வெள்ளி, மே 19, 2017

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கரூர்.
19.05.2017

                          2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொடுலையின் துயரத்தையும், தமிழர்கள் நாம் செய்யத் தவறியவைகளையும், இனி செய்ய வேண்டியவைகளையும் நினைவுகூறும் வகையில் தமிழர்களத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. 

தமிழர் களத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் திரு. தமிழ்முதல்வன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.  மேற்கு மண்டலப் பொறுப்பாளர் திரு. அரசு தலைமைதாங்கினார். 
                  எதிரிகளின் மீதான வன்மத்தைச் சுமந்துகொண்டிருக்கும் நாம் நமது இழந்த உரிமைகளை மீட்டேயாக வேண்டும் எனவும், இப்போது நாம் செய்ய வேண்டிய கடமைகளை காலம் தாழ்த்தாது செய்திட வேண்டும் எனவும், தனது உரையில் தெரிவித்ததுடன், மேலும் ஈழப் போரில் வீரச்சாவடைந்த வீரர்களுக்கும், அப்பாவித் தமிழர்களுக்கும்  தீப ஒளியேற்றி தமது மௌன அஞ்சலியை செலுத்தினார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக