தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், செப்டம்பர் 05, 2011
அணு உலைக்கு எதிரான மக்கள் திரள் போராட்டதிற்கான அழைப்பு
"கூடங்குளத்தில் தொடங்க இருக்கிற அணு உலையானது தென் தமிழகம், மற்றும் வட இலங்கையில் வாழும் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கக் கூடியது. இந்த அணுமின் நிலையம் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரை கோயில் முன் செப்டம்பர் 11-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது .
இந்த போராட்டத்தில் தமிழர் களம் , கோட்டாறு , பாளையங்கோட்டை , தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர்கள் , அனைத்து கடற்கரை கிராம மக்கள் , கூடங்குளம் பகுதி பொதுமக்கள் , கடலோர மக்கள் கூட்டமைப்பு , தமிழ்நாடு புதுவை மீனவர் கூட்டமைப்பு , உள்ளிட்ட பல்வேறு பொதுநலன் அமைப்புகளும் , பொதுமக்களும் திரளாக கலந்து கொள்வார்கள் என தமிழர் களத்தின் மாநில பொது செயலாளர் திரு . அரிமாவளவன் அறிவித்துள்ளார் .
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக