரவன்
வெளியீடு : நம் வேர்கள் பதிப்பகம்
விலை:ரூ . 200/-
நூலைப்பற்றி: எல்லா இமாலய கனவுகளும் இருக்கிற இடத்திலிருந்துதான் அடிஎடுக்கவேண்டும். தமிழை ஆட்சி மொழி ஆக்கிட நெருப்பாற்றில் நீந்தி வருவேன் என்று சொல்லி வருகிறவன் வீட்டுக்குள் விளையாடுகிற ஷீலாவையும் ஷில்பாவையும் விரட்டிவிட்டு நல்ல தமிழ் பெயர்களை நாவிலும் நடுவீட்டிலும் வலம் வர வைக்க வேண்டும். 
- தமிழ்த் திரு அரிமாவளவன், பொதுசெயலாளர் தமிழர் களம், தமிழர் நாடு.

பெண் குழந்தைகளுக்கு சூட்டும் இனிய தமிழ்ப்பெயர்கள் அடங்கிய அரிய நூல்.

தொடர்பு எண்: 9943275926

sinthippeer


வியாழன், மே 10, 2012

கூட்டு வழிபாடும் கூடன்குளமும்...









இடிந்தகரை 10.05.12

 இன்று காலை முதல் இடிந்தகரையிலும் அதைச் சுற்றியுள்ள உவரி, கூத்தன்புளி, போன்ற கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கூட்டு வழிபாட்டு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு சிறப்பு வழிபாட்டு நிகழ்விலும் தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு.அரிமாவளவன் கலந்து கொண்டு கூடன்குளம் அணுஉலை குறித்துப் பேசினார். மேலும் பொதுமக்கள் கண்ணீர்மல்க இறைவனிடம் மன்றாடி வழிபட்டனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்ற சிலப்பதிகார பொன்மொழிக்கொப்ப அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமானது முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக அந்த மக்களின் பேராற்றல் வாய்ந்த வழிபாடு வீண்போகக்கூடாது என்று நாமும் வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். 

செய்தி ஊடகப்பிரிவு
தமிழர்களம்.

செவ்வாய், மே 08, 2012

வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பித்தரும் போராட்டம்!!





 
 

இடிந்தகரை 06.05.2012 
இடிந்தகரையில் வெகு நீண்ட நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை தமிழக அரசும், நடுவண்அரசும் எள்ளளவும் கண்டுகொள்ளாத நிலையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தற்போது போராட்டக்குழுவில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமான சூழல் ஏற்பட்டதையடுத்து. தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் தலைமையில் உதயகுமார் மற்றும் போராட்டக் குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து தங்களை வெறும் வாக்கு எந்திரமாகவே கருதும் மாநில அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நெருக்கடியைத் தரும் வகையில் இன்று இருபத்திஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடமே திருப்பித் தரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசும் நீடித்து நிலைத்து ஆண்டதாக வரலாறு இல்லை. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் சப்பான் தனது கடைசி அணுஉலையையும் மூடிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ள சப்பான் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பத்தை ஒருபோதும் சப்பானுடய அறிவியல் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்களே அணுமின் சக்தி தேவையில்லை மாற்றுவழியை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் என்று அறிவித்துள்ள நிலையில் எந்த விதத்தில் திருடலாம், கொள்ளையடிக்கலாம், ஊழல் செய்யலாம் என்பதற்காகவே ஆட்சிக்கு வருபவர்களாலும், அவர்களுக்கு அடிவருடியாக இருக்கும் இரக்கமற்ற அறிவியலாளர்களாலும் ஒருபோதும் நன்மை விளையாது. மக்களுக்கான ஆட்சியை நடத்தவும் முடியாது. எனவே இடிந்தகரை மக்களின் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கானதும் என்பதை நாம் உணரவேண்டும். அறம் வெல்லட்டும்!!

-கருவைமுருகு

ஞாயிறு, மே 06, 2012

சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி



கண்ணகி... மாதவி...கோப்பெருந்தேவி...
கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெருந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்புக்கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப்பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக்கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும்.

கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளதான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக இருப்பது ஆச்சரியமில்லை. அது அவளது கடமை. எனவே கண்ணகியின் கற்பு நேறி கடமையாகிவிடுகிறது.

ஆனால் மாதவி அப்படியல்ல. தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள். கோவலனின் ஆசை நாயகி. அவனது மகளான மணிமேகலையை கருவில் சுமந்து பெற்றெடுத்து, அப்பெண்னை துறவியாக வளர்த்தவள். கோவலன் பிரிந்து சென்ற பிறகு மாதவி நினைத்திருந்தால் வேறொரு செல்வந்தருக்கு ஆசை நாயகி ஆகி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. கோவலனை மானசீக கணவனாக ஏற்று வாழ்ந்தவள், கற்பு நெறி காத்தவள். மாதவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியது.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்கு எடுத்துக் காட்டு, மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னன். கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாலும் கண்ணகிக்கு அநீதி இழைத்ததாலும், அவையில் உடைபட்டு கிடந்த சிலம்பை போல நெஞ்சு வெடித்து உயிரிழந்தான். நெடுஞ்செழிய மன்னரின் மனைவி, அரசி கோப்பெருந்தேவி கணவன் உயிரிழந்ததை கண்ட அதிர்ச்சியில் அவளும் உயிரிழந்தாள். கணவன் இறந்த பிறகு உயிர் வாழ நினைக்காத மனைவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியதுதான், இருந்தாலும் கண்ணகியை போல கோப்பெருந்தேவியின் கற்பு நெறியும் கடமையாகிவிடுகிறது.

எனவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி ஆய்வுபடி முதற்கற்பு மாதவிக்கும் இடைக்கற்பு கோப்பெருந்தேவிக்கும் கடைக்கற்பு கண்ணகிக்கும் கிடைக்கிறது. கண்ணகிக்கு ஏன் கடைக்கற்பு? கோப்பெருந்தேவிக்கு ஏன் இடைக்கற்பு? என்றால், கணவன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் கோப்பெருந்தேவி, கணவன் உயிரிழந்தால் தனது உயிரையே நீத்தாள். உயிரைவிட கண்ணகியின் கோபம் பெரிதல்ல என்பதால் கோப்பெருந்தேவிக்கு இடையும் கண்ணகிக்கு கடையும் கொடுக்கப்பட்டுள்ளது.

nandri: http://vinayaganickson.blogspot.in

மங்கலதேவி கண்ணகி கோவில்!


சேதமடைந்த நிலையில் கண்ணகி கோயில் பகுதி
மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டுக்கு சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஒரு நாள் மட்டுமே இக்கோயில் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கிருந்து ஒரு பக்கம் கிழக்கு மலைத்தொடர்களையும், அதனுடன் தமிழ் நாட்டில் இணைந்திருக்கும் சில கிராமப்பகுதிகளையும் நன்றாக காணலாம்[1].

தல வரலாறு

கோவலனுக்கு பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதறிந்து கோபத்துடன் கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் அவன் தவறை உணர்த்தித் தவறாக நீதி வழங்கிய மதுரை மாநகரமே தீப்பற்றி எரியட்டும் என்று சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி 14 நாட்கள் நடந்து திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலாதேவி கண்ணகி கோயில் இருக்கிறது.

துர்க்கையம்மன் கோயில்

இக்கோயில் வளாகத்தினுள் கேரள மக்கள் வழிபடும் துர்க்கையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகள் நடத்துகின்றனர். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அனைவரும் இக்கோயிலில் வழிபட்டுச் செல்கின்றனர்.

எல்லைப் பிரச்சனை

தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இந்த மங்கலதேவி கண்ணகி கோயில் மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கண்ணகி கோவிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896 -ல் நடத்திய சர்வேயும், 1913, 1915 -ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 -ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு துவக்கப்பட்டு கோவிலைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. 1976ல் இந்த சீரமைப்புக் குழு,அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது. கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு ரோடு போடுவதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்த நிலையில் 1976-ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக கேரள அரசு ஒரு பாதை அமைத்தது. இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த சாலையை வைத்துக் கேரள அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுகிறது.

கண்ணகி கோயில் விழா

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன்படி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வருடந்தோறும் இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் கேரளா அரசு சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். மற்ற நாட்களில் இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கோயில் நிலை

கேரள அரசின் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு இடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சித்திரை முழுநிலவு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால் இந்தக் கோயில் பராமரிப்பின்றி கோவிலின் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன. கண்ணகி சிலையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. தற்போது, சித்திரை முழுநிலவு விழா நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.இப்படியே சில காலம் கவனிக்காத நிலை தொடர்ந்தால் வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் அழிந்து போகும். கோவிலைக் காப்பாற்ற  மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கோயிலின் பக்தர்களும் தமிழ் மேல் பற்றுடைய ஆர்வலர்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை

தமிழ்நாட்டில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. இந்த அமைப்பு தமிழ்நாட்டின் கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகி கோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.

புதிய கோயில்

கூடலூர் பளியங்குடி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் வழியில் கூடலூரைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோயில் என்ற பெயரில் புதிய கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் பழமையான கோயில் தமிழ்நாடு- கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் நிலையில் புதிய கோயில் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது மங்கலதேவி கண்ணகியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்


ஞாயிற்றுக்கிழமை, மே 6, 2012, 13:00 [IST]
 Japan Nuclear Power Free As Last Reactor Shuts

Experts in the Elec. Power Industry Fast Return on Investment
டோக்கியோ: ஜப்பானில் இயங்கி வந்த ஹொக்கொய்டோ அணுமின் நிலையம் பரமாரிப்புப் பணிக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் 40 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அணுமின்சாரம் இல்லாத நிலை உருவாகி உள்ளது.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்த பிறகு அணு உலைகளின் பாதுகாப்புக்காக அவற்றை மூடி பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் ஒரு அணு உலை மூடப்பட்டால் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்ற பிறகே திறகப்பட வேண்டும். இதுவரை மூடப்பட்ட அணு உலைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பும் இதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் ஹொக்கொய்டோவில் இயங்கி வந்த அணுமின் நிலையமும் நேற்று மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் அனைத்து அணுமின் நிலையங்களும் மூடப்பட்டு அணுமின்சாரம் இல்லாத ஒரு நிலை உருவானது. இதைக் கொண்டாடும் வகையில் தலைநகர் டோக்கியோவில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் தமது நாட்டில் அணு சக்திக்கு இடமில்லை என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இருப்பினும் ஓஹி என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்பதால் அதனை மட்டுமாவது திறக்க ஜப்பான் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.

சனி, மே 05, 2012

மீண்டும் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம்




திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மீண்டும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் தொடங்கியது.
அணுஉலையை மூட வேண்டும், போராட்டக் குழுவினர் மீதான பொய் வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நிலவியல்-நீரியல் மற்றும் கடலியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த...ி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் ஏற்கெனவே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்களது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், பல்வேறு கிராம மக்கள் சார்பில் சில மாதங்களாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் தெரிவித்தபடி அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து மே 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, சில நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இது தொடர்பாக இடிந்தகரையில் பொதுமக்களுடன், போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில், அரசு கேட்டுக் கொண்டிருக்கும் காலஅவகாச தினமான வியாழக்கிழமை வரை ஆண்கள் மட்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்த எஸ்.பி.உதயகுமார் கூறியதாவது:
எங்களது போராட்டம் இந்தப் பகுதி மக்களின் போராட்டம். மக்களின் கருத்துப்படிதான் நாங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இப்போதைக்கு உண்ணாவிரதத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். அரசு தெரிவிக்கும் பதிலை எங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டால் போராட்டம் கைவிடப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால் வெள்ளிக்கிழமை முதல் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வர்.
அணுஉலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அந்தக் கையெழுத்துப் பட்டியலை முதல்வரிடமும், பிரதமரிடமும் அளிப்போம். ஜனநாயக நாட்டில் மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.