செவ்வாய், ஜனவரி 28, 2014

கொடூரமான இரு கார்ட்டூன்கள்!


இன்று காலை தினமணியும் தினமலரும் பார்த்தேன். தினமலரின் பகடிப்படம் நஞ்சை உரித்துக் கொட்டியிருந்தது. தினமணி அதே நஞ்சை நயத்திறனோடு சொல்லியிருக்கிறது. உள்ளடக்கம் ஒன்றே!
“நாயைக் கழுவி நடுவீட்டில் வைத்தால்...” என்ற நமது பழமொழியை ஆம் ஆத்மிக்குப் பொருத்தியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
கேச்ரிவாலா அறிந்து செய்கிறாரா? இல்லை தற்செயலாக செய்கிறாரா தெரியவில்லை. அவர் முறைமையில் கை வைக்கிறார். முறைமை என்றால் சிஸ்டம்! அதை உலுக்குகிறார். இந்திய முறைமையை உலுக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றமும் வராது,
“அமைச்சர் ஆகிவிட்டாயா? அலுவலகத்தில உட்காரு! நாலு பேர் சல்யூட் அடிப்பார்கள்! கேட்கிறதெல்லாம் கிடைக்கும்! அடிக்கிற கொள்ளையெல்லாம் அடிக்கலாம்! திரும்பவும் மக்கள் பக்கம் போகாதே!” இதுதான் இந்திய அரசியல் கட்டுமான நெறிமுறைகள்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனோடு அலைந்து திரிந்து போராடிய லாலு பிரசாத் யாதவ் சமாளித்து அதில் பொருந்தவில்லையா? நிதிஷ்குமார் பொருந்தவில்லையா? அத்வானி பொருந்தவில்லையா? வாச்பாய் பொருந்தவில்லையா?
திராவிடப் புரட்சி பேசியவர்களெல்லாம் இதற்குப் பொருந்தித் தொலையவில்லையா? செயலலிதா என்ன மக்கள் நடுவிலா வருகிறார்? களைப்பு ஏற்பட்டால்கூட கொடநாட்டுக்குத்தானே போகிறார்? ஒரு இட்லியை இரண்டுபேர் பிய்த்துத்துச் தின்ற கருணாநிதி என்ன மக்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டா இருக்கிறார்? கம்யூனிசம் பேசியவர்களெல்லாம் இந்த அமைப்பியலோடு ஒத்துப்போகவில்லையா? பின்ன, நீ என்ன .... ! திரும்பவும் சாலைக்கு வந்து போராடுகிறாய்?
இதுதான் எல்லா பெரிசுகளும் கேட்குது! சிவப்புக் கொடி பிடிக்கலாம், காவிக் கொடி பிடிக்கலாம், கருப்புக் கொடி பிடிக்கலாம், கருப்பு சிவப்பு பிடிக்கலாம், மூவண்ணக்கொடி பிடிக்கலாம் ஆனால் எல்லாருமே “நாங்கள் போட்டிருக்கிற வட்டத்துக்குள் நின்று பிடித்துக் கொள்ளவேண்டும்” அவ்வளவுதான். அத்து மீறாதே! வரம்பு மீறாதே! வட்டத்தைத் தாண்டாதே! கிழித்த கோட்டைக் கடக்காதே!
யார் போட்ட வட்டம்? யாருடைய நலன் காக்கும் வட்டம்?
66 ஆண்டுகளாக இந்த வட்டத்தை மீறாமல் நாங்கள் ஆட்சி செய்யவில்லையா? கிழிச்ச கோட்டை தாண்டாமல் நாங்கள் ருத்திர தாண்டவம் கூட ஆடவில்லையை£? நாடாளுமன்றத்திற்குள்ளும் சட்டமன்றத்திற்குள்ளும் வேட்டி கிழிக்கவில்லையா? சேலை கிழிக்கவில்லையா? மைக் பிடுங்கி அடிக்கவில்லையா?
அட நாதாரிகளா! இந்தியம் கிழித்த அந்த கோட்டிற்குள் நின்றுதான் நீங்கள் அலைக்கற்றை ஊழல் செய்தீர்கள்! நிலக்கரி ஊழல் செய்தீர்கள்! போபர்சு ஊழல் செய்தீர்கள்! கரட்டுந்து ஊழல் செய்தீர்கள்! ஆதர்சு ஊழல் செய்தீர்கள்! காமன் வெல்த் கேம் ஊழல் செய்தீர்கள்! கப்பல் பேர ஊழல் செய்தீர்கள்! ஹெலிக்காப்டர் ஊழல் செய்தீர்கள்! ஹாவாலா ஊழல் செய்தீர்கள்! கார்னட் மணல் ஊழல் செய்தீர்கள்! கிரானைட் கல் ஊழல் செய்தீர்கள்! தீவன ஊழல் செய்தீர்கள்! மயானக்கூரை ஊழல் செய்தீர்கள்! பிளசன்ட்ஸ்டே ஊழல் செய்தீர்கள்! வீராணம் குழாய் ஊழல் செய்தீ£கள்! தொட்டதிலெல்லாம் சுருட்டினீர்களே! 66 ஆண்டு காலத்தில் நீங்கள் கோட்டுக்குள்ளும் கேட்டுக்குள் நின்று செய்த ஊழல்களை பட்டியலிட்டால் பக்கங்கள் அடங்காதே!
எத்தனைக் கொள்ளைகள்! கற்பழிப்புகள்! கொலைகள்! மீனவர் கொலைகள், கார்கிலில் கொலைகள்! ஈழத்தில் கொலைகள்! தில்லியில் கொலைகள்! உங்கள் அமைப்பும் முறைமையும் இவைகளைத் தடுக்க எதைக் கிழித்திருக்கிறது?
ஊழலைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லது உங்கள் ஊதாரித்தனத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததா? 66 ஆண்டு கால பட்டறிவு முகத்தில் அடித்துச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! இந்த முறைமை அழித்து ஒழிக்கப்பட வேண்டிய முறைமை! அப்பாவிகள் ஆயுள் தண்டனைக் கைதிகளாகவும் மரண தண்ட¬ன் கைதிகளாகவும் இருக்கிறார்கள்! ஆனால், அற்பப் பதர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். கொள்ளையடித்த கருணாநிதி, ராசா, கனிமொழி, செயலலிதா, லல்லு போன்றதுகளெல்லாம் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன! மட்டுமல்ல நம்மை ஆண்டும் தொலைக்கின்றன!
ஆகவே, இப்போது இருக்கிற முறைமையான பிராமண வல்லாதிக்க அல்லது வடுக வல்லாதிக்க முறைமை அல்லது அமைப்பு அல்லது சிஸ்டம் என்பது இதுதான்!
இதை சதபத பிராமணர்களோ, சங்கப் பரிவார அமைப்புகளோ, ரா என்கிற அமைப்போ, ஐ.பி. என்கிற அமைப்போ உருவாக்கும், மாற்றியமைக்கும், நிர்வகிக்கும்!
தேர்தலில் நின்று மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிற போர்வைகள் இந்த நரகலை, அல்லது சாக்கடையை போர்த்திக் கொண்டு அல்லது பொத்திக் கொண்டு போய்விட வேண்டும்! மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!
இதையெல்லாம் புரிந்தால்தான், ராஜீவ் கொலையில் சிக்கிய சந்திராசாமி, சுப்பிரமணியசாமி அல்லது சங்கரராமன் கொலையில் சிக்கிய செயந்திரசாமி, தா. கிருட்டிணன் கொலையாளிகள், தினகரன் பத்திரிக்கைத் தொழிலாளர் கொலையாளிகள், அழகிரிகள் போன்றதுகள் எப்படிச் சுற்றித் திரிகின்றன என்பது புரியும்!
குப்பைகளைக்கூட அள்ள வக்கில்லாத நாடு, 66 ஆண்டுகளுக்குப் பிறகும் திறந்தவெளி மலக்கூடங்களை வைத்திருக்கிற இந்த நாடு, தொடக்கப்பள்ளி கட்டடங்களுக்கு காசு செலவிட வகையில்லாத நாடு, சாராயக்கடைகளைத் திறந்து வைத்து தாலியறுக்கிற இந்த நாடு, 54ஆயிரம் கோடிக்கு ஜெனரிக் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு ஏழை மக்களிடம் மருந்து கொள்ளைக்கு நாட்டை திறந்து விட்டிருக்கிற நாடு செவ்வாய்க்கு மங்கள்யாண் பட்டம் விட்டுக் கொண்டு இருக்கிறது! அங்கு போய் உருளைக் கிழங்கு பயிரிடப் போகிறானாம்! வல்லரசு ஆகத் துடிக்கிறது! அணுகுண்டுகளை அடுக்கத் துடிக்கிறது!
அது சரி! நாயைக் கழுவி நடுவீட்டில் வைக்கிற கழிசடைப் படத்தைப் போட்டிருக்கிறார்களே, அதில் மிகக் கவனமாக யார் பெயரையும் போடாமல் தப்பித்திருக்கிறார்கள்.
ஒரு வேளை... ஊர் ஊராய் நாடக மேடைகளில் நடனமாடி “சேவைகள் பல செய்த” ஒருவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டார் என்று குறிப்பிடுகிறார்களோ!
திருவாரூர் தெருக்களில் .... (வேண்டாம்... கண்ணதாசனின் வனவாசம் குறிப்புகள் காரி உமிழ வைக்கின்றன) அவர் முதல்வரானதைச் சொல்கிறார்களா?
கட்டிய மனைவியைத் தள்ளிவிட்டுவிட்டு களமாடும் “மோடி மஸ்தானை” சொல்கிறார்களா?
மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்து களி தின்ற கபோதிகளைச் சொல்கிறார்களா?
குசராத் மதக் கலவரங்களை நடத்தியவர்களைச் சொல்கிறார்களா?
ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க எங்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்த இத்தாலிப் பொறுக்கியைச் சொல்கிறார்களா?
பாபர் மசூதியை இடித்து பல்லாயிரம் மக்களைக் கொல்லக் காரணமான ஈனர்களைச் சொல்கிறார்களா?
ஊழல் பொறுக்கிகளைச் சொல்கிறார்களா?
இந்தப் பொறுக்கிகள் எந்தப் பொறுக்கிகளைச் சொல்கிறார்கள் என்றே விளங்கவில்லை!
அமைச்சர் ஆனவுடன் கருப்புக் கண்ணாடி போட்ட காருக்குள் உட்கார்ந்து கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் சுழல் விளக்குச் சுல்தான்கள் பந்தா காட்டிக் கொண்டு வண்டிகள் பறந்தால் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பை தெரியாது, தரைக்கடை வியாபாரம் செய்கிற ஏழைகளைத் தெரியாது, தெருவின் குண்டு குழிகள் தெரியாது, எரியாத தெருவிளக்குகள் தெரியாது. ஆகவே, விளக்கைச் சுற்றிக் கொண்டு விரைவாகப் போய் அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கிழிப்பதைவிட நீ கீழே இறங்கி மக்கள் நடுவில் நடப்பதே மேல்! பக்கத்தில் வந்தால்தான் மக்களின் கண்ணீர் தெரியும் மற்றபடி மக்களும் கரும்புள்ளிகளாகவே தெரிவார்கள்.
அரிமாவளவன்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக