ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

கருவூரில் தமிழர்களத்தின் பயிற்சி பட்டறை !


கருவூர் தமிழர்களத்தின் அரசியல் பயிற்சி பட்டறை கருவூர் மாவட்டம் நெரூர் மறவா பாளையத்தில் 05.09.2010 அன்று மாலை நடைபெற்றது . நிகழ்வில் தமிழர்களத்தின் மாநில பொறுப்பாளர் திரு .அரிமாவளவன் இளையோர்களுக்கு தமிழர்களத்தின் கொள்கைகள் , செயல்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார் , இளையோர்களின் கேள்விகளுக்கு திரு . சீவானந்தம் வழக்குரைஞர் பதிலுரை வழங்கினார்! முன்னதாக திரு , இரவிச்சந்திரன் அறிமுக உரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார். கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.தமிழ் முதல்வன் , திரு. அரசு, திரு . செந்தில் , முருகானந்தம் ஆகியோர் இளையோர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டனர், நிகழ்வை திரு .அசோக் ஒருங்கிணைப்பு செய்தார். தமிழர்களத்தின் இந்த பயிற்சி பட்டறை இளையோர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தினை கொண்டு வருவதாக அமைந்தது.விரைவில் ..... இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக