ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

கருத்துப் படங்கள் - கருவை முருகு



இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையினால் மக்களின் உணர்வுகள் , புறந்தள்ளப்பட்டு விட்டன .பதவி வெறியில் சொந்த மக்களையே பலிகொடுக்க முனைந்துள்ளது நியாயமற்ற செயல் . மற்ற மாநிலங்களை விட தமிழர்நாடு மிக மோசமாக நடத்தப் பட்டுள்ளது கண்கூடு . அந்நிய தரகு முதலாளிகளின் வியாபார கூடாரமாகவும் , வந்தேறிகளின் வேட்டை காடாகவும் தமிழர் நாடு இருக்கிறது . தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழர்களின் வாழ்வாதார நிலையை பற்றி கவலை கொள்வதும் இல்லை . பெரியாரின் பேரன்களும் , அண்ணாவின் தம்பிகளும் , கருணாநிதியின் உடன்பிறப்புகளும் , எம் ஜி ஆரின் ரத்தத்தின் ரத்தங்களும் , தமிழர் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அவர்களில் பலரும் தமிழர்கள் அல்ல என்பதை தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஏன் தமிழர்களிடத்தில் விளக்குவதில்லை என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் எண்ணத்திலும் உருவாகி வருவதை காலம் சொல்லும் . எனவே நாங்களும் சொல்கிறோம் தமிழர் நாட்டை நல்ல தமிழர்கள்தான் ஆளவேண்டும் ..இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் !!

- கருவை முருகு,
மாநில ஊடகபிரிவு செயலாளர் ,
தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக