
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், ஏப்ரல் 02, 2012
கூடன்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் விடுவிப்பு
கூடன்குளம் அணுஉலையை எதிர்த்து போராடிய பொதுமக்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி நடுவண் சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கைதான 178 பேரில் 148 பேர் மட்டும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 86 ஆண்கள், 41 பெண்கள், 21 சிறுவர்கள் ஆவர். இதில் சிறுவர்களை நான்குநேரி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். விடுதலையானவர்களை தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் அரசு அவர்கள் திருச்சியிலிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக