செவ்வாய், ஜனவரி 28, 2014

எங்கள் பாவலர்!


மூக்கையூர் இதயநேசனுக்கு என் வீர வணக்கம்!!
உடலைத் தின்னும் சாவே, எங்கள் உள்ள உறுதியை ஒரு இம்மியேனும் அது அசைக்காது! தமிழர் தேசம் அமைக்கும் ஒரு வரலாற்றுப் பாதையில் தமிழர்களத் தோழனாய் எங்களோடு வழிநடந்த மூக்கையூர் இதயநேசன் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கண்இமைக்கும் நேரத்திலும் புதுப் புதுப் பாக்களைப் புனையும் பேராற்றல் பெற்றவர் எங்கள் இதய நேசன்! அப் பாக்களில் எல்லாம் இன ஓர்மையும் எதிரிகளைப் பதம் பார்க்கும் வெடிநெருப்புகளும் ஏராளம் கிடந்தன. அவரது இழப்பு தமிழர்களத்திற்கு குறிப்பாக தூத்துக்குடி தமிழர்களத்திற்கு பேரிழப்பே! ஐயா, நீங்கள் பிறந்து வளர்ந்த உங்கள் குடும்பத்தோடும் தூத்துக்குடி தமிழர்களக் குடும்பத்தோடும் உம்மை வணங்கி நான் நிற்கின்றேன். எத்துயர் வரினும் ஈடில்லா இலக்கை நெருப்பாற்றலோடு தொடர்ந்து செயல்பட்டு இழுத்து வருவோம்!
உங்களோடு உங்கள் நடுவில்,
அரிமாவளவன்
பொதுச் செயலாளர்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக