திங்கள், ஜனவரி 02, 2012

மலையாள குசும்பு ....

02.1.2012
ராஜாகாடு ,

புதுவையிலிருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் இன்று காலை தாங்கள் செல்லும் வழியில் ராஜாகாடு என்ற ஊரில் இருக்கும் ஒரு மலையாளி உணவகத்தில் உணவருந்த சென்றனர் . அப்போது கடையில் உணவு பரிமாறுபவர் ஐயப்ப பக்தர்களை வரவேற்று உட்கார வைத்து இலையை போட்டு தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை . தமிழகத்திலிருந்து சென்ற பக்தர்கள் மிகவும் குழம்பிய நிலையில் ஏன் இலையை போட்டுவிட்டு உணவு கொடுக்கவில்லை என்று கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு நீங்கள் தண்ணீருக்காக தானே எங்களிடம் சண்டை போடுகிறீர்கள் அதனால் உங்களுக்கு நாங்கள் பரிதாபப்பட்டு தண்ணீர் கொடுத்துள்ளோம் ஒழுங்காக குடித்துவிட்டு சென்றுவிடுங்கள் என்று எள்ளி நகையாடினார். அதை அங்கிருந்த அத்தனை மலையாளிகளும் கண்டு ஏளனப்படுத்தி கைகொட்டி சிரித்து கேவலப் படுத்தியுள்ளனர் . இந்த சம்பவத்தால் மனம் நொந்த நிலையில் அவர்கள் பட்டினியுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர் .
செய்தி : ஊடகபிரிவு தமிழர் களம் .

1 கருத்து: