சனி, மார்ச் 24, 2012

அணு உலைக்கு எதிராக ஐ.டி. துறையினர் உண்ணாவிரதம்



கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி சென்னையில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் இன்று தகவல் தொழில்நுட்ப துறையினர் கலந்துக்கொண்டனர்

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது, அது, ஆபத்தானது என்று கூறி அப்பகுதி மக்கள் நெடு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.
இதனையடுத்து, அங்கு, பணிகளும் தொடங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், போராட்டத்தை கைவிடாத மக்கள் அடக்குமுறைகளையும் மீறி தீவிரமாக தங்கள் எதிர்ப்பை அற வழியில் காட்டி வருகின்ற்னர்.

இவர்களுக்கு ஆதரவாகவும், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

மூன்றாவது நாளான இன்று, தகவல் தொழில்நுட்ப துறையினர் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nandri: webduniya.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக