வியாழன், மே 11, 2017

கண்ணகி கோட்டம் முழு நிலவு விழா - 2017

10.05.2017
கம்பம் - கூடலூர்

                    சிலப்பதிகாரத்தின் காப்பியத்தலைவி கற்புக்கரசி கண்ணகித் தெய்வத்தின் சித்திரை முழு நிலவு பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

                   வழக்கம்போல கேரள அரசின் கெடுபிடிகளுக்கிடையில் மக்களின் பயணம் மிகுந்த சிரமமாக இருந்தது. அதே வேளையில் பளியன் குடியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து வந்து கண்ணகி கோட்டத்தின் பெருவிழாவில் கலந்துகொண்டனர். 

                     கண்ணகி கோட்டத்தின் வடக்கு வாயிலின் வழியாக கோயிலுக்குள் நுழைவதற்கு கேரள  காவலர்கள் தடுத்தனர். ஆனால் நமது தமிழர்களத்தின் உறவுகள் அவர்களிடம் சண்டையிட்டு வடக்கு வாயில்வழியாகவே சென்று கண்ணகியை வழிபட்டனர். 

                      ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது கேரள அரசிடம் கைகட்டி நின்று  அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் தமிழக அரசு தன் மௌனத்தை உடனே கலைத்துவிட்டு கம்பம் - கூடலூர் பகுதியினைச் சேர்ந்த பளியன் குடி கிராமத்திலிருந்து வெறும் மூன்று மைல் தொலைவிற்கு பாதையமைத்து விட்டால் தமிழகத்திலிருந்து அனைத்து நாட்களும் கண்ணகி கோட்டத்திற்கு சென்றுவரலாம். கேரளா மாநிலத்தின் எல்லையிலிருந்து 16 மைல்கள் அவர்களின் கரட்டுந்தில் மிக மோசமான, ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது தவிர்க்கப்படுவதுடன் நமது சொத்தான கண்ணகி கோட்டத்தின் உரிமையும் பாதுகாக்கப்படும். 

                       இந்த ஆண்டு கரூர் மாவட்ட கண்ணகி கோட்ட திருப்பணிக்குழு சார்பாக திரு.தமிழ்ச்சேரன் அவர்கள், போக்குவரத்து அமைச்சர் விசயபாஸ்கர் அவர்களிடம் விழாக்கால சிறப்புப் பேருந்து விட மனு அளித்தார். ஆனால் அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து  தமிழகத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் பேருந்து இயக்க ஆலோசிப்பதாக கூறினார். 
                                                                                                            அரசு                         
                                                                                     தமிழர் களம்   ஊடகப்பிரிவு
                                                                                                         கருவூர்
                                                                                



                       



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக