ஞாயிறு, டிசம்பர் 08, 2013

தமிழர்கள இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா

08.12.13,
மணப்பாறை
                        தமிழர் களத்தின் மேற்கு மண்டலம், மணப்பாறை வட்ட இளைஞர் இயக்கம் சார்பாக வேங்கை குறிச்சியில் இளைஞர் இயக்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்று விழாவும், நடைபெற்றது.

         நிகழ்வில் திரு. தினேசு அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

           நிகழ்விற்கு தமிழர்களத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் திரு.அரசு தலைமை தாங்கினார். முன்னதாக தமிழர் களத்தின் பெயர் பதாகை மணப்பாறை வட்ட பொறுப்பாளர்  திரு. பால் நிலவன் அவர்களால் திறந்து வைக்கபப்ட்டது. தமிழர் களத்தின் கொடியை ஊர் நாட்டாண்மை துரைசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்.

           நிகழ்வில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழர் கள இளைஞர்களை வாழ்த்தி கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. வாகை தமிழ் முதல்வன் பேசினார்.

          நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கடவூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. இரா . மாணிக்கம்,  அருண்மொழி வேந்தன், ஊர் தலைவர் முனியாண்டி, மற்றும் நாட்டாண்மை மணி ஆகியோர் கலந்து கொண்டனர் .

           நிகழ்வில்  வேங்கை குறிச்சி இளைஞர் இயக்க உறுப்பினர்கள் சு.சிலம்பரசன், சி.ராம், ஆ.குணசேகரன், சு.சிவபாலு, ரா.ராகுல்காந்தி, சு. சிவக்குமார், பிரசன்னா, சி.பண்ணை சரவணன், மணவை பெலிக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
       
            நிகழ்வின் இறுதியில் திரு. பூபதி  அனைவருக்கும் நன்றி கூறினார் .

செய்தி
ஊடகப்பிரிவு
கருவூர்.






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக