செவ்வாய், ஜனவரி 17, 2017

முள்ளிவாய்காலா தமிழகம்?

18.01.17
கரூர்
              தமிழகம் இன்னொரு முள்ளிவாய்காலா? ஏறுதழுவலுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும், உழவர் நலனில் அக்கறை செலுத்தவும், உழவர்களுக்கு தேவையான நிவரானங்களைச் செய்யவும் கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராடி வருகின்றனர். அவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவோ, தமிழ் அமைப்புகளின் பின்புலமோ அல்லாமல் தாமாகவே முன்வந்து அறவழியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

       தமிழக திராவிட கட்சிகள் சில அவர்களின் போராட்டங்களை மடை மாற்றம் செய்யவும், தங்களுக்கு சாதகமாக திசை திருப்பவும் முயன்று தோற்றன.
   இப்போது மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. இந்திய தேசியத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் திரும்பியுள்ள மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு அச்சுறுத்தல்களையும், இழிசெயல்களையும் செய்து வருகிறது மத்திய மாநில அரசுகள்..... 

       பன்னாட்டு வர்த்தக கைகூலிகளாக செயல்படும் மத்திய அரசும், அதன் அடியாளாய் செயல்படும் மாநில அரசும் எப்படியேனும் இப்போராட்டத்தை நசுக்கிட முயற்சித்து அலங்காநல்லூரை மற்றுமொரு முள்ளிவாய்க்காலாக மாற்றத் துடிக்கிறது.
      இந்தச் சூழலில் தமிழ் அமைப்புகள் ஒன்றாகத் திரண்டு மாணவர் போராட்டம் வெல்லவும், அவர்கள் காக்கப்படவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். அதற்கு தமிழர் களம் எப்போதும் துணையிருக்கும் என்றும் அறிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக