வெள்ளி, ஜூலை 16, 2010

சக்தி தமிழ் பள்ளிக்கூடம் - மாறுபட்ட கல்வி

கரூர் மாவட்டத்தில் 16 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சக்தி தமிழ் பள்ளிக்கூடம் தமிழ் நாட்டில் முதன் முறையாக தமிழ் வழி கல்வி பயிற்றுவிக்க அரசானை பெற்ற கல்வி நிலையம் ஆகும். அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களைவிட நல்ல மனிதர்களை வுருவாக்குவதே தமது கடமை என்று தமிழுக்காகவும் தமிழர் நலன்களுக்காகவும் சேவை செய்து வரும் திரு. சக்தி காமராசன், அவரது மனைவி திருமதி. காமாட்சி அம்மாள் ஆகிய இருவரின் தன்னலமற்ற செயல்பாடுகளை நாம் நிச்சயம் பாரட்ட வேண்டும்.
பள்ளியின் சிறப்புகள் : கல்வி சுமை கிடையாது, தனி பயிற்சி வகுப்புகள் தேவையில்லை, வீட்டு பாடம் கிடையாது, எளிய கற்றல் முறை, ஆக்கவியல் சிந்தனை , வாழ்வியல் நெறிகள், தமிழர் பண்பாட்டுடன் திருக்குறள் நெறி முறைகள், ஆகியன கற்பிக்கபடுகின்றன. ஏழை மாணவர்களுக்கு இலவய கல்வியும், நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு குறைந்த சேவை கட்டணமும் வாங்கி, நல்ல தரமான , அன்பான ஆசிரிய ஆசிரியைகளை கொண்டு அமைதியான சூழலில் பள்ளி சிறப்பாக செயல்படுகின்றது.
நாம் செய்ய வேண்டியது என்ன : நமது இனம் , மொழி, பண்பாடு இவற்றை காக்கவும், நமது பிள்ளைகள் நல்ல சிந்தனையலர்களவும் , சிறந்த மனிதர்களாகவும் வுருவாக தமிழ் வழிக் கல்வி தருவோம். மேலும் நாம் பல்வேறு காரியங்களுக்கு நன்கொடைகள், வுதவிகள் செய்தபோதும், நமது தலையாய கடமையாக கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தாரளமாக பொருளுதவியும், நிதியுதவியும் செய்து தமிழர்களும் தமிழ் வுனர்வாலர்களும் இந்த பள்ளிக்கு நன்மை செய்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம். தற்போது மன நலம் குன்றியோருக்கு சிறப்பு பள்ளியும் இலவய சேவையாக நடைபெறுகிறது. அவர்களின் நலனுக்காகவும் பள்ளிக்காகவும் தாராளமாக வுதவுங்கள். நன்றி. மேலும் பள்ளியை பற்றி அறிய www.sakthitamilpalli.co.in வலை தளத்தில் காணலாம். நிதி வுதவி செய்ய விரும்புகிறவர்கள் சக்தி தமிழ் பள்ளிக்கூடம், வங்கி கணக்கு : 480781664 இந்தியன் வங்கியில் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு : 9843955627 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக