செவ்வாய், ஜனவரி 28, 2014

மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகம் திறப்பு

மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகம் திறப்பு
இன்று 23 சனவரி காலை 10.30 மணியளவில் மருங்காபுரியில் தமிழர்களம் அலுவலகத்தை பொது செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் திறந்து வைத்து அப்பகுதி மக்களோடு கலந்துரையாடினார்.
மருங்காபுரி பகுதிப் பொறுப்பாளரான திரு. பெருமாள் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட பிற பகுதிப் பொறுப்பாளர்கள் திரு. பொன்னுச்சாமி, திரு. பழனிச்சாமி, திருமதி. ரேணுகா, திரு. பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றத்திற்காக அடித்தளமிடும் தமிழர்களத்தை அனைவரும் ஆதரிக்க திரு. அரிமாவளவன் அவர்கள் கேட்டுக் கொண்டார். எளிய மக்கள் புடைசூழ கழகத்தனம் எள்ளளவும் இல்லாத கலந்துரையாடலும் கருத்துப் பகிர்வும் வழிப்போக்கர்களையும் ஈர்த்திழுத்தது இன்றைய சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக