செவ்வாய், ஜனவரி 28, 2014

முத்துகுமரன் நினைவேந்தல்

29.01.14
தூத்துக்குடி,

தமிழர்களம் மாநகர கிழக்கு மண்டலம் பூபாலராயர் புரத்தில் முத்துகுமரன் நினைவேந்தல் முத்துகுமரன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

       நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட பொருளாளர் தமிழ்திரு.எட்வின் செய்திருந்தார். மாவட்ட செயலாளர் அமலரசு தலைமை ஏற்று வீர உரையாற்றினார் ,மாநகர செயலாளர் தமிழ்திரு. ப. பாபு, கிழக்கு மண்டல தலைவர் நெவிஸ்கிழக்கு மண்டலம்பொருளாளர் மிக்கேல், முன்னிலை வகித்தனர் .மற்றும் தமிழர்களத்தின் போராளிகள் மாநகர் கிழக்கு மண்டல இளைஞரணி தலைவர் கவின்,12 வது பகுதி செயலாளர் மாரிச்செல்வம் ,19 வது பகுதி செயலாளர் பெனிட்டோ ,நிசாந்த் ,பிரேம் ,ரவி ,மகேசு,ஆதி ,ஜெனிட்டொ ,ரொசாரி ஆகியோர் கலந்துகொண்டு முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செய்தனர் தமிழீழம் வென்றெடுப்போம் என்றும் முத்துகுமரனுக்கு வீரவணக்கம் என்றும் முழக்கமிட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக