தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
ஞாயிறு, நவம்பர் 14, 2010
''தமிழர்களை திருவோடு ஏந்தவைக்கும் திராவிட அரசியல்'' - அரிமா
கோவில்பட்டி - 14.11.2010 ஞாயிறு .
மள்ளர் மீட்பு களத்தின் கொள்கை விளக்க புத்தக வெளியீட்டுவிழா கோவில் பட்டியில் நடைபெற்றது.
தமிழர் களத்தின் மாநில பொதுசெயலாளர் திரு .அரிமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். அதன் விவரம் ....
திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர் .
களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.
நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம் !
தமிழர்களின் பொதுவான பிரச்சினைகளைதீர்க்க , களம் அமைத்து விட்டதால் செந்தில் மள்ளரும் , அரிமாவளவனும் மட்டுமே போதும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என எண்ண வேண்டாம். ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி , அதனால் நாம் இழந்ததை பற்றியும் , இனி என்ன செய்யபோகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் .
லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல் , தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்தது சோனியாவின் காங்கிரஸ் அரசு . வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் , அதன் கூட்டணி கட்சியையும் தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்ற ஒவ்வொரு தமிழரும் பாடு பட வேண்டும் .
நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம் , இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !! என்று அவர் எழுச்சியுரையாற்றினார்
கூட்டத்திற்கு திரு . செந்தில் மள்ளர் ,தலைமை தங்கினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திரு . தன்மானன் சிறப்புரை நிகழ்த்தினார் . மள்ளர் களத்தின் நிர்வாகிகளும், இளைஞர்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு ; ஊடகபிரிவு , தமிழர் களம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக