திங்கள், ஏப்ரல் 02, 2012

கூடன்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் விடுவிப்பு

கூடன்குளம் அணுஉலையை எதிர்த்து போராடிய பொதுமக்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி நடுவண் சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கைதான 178 பேரில் 148 பேர் மட்டும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 86 ஆண்கள், 41 பெண்கள், 21 சிறுவர்கள் ஆவர். இதில் சிறுவர்களை நான்குநேரி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். விடுதலையானவர்களை தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் அரசு அவர்கள் திருச்சியிலிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக