ஆமதாபாத், ஜன.3: குஜராத்தி மொழியைக் கற்று, பேசிவரும் உள்ளூர் குஜராத்திகளுக்கு ஹிந்தி மொழி, அயல்மொழிதான் என்று குஜராத் உயர்நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிபதி வி.எம்.சஹாய், நீதிபதி ஏ.ஜே.தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிரான மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், நெடுஞ்சாலைகளுக்காக நிலத்தைக் கொடுத்தவர்களூக்கு இழப்பீடு தொடர்பான விசாரணை நடைபெற்றது.
ஒரு உள்ளூர் தினசரியில், நெடுஞ்சாலை ஆணையம், நிலத்தைக் கொடுத்த உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு விளக்கம் அளித்து விளம்பரம் வெளியிட்டது. அதுவும் ஹிந்தி மொழியில். இதனால் இந்த விளம்பரம் தங்களுக்குத் தெரியவரவில்லை என்று உள்ளூர் மக்களின் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற பெஞ்ச், விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி மொழி அறிவிக்கை, உள்ளூர் குஜராத்திகளைப் பொருத்த வரையில் அயல்மொழிதான்... என்று கூறியது.
nandri Dinamani

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
avargal suyamariyathai ullavargal. nam thamizhagathil, thamizhai vittu english & Hindi pesinaal than respect enru ninaikkirargal madaiyargaL.
பதிலளிநீக்குNandru
பதிலளிநீக்கு