தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், நவம்பர் 28, 2011
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டம் வலுக்கிறது!
104 வது நாளாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்கும் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக்குழு 27.11.11 அன்று தமிழக முதலமைசர் அவர்களுக்கு மாநில அரசு அணுஉலைக்கு எதிரான ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தி தொலைநகல் அனுப்பியுள்ளது. தொடர் உண்ணாநிலைப் போராட்டக் களத்தில் உறுதியாய் நிற்கும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திசம்பர் 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டக்குழு ஒன்றுகூடி நான்காம் கட்டப் போராட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிபுநர் குழுவின் அறிக்கையை ஆய்வுசெய்த அணுஉலைக்கு எதிரான நிபுணர்குழு அவ்வறிக்கை தங்களுக்கு நிறைவு இல்லை எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அணுஉலை போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழர்களத்தின் கிழக்கு மண்டலப் பிரதிநிதிகள் இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேறனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக