கருவூர் மாவட்டம் நெரூரில் சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் மள்ளர் மன்னன் ஒருவரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலை பராமரிக்கும் பணியை சிவனடியார்கள் செய்து வருகின்றனர். கோவிலில் தினமும் தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் படித்து வழிபாடு நடைபெறுகிறது! மேலும் கோவிலின் அருகே குடியிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இலவயமாக தேவாரம் திருமுறை பாடல்கள் சிவனடியார்களால் கற்பிகபடுகிறது. தமிழர் களத்தின் மாநில அமைப்பாளர் திரு.அரிமாவளவன் மற்றும், கருவூர் மாவட்ட தமிழர்கள பொறுப்பாளர்கள் அந்த கோவிலில் வழிபட்டபோது எடுத்த ஒளிபடங்கள் .
தமிழ் தொண்டாற்றும் சிவனடியார்களை தமிழர் களம் வாழ்த்துகிறது !
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மள்ளர் யார்
பதிலளிநீக்குmallargal tamilnattin mannargal
நீக்குmallargal uzhagai aandavargal
mallargal uzhakirku vivasayathai arimugapaduthiyavargal
mallargal tamil parampariyahai katrukoduthavargal
mallargal veeramikka porveerargl
devendirakulathin moothakudimakkal...