தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
திங்கள், ஜனவரி 30, 2012
கூடன்குளம் மாதிரி எரிப்பு போராட்டம்!
31.01.2012
இடிந்தகரை.
காந்தி நினைவு நாளான நேற்று இடிந்தகரையில்கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து ஒப்பாரி போராட்டம் மற்றும் மாதிரி அணுஉலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தேச தந்தையே இந்த கொள்ளை கும்பல்களிடம் விட்டு விட்டு சென்று விட்டாயே என போராட்டம் நடத்தியவர்கள் குமுறி அழுது ஒப்பாரி வைத்தனர். மேலும் இன்று நடக்கும் பேச்சுவார்தையில் தாங்கள் பங்கேற்கபோவதில்லை என்றும் போராட்டக்குழுவின் சார்பில் தமிழர்களத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மை பா சேசுராசு தெரிவித்தார்.
செய்தி ஊடகப்பிரிவு, தமிழர்களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nandri
பதிலளிநீக்குnanum ungaludan irkendran,
பதிலளிநீக்கு