

நேற்று கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவைச்சார்ந்தவர்கள் திரு.உதயகுமார் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர் அப்போது இந்துமுன்னனியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசார் சிலரின் துனையோடு போராட்டக் குழுவினரை திட்டமிட்டே தாக்கியுள்ளனர். இது மதரீதியான மோதலாக உருவெடுக்கும் அப்போது அப்பாவி மக்களை இந்திய அரசின் துணையோடு அழித்தொழித்துவிடலாம் என்ற எண்ணத்துடனேயே இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே கொலைவெறி தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடன்குளம் அணுஉலையை முட தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் அரிமாவளவன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகப் பிரிவு. தமிழர்களம் கரூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக