07.04.13
இடிந்தகரை
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திரு.சுப.உதயகுமாரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழகமெங்கும் இருந்து திரளான அணுஉலை எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளை தெரிவித்தனர். இதன் மூலம் இடிந்தகரை மக்களின் போராட்டமானது அடுத்தகட்ட நகர்விற்கு சென்றுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழர்களத்தின் தென்மண்டல பொறுப்பாளர் மை.பா.நன்மாறன், திரு.புஷ்பராயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து போராட்டத்தின் தன்மைகுறித்து விளக்கிப் பேசினர்.
- செய்தி - ராமன் - தமிழர்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக