தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
ஞாயிறு, நவம்பர் 27, 2011
மாவீரர் நாள் !
கரூர் 27.11.2011
தமிழர் களத்தின் சார்பில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது . நிகழ்வில் தமிழர் களத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு. சீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கினார் . தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த மாவீரர் நாளில் தமிழினம் இனப் படுகொலையால் கொல்லப்பட்ட துயரத்தை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது என்றும் , ஈழம் பிறக்க தமிழர்கள் ஒரே இனமாய் ஒன்றிணைந்து களம் கண்டால்தான் தீர்வு கான முடியும் எனவும் இந்தியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரிதான் என்றும் தமிழ்நாட்டு அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணும் தருணம் இதுவே என்றும் கருத்துரை வழங்கினார் திரு சீவானந்தம் அவர்கள் . அவரை தொடர்ந்து வழக்குரைஞர் ராஜேந்திரன் , அரசு , செந்தில் , சதாசிவம் , குறழகன் உள்ளிட்ட பலரும் தங்களது மாவீரர் சிந்தனைகளை விதைத்தனர். முடிவில் முருகானந்தம் நன்றி தெரிவித்தார் .
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக