ஞாயிறு, ஜனவரி 15, 2012

திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் !





கரூர்
16.01.2012
திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் !
கரூர் மாவட்ட தமிழ் அமைப்புகளின் சார்பில் திருவள்ளுவர் நாளான இன்று அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் திருக்குறளின் பெருமைகளையும், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களையும் குறித்து பேசப்பட்டது . தாய் மொழி பற்றும் , தாய் மண் உரிமைகளை காப்பதும் இன்றைய அவசியமான தேவை என்பதை வலியுறுத்தியும் பேசப்பட்டது. நிகழ்வில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை .பழனியப்பன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் திருக்குறள் நூலும் , எழுதுகோலும் , வழங்கினார் . மேலும் இந்த விழாவனது இன்னமும் சிறப்பாக தமிழர்கள் அனைவராலும் , குறிப்பாக இளைஞர்கள்தான் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார் . பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் பரமத்தி சண்முகம் , உலக தமிழ் கழகம் குரழகன் , வ உ சி பேரவை செயலாளர் , தமிழர் களத்தின் மாநில ஊடகபிரிவு செயலாளர் முருகானந்தம் ,சீனிவாசன் , பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் க .ந. சதாசிவம் , சாமியப்பன் , கோபால் , தி மு க வைச் சேர்ந்த தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் , இந்த நிகழ்வை தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த வழக்குரைஞர் ராசேந்திரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் . முடிவில் பரமத்தி சண்முகம் நன்றி கூறினார் .

செய்தி ; ஊடகபிரிவு தமிழர் களம் .

1 கருத்து: