தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், ஜனவரி 09, 2012
தமிழர் களத்தின் கிளை அலுவலகம் திறப்புவிழா.
புதுவை 08.1.2012
தமிழர் களத்தின் கிளை அலுவலகம் திறப்புவிழா.
கடந்த 08.1.2012 அன்று காலை புதுவையில் தமிழர்களத்தின் கிளை அலுவலகம் திரு.அரிமாவளவன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்விற்கு புதுவை மாநிலசெயலாளர் திரு.பிரகாசு தலைமைதாங்கினார். விழாவில் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழர்களத்தின் புதுவை மாநில பொறுப்பாளர்கள் தானே புயலின் பாதிப்பையும் கடந்து ஏற்கனவே முடிவு செய்திருந்த இந்த நிகழ்வை தள்ளிப்போடாமல் குறித்த காலத்தில் அலுவலகதிறப்பு பணியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மைபா சேசுராசு, அமலரசு, தமிழ்மணி, உள்ளிட்ட தமிழர்கள நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக