|
|
தாகத்தில் தவித்த தமிழினத்திற்குக் கிடைத்தத் தடாகம்தான் தலைவர்!
தமிழினம் ஆயிரமாயிரம் சறுக்கலுக்குள் சிக்கித் தவித்த போது கிடைத்த ஊன்றுகோல் அவரே! இதிலெல்லாம் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது! இத் தலைவன் விண்ணிலிருந்து ஒரு நாள் குதித்துக் கிளம்பிய தெய்வப் பிறவி அல்லன்! சதையும் குருதியும் கொண்டு குழைத்து உருவான மனிதன்! ஆனால் எச்சில் பொறுக்கும் ஏராளமான அரசியல் விற்பனர்கள் நடுவில் தமிழினம் காக்க நெருப்பாய் நின்றவன் இவன்!
இவனையும் எப்படி விற்பனைப் பொருளாக்கலாம் என்று அன்றும் இன்றும் பொறுக்கியவர்கள் உண்டு! சமரசமில்லா சரித்திர நாயகன் இவன்! ஆனால் நீயும் நானும் என்ன செய்தோம்?
அவனையும் விடுதலைப் புலிகளையும் தன்னந்தனியே களமாடவிட்டு வீட்டு இருக்கைகளில் அமர்ந்து “விடுதலைப் போர்” என்ற படம் பார்த்தோம்.
பூநகரியை வென்றபோது, ஆனைஇரவை வென்றபோது, வான்புலி பறந்தபோது, கடற்புலி சீறியபோது, கொழும்பு வானூர்தி நிலையம் தகர்க்கப்பட்ட போது நாம் விண் கிழிய சீட்டி அடித்தோம்! படம் பார்த்தோம்!
காட்சிகளில் திருப்பம்! சோகம் இழையோடியது! யாழ் வீழ்ந்தது! பூநகரி போனது! கிளிநொச்சி தகர்ந்தது! முல்லைத் தீவு வீழ்ந்தது! முள்ளிவாய்க்கால் ...... இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்து வைத்துக் கொண்டு அழுதோம்! படம் பார்த்தோம்! அசையவில்லை! காண்பது படமல்ல! கண்டது பிம்பங்கள் அல்ல! நடப்பது திரையில் அல்ல! சதையும் எலும்பும் குருதித் துளிகளும் என் அருகே விழுந்து துடித்தபோதுதான் அதிர்ந்து துடித்து எழுந்தோம்! ரமேசு போய்விட்டான், இசைப்பிரியா போய்விட்டாள், பாலச்சந்திரன் போய்விட்டான், ஆயிரமாயிரம் குழந்தைகள் போய்விட்டன, பெண்கள், பிள்ளைகள்... எட்டு கோடிப் பேர் அருகில் இருந்தும் இழந்து விட்டாயேடா! விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இங்கே விற்றுக் கொண்டிருந்தார்கள். விற்பனர்கள். இன்னும் அவர்கள் நடமாடுகிறார்கள். தமிழ்நாட்டு அரசியல் சீர்படாமல் ஈழம் மலராது! வந்தேறிகளோடு சமரசம் செய்து கொண்டு அலைகிற விற்பனர்களை அடையாளம் காட்டாமல் தமிழ்நாடு சீர் அடையாது! மாண்டவர்களை வைத்து இன்னும் வணிகம் செய்ய நினைக்கிற சாக்கடை அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் திராவிட வந்தேறிகளுக்குப் பாய்விரிக்கும் பச்சைத் துரோகிகள் இங்கே இருக்கிறார்கள். படம் பார்ப்பதை நிறுத்து! களமிறங்கு! எதிரிகளையும் துரோகிகளையும் கிழித்துக் குப்பையில் போட்டு எரிக்கக் களமிறங்கு!
வாடா வாடா தோழா! இது வேலவனின் நாளடா! ஒரு வேலோடு ஓடிவா! வேலை இனி இருக்குடா!
காத்திருக்கு களமடா! களமாட நாமடா! நாடெல்லாம் நமதடா! வாடா வாடா தோழா!
பொறுக்கி சிறுக்கி பாரடா! கொன்ற கூட்டம் இதாண்டா! போட்டு இதைத் தாக்கடா! நாடு நமது ஆகுண்டா!
வேங்கை பிறந்த நாளடா! வேண்டும் நமக்கு நாடடா! நீ பிறந்த நாடடா! நாடு நமக்கு வேணுண்டா!
வாடா வாடா தோழா! ஆனைவெறி காட்டடா! வேலைக் கையில் ஏந்தடா! வாடா வாடா தோழா!
அரிமாவளவன் தமிழர்களம்"
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக