
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், மே 30, 2017
ஞாயிறு, மே 28, 2017
வெள்ளி, மே 19, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
கரூர்.
19.05.2017
2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொடுலையின் துயரத்தையும், தமிழர்கள் நாம் செய்யத் தவறியவைகளையும், இனி செய்ய வேண்டியவைகளையும் நினைவுகூறும் வகையில் தமிழர்களத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் களத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் திரு. தமிழ்முதல்வன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு. அரசு தலைமைதாங்கினார்.
எதிரிகளின் மீதான வன்மத்தைச் சுமந்துகொண்டிருக்கும் நாம் நமது இழந்த உரிமைகளை மீட்டேயாக வேண்டும் எனவும், இப்போது நாம் செய்ய வேண்டிய கடமைகளை காலம் தாழ்த்தாது செய்திட வேண்டும் எனவும், தனது உரையில் தெரிவித்ததுடன், மேலும் ஈழப் போரில் வீரச்சாவடைந்த வீரர்களுக்கும், அப்பாவித் தமிழர்களுக்கும் தீப ஒளியேற்றி தமது மௌன அஞ்சலியை செலுத்தினார்கள்.
வியாழன், மே 11, 2017
கண்ணகி கோட்டம் முழு நிலவு விழா - 2017
10.05.2017
கம்பம் - கூடலூர்
சிலப்பதிகாரத்தின் காப்பியத்தலைவி கற்புக்கரசி கண்ணகித் தெய்வத்தின் சித்திரை முழு நிலவு பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வழக்கம்போல கேரள அரசின் கெடுபிடிகளுக்கிடையில் மக்களின் பயணம் மிகுந்த சிரமமாக இருந்தது. அதே வேளையில் பளியன் குடியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து வந்து கண்ணகி கோட்டத்தின் பெருவிழாவில் கலந்துகொண்டனர்.
கண்ணகி கோட்டத்தின் வடக்கு வாயிலின் வழியாக கோயிலுக்குள் நுழைவதற்கு கேரள காவலர்கள் தடுத்தனர். ஆனால் நமது தமிழர்களத்தின் உறவுகள் அவர்களிடம் சண்டையிட்டு வடக்கு வாயில்வழியாகவே சென்று கண்ணகியை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது கேரள அரசிடம் கைகட்டி நின்று அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் தமிழக அரசு தன் மௌனத்தை உடனே கலைத்துவிட்டு கம்பம் - கூடலூர் பகுதியினைச் சேர்ந்த பளியன் குடி கிராமத்திலிருந்து வெறும் மூன்று மைல் தொலைவிற்கு பாதையமைத்து விட்டால் தமிழகத்திலிருந்து அனைத்து நாட்களும் கண்ணகி கோட்டத்திற்கு சென்றுவரலாம். கேரளா மாநிலத்தின் எல்லையிலிருந்து 16 மைல்கள் அவர்களின் கரட்டுந்தில் மிக மோசமான, ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது தவிர்க்கப்படுவதுடன் நமது சொத்தான கண்ணகி கோட்டத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும்.
இந்த ஆண்டு கரூர் மாவட்ட கண்ணகி கோட்ட திருப்பணிக்குழு சார்பாக திரு.தமிழ்ச்சேரன் அவர்கள், போக்குவரத்து அமைச்சர் விசயபாஸ்கர் அவர்களிடம் விழாக்கால சிறப்புப் பேருந்து விட மனு அளித்தார். ஆனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து இயக்க ஆலோசிப்பதாக கூறினார்.
அரசு
தமிழர் களம் ஊடகப்பிரிவு
கருவூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)