தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
ஞாயிறு, நவம்பர் 28, 2010
பகடி கருத்துப் படங்கள் - பயணங்கள் முடிவதில்லை
ஒவ்வொரு முறையும் இந்தி அரசால் அனுப்ப படும் மலையாளி இந்த முறையும் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து திரும்பியுள்ளார் . கடிதம் கருணாநிதியின் கவலை நியாயமானது என்று கூறும் அவர் , மெதுவாகத்தான் நிவாரண பணிகள் நடக்கும் , ஆனால் இந்தியாவின் கவலை அதுவல்ல அதைவிட பெரியது எனவே தமிழர்களின் நலன் மட்டும் முக்கியமல்ல என கூறியிருப்பது வியக்கத்தக்க செய்தியல்ல . நாம் என்ன செய்ய போகிறோம் ? என்பதுதான் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக