தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், அக்டோபர் 11, 2011
உலகத் தமிழர் பேரவை நிறுவனர் இம்மானுவெல் அடிகளார் அவர்கள் திருப்பி அனுப்பப்படமைக்கு அரிமா வளவன் கடும் கண்டனம் !
ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும்
சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி
அனுப்பிவிட்டனர். இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும்
இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து சுற்றுலா பயணிகளைப் போல உல்லாசமாக சுற்றி திரிய அனுமதிக்கும் அரசு தமிழர் உரிமை குரல்வளையை நெரிப்பது எந்த வகையில் நியாயம்?
இமானுவெல் அடிகளார் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழர்களம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அவரை திரும்ப
அழைக்காவிட்டால் தமிழர்களம் போராட்டத்தில் குதிக்கும் என எச்சரிக்கின்றேன் ! என்று தமிழர்களத்தின் பொதுசெயலாளர் அரிமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி : ஊடகப்பிரிவு
தமிழர்களம், கரூர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக