செவ்வாய், டிசம்பர் 13, 2016

மாமனிதனுக்கு வீர வணக்கம்


இவரின் இழப்பு தமிழினத்திற்கும், தமிழர் களத்திற்கும், எனக்கும் பேரிழப்பே!
குணா ஐயாவுடைய பல நூல்களுக்குத் திருத்தம் போட்டவர் இவர்! அத்துணை தமிழ்ப் புலமை கொண்டவர் இவர்!

இவருடைய ஒவ்வொரு பேச்சையும் நான் சுவைத்தும் சிரித்தும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்!

எந்தத் தோல்வியையும் படிக்கட்டாக மாற்றும் பேச்சுத் திறன் கொண்டவர் இவர்!
ஈழத்தில் நாம் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் சொன்ன செய்திகளே பல நூறு இளைஞர்களை நம்பிக்கையோடு வைத்திருந்தது!

ஈழம், விடுதலைப் புலிகள், தலைவர் பிரபாகரன் போன்றவைகளெல்லாம் அவரது உயிர் மூச்சன்றி வேறில்லை!

எதிரிகள் மீது அவர் பாவித்த சொற்கள் சீறிச் செல்லும் தோட்டாவைவிட கூர்மையானது வேகமானது!

அவரது மறைவு பெரும் வருத்தத்தைக் கொடுத்தாலும் அவரது வாழ்வை நினைக்கும்போது மிகப் பெருமையாகவே இருக்கிறது!

தமிழர்களம் அவரது ஈகத்திற்கும் இணையில்லா தமிழினப் பற்றிற்கும் தலை வணங்குகிறது!

அவரது அடக்கம் அவரது பிறந்த நாளான இம்மாதம் 15ஆம் நாளன்று நண்பகல் வெங்காலூர் நகரில் நடைபெறும்!

நான் அவரது இறுதிப் பயணத்தில் பங்கேற்க செல்கிறேன்!
தமிழர்கள நண்பர்களும், தமிழின ஓர்மையாளரும் வந்திடுக!

இம் மாமனிதனுக்கு வீர வணக்கம் செலுத்துவது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் நாம் செலுத்தும் மரியாதையும் கடமையும்கூட!

வெங்காலூர் செல்வதற்கான தமிழர்களத்திற்ககான ஒருங்கிணைப்பை மேற்கு மண்டலச் செயலர் தம்பி அரசிடம் ஒப்படைத்திருக்கிறேன்!

அவரது எண் 9443363587

அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக