வெள்ளி, அக்டோபர் 18, 2013

இது தமிழர்களம்....இது போர்களம்...."!!!


 "பொதுவுடமை என்ற பேரில், கிறித்துவம் என்ற பேரில், சர்வதேசியம் என்ற பேரில் சமத்துவம் பேசுவார்கள், ஞாயம் பேசுவார்கள், 

என் மக்கள் செத்தபோது எவனடா குரல் கொடுத்தது?

தில்லியில் பெண் ஒருத்தி கற்பழிக்கப்பட்டபோது உலகமே கொதித்தது! கொந்தளித்தது! இசைப்பிரியா சிதறியபோது எந்தத் திருச்சபை குரல் கொடுத்தது? எந்த சர்வதேசியப் பொதுவுடமைப் பிடுங்கிகள் குரல் கொடுத்தார்கள்? எந்தப் புரட்சியாளர்கள் கிழித்தார்கள்? இசைப்பிரியாபோல பல்லாயிரம் பெண்கள் சிக்கிச் சீரழிந்தபோது இந்த இனத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள் தமிழர்கள் என்று எங்கள் உரிமைகளைப் பற்றி முனுமுணுக்கத் தொடங்கியவுடனேயே, எங்கள் விடுதலைக்கான களம் அமைக்கத் தொடங்கியவுடனேயே “உனக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்கத் தொடங்குகிறார்கள். ராசபக்சேவும், சிங்கள இனவெறியர்களும், கன்னடக் காடையர்களும், மலையாள பக்கிரிகளும் எங்களைச் சீரழித்த காலத்திலெல்லாம் வாய்க்குள் என்ன கொழுக்கட்டையா வைத்திருந்தீர்கள்?

தமிழன் என்கிற போர்வையில் ஞாயம் பேசுவதுபோல அக்கிரமம் புரிகிற அயோக்கியர்கள் ஆண்டைகளானாலும் சரி, அதிகாரிகளாலும் சரி! அவர்களைத் துரோகிகளாக தூர நிறுத்துவது மட்டுமல்ல இன எதிரிகளாக அடையாளம் காட்டி அவர்கள் மீதும் போர் தொடுப்பதே இனி நமது வேலை! களம்.... இது தமிழர்களம்....இது போர்களம்...."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக