புதன், ஜனவரி 11, 2017

ஏறுதழுவலுக்கான எழுச்சிப் பேரணி

11.01.17
கரூர்
             ஏறுதழுவலுக்கு ஆதரவாக மாணவர்கள் ஒருங்கிணைத்த தன்னெழுச்சிப் பேரணி எவ்விதத் தடங்களும் இன்றி மிக நேர்த்தியாக நடைபெற்றது.

       நிகழ்வில் காளைகளும், சேவல்களும், நாட்டு நாய்களும், ரேக்லா வண்டியுடனும் உழவர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இன்றி கலந்து கொண்டனர். 
  வழிநெடுக மாணவர்களின் எழுச்சிக் குரல் வின்னைப்பிளந்தது! பொதுமக்களும் இந்த மாணவர்கள் நிகழ்த்திய பேரணியில் தாங்களாகவே வந்து கலந்து கொண்டனர். பெண்களும், குழந்தைகளும் பேரணி செல்கையில் தங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர். 

                  இந்த தன்னெழுச்சிப் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது சுய அடையாளமின்றி பங்கெடுத்தனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிக நேர்த்தியாக பேரணி கரூர் நகரைச் சுற்றி வந்து பேருந்து நிலையம் அருகில் முடிவுபெற்றது.
                     இந்த பேரணியை சமூக ஆர்வலர் முருகேசன், கனி ஓவியா, லோகேஸ்வரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
                    பீட்டாவை தடைசெய்ய வேண்டும் எனவும், தடையை மீறி ஏறுதழுவல், சேவல் சண்டை, ரேக்லா வண்டி ஓட்டம், குதிரை வண்டி ஓட்டம், ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். உழவர்களின் துயரங்கள் ஒருபக்கம் நம்மை வாடச் செய்தாலும், இதுபோன்ற மரபு சார்ந்த பண்பாட்டு விளையாட்டுக்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும். தமிழர்கள் சாதிகடந்து மதம் கடந்து ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது. 
                  














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக