ஞாயிறு, ஜூலை 02, 2017

கலந்தாலோசனைக் கூட்டம்

01.07.17
திருச்சிராப்பள்ளி

                             தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு.அரிமாவளவன் அவர்களின் பிறந்த நாள் வருகின்ற 04.07.17 அன்று தமிழகம் முழுவதும் களத்தினரால் கொண்டாடப்படுவதை முன்னிட்டு களத்தின் மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டமும், மணப்பாறை பகுதி மாணவர்களின் குறும்பட வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக திருச்சிராப்பள்ளி நகரில் நடைபெற்றது!

                           நிகழ்விற்கு மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு.அரசு தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்விற்கு புதுவை மாநிலச் செயலாளர் திரு. அழகர், செந்தீ, கலையரசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், 

தமிழர் களத்தின் கட்சி நெறிக்கான விளக்கத்தை அருண்மொழி வேந்தன் விளக்கினார். முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் பால்நிலவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்வை திரு .கரிகாலன் ஒருங்கிணைப்பு  செய்தார். நிகழ்வின் இறுதியில் கரூர் மாவட்டச் செயலாளர் திரு தமிழ்முதல்வன் நன்றி கூறினார்.

           நிகழ்வில்  பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் வழங்கிய ஏற்புரையில் மாவட்டச்செயலாளர்கள் மக்கள் பணியில் தொடர்ந்து அயராது பாடுபட வேண்டும். களத்தில் நேர்மையாகவும், மக்களின்அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளை களைய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தும் விதத்திலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், புதிய உறுப்பினர்களைசேர்ந்து களத்தின் செயல்பாட்டிற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனவும், அனைத்துபொறுப்பாளர்களும் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.