தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
செவ்வாய், ஜனவரி 31, 2012
அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்: அரிமா வளவன் கடும் கண்டனம்.
நேற்று கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவைச்சார்ந்தவர்கள் திரு.உதயகுமார் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர் அப்போது இந்துமுன்னனியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசார் சிலரின் துனையோடு போராட்டக் குழுவினரை திட்டமிட்டே தாக்கியுள்ளனர். இது மதரீதியான மோதலாக உருவெடுக்கும் அப்போது அப்பாவி மக்களை இந்திய அரசின் துணையோடு அழித்தொழித்துவிடலாம் என்ற எண்ணத்துடனேயே இந்த வெறிச்செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே கொலைவெறி தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடன்குளம் அணுஉலையை முட தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் தமிழர்களத்தின் மாநில பொதுச்செயலாளர் அரிமாவளவன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகப் பிரிவு. தமிழர்களம் கரூர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக