ஞாயிறு, நவம்பர் 27, 2011

மாவீரர் நாள் !






கரூர் 27.11.2011
தமிழர் களத்தின் சார்பில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது . நிகழ்வில் தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு. சீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார் . தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த மாவீரர் நாளில் தமிழினம் இனப் படுகொலையால் கொல்லப்பட்ட துயரத்தை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது என்றும் , ஈழம் பிறக்க தமிழர்கள் ஒரே இனமாய் ஒன்றிணைந்து களம் கண்டால்தான் தீர்வு கான முடியும் எனவும் இந்தியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரிதான் என்றும் தமிழ்நாட்டு அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் தருணம் இதுவே என்றும் கருத்துரை வழங்கினார் திரு சீவானந்தம் அவர்கள் . அவரை தொடர்ந்து வழக்குரைஞர் ராஜேந்திரன் , அரசு , செந்தில் , சதாசிவம் , குறழகன் உள்ளிட்ட பலரும் தங்களது மாவீரர் சிந்தனைகளை விதைத்தனர். முடிவில் முருகானந்தம் நன்றி தெரிவித்தார் .
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக