செவ்வாய், நவம்பர் 02, 2010

தமிழர் பெருவிழா தீர்மானங்கள் - அரிமா


தமிழர் பெருவிழா
தீர்மானங்கள்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் தமிழகத்தில் நடக்கும் இன ஒடுக்குமுறைக்கும் முழுமுதற் காரணியும் சிங்கள இனவெறிக் கும்பலுக்கு முட்டுக் கொடுப்பதும் தில்லியை ஆளும் காங்கிரசுக் கட்சிதான்! 534 தமிழக மீனவர்கள் நம் கடற்கரைகளில் சிங்களனால் கொல்லப்பட்டபோதும், பல்லாயிரம் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானபோதும் தன் சுண்டுவிரலைக்கூட நீட்டாத காங்கிரசுக் கட்சி, அக்கொடுமைகளைக் கண்டித்துப் பேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு. சீமான் அவர்களைக் தளைப்படுத்தி, சிறையிலடைத்து, “கூட்டணி பாதுகாப்புச் சட்டத்தை” தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பேரில் ஏவி, வழக்கை இழுத்தடித்து அநீதமான முறையில் சிறை வைத்திருக்கிறார்கள். தமிழின எதிரிகளான இவர்கள் இன்னும் ஆறு திங்களில் ஏதுமறியா அப்பாவிகள் போல வேடம் புனைந்து வாக்குப் பிச்சை கேட்டு நம் வீடு தேடி வருவார்கள். காங்கிரசுக் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்து நின்றாலும், அது தேர்தலில் நிற்கும் அனைத்து இடங்களிலும் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து கட்சி சாதி மதம் கடந்து அதனைத் தோற்கடிப்போம். அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகளையும், மாந்த உரிமை அமைப்புக்களையும், நல்லெண்ணம் கொண்டோரையும், தாய்நாட்டை நேசிக்கிற அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து காங்கிரசை முற்றாகத் தோற்கடிப்பது என்று இந்நாளில் தமிழர்களம் உறுதி பூணுகிறது. நாளை வரை காத்திராமல் இன்றே, இனப்பகையை கருவருக்கக் களமிறங்க தமிழர்களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையில் இனவெறிப் போர் நடந்தபோது சிங்களனுக்கு முட்டுக் கொடுத்து உதவியவர்களுள் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று! தன் வணிக நலனுக்காக கொடுங்கோலன் இராசபக்சேவுக்குத் துணைபோன இந்த நிறுவனம் தமிழகத்திலும் கால் பதித்து கடந்த பல ஆண்டுகளாக நம்மிடமே வணிகம் செய்து வளம் ஈட்டி வருகிறது! ஏர்டெல்லைப் புறக்கணிப்பது நமது கடமை! அப் புறக்கணிப்பை மிக எளிதாக்கும்வண்ணம், நாளை அதாவது நவம்பர் ஒன்றாம் நாள் முதல் நம்மிடம் இருக்கிற தொலைப்பேசி எண்ணை தக்க வைத்துக் கொண்டு பிற நிறுவனங்களுக்கு மாறுகிற வாய்ப்பைத் தொலைத் தொடர்பு நிறுவனம் ஏற்படுத்தித் தருகிறது. நாளை முதலே ஏர்டெல்லைப் புறக்கணிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். நண்பர்கள், உற்றார், உறவினர், நல்லவர், தமிழர் என்று நம்மவர் எவரைச் சந்தித்தாலும் ஏர்டெல்லைப் புறக்கணிக்க உரையாடுங்கள்! நம்மை வேட்டையாடும் நாய் நரிகளுக்கு இந்த மண்ணில் எள்ளளவும் இடம் இல்லை என்பதை இப்புறக்கணிப்பின் வழியாக விளங்க வைப்போம்!

“இயக்கத்திற்கு (கட்சிக்கு) முக்கியத்துவம் கொடுக்கும் காலம் போய் இனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துள்ளது” என்றும் “நாம் எந்தத் தொழில் செய்தாலும் அரசியலில் நமது இனத்தைச் சேர்ந்தவர்களையே வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றும் முக்குலத்தோர் ஒற்றுமையாக இருப்பதுபோல நாயுடு, ரெட்டி உட்படத் தெலுங்கு பேசும் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்படவேண்டும்” என்றும் மிக வெளிப்படையாகப் பேசியிருப்பவர் தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு அமைச்சர் ஒருவர். ஆரியமாயை என்ற பூச்சாண்டியைக்காட்டி காட்டி திராவிடமாயை செய்த அலங்கோலத்தை நம்பி நம்பிக் கெட்டத் தமிழினத்திற்கு அவர் சாட்டையடி கொடுத்திருக்கிறார். முக்குலத்தோர் மட்டுமல்ல ஒட்டு மொத்தத் தமிழ்ச்சாதிகளும் தமிழினமாய் எழுந்து ரெட்டியார் அவர்கள் அவரின மக்களுக்குச் சொன்னதுபோல நாமும் இருக்கிற திராவிடக் கழகங்கள், இந்தி தேசியக் கட்சிகள் ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டுத் தமிழினமாய் எழ இன்று நாம் உறுதி பூணுகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசிற்கும் அதன் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உயர்திரு. உருத்திரக்குமரன் அவர்களுக்கும் இம்மாநாடு தன் இனிய வாழ்த்துக்களையும் வலுவான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர்களம் கரூர் 31/10/2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக