ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

புதிய விடியல் காண.....- அரிமா கருத்துரை

7.4.13
இடிந்தகரை

                    புதிய விடியல் காண..... என்ற தலைப்பில் இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரு.சுப.உதயகுமார் தலைமை தாங்கினார். கல்லுரி மாணவர்களும் பொதுமக்களும் அணுஉலை எதிர்ப்பாளர்களும் திரளாக கலந்து கொண்ட நிகழ்வில் தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் ..... கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம். இது மக்கள் போராட்டம். தமிழர்களம் மக்களோடு மக்களாக எப்போதும் களத்தில் போராடும் ஓர் அமைப்பாகும். இந்திய தேசியத்தையும், திராவிட நச்சுக்களையும், திராவிட கட்சிக்களையும் அழித்தொழித்து தமிழர்கள் அனைவரும் தமிழர்களமாய் ஒன்றிணைந்து செயல்படுவதே தமிழின விடுதலைக்கு வழிவகுக்கும் என்றும், காவிரி, முல்லைப்பெரியாறு, குறிஞ்சான்குளம் படுகொலை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
- செய்தி - ராமன் - தமிழர்களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக