திங்கள், டிசம்பர் 29, 2014

நினைவாய் மறைந்த ஜீவா! நெஞ்சிலே விதையாய் !!

 29.12.14
கரூர்

அந்தச் செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா..... என்று பதறியது நெஞ்சம்.... காலனை வெல்ல யாரால் முடியும் என்பதை நம்பித்தான் ஆக வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது இன்றைய பொழுது!.

தமிழ்த்தாயின் தலைமகனில் ஒருவர் மறைந்துவிட்டார்.... சமூக நீதிக்காக எந்த நேரத்திலும் தயங்காமல் களம் கண்டவர்.....தமிழ்தேசம் மலர வேண்டும் என்று தீராத தாகத்துடன் தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டவர். தன்னை இறுதி வரை ஒரு மாணவன் என்று பெருமிதத்தோடு கூறியவர்.... தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர்... “சட்டத்தரணி” திரு..ரா.ஜீவானந்தம்.....தோழர் என்று சக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்......அனைத்து கட்சியிலும் உள்ள நண்பர்களோடு அன்போடு பழகக்கூடியவர் அதே சமயம் தனது விமர்சனங்களை மிக கூர்மையாக நேர்மையாக வைத்து கருத்தாடக்கூடியவர்! தினம் களம் காண்பவர்....
என்னேரமும் எங்களை படித்து விவாதிக்க வேண்டும் திறணாய்வு செய்ய வேண்டும் என்று இளையோரை ஊக்கப்படுத்துபவர்..... இப்போது நம்மிடையே இல்லை..... இறப்பை வெல்ல முடியாது ஆனால் இறந்தும் வாழ முடியும்! அதை நமக்குள் விதைத்து சென்றவர்! அவர் காணவிழைந்த தமிழர்தேசத்தை மலரச் செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்...தமிழர்களம் அதை நிறைவேற்றும்....