செவ்வாய், நவம்பர் 29, 2016

27.11.2016
திருச்சி
மாவீர்ர் நாள் நிகழ்வு

          திருச்சியில் தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு அரிமாவளவன் அவர்களின் தலைமையில் மாவீர்ர்கள் நாள் நிகழ்வு நடைபெற்றது. 

               நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய புதுவை அழகர் அவர்கள் ஈழத்தில் விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற மாவீரர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை அவர்களின் கனவை நனவாக்க நம் வாழ்நாளை அர்ப்பனிக்கவேண்டும் என்றும், அதற்காக நமது தனித்திறன்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டுமெனவும் அதுவே இன்றைய மாவீர்ர் நாளில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதியேற்பு என்று உரை நிகழ்த்தினார். 
            நமது தேசிய இனம் தனி நாடுகேட்டுப் பெற வேண்டிய சூழலை இந்தியாவே உருவாக்கிவருகிறது. ஆகையால் நாம் சாதி மதம் கடந்து ஒரே தமிழினமாக நின்று களமாடவேண்டியது காலத்தின் தேவை என்றும், கருப்பு பண ஒழிப்பு, என்பது தமிழர்கள் மீது ஏவப்பட்டுள்ள பொருளாதார போர் என்றும், இதனால் சிறு குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டும், இங்கே உற்பத்தியாளர்கள் முடக்கப்பட்டும், வடநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவை மட்டும் செழிப்பாக வளர மோடி அரசு முட்டுக்கொடுக்கிறது என்றும். 

              உயர்கல்வியில் அனைத்து தேர்வுகளும் தமிழிலும் எழுத அனுமதிக்க நாம் கட்டாயப்படுத்த வேண்டும் என்றும், நமது பிள்ளைகள் அதிகளவில் அரசுப்பணிக்கு செல்ல ஆயத்தப்படுத்தவேண்டும் எனவும், அதற்காக இப்போது மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கக் கூடாது என்றும்.

         ஒருபக்கம் இந்திய அரசு தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டுகொள்ளாமல், இன்னொருபுறம் சொந்த நாட்டிற்குள் ஏதிலியைப்போல தமிழர்கள் வாழவேண்டிய நெருக்கடியையும் கொடுக்கிறது. மொத்தத்தில் ஈழத்தில் நடைபெற்ற ஒரு படுகொலையைப்போல இங்கே தமிழகத்திலும் நடக்க சாதி, மத மோதல்களை மறைமுகமாக செய்கிறது இந்த பா.ச.க அரசு என்றும் தெரிவித்தார். 

         நிகழ்வின் இறுதியில்  மாணவர்களின் கலைநிகழ்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விடுதலை நெருப்பை பற்றவைப்பதாகவும், எழுச்சியூட்டுவதாகவும் அமைந்திருந்தது. ஒரு நல்ல வீறுகொண்ட தலைமுறை   உருவாகி வருகிறது என்பது பெருமைக்குரியது!

       முன்னதாக தமிழர்களத்தின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டமும், தமிழர்களத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த விவாதமும் நடைபெற்றது.களத்திற்கான கொள்கை வரைவை வரும் பிப்ரவரி திங்கள் நான்காம் நாள் சென்னையில் வெளியிடுவோம்! எம் மக்களுக்கான உரிமை மீட்பில் முழு ஈடுபாட்டுடன் களமாடுவது என்றும்  அண்மைக்கால நிகழ்வுகளையும், நகர்வுகளையும் ஆய்வு செய்தோம்! தமிழர் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்டோரையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல்படும் எமது முயற்சி தொய்வின்றி தொடரும் என்று அரிமாவளவன் தெரிவித்தார்.
                        
                        நிகழ்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும், தமிழர்களத்தின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விரைவில் தமிழர்களம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டியதன் அவசியத்தையும், அதற்கான முன்னெடுப்புகளையும் குறித்து பேராசியர் சாம்சன் எடுத்துரைத்தார். 

மாண்ட வீரர் கனவு பலிக்கும்!
நாளை எங்கள் நாடு பிறக்கும்!!
வீடுகள் தோறும் வீரம் பிறக்கும்!
விண்ணும் மண்ணும் விடுதலை முழங்கும்!!



































செய்தி ஊடக பிரிவு கருவூர்.