புதன், ஜனவரி 29, 2014

அழகான நைனா! அசிங்கமான தலைவன்!

29.1.14
மணப்பாறை

அழகான நைனா! அசிங்கமான தலைவன்!

 கோபத்தில் வயதான தங்கள் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எப்படி பேசுவார்கள் என்று தெரியாதா என்ன? “பார் தந்தையே, மூன்று நான்கு மாதங்களில் உன் இளைய மகன் ஸ்டாலின் இறந்துவிடுவார்” என்று மனோகரா வசனமா சொல்லியிருப்பார்? “.... பயல! கிழட்டு ... நீ வேண்ணா பார்ரா!....” இப்படி ஒருமையில் பேசியிருக்கலாம்! எந்த தகப்பனுக்குத்தான் இந்த சொற்களைக் கேட்டு பொறுத்துக் கொள்ள முடியும்? “இனிமேல் நான் இருக்கிற வீட்டுப் பக்கம் வந்து தொலைச்சிடாதடா நாதாரி! நான் செத்தாகூட என் மூச்சியில முளிக்காதடா... நா...!” இப்படி பெற்றோர் திருப்பித் திட்டுவர். கருணாநிதியும் அப்படியே திட்டியிருக்கலாம். “போயா யோவ்! (போடா டேய் என்று கூட சொல்லியிருக்கலாம்) உனக்கு எத்தனை வீடுன்னு தெரியாதா? நீயெல்லாம் ஒரு அப்பன்! குருட்டுத் .....” இப்படியெல்லாம் திட்டியிருக்கலாம். இதை நாம் பெரிதாக எடுக்கலாமா என்ன? 

        ஆனால், அடிச்சிருக்கக் கூடாது! என்ன அழகான அப்பா அவர்! கனிமொழி சிறையில் வாடியபோது வதங்கிப் போன அப்பா! ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டி மகிழும் அப்பா! அழகிரியின் அனல் சொற்கள் கண்டு கண்ணீர் விட்டுக் கருகிப் போகும் அப்பா! அப்பா, அப்பப்பா! நீயல்லவோ அழகான அப்பா! உனக்கிணை இங்கு யாருண்டு அப்பா? உலகில் நீ மட்டுமா அப்பா? 

         ஏன் நைனா! குட்டிமணி செகநாதனை நினைவிருக்கிறதா நைனா? என்னிரு கண்களும் ஈழம் காணவேண்டும் என்று துடித்த ஈழத்து இளைஞர்கள். சிங்களக் காடைகளின் கழுகுப் பார்வைக்குத் தப்பி தமிழகம் வந்து தஞ்சம் கேட்டு இருந்தனர். காட்டி கொடுத்தியே நைனா! அவர்கள் கண்ணிரண்டையும் தோண்டி உடைத்து, நாவை அறுத்து வெல்லிக் கடை சிறையில் கொன்று பிணமாக்கிவிட்டனரே நைனா! காட்டிக் கொடுத்தது நீயல்லவோ நைனா!
        கர்நாடகாவில் 91 காவிரிக் கலவரத்தில் பல்லாயிரம் தமிழர்கள் வீடிழந்து உயிரிழந்து இறுதியில் சிலர் உம்மிடம் வந்து முறையிட்டபோது, உங்கள் மருமக்கள் கர்நாடகத்தில் திரைப்பதிவு செய்து கொண்டிருந்ததை எண்ணி, “குரங்குப் புண்ணை நோண்டாதீர்கள்” என்று முறைத்து அவர்களை வெளியே அனுப்பினீரே நைனா! வைகோ தெலுங்கர்தான்! 
        ஆனாலும் நீரும் தெலுங்கர் என்ற விதத்திலே உம்மை தனது நைனாவைவிட மேலாக வைத்திருந்தார். அவர் ஈழம் சென்று எங்கள் தலைவரைத் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது அதை இந்திய உளவுத்துறைக்குப் போட்டுக் கொடுத்தது “நல்ல நோக்கில்தானா நைனா?” 
       தா. கிருட்டிணன் நடைப்பயிற்சிக்குப் போனபோது போட்டுத் தள்ளினார்களே நைனா? தினகரன் ஊழியர்களைப் போட்டுத் தள்ளினார்களே நைனா? மதுரை லீலாவதியைப் போட்டுத் தள்ளினார்களே நைனா? தாமிரபரணி ஆற்றுக்குள் ஒரு வயது குழந்தை உட்பட 17 தமிழர்களை போட்டுத் தள்ளினீர்களே நைனா! அவர்களெல்லாம் கொசுவா நைனா? 
               இசைப்பிரியா கொலை செய்யப்பட்டபோது, பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோது, ரமேசு கொலை செய்யப்பட்டபோது, ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது ஆட்சிக் கட்டிலில் காலாட்டிக் கொண்டுதானே இருந்தீங்க நைனா!
     சாராயத்தைத் தமிழகத்தில் அறிமுகம் செய்து பல்லாயிரக் கணக்கான தமிழச்சிகள் தாலியறுத்திருக்கிறார்களே நைனா! கொலைகாரன் ராசபக்சேவோடு உம் அருமை மகள் கனிமொழி கைகுலுக்கி வந்தாளே நைனா! ராசீவ்காந்திப் படுகொலையில் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளின் தூக்குத்தண்டனையை ஏன் நிறைவேற்றவில்லை? என்று மத்திய அரசுக்கு உம் மாநில அரசு எத்தனை முறை கடிதம் எழுதி நினைவூட்டியது நைனா? ஏன் நைனா, உன் பிள்ளைகள் என்றால் உனக்கு உசிரு! அழகிரி சொன்ன சொல்லே பலித்துவிடுமோ என்று பதறுகிற பகுத்தறிவுப் பதரே! என் தமிழ் பிள்ளைகளும் சொந்தங்களும் துடிக்கத் துடிக்கத் செத்தபோது வராத பற்றும் பதற்றமும் நாலு சொல்லுக்கே வந்துவிட்டதே! நீ பெற்ற மகனே, “நீ வீழ்ந்து மடியாயோ!” என்று ஏங்கித் தவிக்கும்போது உன்னால் வீழ்ந்த இந்த இனம் எத்துணை சாவங்களோடு நிற்கிறது நைனா?
       ஏழையின் கண்ணீர்! இல்லாததுகளின் ஏக்கம்! ஒடுக்கப்பட்டோரின் மூச்சு! தமிழினத்தின் தவிப்பு! உன்னை மட்டுமல்ல நீ நேசிக்கிற அத்துணையையுமே எரிக்கும்! இல்லாது ஒழிக்கும்!

 தமிழினமும் ஒரு “தீபாவளி” கொண்டாடும் பார்! 

உங்கள் அரிமாவளவன் தமிழர்களம்

முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டம்


29.01.14
புதுவை

முத்துக்குமரன் நினைவேந்தல் கூட்டம் இலங்கையில் நடந்த இனப் படுகொலையை இந்தியா தடுத்து நிறுத்தக் கோரி முத்துக்குமரன் சென்னை நடுவண் அரசின் கடவுச்சீட்டு அலுவலகம் முன்
பு தன்னைத்தானே தீயிட்டு உயிர்நீத்தார் அவரை நினைவுக்கோரும் வகையில் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் தமிழர்களம் சார்பாக இன்று காலை 11 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியை தமிழர்களம் செயலாளர் கோ.அழகர் தலைமை தாங்கினார் தமிழர்தேசிய இயக்கம் அழகிரி,மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செகநாதன்,செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன்,பூராண்கள் இயக்கம் போன்சு ரமேசு,ஆகியோர் முன்னிலை வகுத்தனர் தமிழர்களம் வழக்குறைஞர் அணி செயலாளர் புரச்சிக்குமார் ,அன்பழகன்,வேலுபிரபாகரன் ,கணேசு,சதிசு,இராசா வெங்கடாசலம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செவ்வாய், ஜனவரி 28, 2014

முத்துகுமரன் நினைவேந்தல்

29.01.14
தூத்துக்குடி,

தமிழர்களம் மாநகர கிழக்கு மண்டலம் பூபாலராயர் புரத்தில் முத்துகுமரன் நினைவேந்தல் முத்துகுமரன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

       நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட பொருளாளர் தமிழ்திரு.எட்வின் செய்திருந்தார். மாவட்ட செயலாளர் அமலரசு தலைமை ஏற்று வீர உரையாற்றினார் ,மாநகர செயலாளர் தமிழ்திரு. ப. பாபு, கிழக்கு மண்டல தலைவர் நெவிஸ்கிழக்கு மண்டலம்பொருளாளர் மிக்கேல், முன்னிலை வகித்தனர் .மற்றும் தமிழர்களத்தின் போராளிகள் மாநகர் கிழக்கு மண்டல இளைஞரணி தலைவர் கவின்,12 வது பகுதி செயலாளர் மாரிச்செல்வம் ,19 வது பகுதி செயலாளர் பெனிட்டோ ,நிசாந்த் ,பிரேம் ,ரவி ,மகேசு,ஆதி ,ஜெனிட்டொ ,ரொசாரி ஆகியோர் கலந்துகொண்டு முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செய்தனர் தமிழீழம் வென்றெடுப்போம் என்றும் முத்துகுமரனுக்கு வீரவணக்கம் என்றும் முழக்கமிட்டனர்.


முத்துக்குமரன் நினைவேந்தல்



தமிழர் கள இளைஞர் இயக்கம் - ஈச்சம்பட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மேல் ஈச்சம்பட்டி சிற்றூரில்(12.01.2014) தமிழர் கள இளைஞர் இயக்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழர்களத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் திரு. அரசு அவர்கள் முன்னிலை வகித்தார். மணப்பாறை வட்டச் செயலாளர் திரு. பால் நிலவன் தமிழர்களக் கொடியேற்றினார். பகுதிப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியன் பெயர்ப்பலகையைத் திறந்து அனைவரையும் வரவேற்றார். “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”










எங்கள் பாவலர்!


மூக்கையூர் இதயநேசனுக்கு என் வீர வணக்கம்!!
உடலைத் தின்னும் சாவே, எங்கள் உள்ள உறுதியை ஒரு இம்மியேனும் அது அசைக்காது! தமிழர் தேசம் அமைக்கும் ஒரு வரலாற்றுப் பாதையில் தமிழர்களத் தோழனாய் எங்களோடு வழிநடந்த மூக்கையூர் இதயநேசன் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கண்இமைக்கும் நேரத்திலும் புதுப் புதுப் பாக்களைப் புனையும் பேராற்றல் பெற்றவர் எங்கள் இதய நேசன்! அப் பாக்களில் எல்லாம் இன ஓர்மையும் எதிரிகளைப் பதம் பார்க்கும் வெடிநெருப்புகளும் ஏராளம் கிடந்தன. அவரது இழப்பு தமிழர்களத்திற்கு குறிப்பாக தூத்துக்குடி தமிழர்களத்திற்கு பேரிழப்பே! ஐயா, நீங்கள் பிறந்து வளர்ந்த உங்கள் குடும்பத்தோடும் தூத்துக்குடி தமிழர்களக் குடும்பத்தோடும் உம்மை வணங்கி நான் நிற்கின்றேன். எத்துயர் வரினும் ஈடில்லா இலக்கை நெருப்பாற்றலோடு தொடர்ந்து செயல்பட்டு இழுத்து வருவோம்!
உங்களோடு உங்கள் நடுவில்,
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்

சாயாக் கடை அரசியல்!


மணி சங்கர ஐயர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது என் கருத்து. செம்மொழி மாநாடு நடத்துவது பற்றிய எண்ணமே வருவதற்கு முன்பாக கருணாநிதி தினமணி ஆசிரியரைக் கூப்பிட்டு செம்மொழி பற்றிய ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று சில குறிப்புகளை கொடுத்து எழுதவைத்துவிட்டு பின்னர் ஏதோ அதைப் படித்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்த முன்வந்தது போல காட்டிக் கொண்டார். அதுபோல, நரேந்திரமோடியின் விளம்பர உத்திகளுள் இதுவும் ஒன்று போலத் தெரிகிறது.
மக்களாட்சி என்பது என்ன? பண்ணையாருக்கும் ஒரு வாக்குதான் பாமரனுக்கும் ஒரு வாக்குதான். ஆண்டியும்கூட ஆண்டை ஆகலாம். “டீக் கடையில வேல பார்த்த உனக்கு நாட்டை ஆளத் தெரியுமா?” என்ற சொற்கள் பாமர மக்களிடம் மட்டுமல்ல பரந்துபட்ட மக்களிடமும் பரவலான ஆதரவையே அள்ளிக் கொடுக்கும். இது மணிசங்கர ஐயருக்குத் தெரியாதா என்ன? எல்லாமே நாடகம்தான். காங்கிரசுக்குள்ளும் சங்கப்பரிவார அமைப்பின் கிளைகள் உண்டு, வேர்கள் உண்டு! மணிசங்கர ஐயர் அதற்கு எடுத்துக்காட்டு!
மற்றகட்சிகளுக்குள் இதுபோன்ற சங்கப்பரிவாரக் கிளைகள் உண்டு என்றால் அண்ணா தி.மு.க.வில் அதற்கு தலைமையே உண்டு. “நரேந்திர மோடி தலைமை அமைச்சராக வரவேண்டும். அல்லது செயலலிதா வரவேண்டும்” என்று துக்ளக் சோ கூறுவதன் பொருளும் இதுதான். சோவைப் பொறுத்தமட்டில் அவரது முதல் தேர்வு செயலலிதாதான். தமிழகத்தில் 40 தொகுதிளை வெல்லும் வாய்ப்பு செயலலிதாவிற்கு இருந்திருந்தால் சோ தாண்டவம் ஆடி, தரகு பார்த்து அம்மணியை அங்கே கொண்டு போயிருப்பார். காரணம் மோடி பிராமணர் அல்லர். செயலலிதா ஒரு பிராமணர். இப்போதைய நிலையில் செயலலிதா 40 தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு இல்லை. “இந்தியாவில் பிராமணருடைய ஆட்சியே இருத்தல் வேண்டும்” என்பது ஒவ்வொரு பிராமணனின் இலக்கு! கனவு!
முதல் கதைக்கு வருவோம். நரேந்திரமோடி ஏன் வரக்கூடாது என்பதற்கு வலுவான பல காரணங்கள் இருக்க... சாயாக்கடைப் பின்னணியை உசுப்பி விடுவது என்பது பச்சையான மட்டமான அரசியல். அதாவது உணர்வின் அடிப்படையில் மக்களை உசுப்பிவிட்டு வாக்கு அறுவடை செய்வது காலாகாலமாக இந்திய, வடுக அரசியல்வாதிகளின் வழக்கம்.
நரேந்திரமோடியின் குசராத் படுகொலைகள் என்பது உணர்ச்சிப் பெருக்கால் நடந்த மதக்கலவரத்தில் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக நடந்து விட்டவை என்று சொல்லவே முடியாது. “எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. காவல்துறை தயாராக இருக்கவில்லை. தவிர்க்க முடியவில்லை!” என்று யாரும் சொல்லவே முடியாது.
கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது. பின்னர் அரசே முன்னின்று இசுலாமியர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தது, எரித்து முடித்தது! இந்தக் கொடூரம் மோடியின் உள்ளத்திற்குள் சீறிக் கொண்டிருந்த ஒரு பயங்கரவாதத்தைத்தான் காட்டுகிறது. இதுவே, அவர் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக வரக்கூடாது என்பதற்கான அழுத்தமான காரணம். இதுபோக, இன்னும் அலசி ஆராய வேண்டிய பல முகாமையான காரணங்கள் உள்ளன. மோடி விளம்பரங்களில் வாழ்ந்தவர், வளர்ந்தவர்! குசராத்தில் ஏதோ மாபெரும் புரட்சி நடந்துவிட்டதாக திட்டமிட்டு சில ஆண்டுகளாக ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டது. அதன் நோக்கமே அவரை தலைமை அமைச்சர் பதவிக்கு நிறுத்துவதுதான். விளம்பரங்களில் வாழும் வீண் மனிதர்களை நம்பி நாட்டை ஒப்படைக்கக்கூடாது. விளம்பரங்களின் வழியாக ஒருவன் வருகிறான் என்றால் வந்தபின் உள்ளக்கிடக்கைகள் மட்டுமே ஆளும்! மோடியைப் பொறுத்தமட்டில் அது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம் காங்கிரசுக் கட்சி! ஈழப்படுகொலைகளை மறக்க முடியமா? இசைப்பிரியா, பாலச்சந்திரன், ரமேசு உள்ளிட்ட பல்லாயிரம் மக்களை கொடூரமாகக் கொன்று குவித்த காங்கிரசு அரசை மன்னிக்க முடியுமா? இது போக, ஊழலின் உச்சத்தில் குளித்து கும்மாளமிட்ட கட்சி இது. சசி தரூர் போன்ற கழிசடைகளை அமைச்சர்களாக வைத்திருக்கும் ஒரு கட்சியை அரசியல் கட்சி என்று ஏற்றுக் கொள்வதா என்ன? சாக்கடையை அள்ளி நடுவீட்டுக்குள் வைக்க முடியாது.
எனவே, இரு பெரும் பயங்கரவாதிகள் அரசியல் வேடம் போட்டு அரிதாரம் பூசிக்கொண்டு அப்பிராணிகள் போல நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மிடம் வருகிறார்கள். இருவருமே மனிதக் குருதியை மலிவாகச் சிந்தும் காடடுமிராண்டிகள்! இதில் இந்த சாயாக்கடை விவகாரம் மலிவான உத்தி! இதைச் சொல்லி மக்களைத் திசை திருப்புகிறார்கள். நாம் முகநூலில் மட்டுமல்லாது முகம் பார்க்கும் மனிதரிடமும் இந்தச் செய்திகளைப் போட்டு வைப்போம்.
உங்கள் அரிமாவளவன்
தமிழர்களம்
கீழே உள்ள படங்கள் ஓன்று குஜராத் மற்றொன்று ஈழம்

கொடூரமான இரு கார்ட்டூன்கள்!


இன்று காலை தினமணியும் தினமலரும் பார்த்தேன். தினமலரின் பகடிப்படம் நஞ்சை உரித்துக் கொட்டியிருந்தது. தினமணி அதே நஞ்சை நயத்திறனோடு சொல்லியிருக்கிறது. உள்ளடக்கம் ஒன்றே!
“நாயைக் கழுவி நடுவீட்டில் வைத்தால்...” என்ற நமது பழமொழியை ஆம் ஆத்மிக்குப் பொருத்தியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
கேச்ரிவாலா அறிந்து செய்கிறாரா? இல்லை தற்செயலாக செய்கிறாரா தெரியவில்லை. அவர் முறைமையில் கை வைக்கிறார். முறைமை என்றால் சிஸ்டம்! அதை உலுக்குகிறார். இந்திய முறைமையை உலுக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் வராது,
“அமைச்சர் ஆகிவிட்டாயா? அலுவலகத்தில உட்காரு! நாலு பேர் சல்யூட் அடிப்பார்கள்! கேட்கிறதெல்லாம் கிடைக்கும்! அடிக்கிற கொள்ளையெல்லாம் அடிக்கலாம்! திரும்பவும் மக்கள் பக்கம் போகாதே!” இதுதான் இந்திய அரசியல் கட்டுமான நெறிமுறைகள்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு அலைந்து திரிந்து போராடிய லாலு பிரசாத் யாதவ் சமாளித்து அதில் பொருந்தவில்லையா? நிதிஷ்குமார் பொருந்தவில்லையா? அத்வானி பொருந்தவில்லையா? வாச்பாய் பொருந்தவில்லையா?
திராவிடப் புரட்சி பேசியவர்களெல்லாம் இதற்குப் பொருந்தித் தொலையவில்லையா? செயலலிதா என்ன மக்கள் நடுவிலா வருகிறார்? களைப்பு ஏற்பட்டால்கூட கொடநாட்டுக்குத்தானே போகிறார்? ஒரு இட்லியை இரண்டுபேர் பிய்த்துத்துச் தின்ற கருணாநிதி என்ன மக்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டா இருக்கிறார்? கம்யூனிசம் பேசியவர்களெல்லாம் இந்த அமைப்பியலோடு ஒத்துப்போகவில்லையா? பின்ன, நீ என்ன .... ! திரும்பவும் சாலைக்கு வந்து போராடுகிறாய்?
இதுதான் எல்லா பெரிசுகளும் கேட்குது! சிவப்புக் கொடி பிடிக்கலாம், காவிக் கொடி பிடிக்கலாம், கருப்புக் கொடி பிடிக்கலாம், கருப்பு சிவப்பு பிடிக்கலாம், மூவண்ணக்கொடி பிடிக்கலாம் ஆனால் எல்லாருமே “நாங்கள் போட்டிருக்கிற வட்டத்துக்குள் நின்று பிடித்துக் கொள்ளவேண்டும்” அவ்வளவுதான். அத்து மீறாதே! வரம்பு மீறாதே! வட்டத்தைத் தாண்டாதே! கிழித்த கோட்டைக் கடக்காதே!
யார் போட்ட வட்டம்? யாருடைய நலன் காக்கும் வட்டம்?
66 ஆண்டுகளாக இந்த வட்டத்தை மீறாமல் நாங்கள் ஆட்சி செய்யவில்லையா? கிழிச்ச கோட்டை தாண்டாமல் நாங்கள் ருத்திர தாண்டவம் கூட ஆடவில்லையை£? நாடாளுமன்றத்திற்குள்ளும் சட்டமன்றத்திற்குள்ளும் வேட்டி கிழிக்கவில்லையா? சேலை கிழிக்கவில்லையா? மைக் பிடுங்கி அடிக்கவில்லையா?
அட நாதாரிகளா! இந்தியம் கிழித்த அந்த கோட்டிற்குள் நின்றுதான் நீங்கள் அலைக்கற்றை ஊழல் செய்தீர்கள்! நிலக்கரி ஊழல் செய்தீர்கள்! போபர்சு ஊழல் செய்தீர்கள்! கரட்டுந்து ஊழல் செய்தீர்கள்! ஆதர்சு ஊழல் செய்தீர்கள்! காமன் வெல்த் கேம் ஊழல் செய்தீர்கள்! கப்பல் பேர ஊழல் செய்தீர்கள்! ஹெலிக்காப்டர் ஊழல் செய்தீர்கள்! ஹாவாலா ஊழல் செய்தீர்கள்! கார்னட் மணல் ஊழல் செய்தீர்கள்! கிரானைட் கல் ஊழல் செய்தீர்கள்! தீவன ஊழல் செய்தீர்கள்! மயானக்கூரை ஊழல் செய்தீர்கள்! பிளசன்ட்ஸ்டே ஊழல் செய்தீர்கள்! வீராணம் குழாய் ஊழல் செய்தீ£கள்! தொட்டதிலெல்லாம் சுருட்டினீர்களே! 66 ஆண்டு காலத்தில் நீங்கள் கோட்டுக்குள்ளும் கேட்டுக்குள் நின்று செய்த ஊழல்களை பட்டியலிட்டால் பக்கங்கள் அடங்காதே!
எத்தனைக் கொள்ளைகள்! கற்பழிப்புகள்! கொலைகள்! மீனவர் கொலைகள், கார்கிலில் கொலைகள்! ஈழத்தில் கொலைகள்! தில்லியில் கொலைகள்! உங்கள் அமைப்பும் முறைமையும் இவைகளைத் தடுக்க எதைக் கிழித்திருக்கிறது?
ஊழலைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லது உங்கள் ஊதாரித்தனத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததா? 66 ஆண்டு கால பட்டறிவு முகத்தில் அடித்துச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! இந்த முறைமை அழித்து ஒழிக்கப்பட வேண்டிய முறைமை! அப்பாவிகள் ஆயுள் தண்டனைக் கைதிகளாகவும் மரண தண்ட¬ன் கைதிகளாகவும் இருக்கிறார்கள்! ஆனால், அற்பப் பதர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். கொள்ளையடித்த கருணாநிதி, ராசா, கனிமொழி, செயலலிதா, லல்லு போன்றதுகளெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன! மட்டுமல்ல நம்மை ஆண்டும் தொலைக்கின்றன!
ஆகவே, இப்போது இருக்கிற முறைமையான பிராமண வல்லாதிக்க அல்லது வடுக வல்லாதிக்க முறைமை அல்லது அமைப்பு அல்லது சிஸ்டம் என்பது இதுதான்!
இதை சதபத பிராமணர்களோ, சங்கப் பரிவார அமைப்புகளோ, ரா என்கிற அமைப்போ, ஐ.பி. என்கிற அமைப்போ உருவாக்கும், மாற்றியமைக்கும், நிர்வகிக்கும்!
தேர்தலில் நின்று மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிற போர்வைகள் இந்த நரகலை, அல்லது சாக்கடையை போர்த்திக் கொண்டு அல்லது பொத்திக் கொண்டு போய்விட வேண்டும்! மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
இதையெல்லாம் புரிந்தால்தான், ராஜீவ் கொலையில் சிக்கிய சந்திராசாமி, சுப்பிரமணியசாமி அல்லது சங்கரராமன் கொலையில் சிக்கிய செயந்திரசாமி, தா. கிருட்டிணன் கொலையாளிகள், தினகரன் பத்திரிக்கைத் தொழிலாளர் கொலையாளிகள், அழகிரிகள் போன்றதுகள் எப்படிச் சுற்றித் திரிகின்றன என்பது புரியும்!
குப்பைகளைக்கூட அள்ள வக்கில்லாத நாடு, 66 ஆண்டுகளுக்குப் பிறகும் திறந்தவெளி மலக்கூடங்களை வைத்திருக்கிற இந்த நாடு, தொடக்கப்பள்ளி கட்டடங்களுக்கு காசு செலவிட வகையில்லாத நாடு, சாராயக்கடைகளைத் திறந்து வைத்து தாலியறுக்கிற இந்த நாடு, 54ஆயிரம் கோடிக்கு ஜெனரிக் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு ஏழை மக்களிடம் மருந்து கொள்ளைக்கு நாட்டை திறந்து விட்டிருக்கிற நாடு செவ்வாய்க்கு மங்கள்யாண் பட்டம் விட்டுக் கொண்டு இருக்கிறது! அங்கு போய் உருளைக் கிழங்கு பயிரிடப் போகிறானாம்! வல்லரசு ஆகத் துடிக்கிறது! அணுகுண்டுகளை அடுக்கத் துடிக்கிறது!
அது சரி! நாயைக் கழுவி நடுவீட்டில் வைக்கிற கழிசடைப் படத்தைப் போட்டிருக்கிறார்களே, அதில் மிகக் கவனமாக யார் பெயரையும் போடாமல் தப்பித்திருக்கிறார்கள்.
ஒரு வேளை... ஊர் ஊராய் நாடக மேடைகளில் நடனமாடி “சேவைகள் பல செய்த” ஒருவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டார் என்று குறிப்பிடுகிறார்களோ!
திருவாரூர் தெருக்களில் .... (வேண்டாம்... கண்ணதாசனின் வனவாசம் குறிப்புகள் காரி உமிழ வைக்கின்றன) அவர் முதல்வரானதைச் சொல்கிறார்களா?
கட்டிய மனைவியைத் தள்ளிவிட்டுவிட்டு களமாடும் “மோடி மஸ்தானை” சொல்கிறார்களா?
மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்து களி தின்ற கபோதிகளைச் சொல்கிறார்களா?
குசராத் மதக் கலவரங்களை நடத்தியவர்களைச் சொல்கிறார்களா?
ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க எங்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்த இத்தாலிப் பொறுக்கியைச் சொல்கிறார்களா?
பாபர் மசூதியை இடித்து பல்லாயிரம் மக்களைக் கொல்லக் காரணமான ஈனர்களைச் சொல்கிறார்களா?
ஊழல் பொறுக்கிகளைச் சொல்கிறார்களா?
இந்தப் பொறுக்கிகள் எந்தப் பொறுக்கிகளைச் சொல்கிறார்கள் என்றே விளங்கவில்லை!
அமைச்சர் ஆனவுடன் கருப்புக் கண்ணாடி போட்ட காருக்குள் உட்கார்ந்து கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் சுழல் விளக்குச் சுல்தான்கள் பந்தா காட்டிக் கொண்டு வண்டிகள் பறந்தால் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பை தெரியாது, தரைக்கடை வியாபாரம் செய்கிற ஏழைகளைத் தெரியாது, தெருவின் குண்டு குழிகள் தெரியாது, எரியாத தெருவிளக்குகள் தெரியாது. ஆகவே, விளக்கைச் சுற்றிக் கொண்டு விரைவாகப் போய் அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கிழிப்பதைவிட நீ கீழே இறங்கி மக்கள் நடுவில் நடப்பதே மேல்! பக்கத்தில் வந்தால்தான் மக்களின் கண்ணீர் தெரியும் மற்றபடி மக்களும் கரும்புள்ளிகளாகவே தெரிவார்கள்.
அரிமாவளவன்
தமிழர்களம்

மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகம் திறப்பு

மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகம் திறப்பு
இன்று 23 சனவரி காலை 10.30 மணியளவில் மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகத்தை பொது செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் திறந்து வைத்து அப்பகுதி மக்களோடு கலந்துரையாடினார்.
மருங்காபுரி பகுதிப் பொறுப்பாளரான திரு. பெருமாள் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட பிற பகுதிப் பொறுப்பாளர்கள் திரு. பொன்னுச்சாமி, திரு. பழனிச்சாமி, திருமதி. ரேணுகா, திரு. பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றத்திற்காக அடித்தளமிடும் தமிழர்களத்தை அனைவரும் ஆதரிக்க திரு. அரிமாவளவன் அவர்கள் கேட்டுக் கொண்டார். எளிய மக்கள் புடைசூழ கழகத்தனம் எள்ளளவும் இல்லாத கலந்துரையாடலும் கருத்துப் பகிர்வும் வழிப்போக்கர்களையும் ஈர்த்திழுத்தது இன்றைய சிறப்பு.

பெரும்பான்மையரின் பயங்கரவாதம்!


ஒரு மோசமான அரசியல்வாதியை அல்லது கொடுமையான ஓர் அதிகாரியை துப்பாக்கியால் சுடுவது தீவிரவாதம் என்று வைத்துக் கொள்வோம். 
ஓர் ஊருக்குள் சண்டை நடக்கிறது. திடீரென வாய்த்தகராறு வன்முறையாகிறது. உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் கையில் கிடைத்த கட்டையை எடுத்து அடித்துவிட்டார். அதில் ஒருவர் பொட்டென்று போய்விட்டார். கொலைதான்! ஆனால் அதைத் தீவிரவாதம் என்று அழைப்பதில்லை. தீவிரவாதத்திற்கு அடித்தளமாக கருத்தியல் இருக்கிறது. அமைப்பியல் இருக்கிறது. ஊர்ச்சண்டையில் அது இல்லை. இதுதான் வேறுபாடு.
இதனால்தான் அரசுகள் கொலைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! கொள்கைகளைப் பற்றித்தான் பேரச்சம் கொள்கின்றன. கொலைகள் ஆதிக்கத்தைத் தக்க வைக்க நடக்கின்றன. கொள்கைகள் ஆதிக்கத்தை அசைக்கின்றன. எனவேதான் அரசுகள் கொள்கைகளை வெறுக்கின்றன. கொலைகளை ஆதரிக்கின்றன!
வறுமையால் நடக்கிற பட்டினிச் சாவுகள் பயங்கரவாதமில்லையா? பட்டினிச் சாவில் அமைப்பியல் கொடுமைகள் இல்லையா? என்னைப் பொறுத்தமட்டில் வறுமையும், பட்டினிச் சாவுகளும், பஞ்சமும், பசியும் பிணியும் இந்த நாட்டின் கொடுமையான தீவிரவாதத்தின் விளைவுகளே!
அப்படிப் பார்த்தால் இந்த நாட்டை ஆண்டு, கொள்ளையடித்து குப்பைமேடாக்கி வைத்திருக்கிற அரசியல்வியாதிகள், பெரும்பான்மையான அதிகார அகவம் (வர்கம்) ஆகியனதான் மிக மோசமான குற்றவாளிகள்.
அப்படியானல் இந்த நாட்டில் இப்படிப்பட்ட மோசமான குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. அதிலும் மிக மோசமானவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கிடைக்கிறது. அது எப்படி?
அதுதான் பெரும்பான்மை பலம் ஆடும் பித்தலாட்டம்!
தனியாக ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் இந்த நாட்டில் அது மாபெரும் குற்றம். கூட்டாக சேர்ந்து கும்பலாக நாட்டையே சுருட்டினால் அது அரசியல் தந்திரம்! சனநாயகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு இங்கே கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம்!
கருணாநிதியுடைய எம்.எல்.ஏ. பதவிக்கான வருமானத்தை வைத்து மட்டும் (அவருடைய அத்தனைக் குடும்பங்களுக்கும் அரிசி பருப்பு புளி வாங்கிப் போக) அவர் இவ்வளவு சொத்து சேர்த்திருக்க முடியுமா?
செயலலிதாவின் நீண்ட நாள் “எளிய வருமானத்தை” வைத்து மட்டும் கொடநாடு எஸ்டேட்டோ பிற சொத்துக்களோ வாங்கியிருக்க முடியுமா?
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் கொள்ளையடிக்காமல் அவர்களுடைய சொத்துக்களை சேர்த்திருக்க முடியுமா என்ன?
இன்று நான் வீட்டுக்கு மின் கட்டணம் கட்டவில்லை என்றால் நாளை இணைப்¬ப் பிடுங்கி விடுகிறார்கள். இப்படி கோடிக்கணக்கான எளிய மக்கள் கடமையுணர்வோடு மறுபேச்சின்றி கட்டும் வரியில்தான் அரசுக்குப் பணம் வருகிறது. அதை வைத்துத்தான் திட்டம் போடுகிறார்கள். அதில்தான் இந்தப் பொறுக்கிகள் கை வைக்கிறார்கள். மொத்தமாய் சுருட்டிவிடுகிறார்கள். ராசீவ் காந்தி சொன்னார், “இறுதியில் 100க்கு 5 ரூபாய்தான் பயனாளிகளுக்குப் போய் சேருகிறது” என்று.
அதனால்தான் வறுமை! அதனால்தான் பற்றாக்குறை! அதனால்தான் பஞ்சம்! அதனால்தான் பட்டினிச்சாவுகள்! இவைகள் சாவுகளல்ல! இவைகள் கொலைகள்! இந்தக் கொலைகளை பயங்கரவாதத்தின் விளைவுகள் என்று சொல்ல இந்த நாட்டில் திராணியில்லை. கொள்ளையடிக்கிற, கைநீட்டுகிற, லஞ்சம் வாங்குகிற, லஞ்சம் தராவிட்டால் கோப்புகளை இழுத்தடிக்கிற, கேட்ட காசு கிடைக்காவிட்டால் “இன்று போய் நாளை வா!” என்று விரட்டுகிற அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் பயங்கரவாதிகள்!
“9 சிலிண்டர்கள்தான் தருவேன்” என்று நேற்றுவரைப் பொருளாதாரக் கணக்கு சொன்ன பொறுக்கிகள் இன்று ராகுல்காந்தி சொன்னான் என்பதற்காக 12 சிலிண்டர் தருகிறேன் என்று அறிவிக்கிற ஷிண்டே மனநிலை பாதிக்கப்பட்டவனா இல்லையா? ராகுல் காந்தி வெரோனிக்கா என்ற போதைப்பொருள் கடத்தல்காரனின் மகளோடு பாஸ்டன் விமான நிலையத்தில் பிடிபட்டபோது கைப்பற்றிய கொள்ளைப் பொருளிலிருந்தா நீ இந்த 3 அதிக சிலிண்டர்களைக் கொடுக்கிறாய்? எமது வரிப்பணத்தில் விளைந்ததை எவனோ ஒரு தனிப்பட்ட அரசியல்வாதி சொல்கிறான் என்பதற்காக எடுத்துக் கொடுக்கிறாய் என்றால், இது என்னடா பொருளாதாரக் கணக்கு?
ஒரு மாதத்திற்கு குறைந்தது 600க்கும் மேற்பட்ட கற்பழிப்புகள் இந்தப் பாரதத் தெருநாட்டின் தலைநகரில் நடக்கிறது என்று ஊடகங்கள் புலம்புகின்றன! அரசியல் பொறுக்கிகளுக்கும் சிறுக்கிகளுக்கும் கொடுக்கிற பாதுகாப்பில் 10 விழுக்காட்டை வெட்டி இந்த அப்பாவிப் பெண்களுக்கு இந்த நாட்டின் தலைநகரிலேயே கொடுக்க முடியாத உனக்கு ஒரு துறை! அதுவும் உள்துறை!...... தூ......!
பாராளுமன்ற வளாகத்திற்குள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து சுட்டதற்கு தூக்குத்தண்டனை கொடுக்கிறாய்! உன்னைப் பாரளுமன்றத்தில் அமர்த்திய எங்கள் மக்களில் 600 பேர் சிங்களக் காடையர்களால் சுட்டுத் தள்ளப்பட்டபிறகும் ஒரு .... யும் பிடுங்கமுடியாத நீ இந்த நாட்டை இறையாண்மை மிக்க நாடு என்கிறாயே?
தில்லியில் தற்போது (டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ) ஒரு பெண் கற்பழிக்கபட்ட நிகழ்வில், “ஏன் அவசரப்படுகிறீர்கள்? ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தரச் சொல்லியிருக்கிறோமே!” என்கிறாய். ஏண்டா டேய்! தில்லிக்குள் இதுவரை ஒரு கற்பழிப்புதான் நடந்திருக்கிறதா? இது வரை நீ எத்தனை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறாய்? எத்தனை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறாய்? சொல்லு பார்ப்போம்!
குசராத் கலவரம் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அறிக்கை வந்து அயோக்கின்களைப் பிடித்துவிட்டாயா? பாபர் மசூதி இடித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? எவனாவது கம்பி எண்ணுகிறானா? தூக்குக் கயிற்றில் தொங்குகிறானா? தில்லியில் நடந்த சீக்கியர் படுகொலையில் டைட்லர் உள்ளிட்ட காடைகள் எல்லாம் சிறைக்குள் களியா தின்கின்றன? ஈழத்தில நீ நடத்திய இன அழிப்புக் கொடுமைகளுக்குத் தண்டனை கிடைத்துவிட்டதா?
அறிக்கை! ஆணையம்! வெள்ளை அறிக்கை! விசாரணை ஆணையம்! இதுவெல்லாம் உண்மையின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதற்காக எடுக்கும் நடவடிக்கைள்! காலத்தைத் தள்ளினால் புதிய பிரச்சனைகள் வரும்! பழையதை மக்கள் மறந்து போவார்கள்!
தள்ளிப் போடுவது என்பது பயங்கரவாதத்தின் மற்றொரு உத்தி!
சான்றிதழ் ஒன்று வாங்க அலுவலகம் போகிறீர்கள். லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற முடிவோடு உள்ளே போகிறீர்கள். எல்லாக் கழுகுக் கண்ணன்களும் உங்கள் கை¬யே பார்க்கிறார்கள். காசு கைமாறினால் அடுத்த நிமிடமே தந்து தொலைக்கிற அந்தச் சான்றிதழ் உங்களுக்குக் கிடைக்காது. “அடுத்த வாரம் வா!” என்பான். உங்களுக்கு அவசரம் என்றால், மடியை அவிழ்த்து மனதுக்குள் காரித் துப்பிவிட்டு தவம் கலைத்துவிடுவீர்கள்!” ஊழலும் கையூட்டும்தான் இந்த நாட்டை அரித்துத் தின்றுவிட்ட பயங்கரவாதங்கள்! அதற்கு உங்களையும் ஒத்துழைக்க வைப்பதுதான் காலத்தைத் தள்ளும் கயமை!
“ஒரு மாத அறிக்கை” என்பது காலத்தைத் தள்ளும் கயமை! கையூடடு வாங்க, கசடுகளை அள்ளிவீச, சாட்சிகளைக் கலைக்க அல்லது மிரட்ட, கழிசடைத்தனம் செய்ய அரசு எடுக்கும் வாய்தா!
“கேசரிவாலா, ஒரு பைத்தியம்” என்கிறார் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே!
பைத்தியக்கார மருத்துவமன¬யில் (கீழ்ப்பாக்கத்தில், நிம்மான்சில்) பைத்தியங்கள்தான் பெரும்பான்மையர். பெரும்பான்மையர் நடுவில் நடக்கிற மருத்துவரை அங்கிருக்கிற பெரும்பான்மையர் பைத்தியமாகத்தான் கருதுவர். “நாமளெல்லாம் கோணிக் கோணி நடக்கும்போது இந்தப் பய மட்டும் என்னா நேரா நடக்கிறான்?” என்று நினைத்துக் கொண்டு “சரியான பைத்தியம்” என்று புலம்புவார்கள்.
ஷிண்டேவும் புலம்புகிறது!
காலையில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்ற பிறகு மாலையில் சிதம்பரத்தை வெற்றியாளராக அறிவித்து, எம்.பி.ஆகி, அமைச்சராகி, ஐந்து ஆண்டுகளை உன் ஓட்டிவிட்ட அவுக “பதவி வெறிப் பைத்தியம்” இல்லையா?
நேரு காலத்துக் கரட்டுந்து ஊழல், இந்திரா காலத்து நகர்வாலா கொலை கொள்ளை, ராசீவின் போபர்சு கொள்ளை, சோனியாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், ராகுலின் பாஸ்டன் சொல்லும் தொடர்புகள் போன்றனவெலலாம் “பணவெறிப் பைத்தியம்” இல்லையா?
இந்தா, பக்கத்திலேயே ஒன்றை வைத்திருக்கிறாயே? சசி தரூர் என்கிற ..... அவன் “காமவெறிப் பைத்தியம்” இல்லையா?
இரவு பகலாக இந்த நாட்டை, நாட்டின் வளங்களை அன்னியர்களுக்கு அடகு வைக்கிற, விற்றுத் தொலைக்கிற நீங்கள் “அன்னிய வெறிப் பைத்தியம்” இல்லையா?
கொலையாளிகளைச் சுற்றவிட்டுவிட்டு அப்பாவிகளை மரண தண்டனைப் பிடியில் உள்ளே வைத்திருக்கிற உனக்கு “செலக்டிவு அமனீஷியா” இல்லையா?
இறையாண்மை பற்றிப் பேசுகிற நீ இத்தாலிக்காரியை தலையில் தூக்கி வைத்திருக்கிறாயே இது “ஸ்பிளிட் பெர்னாலிட்டி” இல்லையா?
ஈழத்தில் மக்களைக் கதறக் கதறக் கொன்றது “கொலை வெறிப் பைத்தியம்” இல்லையா?
மணிப்பூரில் உனது படைகள் பெண்களைத் துகிலுரித்து துய்த்தக் கொடுமை ஃபோபியா இல்லையா?
உன்னுடைய அமைச்சர்களும், அமைச்சர் பிள்ளைகளும் அடிக்கடி “செக்சுவல் டிஸ்ஆர்டர் சின்டரோமில்” சிக்கித் தொலைக்கிறார்களே! அது பிரச்சனை இல்லையா?
புதுச்சேரிக்கும் தில்லிக்குமாக ஒரு “மேனியா” சுற்றுகிறதே! அதான், ஒரு “கருமேனி”யா! அதை என்ன செய்யச் சொல்கிறாய்?
ஈ.வி.கே.எஸ். என்ற ஒரு “அகோர ஃபோபியா” சுற்றுகிறதே! அதை என்ன செய்ய?
உன் அமைச்சரவையில், உன் கட்சியில் இருக்கிற பல நூறு “கிளப்டோமேனியா”க்களை என்ன செய்வது? (கிளப்டோமேனியா என்றால் கண்டதையெல்லாம் திருடும் மனநோய்)
உன்னுடைய கட்சித் தலைமையான அந்த சிங்காரிக்கும் ரசிய உளவுத்துறைக்கும் உள்ள தொடர்பை மறந்து போக உனக்கு என்ன “அல்சமையர்” என்கிற மறதி நோயா?
ஏண்டா டேய்! ஒரு பைத்தியக்கார மடத்தையே உள்ளே வைத்திருக்கிற நீ! கேசரிவாலா தெருவில் இறங்கிப் போராடுகிறான் என்பதற்காக “பைத்தியக்காரன்” என்கிறாயே!
நீ என்ன வகைப் பைத்தியம் என்று தெரியவில்லை! பார்த்தால் “டிரிக்கோடில்லோ மேனியா” மாதிரித் தெரிகிறது. (மயிர் பிடுங்கும் மன நோய்)
ஏம்பா, ஷிண்டே அடுத்த பாராளுமன்றக் கூட்டத்தை கீழ்பாக்கத்திலேயே நடத்தலாமே! அல்லது ஏர்வாடி வாரீகளா? தெற்கே குமரி மாவட்டத்தில் ராசாவூர் என்றும் ஒரு ஊர் இருக்கிறது! (தேர்தலில் கன்யாகுமரியில் ராகுலை நிறுத்துவோம என்று தமிழ்நாடு காங்கிரஸ் பரிந்துரைக்கிற முடிவு சரிதானோ!)
வருக! நலம் பெறுக!!
அரிமாவளவன்
தமிழர்களம்

நிமிர்ந்து வாழ்வோம்! நீடு வாழ்வோம்!!


கடந்த 26 ஞாயிறு பிற்பகல் இடிந்தகரையில் நடந்த அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நடந்த கடலோரச் சமுதாய மக்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். ஆம் ஆத்மி கட்சியில் இணைவது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பது, ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவைக் கோருவது போன்றவை உள்ளிட்ட “அரசியல் நகர்வு” குறித்தான சூடான விவாதங்கள் நடந்தன. எனது கருத்து என்ன? என்று உங்களில் பலர் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
தற்போதைய அணு உலை எதிர்ப்பு இயக்கம் ஏறத்தாழ 900 நாட்களை கடக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி என்பது ஓரிரு நபர்களை மையப்படுத்தியது அன்று. மாறாக மனவுறுதி கொண்ட நான்கு பகுதியினரைச் சாரும் என்று கருதுகிறேன். அதில் முதலாவதாக இடிந்தகரை ஊர் மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள். இரண்டாவதாக அந்த ஊர்க் கமிட்டி. மூன்றாவதாக கடலோரச் சமூதாயம் நான்காவதாக தமிழகம் தழுவிய பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், ஓரிரு அரசியல் கட்சிகள். இவைகள்தான் இந்த இயக்கம்! இவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் போராட்டத்தின் வாயிலாக தாக்கங்களை ஏற்படுத்தியிருக்க முடியாது. இவ்வளவையும் ஒருங்கிணைத்த அண்ணன் உதயகுமார், தம்பி புஷ்பராயன், தம்பி மை.பா. நன்மாறன் போன்றோரின் பணியும் ஈகமும் அளப்பரியது.
ஊர் கமிட்டியில் சிக்கல்கள் இருந்தன! கருத்து முரண்பாடுகள் இருந்தன! ஆனால் ஒரு புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
ஊர் மக்களிடையே பல்வேறு கருத்துகள் தொடர்பாக வேறுபாடுகள் இருந்தன! மோதல்கள் இருந்தன! ஆனால் ஒற்றைப் புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
கடலோர ஊர்களில் கணக்கிலடங்கா பிரச்சனைகள் வந்து போயின! இன்னும் இருக்கின்றன. இன்றும் முகம் கொடுத்துப் பேச முடியாத அளவிற்கு தனி நபர்களுக்கிடையிலும் குழுக்களுக்கிடையிலும் கோவமும், மோதல்களும் உள்ளன. ஆனால் ஒற்றைப் புள்ளியில் ஒன்றாக நின்றார்கள்.
இணைந்த இயக்கங்கள் அதைவிட வியப்பானவை. ம.தி.மு.க இருந்தது. திராவிடத்தை அடியோடு எதிர்க்கிற நாங்கள் தமிழர்களமும் இருக்கிறோம். மதச் சார்பான கட்சிகள் இருந்தன. கடவுளே இல்லை என்று சொல்கிற இயக்கங்களும் இருந்தன. தேர்தலை வெறுக்கிற இயக்கங்கள் ஏராளமாக உள்ளே இருந்தன. தேர்தலில் பங்கேற்கும் அமைப்புகளும் இருந்தன. வேறொரு தளத்தில் கருத்துக்காக, கொள்கைக்காக கடுமையாக மோதும் இயக்கங்களும் கட்சிகளும் ஒற்றைப் புள்ளியில் கை கோர்த்து நின்றன.
மையத்துக்குள் இருந்த ஒருங்கிணைத்த இந்த ஐந்தாறு பேருக்குள்ளும் கடு¬மான மோதல்கள் இருந்தன! ஆனால் அணுஉலை எதிர்ப்பு என்பதில் சமரசமற்ற ஒரு நிலைப்பாடு இருந்தது.
அந்த ஒற்றைப் புள்ளி என்பது என்ன? “கூடங்குளம் அணு உலையை மூடுவது!” அதன் நீட்சியாக அணுக் கதிர்வீச்சு இல்லாத பசுமையான ஒரு நாட்டை உருவாக்குவது. இந்த ஒற்றை புள்ளியில்தான் மேற்சொன்ன மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒன்று பட்டு நின்றன. இன்றும் நிற்கின்றன.
இப்படி நிற்பதற்காக இவர்கள் அத்தனை பேருமே கடுமையான விலை கொடுத்திருக்கிறார்கள். சிலர் உயிர் கொடுத்திருக்கிறார்கள். பலர் வாழ்வை இழந்து தவிக்கிறார்கள். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்பின்றி தவிக்கிறார்கள். பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட இளைஞர்கள் ஏராளம் இந்தப் பகுதியிலே உண்டு. இடிந்தகரையைத் தாண்டி வேறு ஊர்களுக்குப் போகமுடியாதவர்கள் உண்டு! இப்படிப்பட்ட அரசின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்தவர்கள் இவர்களே! இணைந்த இயக்கங்களும்கூட, “அணு உலைக்கு ஆதரவான ஒரு பெருந்திரள் மக்களின் வாக்குகளை இழக்கிறோமே” என்ற எதார்த்தமான தன்னலச் சிந்தனை கடந்து கொள்கைப் பிடிப்போடு நின்றார்கள். இதையெல்லாம் யாரும் மறுக்க முடியாது.
அணுஉலை எதிர்ப்பு இயக்கம் இந்த ஒற்றைப் புள்ளியிலிருந்து, அதாவது, “கூடங்குளம் அணு உலையை மூடுவது” என்ற இலக்கிலிருந்து எப்படி விலகினாலும் அது சறுக்கல் மட்டுமல்ல! சாவை முத்தமிடுவதற்கு சமம்!
தேர்தலுக்காக பல கட்சிகள் பல சமரசங்கள் செய்கின்றன! அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்கு அப்படிப்பட்ட கட்டாயமோ நெருக்கடியோ சங்கடமோ இருப்பதாக எனக்குப் படவில்லை! அப்படி இந்த இயக்கம் ஏதாவது சமரசம் செய்துவிட்டது என்றால் எப்படி சமரசம் செய்யும் மற்ற கட்சிகளை மக்கள் கோவம் கொப்பளிக்கப் பார்க்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ அப்படியே இதையும் பார்ப்பார்கள், புறக்கணிப்பார்கள்.
“ஆம் ஆத்மியோடு இணைவதா?” போன்ற கேள்விகள் வந்தபோது, இம்மாதம் கடந்த ஆறாம் நாள் இதே கருத்தை போராட்டக்குழுவின் மையத்திலிருக்கும் அனைவரிடமும் இடிந்தகரையில் வைத்து பகிர்ந்து கொண்டேன். “ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் கூடங்குளம் அணுஉலையை மூடுவோம் என்றோ, நாடாளுமன்றத்திற்குள் (எதிர்கட்சியாக) வந்தால் அதே கருத்தை வலியுறுத்தி போராடும் என்றோ அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்குமா?” என்று கேட்டேன். அதன் அடிப்படையில் போராட்டத்தின் மைய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. உதயகுமார் அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு முறையாக மடல் ஒன்று விடுத்தார். அதில்தான் இப்போது பேசப்படுகிற ஐந்து கருத்துக்கள் வெளிப்பட்டன (ஈழத்தமிழர், கூடங்குளம், அணுக்கொள்கை, கட்சியின் தமிழ் பெயர் போன்ற..)
இன்றுவரை அவர்களிடமிருந்து அதிகாரபூர்வமாக எந்த பதிலும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. அப்படி, உறுதியான வெளிப்படையான “ஆம்” வந்தால் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தோடு இருக்கிற பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், சமுதாய இயக்கங்கள் ஆகியனவற்றோடு அவர்களும் இணைந்து முதலில் களமாடட்டும்.
தேர்தலில் பங்கேற்க வேண்டுமா? என்றால், “ஆம்” என்பது எனது தனிப்பட்ட மட்டுமல்ல தமிழர்களத்தின் நிலைப்பாடும் கூட! ஆனால், அணுஉலை எதிர்ப்பு இயக்கத்திற்குள் தேர்தல் புறக்கணிப்பு என்கிற உறுதியான நிலைப்பாட்டோடு பலர் இருக்கிறார்கள். சிறையில் வாடும் கொளத்தூர் மணி, தமிழ்தேசியப் பொதுவுடமைக் கட்சியின் மணியரசனார், திரு. மீ.தா.பாண்டியன் அவர்கள் சார்ந்திருக்கிற அமைப்பு, கோவை ராமகிருட்டிணன் போன்ற இனிமையான நண்பர்களோடு சில அரசியல் கருத்து முரண்பாடுகளைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் இவர்கள்! இவர்களைப் போன்ற பலர்! அவர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம் மட்டுமல்ல! தலையாய கடமையும்கூட! குறைந்தபட்சம், “தேர்தலில் ஏன் பங்கேற்க வேண்டும்” என்று நினைக்கிறோம் என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
இனி தமிழர்களத்தின் நிலைப்பாட்டிற்கு வருவோம்!
அணுஉலையை மூட வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் சற்றும் பின்வாங்கப்போவதில்லை. தமிழர்களத்தின் இலக்கும், நோக்கமும், செயற்பாடுகளும் இன்னும் உண்டு!
அண்டை மாநிலங்கள் எங்கள் நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அங்குள்ள எங்கள் மக்களை நாலாந்தரக் குடிகளாக நடத்துகின்றன! நாங்கள் இழந்த பகுதிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதை அநியாயமாக இழந்துவிட்டு இன்று ஆற்று நீருக்கும் குடிநீருக்கும் அல்லாடுகிறோம். எங்களுக்கு அந்தப் பகுதிகள் திரும்ப வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள் இந்தி தேசிய அரசியல் பேசி, திராவிட தேசிய அரசியல் பேசி இந்த மண்ணை வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாற்றியிருக்கிறார்கள். எனவே, அன்னியர் ஆட்சியை அகற்றி மண்ணின் மக்களின் ஆட்சியை இங்கே நிறுவ முற்படுகிறோம்.
திபெத்திய ஏதிலிகளை தங்கத் தட்டில் வைத்துக் தாங்குகிற இந்திய அரசு எங்கள் ஈழச் சொந்தங்களை நாயினும் கீழாக நடத்துகிறது. எங்கள் சொந்தங்களுக்கு ஈழத்தில் நாடு வேண்டும். இந்த மண்ணில் அவர்கள் எங்களுக்கு மற்ற இனத்தாரைவிட நெருங்கிய சொந்தங்கள் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்!
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்று!, ஈழத்தை அங்கீகரி!” அன்றேல் தமிழகத்திற்கென ஒரு வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்தும் சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிக் கொள்வோம்.
தில்லியைக் காப்பாற்ற, தில்லிப் பெண்களின் கற்பைக் காப்பாற்ற எப்படி தில்லி காவல்துறை தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று சேகரிவாலா போராடுவதில் ஞாயம் இருக்கிறதோ அதே போன்று எங்கள் மக்களை எங்கள் மீனவர்களை காப்பாற்ற கடலோரக் காவல்படை மீதான அதிகாரம் எங்களுக்கு வேண்டும். அவர்கள் என்ன மாதிரியான ஆயுதங்கள், படகுகள் வாங்க வேண்டும் என்று நாங்களே முடிவு செய்வோம்.
இப்படி தமிழர்களம் ஞாயமான பல இலக்குகளோடு நகர்கிறது. இந்தப் பாதையில் பார்வையில் இன்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் அமைப்புகளும் இயக்கங்களும் சீர்மையோடு ஒன்றுபடத் தொடங்கியிருக்கின்றன.
நாங்கள் பதட்டப்படவும் இல்லை! பரபரப்பு அடையவும் இல்லை! வரும் 9ஆம் நாள் சென்னையில் நாங்கள் இதே இலக்குகளோடு இணைந்து செயலாற்றும் கட்சிகளோடு அமைப்புகளோடு பேசவிருக்கிறோம்.
நான் கட்டிய மனைவி சற்று பருமனாக, சற்று கருப்பாக இருக்கிறாள்! “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை! ஆனால் அவளுக்கு இணை இந்த உலகில் எவளுமில்லை” என் தமிழகத்தைச் சொன்னேன்!
என் மகளுக்கு மூக்கிலே கட்டியிருந்தது. எவ்வளவு சங்கடப்பட்டாள்! “கோணக்காலி” என்று கிண்டலடிக்கிறார்கள். ஆனால் என் உயிரில் கலந்தவள் அவள்! என் மூச்சு சிதையும்வரை அவளை முத்தத்தால் நனைப்பேன்! அது சிதைந்தபின்னும் அவளையே நான் வட்டமடிப்பேன்! என் சேய்நாடு ஈழத்தைச் சொல்கிறேன்!
இந்தியர்களான நமீதா, நயன்தாரா, குசுப்பு எல்லாம் பார்க்கப் பளபளவெனதான் இருக்கிறார்கள். ஆனால், வீழ்வதற்கு நான் தயாராக இல்லை!
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்”
என் சாவுக்கு முன்னால் சாதித்துவிட வேண்டும் என்ற சாணக்கிய வழி வந்தவனல்லன் நான்! என் சாவே உரமானாலும் என் இனம் தலைநிமிர வேண்டும் என்ற எல்லாளன் வழி நின்று துடிக்கிற பாமரன் நான்! நாங்கள் நீடு வாழ்கிறவர்கள்!!
உங்கள் அரிமாவளவன்
தமிழர்களம்