செவ்வாய், ஏப்ரல் 05, 2011

தமிழர் தேசிய முன்னணி - தேர்தல் களம் 2


அன்பு உறவுகளுக்கு வணக்கம்
ராதாபுரம் சட்ட மன்ற தொகுதிக்கு தமிழர் களத்தில் இருந்து போட்டிடும் எனக்கு தேங்காய் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்

காங்கிரஸ் என்ற பார்ப்பன கட்சி 20ம் நூற்றாண்டில், பார்ப்பன ஆதிக்கம் செலுத்திய போது, எனது பாட்டனும், முப்பாட்டனுமாகிய டாக்டர் நடேச முதலியார் 1912-ல் சென்னை திராவிட சங்கத்தை தோற்றுவிக்கப்பட்டதே, பார்ப்பானர் அல்லாதாருக்காக தான். இந்த சங்கமே பின்பு, ஜஸ்டிஸ் கட்சியான, நீதி கட்சியாகி, அதன் மூளையாக சர்.ஏ.ராமசாமி முதலியார் செயல்படுத்தினார். எஸ். முத்தையா முதலியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லாதாருக்கு அரசு வேளைகளில் இடம் பெற செய்தார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஊ.பு.அ. செளந்தரபாண்டியன் நாடார், சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார், மறைமலை அடிகள், திரு.வி.கலியாண சுந்தரனார், இரட்டைமலை சீனிவாசன், கி.ஆ.பெ. விசுவநாதம், தமிழ்வேள் பி.டி.இராசன் போன்றோர் தொடர்ச்சியாக பார்ப்பன ஒழிப்பிற்காக பல வழிகளில் செயல்பட்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்றனர். பார்ப்பனர்களின் ஆதிக்கம் படிப்படியாக தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டு, அவர்கள் டெல்லிக்கும், வெளிநாட்டிற்கும் ஓட்டப்பட்டு விட்டனர். ஓடி விட்டனர்.
பின்னர் ஊடூருவியவர்கள் நீதி கட்சியை (தமிழர் கழகம் என ஏற்படுத்த நினைத்து, பின்னர் திராவிடர்கள் ஒதுக்கப்பட்டு விடுவர் என அஞ்சி, அதை) தந்திரமாய் திராவிடர் கழகமாய் மாற்றிக் கொண்டனர்.
திட்டமிட்டு திராவிட கழகத்தால், தமிழர்களின் சாதிகள் ஒழிக்க முன்னெடுக்கப்பட்டது. சுயமரியாதை திருமணங்கள் என்று கூறி, தமிழர் மொழிக் குடும்பத்தை தாண்டி, பிற மொழி கலப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியலில் ஊட்புகுந்து கொண்டு, திராவிடர்கள் பல வகை கட்சிகளை தோன்றுவித்து ஆதிக்கம் செலுத்தப்பட்டது. முதலில் தமிழர்கள் அரசியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு, இரண்டாம் நிலை தலைமைக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ச்சியாக திராவிட அரசியலினால், திராவிட கட்சிகள் என பரப்பி விட்டு, பார்ப்பனர்களை ஒழிக்கிறோம் என சொல்லிக் கொண்டே தொடர்ந்து தமிழ் நாட்டில், தமிழன் என்பதையே மழுங்கடிக்கப்பட்டுனர். திராவிட குடும்பத்தில் தமிழர்களும் உள்ளனர் என சொல்லி, தலைமைக்கு தமிழனை வரவிடாமல் ஒதுக்கப்பட்டனர் அல்லது முறியடிக்கப்பட்டது. இதனால் இன்றுள்ள பெரும்பான்மை கட்சிகளான தி.மு.க (கருணாநிதி - தெலுங்கர்), அ.தி.மு.க (ஜெயலலிதா - கன்னடர்), தே.மு.தி.க (விஜயகாந்த் - தெலுங்கர்), ம.தி.மு.க (வைகோ - தெலுங்கர்), தமிழ் நாடு காங்கிரஸ (தங்கபாலு - தெலுங்கர்) தலைமைகளாய் உள்ளனர்.
இந்த காலகட்டத்தில், பார்ப்பனர் ஆதிக்கம் தமிழகத்தில் முடிந்துபோன பின்னர், திராவிட அரசியலால், தமிழ் சமூகத்தினர் ஒடுக்கப்பட்டு வருவதை உணர்ந்து கொண்டு, தனி கட்சிகள் தொடங்கினர். வன்னியர்கள் பா.ம.கா. என்றும், வேளாளர்கள் புதிய நீதிக்கட்சி என்றும், கொங்கு வேளாள கவுண்டாகள் கொங்கு முன்னேற்ற கழகம் என்றும் இதுபோன்று முக்குலத்தோர், நாடார்கள், தேவர்கள், தாழ்த்தப்பட்டோர் அவர்களுக்கான கட்சிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டபோது, திராவிட அரசியல் பேசுவோர், பெயரளவில் ஈழ ஆதரவை தெரிவித்து நாடகமாடியது தெளிவாய் தெரிந்தது. இதனால்,தமிழர் களம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது.
2011 சட்ட மன்ற தேர்தலில் தமிழ் சமூகங்களில் ஆதரவை தேடி வரும் திராவிட கட்சிகளின் நிலையை பார்த்தாலே, 21ம் நூற்றாண்டில், இனி தமிழ் சமூகத்திற்கான வழி பிறந்துள்ளதை காண முடிகிறது. திராவிடம் என்பது வெறும் மாயை என்பதும் விளங்கும். இனி முதலில் திராவிடம் பேசி அரசியல் செய்வோர் ஒழிக்கப்பட்டு வருங்காலத்தில் அழிந்து போவார்கள் என்பது கண்கூடு.
பார்ப்பனர்கள் ஆதிக்கம் எப்படி தமிழகத்தில் நிறுத்தப்பட்டதோ, அதுபோல் இனி திராவிடர் என்று பூச்சாண்டி காட்டி வந்த தெலுங்கர்கள், மளையாளிகள், கன்னடர்கள் தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டப்படுவார்கள் என்பது எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒன்று. இன்று இந்த பயத்தால் திராவிடம் பேசுவோர், இந்தியா என்ற மாய வலைக்கு புகுந்து கொண்டு, இந்திய இறையாண்மையையும், பாதுகாப்பையும் நாடுவார்கள். இதனால், இந்தியாவே இனி தமிழர்களிடத்தில் கேள்வி குறியாய் ஆகப்போகிற ஒன்று. சங்க கால தமிழகம் போன்று, தமிழ் நாடு தமிழர்களின் வருங்காலமாய் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.



--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

"தளவாய்"
பனிவளன்(+919842978005)

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக