வியாழன், மே 10, 2012

கூட்டு வழிபாடும் கூடன்குளமும்...









இடிந்தகரை 10.05.12

 இன்று காலை முதல் இடிந்தகரையிலும் அதைச் சுற்றியுள்ள உவரி, கூத்தன்புளி, போன்ற கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கூட்டு வழிபாட்டு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு சிறப்பு வழிபாட்டு நிகழ்விலும் தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு.அரிமாவளவன் கலந்து கொண்டு கூடன்குளம் அணுஉலை குறித்துப் பேசினார். மேலும் பொதுமக்கள் கண்ணீர்மல்க இறைவனிடம் மன்றாடி வழிபட்டனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்ற சிலப்பதிகார பொன்மொழிக்கொப்ப அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமானது முறியடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக அந்த மக்களின் பேராற்றல் வாய்ந்த வழிபாடு வீண்போகக்கூடாது என்று நாமும் வேண்டுகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களும் செய்தனர். 

செய்தி ஊடகப்பிரிவு
தமிழர்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக