ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு தனி ஈழமே தீர்வு! என்ற தீர்மானத்தை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலை போராட்டம்!








07.04.13
பாளையங்கோட்டை
                        ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் ஈழமே தீர்வு என்ற முழக்கத்தோடு, உறவுக்கு கை கொடுக்கவும், உணர்வுக்கு தோள் கொடுக்கவும், போராடும் கரங்களோடு ஆசிரியர்களின் கரங்களும் இன்று இணையும் வண்ணமாக ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தமிழினம் வென்றாக வேண்டும் என்ற இலக்கோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தை அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினரும், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கமும்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்களும் இணைந்து நடத்தினர். நிகழ்வில் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்து  கொண்ட இந்த நிகழ்விற்கு தமிழர்களத்தின் பொதுச்செயலாளர் திரு. அரிமாவளவன் அவர்கள் ஆதரவு தெரிவித்தார். 


- செய்தி - ராமன், தமிழர்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக