கருவூர்;28.07.2014
கருவூரில் தமிழர்களம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் தமிழில்(தமிழர்) படித்தவர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் எனவும், நீர் வள ஆதாரத்தை பெருக்க ஏரி, குளம் ,வாய்க்கால்,ஆறு போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைகருவேல மரங்களை அழித்திட கோரியும், மாநில அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் கட்டாயம் பராமரிக்க வலியுறுத்தியும் அதை செயல் படுத்தாத அலுவலர் மீது கடும் நடவடிக்கை கோரியும், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி,சமஸ்கிருதம் போன்றவற்றை திணிக்கும் மத்திய ஆளும்அரசை வன்மையாக கண்டித்தும்,தமிழர்களின் பண்பாட்டுக்குஎதிராக செயல்படும் சில அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தினை தடை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு வாகை தமிழ் முதல்வன் தமிழர்கள கருவூர் மாவட்ட செயலாளர் தலைமையில் தமிழர்களம் மேற்குமண்டல செயலாளர் அரசு முன்னிலையில் தமிழர்கள பொதுசெயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்,
நிகழ்சியில் வழக்கறிஞர் ஜீவானந்தம் ,ம.காமராசு,வழக்கறிஞர் மா.புகழேந்தி, ந.சண்முகம் சமூக ஆர்வலர், இரா.சக்திவேல், கருவை முருகு , இரவிசந்திரன், மணவை பால்நிலவன் மற்றும் மணவை தமிழர்கள நட்புகள் மற்றும் மருங்காபுரி தமிழர்கள உறவுகளும் நிகழ்சியை சிறப்பித்தனர்.
ஊடகபிரிவு
தமிழர்களம் கருவூர்