வியாழன், டிசம்பர் 19, 2013

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையர்!

             
                   
    
                        சென்னையில் கிறித்து பிறப்பு விழா நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் மகன் ஸடாலின் சென்றிருக்கிறார். “சிறுபான்மை மக்களின் ஒரே காவலன் தி.மு.க.தான்” என்கிறார்.
                     பாரதீய சனதாவை, “காவிக் கமண்டலங்கள் என்று வசை பாடிய கருணாநிதி கும்பல், மத்தியில் வாச்பாய் தலைமையில் அதே பாரதீய சனதாக் கட்சி ஆட்சி அமைத்தபோது அதில் பங்கேற்க முற்பட்டார். ஸ்டுவர்ட் ஸ்டெயின் போன்ற கிருத்துவ சமூகத் தொண்டர்கள் எரித்துக் கொல்லப்பட்ட
  நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு மாபெரும் வன்முறை கட்டவிழ்க்க்பட்ட நிலையில்தான் தி.மு.க. பாரதீய சனதாக் கட்சியுடன் ஆட்சி அமைக்க முற்பட்டது. “ஓர் எள் முனையளவும் சிறுபான்மை மக்களுக்குக் கேடு நிகழுமானால் பதவியைத் தூக்கி எறிவேன்” என்று சிறுபான்மை மக்களுக்கு “ஆப்பு அடித்துவிட்டு” அவர் சொன்ன அதே காவிக் கமண்டலங்களோடு ஆட்சியில் பங்கேற்றார். நாலே முக்கால் ஆண்டு! முரசொலி மாறன் உட்பட சிலர் அமைச்சர்கள்.
ஆட்சியேற்ற கொஞ்ச நாளில் அதாவது 2002ல் நடந்ததுதான் குசராத் கலவரம். பல்லாயிரம் இசுலாமியர்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். “ராச தர்மததோடு நடந்து கொள்ளுங்கள்” என்று வாச்பாய்கூட மோடியை எச்சரித்தார். கருணாநிதி என்ன செய்தார்? “சிறுபான்மை மக்களின் காவலன்” என்று பட்டம் சூட்டிக் கொண்டு வரும் கருணாநிதி அவர் சொன்னபடி பதவியைத் தூக்கியெறிந்தாரா? களம் இறங்கிப் போராடினாரா? குசராத் அரசைக் கலையுங்கள் என்று போராடினாரா? ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை. இதுதான் இவர்களுடைய “சிறுபான்மை மக்களின் காவலன்” வேடம்!
  
                    ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது. அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி! தொலையட்டும். காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது. கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
               இறுதியாக,தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும்தான் சிறுபான்மையினர்! தமிழர்கள் பெரும்பான்மையர்!
இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும், அதுகள் போன்றதுகளும் சிறுபான்மையரோ அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா போன்றதுகள்தான் சிறுபான்மையர். இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர். தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்!
 நன்றி:அரிமா வளவன்  தமிழர் களம

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக