திங்கள், அக்டோபர் 07, 2013

"கருணாநிதியின் மண்ணாங்கட்டி அறிக்கை!



இலங்கை சுட்டுக் கொண்டே இருக்கிறது! அதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது!” கருணாநிதி கனிமொழி வழியாக பிரதமருக்குக் கடிதம்! இது இன்றைய செய்திகளில் ஒன்று!
என்னைக் கருணாநிதி கெட்ட வார்த்தை போட வைத்துவிடுவார் போலவே இருக்கிறது! கனிமொழி பிரதமரைச் சந்தித்துப் பழக வேண்டும்! அந்த ஒரு மயி..க்குத்தான் இப்போது இந்த நாடகம்! அதற்கும் நாங்கள்தான் இவருக்கு வேண்டுமா?
தமிழ்நாட்டில் பல முறை ஆட்சியில் இருந்தபோது கிழிக்க முடியாததை, மத்தியில் பல முறை பல அமைச்சர்களை வைத்துக் கொண்டு கிழிக்க இயலாததை இப்போது கடிதம் எழுதிக் கிழிக்கப் போகிறாராம்!
அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் தில்லியில் அமைச்சர்களை வைத்திருந்தன! மாநிலத்தில் ஆட்சியிலும் ஆட்சிக்கு ஆதரவு நிலையிலும் பலமுறை இருந்திருக்கின்றன!
ஆனால் இவர்களால் ஈழப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை! ஈழத் தமிழர்களின் சாவைத் தடுக்க முடியவில்லை! நமது மீனவர்களை சிங்களன் தாக்கும் கொடுமையைத் தடுக்க முடியவில்லை! காவிரிப் பிரச்சனை தீரவில்லை! முல்லைப் பெரியாறு பிரச்சனை தீரவில்லை! பாலாறு பிரச்சனை தீரவில்லை! ஸ்டெர்லைட்டை மூடமுடியவில்லை! கூடங்குளம் அணுஉலையைத் தடுக்க முடியவில்லை! திண்டுக்கல் தோல் பதனிடும் கொடிய நச்சு ஆலைகளைத் தடுக்கவில்லை! தேனியில் வரும் நியூட்ரினோ திட்டத்தைத் தடுக்கவில்லை! கிரானைட் கொள்ளையைத் தடுக்கவில்லை! தாது மணல் கொள்ளையைத் தடுக்கவில்லை! மாறாக அத்தனையிலும் கூட்டு, கையூட்டு, கமிஷன் என்று கொள்ளையிலும் இழிவான மலிவான கொள்ளையடிக்கிற கும்பல்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்களின் வசூலுக்கு வசதியான அமைச்சர் பதவிகளைப் போராடிப் பெற்றிருக்கிறார்கள். சொந்த பந்தங்களுக்காக கடுமையாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ஆனால், அப்பாவி மக்களுக்கு, அதாவது வாக்களித்து இவர்களை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய மக்களின் உரிமைகளைக் காக்க எதுவுமே செய்யவில்லை!
இப்போது நாடகம்! டெசோ நாடகம்! கடித நாடகம்! போராட்ட நாடகம்! அறிக்கை நாடகம்! போக்கிரிகள்! தமிழர்களின் நாட்டில் பொறுக்கித் தின்ன வந்திருக்கும் வந்தேறிப் பொறுக்கிகள்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக